Custom Search

Monday, December 03, 2007

நெசமாத்தான் சொல்றியா?

தாயகப்பறவைகள் மார்கழி இதழுக்கு எழுதியது:

You faget! இதை நீங்களும் பல இடங்களில பல இளமாக்களிட்ட இருந்து கேட்டிருப்பீங்கள். சில பேருக்கு மட்டும் அதின்ர உண்மையான அர்த்தம் விளங்கியிருக்கும். ஆனால், மற்றவை ஏதோ சின்னப்பிள்ளையள் கெட்ட வார்த்தையில திட்டுதுகள் எண்டு நினைச்சிருப்பீங்கள். இன்னும் சில பேர் அதை கண்டுகொள்ளாமலே விட்டிருப்பீங்கள். சிலபேர் மனசுக்குள்ள திட்டினாலும், சின்னப்பிள்ளையள் விளையாட்டுத்தனமாச் சொல்லிட்டுதுகள் எண்டு நினைப்பீங்கள். என்ன அர்த்தம் எண்டு சொல்லாமலே கனக்க கதைக்கிறன் என்ன?

faget மற்றும் cocho போன்ற வார்த்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு ஆணைக் குறிக்கும் சொற்களாகும். இந்த சமூகமானது சொற்களால் வன்முறை செய்யக் கற்றுக் கொண்டுள்ள சமூகமாகும். நம்மில் பலர், கோபத்தின் உச்சத்தில் நாம் உதிர்க்கும் சொற்கள், சக மனிதரை எந்தளவு பாதிக்கிறது என்பதை அறிவதில்லை. சிலர், பிறர் மனதைத் துன்புறுத்திப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, தமிழில் தூசணச் சொற்களை சிறுவர்கள் உச்சரிக்கும் போது அது பாரதூரமாகக் கருதப்படுகிறது. அதே, ஆங்கிலத்திலோ அல்லது புலம்பெயர்ந்து வாழும் அந்நாட்டு மொழிகளிலோ சொல்லும் போது அது கவனிக்கப்படுவதில்லை. சிலவேளை அவற்றின் அர்த்தம் புரியாததால் கூட இருக்கலாம். அல்லது, வேற்றுமொழிகளில் சொல்கிற போது அச்சொற்களின் தாக்கத்தை உணராததால் கூட இருக்கலாம்.

தாயால், தந்தையால், சகோதரர்களால் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால், அதாவது யார் யாரையெல்லாம் ஒருவன் அதிகமாக நேசித்தானோ, நம்பினானோ, தான் யார் அருகாமையில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தானோ - அவர்களே அவனைப் பாலியல் துஷ்பிரயோகத்துக் குள்ளாக்கி - அவனுக்கு அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை மட்டுமன்றி மானுட சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்த்தெறியும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டவனைக் குறிக்கும் ஒரு சொல்லை, நாம் எவ்வளவு சாதாரணமாக எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி உடனே சொல்லிவிடுகின்றோம். பாலியல் துஷ்பிரயோகத்திக்கு உள்ளானவனைப் பார்த்து இந்தச் சொல்லை யாரும் சொன்னால், அவனுக்கு எவ்வளவு வலியேற்படுமோ - அதேயளவு அல்லது அதை விட அதிகமான வலியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படாதவனைப் பார்த்துச் சொல்லும்போது நாம் ஏற்படுத்துகின்றோம். தமிழில் இதனை "தீயால் சுட்ட புண் ஆறும் ஆறாது நாவால் சுட்ட புண்" என்று மிகப்பொருத்தமாக முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். இச் சொற்களின் பொருள் புரியாதவர்கள் என்றால், என்றோ ஒருநாள் faget என்ற சொல்லின் அர்த்தம் தெரியவரும்போது அவர்களின் நெஞ்சில் எங்கேயோ முள் தைக்கும். அர்த்தம் புரியாமல் பயன்படுத்துபவர்கள், ஆண்களை மட்டுமே குறிக்கும் இச்சொல்லை பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்துவதைக் காணலாம்.



என்னிலும் இளைய என் சகோதரர்களுடன் கதைக்கும்போது அல்லது விளையாடும்போது, சர்வசாதாரணமாக "you faget", "cocho head" போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். சிலர் உண்மையான அர்த்தத்தைச் சொன்னதும் அப்படிச் சொல்வதை நிறுத்திக்கொள்வார்கள். சிலரைப் பொறுத்தவரையில், உரையாடலினிடையே அப்படிச் சொல்வது ஒரு நாகரீகம். இளையோர் பேச்சு வழக்கில் கலந்துபோய்விட்ட ஒன்று. இதற்கு அவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இன்றைய ஊடகங்களும் ஒரு காரணம். இது தான் இளையோர் மொழி என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி / பரப்பி வைத்துள்ளன. இந்த விம்பம் உடையுமட்டும் இளையோரும் அதனை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்நேரத்தில், ஏனோ எனக்கு "ஜோடி நம்பர் 1" நடுவர்களின் "சான்ஸே இல்ல பிச்சிட்டிங்க", "கிழிச்சிட்டிங்க" போன்ற சொற்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.

இப்படி நம்பிக்கைக்குரியவர்களால் சிறுவயதில் பாலியல் ரீதியில் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு, பதின்மவயதிலிருந்தே ஆண் பெண் என்ற பாகுபாடின்றி யாரையுமே நம்ப முடிவதில்லை. எவருடனும் நெருங்கிப்பழக முயற்சி செய்வதில்லை. அவர்களுடைய ஒதுக்கத்தை புரிந்துகொண்டு யாராவது தாங்களாக முன்வந்து அவர்களுடன் நெருங்கிப் பழகத்தொடங்கினால், அதை அவர்களால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. "ஏன் என்னிடம் நெருங்கிப் பழக முயற்சி செய்கிறார்கள்" என்று யோசித்து யோசித்து, ஒருவேளை தன்னுடைய abuser போலவே தன்னுடலைத்தான் விரும்புகிறார்களோ என்றெண்ணுவார்கள். யாரும் அவர்களிடத்தில் அன்பாயிருந்தால், அதற்குப் பதிலாக தன்னிடம் அவர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று சிந்திப்பார்கள். அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் பாலியல் ரீதியானதாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்து, எவரையும் அவ்வளவு சீக்கிரத்தில் தம்மை நெருங்க விடமாட்டார்கள். விதிவிலக்காக, இப்படி பாதிக்கப்பட்டவர்களை ஒருவர் உண்மையாக நேசித்து, அவர்களிருவரும் ஒன்றுகூட முயற்சிக்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் வந்து நர்த்தனமாடும். மனதைக் குழப்பும். உளவியல் குழறுபடிகளை உண்டுபண்ணும். குறிப்பாக, உடலுறவின் போது பெண் ஆளுமைமிக்கவளாகச் செயற்படின், அது அவர்கள் மனதை உறுத்தும். பழைய சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, பயத்துடனான எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி மனதில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும்.

8 -10 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் முதல் பதின்ம வயதில் பாதிக்கப்பட்டவர்கள் வரை அவர்களுடைய abuser இன் தாக்கம் மிகவும் அழுத்தமானதாக இருக்கும். அந்த ஆழமான மனப்பதிவு, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொல்லைகொடுக்கும். அந்த மனப் பாதிப்பிலிருந்து மீள முடியாதவர்களாக உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக தம்மை உருவகித்துக் கொள்வார்கள். அதைச் சமநிலைப்படுத்திக் கொள்ள நடக்கும் மனப்போராட்டத்தின் வெளிப்பாடு, சமூகத்தளத்தில் அவர்களை வேறுபடுத்திக் காட்டும்.

இப்படி நடந்துகொள்பவரை சமூகத்திலிருந்து புறக்கணித்து ஒதுக்கி வைக்காமல், அவர்களின் சூழலை, மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும். அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை, உளவியல் ரீதியாக அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதன்மூலம் அவர்களை இயல்புநிலைக்கு மீட்டெடுக்க முடியும். எனவே, ஒவ்வொரு இயல்புநிலை மீறிய செயற்பாட்டுக்குப் பின்னாலும், ஏதோ ஒரு உளவியல் தாக்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். அதேபோல், நமது ஒவ்வொரு செயற்பாட்டின் மூலமும், நம்மிடமும் பிறரிடமும் நாம் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதையும், சில சந்தர்ப்பங்களில் அது மிக மிக அழுத்தமாக அவர்கள் மனதில் பதிவாகிவிடும் என்பதையும் உணர்ந்துகொள்வது அவசியம்.

Thursday, November 01, 2007

PIT நவம்பர் மாத புகைப்படப் போட்டிக்கு!

St.Lawrence river - whale watching க்குச் செல்லும் வழி



பழைய கியுபெக் நகர சாலை






குறிப்பு : படங்களனைத்தும் வானுக்குள்ள இருந்து எடுத்ததால வான் கண்ணாடியில இருந்து கையடையாளம் வேற அடையாளங்களெல்லாம் இருக்கு கண்டுக்காதீங்க சரியா.

முதலிரண்டு படங்களும் போட்டிக்கு.

Saturday, October 20, 2007

இந்தப் பாட்டு எந்தப் படத்தில??

இந்த fusion dance ஐப் பாருங்கோ ஒருக்கா. ஜோடி #1 மாதிரி ஒரு நிகழ்ச்சி என நினைக்கிறேன்.
11 வயசு செளமியாட நடனத்திறமையைப் பாருங்க. ஆமா "உனக்கும் எனக்கும் ஆனந்த் விடிய விடிய சொர்க்கம்... " எந்தப் படத்தில இந்த பாட்டு?

.

என்னத்த சொல்வேனுங்க..

Friday, October 05, 2007

கண்டுபிடி கண்டுபிடி X

அநேகமா சினிமாப்பாடல்களோடு வரும் கண்டுபிடி கண்டுபிடி இதுதான் கடைசியா இருக்குமெண்டு நினைக்கிறன் :-) இனி தாயகப்பாடல்களும் சோமி அண்ணா சொன்னது போல பாடல்களும் (கூத்து மற்றும் நாட்டார் பாடல்களும்) தேடிப்பார்க்கிறன்.

g3,தர்சன் மற்றும் மைபிரண்டுக்குப் பாராட்டுக்கள்.










Saturday, September 15, 2007

கண்டுபிடி கண்டுபிடி IX

கண்டுபிடி கண்டுபிடி 8 ன் சரியான பாடல்கள்

1 - என் செல்லப்பேரு அப்பிள் (போக்கிரி)
2 - தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ ( பொன்னியின் செல்வன்)3
3 - நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே (வேட்டையாடு விளையாடு)
4 - சங்கம் வைத்துக் காதல் வளர்த்த(கருப்புசாமி குத்தகை்காரர்)
5 - அழகா அழகா (By 2)


3 வது பாடலைக் கண்டுபிடித்த கதிரவனுக்குப் பாராட்டுக்கள்!

இந்தமுறைக்கான பாடல்கள் இதோ!













Friday, September 14, 2007

KFC & Taco Bell ல் எலிகளின் அட்டகாசம்

கொஞ்சம் பழசுதான்!

Tuesday, September 11, 2007

Paul ன்ர கதை II

8 அல்லது 9 வயதிலேயே தனக்கு மற்றவர்கள் மீது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேணும் என்ற எண்ணம் வந்ததாம்.மற்றவர்களால் தன்மீது ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றால் தன்னாலும் அது முடியுமென்று தன் குடும்பத்தினரை கஸ்டப்படுத்துவதற்காகவே தான் ஒழுங்காகப் பாடசாலைக்குச் செல்லாமல் தீய நட்புகளைத் தேடினானாம்.கடைகளில் சிறிய திருட்டில் ஆரம்பித்துப் பின்னர் 12 வயதில் கார் றேடியோ போன்றவற்றை திருடி ஒரு கூட்டத்துடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியில் தங்க வெளிக்கிட்டானாம்.15 வயதில் மீண்டும் foster home வாழ்க்கை ஆரம்பமானது.அன்றிரவு தன் காதலியுடன் ஒரு சின்ன விசயத்துக்காகச் சண்டை போட்டுத் தோற்றுப்போன ஆத்திரத்தில் போதைமருந்து உட்கொண்டுவிட்டு foster home க்கு வந்தபோது அங்கே வசித்த ஒரு 6 வயதுச் சிறுமியைத் தான் sexual abuse க்குள்ளாக்கியதையும் தானா அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னால் நம்பமுடியவில்லையென்கிறான்.

சரியான சாட்சியங்களில்லாததாலும் தான் அப்படி அந்தச் சிறுமியிடம் நடந்துகொண்டதற்கு தான் சிறுவயதில் sexual abuse க்குள்ளாக்கப்பட்டது ஓரு காரணமாக இருக்கலாம் என்று தான் foster home mother க்குச் சொன்னதாலும் தன்னை அவர்கள் counselling க்கு அனுப்பினார்களாம்.தான் counselling க்குச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் கூட கனவில் வன்மமான எண்ணங்கள் வந்ததாம்.சிறுவர்களையும் சிறுமிகளையும் தன்னால் கனவில் கூட அப்பிடி நினைத்துப்பார்க்க முடியவில்லையாம் அத்தோடு கனவில் நடப்பது போல நிஜத்திலும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சியாக தன் நாளங்களை அறுத்துக்கொண்டானாம்.

தெரப்பிக்குச் சென்று வந்ததால் தான் இப்போது தன் இறந்தகாலத்தை மறந்து நிம்மதியாக இருக்கிறானாம்.தனக்கு ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் இருக்கிறார்களாம்.வளர்ந்த ஆண்கள் அதாவது X ன் வயதையொத்த (>30) ஆண்களைத் தன்னைச் சாதாரணமாகத் தீண்டினால் கூட தனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து தொல்லைப்படுத்துவதால் இயன்றளவு அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து வருகிறானாம். பெண்களுடன் டேற்றிங் செல்லும்போது தன்னைப் பற்றித் தான் அதிகம் சொல்வதில்லையாம்.Foster home ல் வாழும் தன்னைப் போலவே மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டானாம்.தாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்களாம்.

இரவில் தூங்கும்போது யன்னல்கள் எல்லாம் மூடியுள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் தன்னால் தூங்க முடிகிறதாம். முன்பு sirens ஒலி கூடத் தன் தூக்கத்தை கெடுப்பதில்லையாம் ஆனால் இப்பொழுதெல்லாம் ஒருவர் மூச்சு விடும் ஒலிகூடத் தன்னை டிஸ்ரப் பண்ணுதாம்.அதனால் தான் ஒரு பெண்ணோடு பழகி உடலுறவு வரை செல்ல தனக்குக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தேவைப்படுகிறதாம்.அதனாலோ என்னவோ தற்போது தனக்கு காதலி என்று யாரும் இல்லையாம்.

தெரப்பிக்குச் சென்றதால் தான் தற்போது normal ஆக இருக்கிறானாம்.தனது social worker உடன் தன்னால் மனம்விட்டுப் பேச முடிகிறதாம்.ஒரு snowball போல தன்னுள் வளர்ந்துவந்த வன்மக் குணம் இல்லாது போய் தன்னால் தன் நிகழ்காலத்தையம் எதிர்காலத்தை நேசிக்கக் கூடியதாக உள்ளதாம். சில வருடங்களில் தான் ஒரு truck driver ஆக இருப்பானாம். ஒரு இரவுப்பறவையாக நீண்ட பெருந்தெருக்களில் தனியாகச் சுதந்திரமாக ஒரு truck driver ஆகப் பயணம் செய்தாலும் தனக்கென்று குடும்பம் அமைத்துக்கொள்ள ஆவலாக இருக்கிறானாம்.தன்னைப் போன்றவர்களுக்கு குடும்பம் மிகவும் அவசியமாம் அதுவும் முக்கியமாகத் தன் தாய்க்கு குடும்பம் என்றால் என்னவென்று உணர்த்தும் அவசியம் தனக்குண்டாம்.


குறிப்பு : Dón't Tell - The Sexual Abuse of Boys என்ற புத்தகத்திலுள்ள பல உண்மைக் கதைகளில் ஒன்றே Paul ன் கதை.Michel Dorais ஆல் French ல் எழுதப்பட்ட இந்தப் புத்தம் Isabel Denholm Meyer ஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Monday, September 10, 2007

Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?

Sexual abuse ஆ ? ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நானும் நினச்சதில்ல உங்களில் சிலரைப் போல. ஆனால் Paul ன் கதையை வாசிச்ச பிறகு என்னால அதை உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியேல்ல. இதையெல்லாம் ஏன் எழுதுவான்? என்ன லாபம் என்று கேக்க வேண்டாம். இதைத்தான் இதை வாசிக்கிறது மூலம் உங்களால யாராவது ஒருவர் abuse பண்ணுப்படாமல் போகலாம் அல்லது ஏற்கனவே பாதிக்கப்ட்ட ஒருவருடன் மனம் விட்டுப் பேச இந்தப் பதிவு உங்களுக்கு உதவலாம்.

அவனைப் பார்த்தால் வெகு சாதாரணமாத்தானிருப்பான். ஆனால் அவனுக்குள் பல போராட்டங்கள், பல விடை தேடிச் சலித்துப்போன கேள்விகள், குழப்பங்கள் என்று கிட்டத்தட்ட தன்னையே வெறுத்து துன்புறுத்திப் பார்க்கும் ஒரு மனநிலை.தன்னைத்தானே பச்சோந்தி என்று குறிப்பிடுகிறான் அவன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ தன்னைத் தன் பலவீனங்களோடும் இயலாமைகளுடனும் ஏற்றுக்கொள்வார்களோ என்ற குழப்பத்தில் தன்னுடைய உண்மைத் தன்மையை வெளிக்காட்டாமல் தன்னை ஒரு சாதாரணனாகத் தான் மற்றவரிடத்தில் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறான்.



பிறந்தது முதல் 2 ஆண்டுகள் அம்மம்மாவுடனும் பின்னர் 7 வயது வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உறவினர்களுடனும் வளர்ந்தான்.அதாவது வளர்ந்துவரும் ஒரு செடியை இடம் மாற்றி மாற்றி நட்டால் என்ன நடக்கும்?? அத்திவாரம் அடிக்கடி ஆட்டம் காணுமில்லைாயா? அவன் பந்தாடப்பட்டான்.இறுதியில் 7 வயதில் foster home ல் சேர்க்கப்பட்டான்.அங்கு போனதும் அவன் இவ்வளவு நாளாக யாரை அம்மா என்று நினைத்தானோ அது தன் உண்மையான அம்மா இல்லையென்ற உண்மை அவனுக்குத் தெரிய வருகின்றது.அப்பா யாரென்று ஆரம்பித்திலிருந்து அவனுக்குத் தெரியாது தற்போது அம்மா என்ற உறவும் பொய்த்துப்போக தன்னை தன் உறவினர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவர்களை வெறுக்கத் தொடங்குகிறான்.அம்மாவாக நினைத்தவர் அன்ரியாகிவிட அன்ரியாக இருந்தவர் அம்மா என்றாக அவனுக்கு உறவுகள் புரிபடவில்லை.

இந்நேரத்தில் அம்மாவின் நண்பராக அறிமுகமாகிறார் X. பழைய உறவுகள் பொய்த்துப்போக புதிதாக வந்த X ஐ ஏனோ Paul க்குப் பிடித்துப்போய்விட X அவனுடைய நண்பனாக ஆசானாக Mentor ஆக தன்மேல் அக்கறை காட்டும் ஒரோயொரு ஜீவனாக நினைக்கிறான் Paul.X Paul ஐ விளையாட அழைத்துச்செல்வது வழக்கம்.அப்படிச் சென்றபொழுது ஒரு பூங்காவில் வைத்துத்தான் முதன்முறையாக Paul ஐ கிச்சு கிச்சு மூட்டுவது போல தொடங்கிப் பின்னர் எல்லை மீறியுள்ளது.Paul க்கு ஓரளவுக்கு நடப்பது என்னென்று விளங்கினாலும் தனக்கு நெருக்கமாகவுள்ள ஒரேயுறவையும் இழக்க விரும்பாமல் வெறும் விளையாட்டுப் போல என்று ஆரம்பத்தில் சகித்திருக்கிறான். தனக்கது violent touching ஆகத் தெரியாததாலும் X தானாகவே ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவார் என்று நினைத்தும் அவர் மது அல்லது போதை வஸ்துவின் வேலையால் தன் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொள்கிறார் போல என்று பல காரணங்களைத் தனக்குத்தானே அறிவுறுத்தியாகச் சொல்கிறான் ஏனென்றால் அவனிருந்த சூழ்நிலையில் X உடன் வெளியில் போய் வருவதுதான் அவனுக்கு இருந்த ஒரு பொழுதுபோக்கு.



முதல் தடவை நடந்தபோது காரணங்களைத் தேடியவனுக்கு 2ம் முறையும் X நடந்துகொண்ட விதம் அப்படி நினைக்க விடவில்லை.X வேணுமென்றே அப்படிச் செய்கிறார் என்பதை அவன் புரிந்துகொண்டான்.இருந்தாலும் Paul X ன் மீது கொண்டிருந்த பாசம் அவனைக்கட்டிப் போட்டது.இப்போதும் கூட அவனால் X ஐக் குற்றம் சொல்ல முடியவில்லை.அவனைப் பொறுத்தவரைக்கும் X தன் மீது அளவு கடந்த பாசம் செலுத்தியவர்.மீண்டும் சில நாட்கள் இது தொடர Paul தன் மறுப்பை மெல்ல வெளிப்படுத்தினான்.அதன் பிறகு X அவனை வெளியே அழைத்துச்செல்வதில்லை அதனால் Paul மிகவும் கவலைப்பட்டான்.தன்னை X ஓதுக்குவதையும் தன்னோடு கதைக்காமலிருப்தையும் அவனால் தாங்க முடியவில்லை.ஒரு பக்கம் தனக்கு sexual abuse லிருந்து விடுதலை என்று மகிழ்ச்சியாகவும் X ஐப் பார்க்க முடியாது போனது கவலையாகவும் இருந்ததாம்.

X foster home க்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.Paul அவனை நேசித்ததாலும் தன் குடும்பத்தின் முன்னிலையில் அவன் அவமானப்படக்கூடதென்றும் அவன் ஜெயிலுக்குப் போகக்கூடாதென்றும் நினைத்து Paul தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்ல முற்படவில்லை.கொஞ்சம் வளர்ந்தபின் பாடசாலையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் குழந்தைகளோடு உறவு வைத்துக்கொள்ள விரும்புவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது தன்னால் அங்கு இருக்க முடியாது போனதால் தான் பாத்றூமில் போய் நின்றுவிட்டு வந்தானாம்.அவனுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் உருவாகிய பொழுதுதான் அவன் புரிந்து கொண்டான் தான் மட்டுமல்ல தன் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களாலயே sexual abuse க்குள்ளாக்கப்பட்டிருப்பதை. இதை விட ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு. தன்னுடைய தாத்தாவே ஒரு sexual abuser என்றதும் அவர் தன் மகள்களையே sexual abuse க்குள்ளாக்கியதையும் அவர்தான் தன் தந்தை என்பதைத் தெரிந்துகொண்டதிலிருந்து அவன் போக்கே மாறிவிட்டது.


-இப்போதைக்கு முடியாது..தொடரும்-

Tuesday, September 04, 2007

September PIT போட்டிக்கு !!!




Monday, September 03, 2007

பழைய Quebec நகரம்

பழைய கியுபெக் நகரத்துக்கு ferry லபோக வேணும்.வானோட ஏத்திக்கொண்டுபோய் பழைய நகரத்துக்குள்ள விடும் போட்.ஆனால் அந்த ferry க்குப்போற பாதையில நிறைய அழகான இயற்கைக் காட்சிகள்.அபாயமானதும் கூட :-). சில றோட் நேர தண்ணிக்குள் இறங்குற மாதிரியிருக்கும். கிட்டப்போகுமட்டும் பயமா இருக்கும்.அதுவும் நாங்கள் GPS ஐ நம்பி போனாங்கள் அது எங்கயோ எங்களைக் கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளிவிடப்போதோ என்று நினைச்சுக்கொண்டே போனம்.








இதான் பழைய கியுபெக் நகரம்.இறங்குங்கோ எல்லாரும்!

St.Lawrence நதியில் திமிங்கிலம்

St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating season ஆம் அதால நிறையத் திமிங்கிலங்களைக் காணலாம் என்று சொல்லிச்சினம் பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம்.எங்களுக்கு முதல் போனாக்கள் தாங்கள் ஒரெயொரு திமிங்கிலத்தைத்தான் கண்டதெண்டு போட்லயே இருந்திட்டினம் இறங்காமல்.ஆனால் எங்கட போட்ல யாரோ நல்லவை இருந்தவை போல நாங்கள் போன நேரம் கனக்க திமிங்கிலம் சீல் எல்லாம் பார்த்தம்.ஒரு அம்மாத் திமிங்கிலமும் பேபித் திமிங்கிலமும் வந்து கனக்க விளையாட்டெல்லாம் காட்டிச்சினம்.அப்ப எங்கட guide சொன்னா ஒரு திமிங்கிலங்கள் கிட்டத்தட்ட 50 தொன் எடையுள்ளதாம் அதோட 17m நீளமாம் அதால அதுகள் ஒருநாளைக்கு கி்ட்டத்தட்ட 30cm அளவு வளருமாம்.



ஆண் திமிங்கிலம் பெண் திமிங்கிலத்தைக்கவர டான்ஸ் ஆடுமாம்.பெண் திமிங்கிலங்கள் அவ்வளவு கெரியா mating க்கு ஓத்துக்கொள்ள மாட்டினமாம் நிறைய ஆண் திமிங்கிலங்கள்ட டான்ஸ் ஐ பார்த்திட்டு ஒராளுக்கு ஓகே பண்ணுவினமாம் ஆனால் இந்த ஆண் திமிங்கிலங்கள் பெண் திமிங்கிலங்களைக் கர்ப்பமாக்கிட்டு கர்ப்பகாலத்தில வேற பெண் திமிங்கிலங்களுக்கு முன்னால டான்ஸ் ஆடப்போயிடுவினமாம் அதால குட்டித் திமிங்கிலங்களுக்கு நீந்த இரைதேடப் பழக்குறதெல்லாம் அவேன்ர அம்மாவைதானாம்.


(வானுக்குள்ள இருந்து எடுத்த படம்)
போன வழி..எப்பிடியிருக்கு? றோலர்கோஸ்ரல்ல போன மாதிரித்தான்.2 பக்கமும் அதள பாதாளம் .கரணம் தப்பினால் மரணம்தான்.









Montmorency நீர்வீழ்ச்சி

Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ!






இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-))


இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?

Sunday, September 02, 2007

திருவடியார்களுக்குத் திருவணக்கம்!!!

தாயகப்பறவைகள் ஐப்பசி இதழ் சமுதாயக் கண்ணோட்டத்துக்கு எழுதியது.

"திருவடியார்களே, இன்றைய திருநாளில் நாமனைவரும் ஆண்டவன் சந்நிதானத்தில் கூடியிருக்கிறோம். ஒரு திருப்பணிக்காக அதிஸ்டலாபச்சீட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குப் பிரியமானவர்களின் பெயர்களில் அதிஸ்டலாபச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் அதிஸ்டசாலிகளாயின் ஒரு camry அவர்கள் வசமாகும் . திருப்பணிக்காக ஒவ்வொருவரும் 10 டொலர்களை அளித்து அதிஸ்டலாபச்சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள்"

அப்பா : அறிவிப்பாளர் சரியில்லை.

அம்மா : பின்ன நான் போய்ச் சொல்றன் ஒலிபெருக்கியை உங்களிட்டத் தரச்சொல்லி

அப்பா : ஓ பின்ன நானிவரை விட வடிவாக் கதைப்பன்

அம்மா : சுமி அர்ச்சனை ரிக்கற் வாங்கிக்கொண்டு வாங்கோ .அப்பா 10 டொலர் குடுத்துவிடுங்கோ.சகானா அக்காவோட கூடப்போய் ரிக்கற் எடுத்துக்கொண்டு வாங்கோ.

சகானா : அப்பா 15டொலர் தாங்கோ 5 டொலர் ஐஸ்கிறீம் வாங்க.

அப்பா : வந்த உடனயா முதல் ரிக்கற்றை வேண்டிக்கொண்டு வாங்கோ இரண்டு பேரும். வீட்டில ஒரு துரும்பை எடுத்து அங்கால போடச்சொன்னா காய்ச்சல் தடிமன் எல்லாம் வரும்.ஐஸ்கிறீம் ஐ கண்டால் அதெல்லாம் எங்க போகுதோ தெரியேல்ல.

சகானா: ம்.

நான் : ஒரு அர்ச்சனை ரிக்கற் தாங்கோ. (10 டொலர் ஐ குடுக்கிறன்)

ரிக்கற் விற்பவர் : இன்றைக்கு ரிக்கற் 11 டொலர்.

நான் : வழமையா 10 டொலர்தானே?

ரி.வி. திருவிழா நேரம் ரிக்கற் விலை கூட.

நான் : அப்ப ஏன் ரிக்கற்ல 10 டொலர் என்று போட்டிருக்கு.

(கோயிலுக்கு 1 டொலர் கூடக்குடுக்க யோசிக்குதுகள் என்ற தோரணையில் முகத்தை உர் என்று வைச்சிருக்கிறார்)

நானும் மனசுக்குள்ள கோயிலும் சந்தையாப் போச்சு.என்று நினைச்சுக்கொண்டு சகானா கொண்டுவந்த 1 டொலரைக்குடுத்திட்டு ரிக்கற்றை வாங்கிக்கொண்டு பெயரை எழுதுவம் என்று குனிய ரிக்கற் வித்தவருக்கு நான் கேள்வி கேட்டிட்டன் என்று கோவம் அதால என்னைத்தள்ளி நின்று எழுதச் சொன்னார் பெயரை.(ரிக்கற் வாங்க பின்னால ஒருதரும் லைன்ல இல்லை).நானும் கோயிலாச்சே என்று வாயை மூடிக்கொண்டு ரிக்கற்றை கொண்டே அம்மாட்ட குடுக்க அம்மான்ர பிரண்ட் கேட்டா:

அ.பி. : என்ன சுமி அர்ச்சனைத்தட்டு எங்க?

நான் : என்ன தட்டு? எனக்குத்தெரியா அவை ஒன்றும் தரேல்ல.

அம்மா : எல்லாத்திலயும் அவசரம். அவை தந்திருப்பினம் நீங்கள் கவனிக்காமல் வந்திருப்பீங்கள் போய் கேட்டு வாங்கிக்கொண்டு வாங்கோ

(கொர்ர்ர்ர்ர் திரும்பவும் அந்த உர் பார்ட்டின்ர போகணுமா நான் )

நான் : நீங்கள் அர்ச்சனை தட்டுத் தரேல்ல.

ர.வி : நீங்கள் கேக்கவேயில்லையே.

நான் 10 டொலர் ரிக்கற்றை 11 டொலருக்கு விற்கத்தெரியும். ஆனால் சின்னப்பிள்ளையள் 10 டொலர் ரிக்கற்றுக்கு அர்ச்சனைத்தட்டும் வருமென்று தெரியாமலிருக்கலாம் என்று குடுக்கவெல்லோ வேணும் என்று மனசுக்குள்ள திட்டிக்கொண்டே ஒரு அர்ச்சனைத் தட்டை எடுத்துக்கொண்டு போய் கோவத்தோட குடுத்தன் அம்மாட்ட.

நான் : இதுக்குத்தான் நான் கோயிலுக்கு வரமாட்டன் என்று சொல்றனான். இங்க வந்தால் எனக்கு கோயிலுக்கு வந்திருக்கிறம் என்ற நினைப்பே வாறேல்ல.

அம்மா : இப்ப ஏன் கத்துவான்? உங்களுக்கு கோயில் வேண்டாம் கடவுள் வேண்டாம் சொந்தக்காரர் வேண்டாம். ஒரு செல்போனும் லாப்ராப் ம் பிரண்ட்ஸ் மட்டும் காணும். வேற ஒன்றும் (ஒருதரும்) தேவையில்லை.நீங்கள் எல்லாம் நாங்கள் இல்லாத நேரத்தில என்ன செய்யப்போறீங்கிளோ தெரியேல்ல.

நான் : காணும் தொடங்காதயுங்கோ இப்ப. நான் சொல்றதில என்ன பிழை? யாரிட்டாவது கேட்டுப்பாருங்கோ இது கோயிலே?. அன்டைக்கு இப்பிடித்தான் உங்கட கல்யாண நாளுக்குக் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யேக்க அர்ச்சனை செய்து முடிக்க முதல் அந்த ஐயா எத்தின தரம் அங்கால டான்ஸ் பிறக்ரிஸ் பண்ணின ஆக்களைத் திரும்பி திரும்பி பார்த்தவர் என்றும் விளக்கை விழுத்தினவர் என்றும் பார்த்தனீங்கள்தானே. பிறகும் சுருதி தாளம் ஒன்றுமில்லாம அங்க நடக்குற கூத்தை நின்றுப் பார்க்கட்டாம் எங்களை நீங்களும் வெக்கம் இல்லாம நின்று பார்த்திட்டு வாறீங்கள். காசும் வேணும் ஆனால் ஒழுங்கா பக்தியோட அர்ச்சனையும் செய்ய மாட்டினம் அவை அதில இந்த கோயில் நிர்வாகி மாரின்ர லொள்ளு வேற. எல்லாம் உங்களை மாதிரி ஆக்களால வாறதுதான்.கடவுளின்ர நினைப்பு மனசில இருந்தாக்காணும்.உங்களைப்போல கோயிலுக்கு வந்ததான் கடவுளை நினைக்கோணும் என்றில்லை.

அம்மா : காணும் நிப்பாட்டு இது கோயில்.

நான் : நான் நிப்பாட்டுறன் நீங்கள் கஸ்டப்பட்டு ரிக்கற் எடுத்ததுக்கு அர்ச்சனையைச் செய்திட்டு வாங்கோ நாங்கள் இதில இருக்கிறம். அப்பா சகானா வாங்கோ.

அம்மா : அர்ச்சனை செய்தாச்சு வாங்கோ கோயிலுக்குள்ள போய் சுத்திக்கும்பிட்டிட்டு போவம் வீட்ட.

நான் : கோயிலுக்குள்ள சரியான சனம் வாங்கோ வீட்ட போவம்

அம்மா : கோயிலுக்குள்ள போகாமல் வீட்ட போறேல்ல நடவுங்கோ கோயிலுக்குள்ள.

கோயில் நிர்வாகியொருவர் : இப்ப சாப்பாடு குடுக்கமாட்டம். சாமி வெளியிலதான் நிக்குது.

(எனக்கு வந்த கோவத்துக்கு அம்மாவைத்திரும்பி பார்த்து முறைக்க எனக்கு முன்னால நின்றவர் )

ஒருவர் : வோஸ்றூம் போறாக்கள் நடந்து காலுளைஞ்சவை இப்பிடியானவையம் கோயிலுக்குள்ளதான் போகணும் தம்பி.

கோ.நி. : போங்கோ போங்கோ ( அவர் கை காட்டின விதம் என்னவாவது பண்ணித் துலையுங்கோ என்றது மாதிரி)

நான் : அம்மா இதுக்கு மேலயும் நீங்கள் கட்டாயம் கோயிலுக்குள்ள போகோணுமே? இவைக்குக் குடுக்கிற காசை செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு மாசம் மாசம் 30 டொலர் இல்லாட்டா வருசத்துக்கு 250 டொலர் குடுத்தா யாரோ ஒரு பிள்ளை உங்கட புண்ணியத்தில நல்லாயிருக்கும்.

அம்மா : ம் சரி இப்ப டக்கென்டு சுத்திட்டுப்போவம்.

கோயிலுக்குள்ள அப்பான்ர ஊர் ஐயர் ஒராள் நின்டார்.

அப்பா : என்ன ரத்தினய்யா கோயில் இப்பிடியாகிட்டுது. எல்லாரையும் எடுத்தெறிஞ்சு கதைக்கினம் நிர்வாகத்தாக்கள்

ரத்தினய்யா : என்ன தம்பி செய்யிறது. எங்களுக்கும் மரியாதையில்லை. வேற வழியில்லாமல் கடவுள் மேல பாரத்தைப்போட்டிட்டு இங்கயே இருக்கிறன். இது முழுக்க முழுக்க பணத்தை எதிர்பார்த்து நடக்குற மாதிரியாகிட்டுது. றோட்டுக்கொரு கோயில். ஐயர் மாருக்குள்ளயும் போட்டி.நிர்வாகத்துக்குள்ளயும் போட்டி பொறாமை.எங்க போய் முடியுமோ.

அப்பா : சரி ஐயா நாங்கள் போப்போறம்.

ஐயா : சரி தம்பி சந்திப்பம்.

இதோ திரு சரவணபவானந்தன் 20 டொடலர்களையளித்த 2 அதிஸ்டலாலப்சீட்டுகளைப் பெற்றுக்கொள்கிறார் . திருவடியார்களே கோயில் திருப்பணிக்குதவுங்கள்!

Thursday, August 16, 2007

நான் மெல்பேர்னுக்கு வாறன்!

வணக்கம்,
Aug 23rd-Sep 3rd வரை மெல்பேர்னில் இருப்பேன்....யார் யாரைச் சந்திக்கலாம்?? சிட்னியில் வசிப்பவர்களுளும் மெல்பேர்னுக்கு வாறீங்கிளோ ?? எனக்்கு சிட்னிக்கு வரமுடியாது போலுள்ளது ஆனால் வர முயற்சி செய்கிறேன்.

அப்ப யார் யார் வாறீங்கள் என்னைச் சந்திக்க?

Tuesday, August 14, 2007

காணாமல் போன ஒரு கொப்பியிலிருந்து...

ஆவணி 9, 2001

கடந்த சனிக்கிழமை

அன்றைய வகுப்பு வழமையிலிருந்து சிறிதே மாறுபட்டதாக இருந்தது.ஆம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கழைக்கழகத்திலிருந்து வந்திருந்த விரிவுரையாளர் ஒருவர்தான் அன்று எங்களுக்கு வகுப்பெடுத்தார்.அவர் தன்னைப்பற்றிய அறிமுகம் எதுவுமின்றி எங்கள் வகுப்பைப் பற்றி விசாரரித்தார்.பின்னர் மெல்ல சங்க காலத்துக்குள் நுழைந்தார்.

இலக்கியம் என்றால் கடந்தகாலச் சமுதாயத்தைத் தெரிவுக்கும் ஒரு காலக்கண்ணாடி என்று கூறினார்.சங்க இலக்கியத்தில் வரும் அகப்பாடல், புறப்பாடல் பற்றி விளக்கினார்.அதாவது அகப்பாடலில் காதல் பேசப்படுகிறது அதை அனுபவித்துத்தான் உணரலாம் புறப்பாடலில் போர் மற்றும் வீரம் , கொடை என்பன பற்றி பேசப்படுகிறது இதை விளங்கப்படுத்தலாம் என்றார்.

அடுத்து சங்கப்பாடல்களில் தமிழ்ப்பண்பாடு எவ்வாறிருந்தது என்று கூறிவிட்டுத் திருமணமுறைகள் பற்றிப் பேசத்தொடங்கினார்.திருமணத்துக்கு முதலில் தலைவன் தலைவி என்றழைக்கப்பட்டவர்கள் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவி என்று அழைக்கப்படுகிறார்கள்.அக்காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஏற்றுக்கொள்ளப்பபட்ட முறையாக இருந்தது.பின்னர் Monogamy ,Polygamy,Polygyny,Polyandry பற்றி நீண்டது அவருடைய உரை.

நீலகிரியில் "தோடர்" என்ற பழங்குடி மக்களிடம் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ளும் முறை இருந்துள்ளது.அந்த ஊாரில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒரே பெண்ணைச் பல சகோதரர்கள் சேர்ந்து மணம் செய்யும் முறையே அதிகமாம்.நீலகிரியில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையை எடுத்துச்சென்று எருமைப்பட்டியின் வாசலில் கிடத்திவிட்டு அப்பட்டியைச் சுற்றி நின்று தாரை தப்பட்டை போன்ற கிராமத்து வாத்தியங்களை முழங்கச்செய்வார்களாம்.உடனே எருமைகள் ஆவேசம் கொண்டு பட்டியைப் பிரித்துக்கொண்டு தறி கெட்டு ஓடுமாம்.அப்படி ஒடும் எருமைகளின் காலில் மிதிபட்டுச் இறக்காமலிருந்தால் அந்தப்பெண் குழந்தைகளைக் கொல்லாமல் பாதுகாப்பாக வளர்ப்பார்களாம்.இதனால் இவ்வாறு உயிர் தப்பிய பெண்கள் மிகவும் குறைவானதால் இத்திருமணமுறை அங்கே அவசியமாயிற்று.அதோடு சேர்த்து அக்காலத்திலிருந்து வந்ததும் தற்காலத்தில் சில இடங்களில் உள்ளதுமான உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிக் கூறினார்.இராஜஸ்தான் மாநிலத்திலத்தில்தான் இந்த உடன்கட்டை ஏறும் இவ்வழக்கம் வலுப்பெற்றிருந்தது. "கணவனை இழந்தால் காட்டுவது இல்" என்ற கூற்று நெடுஞ்செழிய மன்னன் இறந்ததும் கோப்பெருந்தேவி உடனிறக்கும் முன்னர் கூறியதாம் : அதாவது ஒரு கணவனை இழந்த பெண்ணுக்கு நான் அண்ணாவாக அப்பாவாக இருப்பேன் என்று ஆறுதல் சொல்லுவது போல நானுனக்குக் கணவனாக இருப்பேன் என்று சொல்லமுடியாதாம்.அதனால் தான் பெண்கள் உடன்கட்டை ஏறினார்களாம்.

அடுத்து உலகளாவிய விழுமியமான விருந்தோம்பல் எவ்வாறு சங்ககாலத்திலும் அதற்கு பின்னரும் இருந்ததென்று சொன்னார்.இளையான்குடிமாற நாயனார் தன் வறுமையிலும் வீட்டுக்கூரையை ஒடித்து விறகாகவும் குப்பைக்கீரையைக் கறியாக்கி முதல்நாள் விதைத்த நெல்மணிகளைப் பொறுக்கி குற்றி சோறு பொங்கி இறையடியாருக்கு எப்படி அமுது படைத்தார் என சுவைபடச்சொன்னார்.அடுத்து சிறுத்தொண்டர் சமைத்த பிள்ளைக்கறி பற்றியும் கூறினார்.ஒரு பெண் தன் கணவனோடு சேர்ந்துதான் விருந்தோம்பல் செய்யவேண்டுமாம்.மாதவி வீட்டிலிருந்து வீடு திரும்பிய கோவலனிடம் நீங்கள் இல்லாததால் நான் புரவலர்க்கு அமுது படைக்கும் தகுதியில்லாமல் எவ்வளவு துன்பப்பட்டேன் என்று கண்ணகி புலம்பினாராம்.

அடுத்த விழுமியம் வாய்மை.


-தொடரும்-

Sunday, August 12, 2007

நான் வந்திட்டேன் ...

ஹாய் ஹாய்...என்னை யாரும் மிஸ் பண்ணினீங்கிளா :-)
கோடை வகுப்புக்கள் வேலை என்று பிஸியாகிட்டன் இப்ப கிட்டகத்தட்ட ஒரு மாதம் விடுமுறை பார்ப்பம் அதுக்குள்ள என்ன எழுதலாமென்று.

ஒரு சின்னக்கதை சொல்றன் இன்டைக்கு.. நாளைக்கு ஏதும் உருப்படியா எழுதுவம்.

யாராவது யாரும் செத்தால் சந்தோசப்படுவீங்கிளா? நானும் நான் அப்பிடியில்லையென்றுதான் நினச்சனான் ஆனால் அது உண்மையில்லப் போல கிடக்கு!

5 வருசத்துக்கு முதல் மாமாவோட இருக்கேக்க பேப்பர் போடப் போறனான் சிலநேரம்.நேற்றும் அவேன்ர வீட்ட நின்டனான் அப்ப மாமான்ர பிள்ளையளோட பேப்பர் போடப்போவம் என்று வெளிக்கிட்டன்.அப்ப பக்கத்துவீடு சத்தமே இல்லாமல் இருந்திச்சு.நாள் முழுக்க வெளியில தவம் கிடக்கிற கிழவனைக்காணேல்ல.எனக்குப் பயங்கர ஆச்சரியம்.என்ன மாமா கிழவனைக்காணேல்ல என்றன்.மாமா சொன்னார் உனக்கு விசயம் தெரியாதே?? கிழவன் போனவருசமே மண்டையப்போட்டிட்டுது.

முந்தி நாங்கள் மாமா வீட்ட இருக்கேக்க வீட்டுக்கு முன்னால வெளியில இருந்து கதைக்கேலாது பாட்டுக்கேக்க ஏலாது சைக்கிள் ஓடேலாது.ஐயோ அந்தக்கிழவன்ர லொள்ளென்டால் தாங்கேலாது. சும்மா எந்த நேரம் அந்த ஏரியாவில இருக்கிற எல்லாச் சின்னப்பிள்ளைகளோடயும் கொழுவல். புறுபுறுத்துக்கொண்டெயிருக்கும் .ஒருநாள் நாங்கள் வேணுமென்று யன்னல் கரையில றேடியோ வச்சு றக்கோட் பண்ணிட்டம் கிழவன் சத்தம்போடுறதை ஒருநாள் ப்ளாக்மெயில் வேற பண்ணிப்பார்த்தம் இப்பிடி இனிம எந்த நேரமும் எங்களோட வம்பு பண்ணினால் பொலிஸ்க்குக் குடுப்பம் என்று.

பிறகு நாங்களும் வேற இடத்துக்குப்போட்டம்.கிழவன் போன வருசம் `ஹாட்அற்றாக் வந்து செத்துப்போட்டுதாம்.சத்தியமா எனக்கு மாமா சொல்லேக்க ஒரு கொஞ்சம் கூடக் கவலை வரேல்ல.இனிமலாவது இந்த ஏரியாப்பிள்ளையள் நிம்மதியா இருக்குங்கள் என்று சின்னச் சந்தோசம்தான்.

Wednesday, July 25, 2007

வெயில் உதித்த நாள்

வெயிலின்ர எழுத்தில ஏதோ ஒரு வித்தியாசம் எனக்குத் தெரியுது..வார்த்தைப்பிரயோகங்கள் நேர்த்தியாகக் கட்டப்பட்ட மாலை போல ஒரு ஒரு ஒரு என்ன சொல் அது..இடையிடையில கவிதை மழை கொட்டுது போல...பிடிச்சிருக்கு. யாரு புலம்புறதுங்க...என்னைத் திட்டாதயுங்கோ நான் பாவமெல்லோ :-)) சொல்றன் சொல்றன்!!!!!

இன்று வெயில் ஐயோ இல்லை எங்கட மழை ஷ்ரேயா பிறந்த நாள்!!!




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களக்கா :-)

Wednesday, July 18, 2007

நானும் வாறன் போட்டிக்கு....

பெருந்தலைகளைப் பகைச்சுக்க வேண்டாம் என்று என்னை மிரட்டி எனக்குள்ள நித்தா கொண்ட மிருகத்தை தட்டி எழுப்பிட்டார் ஒரு பெரும்புள்ளி அதால நானும் வாறன் புகைப்படப்போட்டிக்கு..இந்தாங்கோ படங்கள்.ஆமா யார் நடுவர்???



வெண்பனியின் வெண்மை அழகா? உன் புன்னகையின் வெண்மை அழகா?




இரட்டை நிலவு - ஒற்றைக் கனவு



அத்தி கானாப்பிரபா மாமா வின் பண்ணட்டும் என்னைப் படம் எடுக்காதயுங்கோ என்னைத் தூக்குங்கோ:-)

Monday, June 25, 2007

புதிர் மனிதர்கள்

போன வாரம் பேருந்தில் நடந்த இந்தச் சம்பவம் என்னை யோசிக்க வைத்தது.நீங்களும் இப்படியானவர்களை நிச்சயம் சந்தித்திருப்பீர்கள்.

எங்கள் பார்வைக்கு அந்த மனிதனின் செய்கைகள் பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தன.ஒருவேளை drugs அடிச்சிட்டு வந்திருக்கிறானோ என்றுகூட நான் நினைத்தேன்.இரவு பத்து மணிக்கு பேருந்தில் இருக்கிறவர்களின் காலைத் தட்டிவிட்டிட்டு நிலத்தில கிடக்கிற அழுக்குகளை வெறும் நகத்தால் சுரண்டி எடுத்து ஒரு இடத்தில் போட்டுச்சேர்க்கிறான்.பிறகு காற்சட்டைப்பொக்கற்றில கையை விட்டு வெறும் தண்ணிப்போத்தலை எடுத்து தண்ணி இருக்கிற மாதிரி பாவனை செய்து குடிக்கிறான்.சிகரட்டை எடுத்து பிச்சு பிச்சு தான் சேர்த்து வைச்ச அழுக்கு கும்பிக்கு மேல போடுறான்.பிறகு பக்கத்தில இருக்கிற ஆளிட்ட சிகரட் கேக்கிறான் அவர் தன்னட்ட சிகரெட் இல்லை என்று சொன்னதும் தன்னட்ட இருக்கிற மற்ற சிகரெட்டையும் பிச்சு பிச்சுப் போடுறான்.இவ்வளத்தையும் நான் அவனுக்குப்பின்னால இருக்கிற சீற்ல இருந்து பார்த்துக்கொண்டிருந்தனான் கொஞ்ச நேரத்தில அவன் எனக்குப் பக்கத்தில வந்திருந்துகொண்டு அந்த இடத்தில நிலத்தில இருக்கிற அழுக்கைச் சுரண்டத் தொடங்கிட்டான்.அவன் அங்கால இங்கால திரும்பிறதும் என் காலுக்குப் பக்கத்தில கையை விடுறதும் ஐயோ..எனக்குப் பயம் பிடிச்சிடுச்சு.அவன் ஒருக்கால் மற்றப்பக்கம் திரும்பினதும் என்னை விட்டாக்காணும் என்று நான் எழும்பிப்போய் ஒரு அன்ரிக்குப் பக்கத்தில போய் இருந்தன்.அவா சொன்னா பயப்பிடாத நானும் அவனுக்குப்பக்கத்தில இருந்திட்டுத்தான் எழும்பி வந்தனான்.அவன்ர செய்கைகள் எல்லாம் விசித்திரமாக்கிடக்கு.அவனுக்கு மூளைக்கோளாறோ தெரியேல்ல என்று.

கோடைக்கேற்றறதுபோல உடுப்பு போட்டிருக்கிறான்.ipod ல பாட்டுக்கேக்கிறான்.உடம்பு முழுக்க tatoo..பார்க்க நல்லாத்தானே இருக்கிறான்.ஒரே விசயத்தைத் திரும்ப திரும்ப செய்யுறான் ஒருவேளை Obsessive-Compulsive Disorder மாதிரி என்னவும் இருக்குமோ என்று நான் யோசிச்சுக்கொண்டிருக்கவே அவன்ர ஸ்ரொப் வந்திட்டுப்போல இறங்கிப்போட்டான்.கொஞ்ச நேரத்தில நாங்கள் இருந்த பக்கத்துக்கு வந்த டிரைவர் கேட்டா இங்க என்ன நடந்தது? நாங்கள் அவாக்கு விளக்கம் சொல்ல அவா சொன்னா அவன் இறங்கிப்போகேக்க தன்னட்ட "பஸ் சரியான ஊத்தையா இருக்கு ஒருக்கா கிளீன் பண்ணனும்" garageக்கொண்டு போங்கோ "என்று சொல்லிட்டுப் போறானாம்.அவனை என்னவோ நினச்சோம்....

Thursday, June 14, 2007

கண்டுபிடி கண்டுபிடி VIII

கண்டுபிடி VII க்குச் சரியான பதில்களைச்சொன்ன ரங்கநாதன் மைபிரன்ட் விஷ்ணுஅண்ணா விஜேக்குப் பாராட்டுக்கள்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்டுபிடி vIIIயோடு வந்திருக்கிறேன்.













Monday, June 11, 2007

நிமிர்வு 2007 ம் தாசீசியஸ் மாஸ்டருடனான சந்திப்பும்

தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் நந்தியா மற்றுமொரு நண்பனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஏற்கனவே அ.மங்னை அவர்களின் நாடகப்பட்டறை நடந்துகொண்டிருந்தது.வேலை காரணமாக காலையில் நடந்த நாடகப்பட்டறைக்குப் போகமுடியவில்லை.அதே இடத்துக்கு தாசீசியஸ் மாஸ்டரைச் சந்திக்கச் சென்ற போது அங்கே மங்கையையும் பார்வதி மிஸ்சையும் கண்டு கதைத்தபோது சுமதி ரூபனைக் காணாதது நிம்மதியாக இருந்தது:-) கண்டிருந்தால் நாடகப்பட்டறைக்குப் போகாமல் விட்ட குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியிருக்கும்.

மாஸ்டர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.தன் கல்வி தொழில்முறைகளைப் பற்றி நிறையப்பேசினார்.ஆழமான தெளிவான தங்குதடையற்ற பேச்சு.மாஸ'டரைப் பற்றித் தெரியாதவர்கள் பிரபாண்ணாவின் " தாசீசியஸ் பேசுகிறார்...! " ஐ வாசியுங்கோ சரியா.எங்கள் மூவரைப்பற்றியும் கேட்டறிந்துகொண்டு தன் நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டார்.பின்னர் தமிழ்க்குடிலைப்பற்றிய பேச்செழுந்தது.நேரமின்மையால் தமிழ்க்குடிலில் நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும் தமிழ்க்குடிலை ஒரு 24 மணித்தியால வானொலியாகத் தொடங்கி நியுஸிலான்ட் அவுஸ்ரேலியா தொடக்கம் கனடா வரை தமிழர்கள் செறிந்து வாழும் பாகங்களிலிருந்தும் பலர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் செயற்திட்டத்தைப்பற்றி்ச் சொன்னார்.கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஆகியிருக்கும் தேத்தண்ணி குடிக்ப்போவமா என்றார்.இல்லை நாங்கள்தான் உங்களுக்குத் தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வந்திருக்கோணும் என்றோம் " ஓ அப்ப கொண்டு வந்தனீங்களா எங்க தாங்கோ தாங்கோ " என்றார் நகைச்சுவையோடு. நாங்கள் நிமிர்வு 2007க்குப் போகவேண்டியிருந்ததால் விடைபெற்றுக்கொண்டோம்.

நிமிர்வு 2007

செல்வி சுபாங்கியும் செல்வன் சிறீயும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வளங்கினார்கள். பொன்.சிவகுமார் அண்ணாவின் நினைவுநாளான மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு நடந்த நிமிர்வு 2007 தமிழ் இளையோரமைப்பைச் சேர்ந்த சர்மி கனடாக் கொடியை ஏற்றி வைக்க ஆரம்பமானது.மேஜர் நித்திலாக்காவின் தாயார் திருமதி.செல்வநாயகம் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து சிவகுமாரண்ணாவின் படத்திற்கு அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்தது அகவணக்கம். அடுத்து செல்வி நிவேதா இராமலிங்கம் " தாய் மண்ணே உனக்கு முதல் வணக்கம் " என்ற பாடலுக்கு வரவேற்பு நடனமாடினார்.தொடர்நது தமிழிளையோரமைப்பைச் சேர்ந்த ஜெனிற் மாணவர் எழுச்சி நாளைப்பற்றிய உரையில் ஆளுமினம் தமிழர்களின் கல்வியில் கத்தி வைத்ததில் தொடங்கி மாணவர்கள் அனைவரும் எமது பிரச்சனைகளை வெளியுலகுக்கு ஓங்கி உரைக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையுட்பட மாணவர் எழுச்சிநாள் பற்றிய பலவிடயங்களைக் கூறிச்சென்றார்.

அடுத்து இடம்பெற்ற நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தது நிவேதாவின் மாணவர்கள் வழங்கிய "ஆடிப்பாடுவோம் கவலைகள் மறந்தாச்சு புதுக்கவிதையும் பிறந்தாச்சு" என்ற பாடலுக்கான கோலாட்டம்.சிறுமிகள் நன்றாகவே பழக்கியெடுத்திருக்கிறார் நிவேதா.இரண்டு சிறுமிகள் இடையில் தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டு நல்லதொரு நடன நிகழ்வைத்தந்திருந்தார்கள்.அரங்கு நிறைந்து இருக்கைகள் இல்லாமல் நின்றுகொண்டிருந்தவர்கள் என அரங்கம் நிறைந்த கைதட்டலைப் பெற்றுக்கொண்டார்கள் சிறுமிகள். இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற்ற போதிலும் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்னைக் கவர்ந் இன்னும் மூன்று நிகழ்வுகள் இளையோரமைப்பினர் வழங்கிய "நிஜம்" என்ற நாடகம். கலாநிதி குலமோகன் ஆசரியரின் மாணவர்கள் வழங்கி "அறுவடை " மற்றும் U OF T மாணவர்கள் வழங்கிய " சிதைப்புக்கள்" என்ற Monologue.

"நிஜம்" யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படும் இன்னல்களைக் கருவாகக்கொண்டது.சமூக நிகழ்வுகளில் அக்கறை கொண்ட திறமையான மாணவர்களின் வாழ்க்கை இராணுவத்தினரால் எப்படி சீரழிக்கப்படுகிறதென்பதை இந்த நாடகத்தின் மூலம் காட்டியிருந்தார்கள்.அப்பா இல்லாத குடும்பத்தை ரியூசன் குடுத்து அந்தப் பணத்தில் தானும் படித்துக்குடும்பத்தையும் காப்பாற்றும் மாணவன் சிவா தன் கண்முன்னே தன் நண்பன் வெள்ளை வானில் கடத்தப்படுவதைப் பார்த்துக்கொதித்துப் போய் அடுத்த முறை இராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும்போது அவர்களை எதிர்க்கிறான்.இன்னொரு நண்பன் இராணுவத்தினரைப் பார்த்துக் கூழை கும்பிடு போடுகிறான்.அதற்கு சிவா "எங்கட உரிமையை நாங்கள் கேக்க நீ ஏன்டா பூஞ்சிப் பூஞ்சி அவங்களிட்டப் போறாய்" என்று கேப்பான் அதற்கு நண்பனோ "டேய் நாங்கள் இப்பிடியே இருந்தா எப்படா graduate பண்றது " என்று ஆதங்கப்படுவான். அடுத்த காட்சியில் சிவாக்குப்பிடித்த மீன் குழம்பு சமைத்து வைத்துக்கொண்டு காவலிருக்கும் அம்மாவும் படித்துக்கொண்டிருக்கும் தங்கையும்.சிவா கல்லூரியால் வந்த கோலத்தைப் பார்த்துத்தாய் சண்டை போடுவாள் "நீ ஏன் அவங்கட வம்புக்குப் போறாய்? எனக்கு இருக்கிறது நீ ஒரு பிள்ளை " அதற்கு சிவாவோ " அம்மா இஞ்ச வாண எல்லாரும் எனக்கொரு பிள்ளை என்று அழுதா அப்ப ஆர்தாண இவங்களைத் தட்டிக்கேட்கிறது : நீ வீட்டைப் பார்க்கிறாய் நான் நாட்டை நினைக்கிறான்" என்பான்.சிவா சாப்பிட அமரும்போது இராணுவத்தினர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாய் தங்கையின் கண்முன்னே சிவாவைக்கொல்ல தாயாக நடித்திருந்த சுமி ஒரு கத்து கத்தினா ஐயொ எனக்குக் கண்ணால தண்ணி வந்திட்டு அப்பிடியொரு நடிப்பு. பல்கழைக்கழக மாணவர்களுடைய பெயர் விரிவுரையாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் வளாகச்சுவரில் ஒட்டப்பட்டது பாடசாலை மாணவி இராணுவத்தினரால் கடத்தப்பட்டது என அனைத்து நிகழ்வுகளையும் பிரதிபலித்த இந்த " நிஜம் " சிறப்பான நெறியாள்கையுடன் அரங்கேறப்பட்டிருந்தது. நாடகத்தின் முடிவில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட கடத்தப்பட்வர்களின் பெயர் தாங்கிய அட்டைகளை ஏந்திய படி அனைவரும் நிற்க அவர்கள் கொல்லப்பட்ட கடத்தப்பட்ட விபரங்கள் வாசிக்கப்பட்டது.இந்த நாடகத்தின் சிறப்பு என்னவெனில் நாடகம் முழுதும் ஆங்கிலத்தில் Narrator ஒருவர் திரைக்குப்பின்னால் நின்று வாசித்ததுதான்.நிமிர்வுக்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் சொல்ல வந்த செய்தி நிச்சயமாகச் சென்றடைந்திருக்கும். இந்த நாடகத்தை இன்னும் பல சர்வதேச மேடைகளில் ஏற்றவேண்டும்."கொண்டாட்டம்" போன்ற பல்கலாச்சார மக்கள் கூடும் நிகழ்வுகளில் எல்லாம் இப்படியான நாடகங்களுக்கு இடம்கொடுத்தால் எம் பிரச்சனைகளை இலகுவாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

"அறுவடை "

நகைச்சுவையாகப் பலசேதிகளைச் சொல்லிற்று.

இரண்டு வயோதிபர்களின் உரையாடலோடு தொடங்கியது.அவர்கள் 'Donut' ஐ சீனிவடை என்று கதைத்ததை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வருது.அறுவடை என்று எழுதியதை இங்கு தமிழ் படிக்கும் ஒரு சிறுவனை வாசிக்கச்சொல்வார்கள் அவன் அருவடை அறுவாடை என்று திக்குவான் அப்பொழுது அங்கு வரும் ஒரு அக்கா முத்தமிழைப் பற்றி அழகாகச்சொல்வார் அப்ப அங்கு வரும் இன்னொரு சிறுவனும் சேர்ந்துகொண்டு சும்மா பிலம் காட்டதயுங்கோ எங்களுக்கும் செந்தமிழ் தெரியும் இப்ப பாருங்கோ " நீ முத்தமொன்று குடுத்தால் முத்தமிழ் வெக்கப்பட்டுச் சிரித்தால் செந்தமிழ் பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்" என்று டான்ஸ் ஆடுவாங்கள் 2 பேரும். அந்த அக்கா சொன்ன வரிகளில் ஒன்று "எங்கள் வயலில் இப்பொழுது விதைக்பட்டிருப்பது நெல்மணிகளல்ல எம்முறவுகள்".அறுவடையின் இடையில் இரண்டு நடனமும் இடம்பெற்து" ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" மற்றும் " ஆண்டாண்டு காலமதாய் நாமாண்டு வந்த பூமி ".

அடுத்து U OF T மாணவர்கள் வழங்கிய "சிதைப்புக்கள்". கல்லறையிலிருந்து எழுந்து வரும் நால்வர் தங்களுடைய கதையைச் சொல்லுவதா அமைந்திருந்தது இந்த Monologue. ஒரு மீனவர் தன் அன்பான மனைவியும் குழந்தைகளும் தானில்லாமல் என்ன அல்லல் படுகிறார்களோ எனத்தொடங்கி "எங்கள் கடலில் மீன் பிடிக்க எங்களுக்கு உரிமையில்லையாம் கொண்டிட்டாங்கள் என்னைக் கொண்டிட்டாங்கள்" என்று அழுதழுது தன் கதையைக் கூறினார்.உணர்ச்சியோடு கதைத்த அவர் திடீரென்று பேப்பரைப் பார்த்து வாசித்தது அவருடைய வேகத்தைக் குறைத்துவிட்டது.
அடுத்து 15 வயதுப் பள்ளி மாணவியொருத்தி தன் கற்பு கயவர்களால் சூறையாடப்பட்டதென்பதை அதிக வார்த்தைகளின்றித் தன் நடிப்பாலும் "வலிக்கிறது வலிக்கிறது" என்று நிஜமான வலியோடும் கதறினார்.மற்றுமொரு மாணவன் தன் கல்விகற்கும் உரிமை பறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவனுடைய கதை.அடுத்து ஒரு பெண்போராளியின் கதை(?).

அதற்குப் பிறகும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட "நிமிர்வு 2007 " மலரும் இன்னும் கைக்கு வரவில்லை கிடைத்ததும் அதுபற்றிச் சொல்கிறேன்.[படங்கள் விரைவில்....]

வாசு சின்னராசா மாஸ்டரின் மாணவிகள் "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லைப்போராடுமா" என்ற பாடலுக்கு வழங்கிய நடனத்தாலோ என்னவோ இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்துவி்ட்டது.உங்களுக்காக.

Sunday, June 10, 2007

எழுவோம்! நிமிர்வோம்!

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளையோரின் கையில் என்பதை நன்குணர்ந்த நம் சகோதரர்கள் இராணுவச்சாவடிகளைத் தாண்டிச்சென்று குண்டுச்சத்தங்களுக்கிடையில் கூட நம்பிக்கையுடன் கல்வி கற்றுத் தேர்ச்சியடைகிறார்கள்.பள்ளிக்கூடங்கள் அகதி முகாகமாகவும் இராணுவ முகங்களாக மாறியபோதும் பாடசாலைக்கட்டிடங்கள் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்கள் குண்டு வைத்துப் பிச்சு எறியப்பட்டாலும் கூட தமது அயராத முயற்சியாலும் ஆர்வத்தாலும் கல்வி தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியமானதென்பதை உணர்ந்து நம் சகோதரர்கள் தேர்வுக்குத் தம்மைத் தகுந்த முறையில் தயார்படுத்துவார்கள். ஆனலும் தேர்வு நேரங்களில் தலைதூக்கும் போராட்டச்சிக்கல்களால் தேர்வெழுத முடியாமல் நொந்து போகிறார்கள் சில சகோதரர்கள்.இவ்வாறெல்லாம் தம் தம்பி தங்கைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்படக்கூடாதென்று நமக்காகப் போராடினார்கள் நம் மூத்த சகோதரர்கள்.அவ்வாறு போராடி நமக்காக உயிர்த்தியாகம் செய்த முதல் மாணவரான பொன்னுத்துரை சிவகுமாரன் சயனைட் அருந்தி உயிர் நீத்த நாளைத்தான் நாம் மாணவர் எழுச்சி நாளாக இன்று நினைவுகூர்கின்றோம்.

"கல்வியும் எங்கள் மூலதனம் அதில் கத்தி வைக்கிறது ஆளுமினம்....புத்தகத்தாள்கள் எதிரில் விரிந்தன செத்தவர் முகமே அருகில் தெரிந்தன போருக்குப் படிப்பா படித்திடப்போரா கேள்விகள் " இந்தப் பாடல் வரிகள் 1994ல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வெளியிடப்பட்ட "விடியலைத்தேடும் பறவைகள்" என்ற இசைத்தட்டில் இடம்பெற்றிருந்தது.இப்பாடலில் குறிப்பிட்டபடி தரப்படுத்தல் மூலம் தங்கள் கல்வியில் ஆளுமினம் கத்தி வைத்ததைப் பொறுக்காது பொங்கியெழுந்தவர்களால் 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.யாழ்.இந்துககல்லூரியில் வணிகத்துறையில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த சிவகுமாரண்ணாவும் 1971ம் ஆண்டு இந்த மாணவர் பேரைவையில் இணைந்துகொண்டார்.தரப்படுத்தல் போன்ற சிங்கள அரசின் அடக்கு முறைகள் மீதான மாணவரின் எதிர்ப்பைக் காட்டும்முகமாக உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் உள்ள திறந்தவெளியரங்கில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சியின் போது அப்போதைய துணைக்கலாச்சார அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறியின் மோட்டார் வண்டியை வெடிவைத்துத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் சிவகுமாரண்ணா.ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.அதுமட்டுமல்லாது அப்போதைய மேயர் அல்பிரட் துரையப்பாவின் காரை வெடித்துச் சிதற வைத்ததும் சிவகுமாரண்ணாவும் அவருடைய சகாக்களுமே.அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் எதிர்ப்பைக்காட்டவே இத்தயை ஆயுதப்போராட்டங்களில் ஈடுபடவேண்டிய தேவை அன்றைய மாணவர் அமைப்புக்கு இருந்திருக்கின்றது.போராட்ட முறையானது கொள்கைகளை நிலைநிறுத்த இலட்சியங்களை அடையப் பயன்படுத்தப்படும் வழியே தவிர போராட்ட முறையே கொள்கையாகாது என்பதை சிவகுமாரனண்ணாவே கூறியுள்ளார்.



சிவகுமாரனண்ணாவோடு அவருடைய கடைசிக்கணங்கள் வரை கூடவிருந்தவரும் இன்றைய எழுத்தாளருமான குரு.அரவிந்தன் அவர்கள் சிவகுமாரனண்ணாவைப்பற்றிச் சொல்லும் சேதிகள் பலவுள்ளன.1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் சிவகுமாரண்ணாவின் பங்களிப்பும் முக்கியமானது.இம்மாநாட்டில் தொண்டராகவிருந்த சிவகுமாரண்ணாவும் அவருடைய தோழர்களும் மாநாட்டின் இறுதிநாளில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நேரடியாகப்பார்த்தவர்கள்.அம்மக்கள் பரிதாபமாகக் கொல்லப்படுவதற்கு காரணகர்த்தாகவிருந்த அன்றைய உதவிப் பொலிஸ் அதிபர் சந்திரசேகராவிற்கு பாடம் கற்பிக்க சிவகுமாரனண்ணாவும் அவருடைய தோழர்கள் சிலரும் திட்டமிட்டார்கள் ஆனால் அந்தத்திட்டத்தில் அந்தப்பொலிஸ் அதிகாரி தப்பிவிட்டதால் சிவகுமாரண்ணாவும் அவர் சகாக்களும் தனிப்படையமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பொலிஸாரால் தேடப்பட்டனர். பொலிஸிடம் இருந்து தப்பிக்க சிவகுமாரன் அண்ணா மற்றும் அவருடைய சகாக்களான மகேந்திரன், யுவராசா, டேவிட் (கி.பி.அரவிந்தன்) ஆகிய நால்வரும் கோப்பாய் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் நீர்வேலியில் வைத்துப் பொதுமக்கள் இவர்களைக் கொள்ளைக்காரர் என நினைத்துத் துரத்த ஒருவாறு அவர்களிடம் தாங்கள் யாரென்பதைப் புரியவைத்துத் தொடர்ந்து முன்னேறிச்செல்லும்போது பொலிஸ் சுற்றிவளைப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.நால்வரும் நான்கு திசையில் சிதறி ஓடியவேளையில் டேவிட்டைத்தவிர மற்றைய மூவரும் பொலிஸின் கையில் சிக்கிவிட சிவக்குமாரண் அண்ணா சயனைட் அருந்திவிடுகிறார்.மற்றவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட சிவக்குமாரனண்ணா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்.சிகிச்சை பலனளிக்காமல் சிவகுமாரண்ணா மருத்துவமனையிலேயே உயிர்துறந்தார்.

தமிழ் மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதம் ஏந்திய விடுதலைப்போரே உகந்த வழியெனக்கண்டு அரசாங்கம் மீதான எதிர்ப்பைப் பல இடங்களில் துணிவோடு காட்டிக் கிட்டத்தட்ட மூன்றுவருடங்கள் சிறையில் கழித்த சிவகுமரானண்ணா 1974ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி சயனைட் அருந்தி மகத்தான தன்னுயிரைத் தமிழ் மக்களுக்காக தியாகம் செய்தார்.அவர் வழி வந்த பல்லாயிரக்கணக்கான அக்காக்களினதும் அண்ணாக்களினதும் கனவு நினைவேற தொலைநோக்குப்பார்வையோடு இன்றுவரை போராடும் எம் சகோதரர்களுக்கு நாமும் தோள்கொடுக்க வேண்டும்.

தமிழீழத் தேசியத்தலைவர் கூட "'மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார். எனவே உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் மாணவர்களாகிய நாம் ஒன்றுகூடி உலகமக்களுக்கு எம்மீதான அரசின் அடக்குமுறையை எடுத்தியம்புவோம்.தொழில்நுட்பரீதியாக அறிவியல்ரீதியாக இன்னும் என்னென்ன வழிகளிலெல்லாம் எம்மால் தாயக விடிவுக்கு உதவ முடியுமோ அவ்வுதவிகள் எல்லாவற்றையும செய்வோமென்று இந்த மாணவர் எழுச்சி நாளில் மாணவர்கள் நாம் உறுதியெடுத்துக்கொள்வோம்.ஒன்று சேர்வோம்.எழுவோம்.நிமிர்வோம்.

Friday, June 08, 2007

எனக்குக் கேட்டிச்சு!

இரவு நேரப் பயணம் ஒன்றின் போது வீடுபோய்ச் சேர இன்னும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருக்கிறதே என தூங்க முயற்றி செய்து கொண்டிருந்த போது என்னை ஈர்த்த உரையாடலிது.முன்னாலிருந்தவர்கள் புதுசாக்கட்டிக்கிட்ட ஜோடி என்று நினைக்கிறேன்.நான் பின்னாலிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லையோ அல்லது என் காதில் இருந்த ஹெட்போனைப் பார்த்துவிட்டு எனக்குக் கேக்காதென்று நினைத்துக் கதைத்தார்களோ யாமிறியோம் பராபரமே.

பெண் : தள்ளி இருடா எனக்கு விசரக் கிளப்பாத!

ஆண்: தொடங்காத இப்ப.இப்ப நான் என்னத்த செஞ்சிட்டன் என்று மூஞ்சை இந்தளவுக்கு நீண்டிருக்கு.

பெ : நான் ஆசையா வாங்கின அந்த கிளாஸ் வாஸை கவனமா வச்சிருக்கத்தெரியாம அதை ரெயின்ல ஏற முதலே உடைச்சுப்போட்டு இப்ப ஒன்றுமே நடக்காத மாதிரிக் கேள்வி வேற.

ஆ: இப்ப என்ன அந்தக் கிளாஸ் போலவே நாளைக்கே நானொன்று வேண்டித்தந்தா சரியா.

பெ :

ஆ: என்ன சத்தத்தையே காணம்.

பெ:

:ஓகே என்னோட கதைக்கவேண்டாம்.நானிந்தப் பேப்பரோட கதைக்கிறன்.
ஹேய் சுபோ இங்க பார் இன்றைக்கு யாரோ ஒரு தமிழாள் தன்ர மகள் மகளி்ன்ர boy friend மற்றது இன்னும் சில பெடியளுக்கு மேல ஜீப் ஏத்தினதென்று காலம நியூஸ்ல சொன்னதெல்லா அதப்பற்றி இதில இருக்கு.ம் ம் எல்லாரும் என்ன மாதிரி நல்லவனா இருப்பினமா.அத்தைன்ர நல்ல மனசுக்கு என்னைப்போல ஒரு தங்கமான மருமகன் வந்து வாச்சிருக்கிறன்.எனக்குத்தான் குடுப்பின இல்ல அத்தை மாதிரி இல்லாம இப்பிடி ஒருத்தி எனக்கு பொண்டாட்டியா வந்து வச்சிருக்கு. oh no அந்தப்பெடியன்ர படம் போட்டிருக்கு.பெடியன வடிவாப்பார் உங்கட சொந்தக்காரப் பெடியன் நிமால் மாதிரிக்கிடக்கு!

பெ: வட் ? காட்டுங்கோ ஒருக்கா.அவன்தான்.ஐயோ பாவம் சுகுணான்ரி.அம்மாக்குத் தெரியுமோ தெரியாது.அம்மாக்கொருக்கா போனடியுங்கோ.

பெ: ஹலோ அம்மா நியூஸ் கேட்டனீங்கிளே.ஜீப்பால ஏத்தினது நிமாலுக்கம்மா.பேப்பரில படம் கிடக்கு.பாவமம்மா அவை.சுகுணான்ரி வேற இப்பத்தான் ஓரளவுக்குச் சுகமாகிக்கொண்டு வாற இதைப் பார்த்தா திரும்ப ஹோமாவுக்கே போடுவா.நிமாலுக்கு மண்டைக்க ஓன்றுமில்லையே.ஏற்கனவே அவன் அந்த gang பெடியங்களக் காட்டிக்குடுத்ததென்று அவங்கள் அவனுக்குக் குறி வச்சுப் போட்ட fire bomb ஆல அம்மாவும் தங்கச்சியும் எரிகாயங்களால ஹொஸ்பிற்றல்ல இருக்கினம் இந்த நேரத்தில இவனேன் girl friendஓட பார்க்குப் போனவன்.

(கதை கேக்க நான் பாட்டை pause பண்ணிட்டுக் கதை கேட்டுக்கொண்டிருந்தன் ஆனாலும் அம்மா கதைக்கிறது எனக்கு கேக்கல)

பெ: ஓமண சண் பேப்பரில கவர் ஸ்ரோரியே இதான்.அந்த girl இரண்டு நாளா வீட்டயே போகேல்லயாம்.தாயும் தேப்பனும் தமக்கையும் தேடித்திரிஞ்சவையாம் இவன்ர ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கிற பார்க்ல இரண்டுபேரும் வேற சில பிரண்ட்ஸ்ம் கதைச்சுக்கொண்டிருந்தவையாம்.கண்ட உடன கோவத்தில அப்பிடியே கொண்டுபோய் ஜீப்பை ஏத்திப்போட்டாராம்.படத்தில நிமால் போட்டிருந்த உடுப்பெல்லாம் கிளிஞ்சுபோய் அழுதுகொண்டிருக்கிறான் .பார்க்கவே விசராக்கிடக்கு.நான் பேப்பர் கொண்டுவாறன் பாரண நீயே.

பெ: தேப்பனைப் பொலிஸ் பிடிக்கேக்க டான்ஸ் ஆடினவராம் சிரிச்சவராம் என்று பொலிஸ் மென்ரல் அசெஸ்மென்ற் கேட்டிருக்கினமாம்.
ஏனம்மா அவைக்கு மட்டும் இப்பிடியெல்லாம் நடக்குது.எனக்குத் தெரிஞ்சு நிமால் நல்ல பெடியன் தானே.இப்ப பாருங்கொ இந்த girl friend பிரச்சனையாலதான் fire bomb போட்டதென்டு கதைக்கப்போகுதுகள் சனங்கள்.சும்மாவே சிங்கள gang ஒன்றும் இல்லாம் தமிழ் gang தான் என்று சொல்லிக்கொண்டு திரியிறவைக்கெல்லாம் இது அவல் குடுத்த மாதிரி. ம் சரி கொஞ்ச நேரத்தில வீட்ட வாறம்.bye.

ஆ: நிமால் பாவம்.அந்த girl ன்ர தேப்பன் இனி வெளில வாறது கஸ்டம் தான்.
பெ: கோவத்தில இல்லாட்டி மனவுளைச்சல் அதுஇதென்று சொல்லி வெளில வந்தால்?
ஆ: நான் நினைக்கேல்ல. triple attempted murder!

பிறகு அவைன்ர ஸ்டாப் வந்திட்டு இறங்கிப்போட்டினம்.

மனிதராய் இருத்தல் தமிழராய் விளங்கல்

3வது தமிழியல் ஆய்வு மாநாடு, தொறொன்டோ மே 15- 17, 2008

3வது தமிழியல் ஆய்வு மாநாடு 2008 மே 15, 16, 17ம் நாட்களில் தொறொன்டோ நகரில் இடம்பெறும். இந்த மாநாட்டை தொறொன்டோ பல்கலைக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகின்றன. மாநாட்டில் கட்டுரை வழங்க விரும்பும் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், அவைக்காட்சிக் கலைகளில் ஈடுபட்டு உழைப்போர், தமிழியல் செயற்பாட்டாளர்கள் போன்ற அனைவரிடம் இருந்தும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.

2008ம் ஆண்டுக்கான மாநாட்டின் ஆய்வுப் பொருள், “மனிதராய் இருத்தல்;
தமிழராய் விளங்கல்” என்பதாகும்.

எப்போதும் எங்கேயும் பொருந்தி வரக்கூடிய வகையில் மானுடம் என்பதையும் அடையாளம் என்பதையும் கற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வியைப் புலமையாளர் பலர் எழுப்பி வருகின்றனர். “மானுடம்”, “மனிதராய் இருந்தல்”, “ஆழ்நிலை” போன்ற எண்ணக்கருக்கள் தமிழ் வழங்கும் நாடுகளிலும் இடங்களிலும் தமிழ் மரபுகள் ஊடாகவும் காலந்தோறும் எவ்வாறு உருவகப்படுத்தப்பட்டு வந்துள்ள? எவ்வாறு நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன? மானுடத்தின் தமிழ் முகங்களும் படிமங்களும் பற்றிய நமது பண்பாட்டு இலக்கியப் புரிந்துகொள்ளல்கள் யாவை? இந்தப் புரிந்து கொள்ளலின் அறிவுசார்ந்த மற்றும் புலமை சார்ந்த வரலாறுகள் யாவை? தமிழ் மரபில் பரந்து விரிந்த மானுடம் என்பது எப்போதாவது குறிப்பாகப் பேசப்பட்டுள்ளதா? ”தான் அல்லது தன்னிலை” என்பது எவ்வாறு கட்டியமைக்கப்படுகிறது? இத்தகைய கட்டமைப்பு தமிழ் மரபில் எவ்வாறு மாற்றம் பெற்று வந்துள்ளது? ஆண், பெண், பாலினம், சாதியம் போன்றன எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன? போன்ற கேள்விகளுக்குக் கட்டுரையாளர்கள் சிறப்புக் கவனம் தருவது நல்லது. கூடவே பின்வரும் கேள்விகளிலும் கவனம் செலுத்தலாம்.

==> மத நிலைப்பட்ட, மதம் சார்பற்ற தன்னிலைகளுக்கான ஊற்றுக்கள் எவை?

==> மனிதராய் இருத்தலுக்கான சடங்கியல் சார்ந்த காரணிகள் யாவை?

==> அச்சு, எழுதிய எழுத்து, பாடங்கள் (text) போன்றன எவ்வாறு தனி மனிதர்களின்
பங்களிப்புகளையும் வெளிப்பாட்டையும் மாற்றியமைத்துள்ளன?

==> புவியியலுக்கும் நிலக்காட்சி அமைப்புக்கும் தனிமனித அடையாளங்களுக்கும் இடையே
எவ்வகையான உறவுகள் சாத்தியம்?

==> கருத்தியலுக்கும் பாகுபாட்டியலுக்கும் இடையே எத்தகைய உறவு இருக்க முடியும்?

==> தனிமனித உரிமைகளுக்கும் கூட்டு உரிமைகளுக்கும் இடையேயான உறவுகள்,
சிக்கல்கள் எவ்வாறு தமிழ்ச் சூழலில் வெளிப்பாடு கொள்கின்றன? குறிப்பாக, பாலினம்,
சாதியம் தொடர்பாக இத்தகைய உரிமைகளின் ஊடாட்டங்கள், சிக்கல்கள் என்ன?

==> புலம்பெயர்வு, அழைந்துழல்வு, கலப்பு போன்றவை அடையாளம், இனங்காணல்
என்பவற்றின் தமிழ் வெளிப்பாடுகளை எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றன?


ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர், தமது ஆய்வுக் கட்டுரைத் தலைப்பையும் 300 சொற்களுக்கு மேற்படாமல் ஆய்வுக் கட்டுரையின் பொழிப்பையும் 2007 ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்படலாம்.

Plenary Speakers:
Prof. Vidya Dehejia, Columbia University, New York
Prof. David Shulman , Hebrew University, Jerusalem

Abstract Submission by August 31, 2007 to tamils@chass.utoronto.ca

மேலதிக விவரங்களுக்கு: www.chass.utoronto.ca~tamil
tamils@chass.utoronto.ca

Wednesday, June 06, 2007

முரண்

ஒரு linguistics prof படிப்பிச்சுக்கொண்டிருக்கிறார் :
" ஆங்கில மொழியில் 2 negative சொற்கள் சேர்ந்து ஒரு positive அர்த்தத்தைத் தரும். வேறு சில மொழிகளில், உதாரணமாக ரஸ்ய மொழியில் 2 negative சொற்கள் சேர்ந்து ஒரு negative அர்த்தத்தைத்தான் தரும். எந்த மொழியிலுமுள்ள 2 positive சொற்கள் சேர்ந்து ஒரு negative அர்த்தத்தை தரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது"

என்று அந்த prof சொல்லி முடிக்க கடைசி பெஞ்ச்ல இருந்து (பிரபாண்ணா இல்லை) ஒரு குரல் " yea,right" என்று சொல்லிச்சாம்.

Monday, June 04, 2007

உறைப்பு சாப்பிட்டால் அல்சர் வருமா ?

அம்மா இன்றைக்கு என்ன சாப்பாடு?

இட்லி அவிக்கப் போறன் ஜசி நீ இன்றைக்குச் சாம்பார் வை பாப்பம்.


சாம்பாரா?? சாம்பாரோட யார் சாப்பிடுவினம்..எனக்கும் அப்பாவுக்கும் நான் கூட்டு அரைக்கிறன் ஓகே.

தாத்தாவும் முந்தி உப்பிடித்தான் தேங்காய் போடாமல் தனிய மிளகாயையும் வெங்காயத்தையும் போட்டு அரைச்சுப்போட்டுக் கூட்டு அரைச்சு சாப்பிட்டிட்டு உறைப்புத் தாங்கேலாம நாக்கை நீட்டிக்கொண்டிடு திரியிறவர் பிறகு அல்சர் வந்து எவ்வளவு கஸ்டப்பட்டவர் எனக்குத்தானே தெரியும்.கூட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பேசமா சாம்பார் வைக்கிறதுக்கு மரக்கறி வெட்டு நான் வந்து வைக்கிறன் சாம்பார்.

கூட்டுச் சாப்பிடுறதுக்கும் அல்சருக்கும் என்னம்மா சம்பந்தம்?? அல்சர் வாறதுக்கு Helicobacter pylori என்ன பக்ரீரியாதான் காரணம் என்று சில அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்கினம் தெரியுமோ..உறைப்புச்சாப்பிட்டால் அல்சர் வருமென்டு சும்மா என்னைப் பேக்காட்டதயுங்கோ சரியோ.

ஓமடி ஓம் உன்னைப்பேக்காட்டுறன் நான்.கொப்பரும் நீயும் நான் சொன்னாக் கேக்கவே போறீங்கிள்.பக்ரீரியா முக்கியமான காரணிதான் இருந்தாலும், உறைப்புச்சாப்பாடு சாப்பிடுறது, எந்தநேரமும் எதைப்பற்றியாவது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது, விடிஞ்சாப் பொழுதுபட்டால் எண்டு எந்த நேரமும் கம்புயூட்டருக்கு முன்னாலயே தவம் கிடந்து போட்டு காலமச் சாப்பாட்டை மத்தியானமும் மத்தியானச் சாப்பாட்டை பின்னேரமும் இரவுச்சாப்பாட்டை நடுச்சாமத்திலயும் சாப்பிடுற உன்னை மாதிரி ஆக்களுக்கும், எதுக்கெடுத்தாலும் கோவப்படுற அப்பா மாதிரி ஆக்களுக்கும் அல்சர் வாறதுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமா இருக்கெண்டும் அதைப்பற்றி ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கென்றும் அதே விஞ்ஞானிகள்தான் சொல்லியிருக்கினம்.


அம்மா விட்டால் அல்சரைப் பற்றி என்ர ஓர்கானிக் கெமிஸ்ரி வாத்தியை விட நல்லாவே லெக்சர் அடிப்பீங்கள் போல இருக்கு. சரி சரி தொடங்கிட்டிங்கிள் மிச்சத்தையும் சொல்லி முடியுங்கோ.அல்சரைப் பற்றி வேற என்ன தெரியும் அம்மா?

எனக்கென்ன தெரியும்..அல்சர் என்றது வயிற்றுப்பகுதியில முன் சிறுகுடல் பக்கமா எந்தநேரமும் வலி இருந்துகொண்டே இருக்கும். சாப்பிட ஏலாது. எப்பவும் வயிறு முட்டச் சாப்பாடு இருக்கிற மாதிரி இருக்கும். பசிக்காது, சிலருக்கு மயக்கமாவும் இருக்கும். சிலருக்கு இரத்தவாந்தி கூட வருமாம்.

அம்மா வடஅமெரிக்காவில மட்டும் ஒரு வருசத்தில 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் ஆக்கள் அல்சரால பாதிக்கப்படுகிறார்களாம்.1980ம் ஆண்டு வரை மருத்துவர்கள் எல்லாரும் இந்த அல்சருக்கு எங்கட வயித்தில கூடுதலான அமிலம் சுரக்கிறதுதான் காரணம் என்று நினைச்சுக்கொண்டிருந்தவையாம், அதோட நீங்கள் சொன்ன காரணங்கள் போல கோபப்படுறது புகைத்தல் மற்றும் மதுப்பழக்கம் மற்றும் மனவழுத்தம் போன்றவையும் அல்சர் வாறதுக்குக் காரணம் என்று சொன்னவையாம். வயிற்றில சுரக்கிற அமிலத்தின்ர அளவைக் கட்டுப்படுத்தினா அல்சர் வராதென்று நினைச்சு அல்சரால பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான சத்திரசிகிச்சை செய்தவையாம். பிறகு 1990 ம் ஆண்டு Tagamet, Zantac என்று 2 மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால அல்சர் வந்தா சத்திரசிகிச்சை செய்யணும் என்ற நிலை மாறிட்டுதாம் ஆனால் அல்சர் ஒருக்கா வந்து மாறினாலும் அது திரும்பவும் வந்து கரைச்சல் பண்றதால திரும்ப திரும்ப வைத்தியம் பார்க்க வேண்டியதாப்போச்சாம்.

ஏன் ஜசி இந்த வயித்தில நிறைய அமிலம் சுரக்கிறதைப் பற்றிக் கதைக்கேக்க சன் ரீவில போற விளம்பரம் ஏதும் ஞாபகம் வந்திச்சா உனக்கு?

எது? ஒரு அலுவலகத்தில தன்ர கேர்ள்பிரண்டை முதலாளி திட்டுறதைப் பொறுக்காம COOLZ எடுத்துக்கொண்டு போய் முதலாளின்ர முகத்தில ஊத்தினதும் முதலாளிக்கு அசிடிற்றி பிரச்சனை தீர்ந்து அவர் கூல் ஆகிடுவாரே..அந்த விளம்பரம் தானே.

ம் ம் அதே தான். அது சரி இந்த அல்சர் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?

அம்மா நான் முதலே சொன்னமாதிரி அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் Helicobacter pylori என்ற பக்ரீரியாவாலதான் அல்சர் வருதென்று கண்டுபிடிச்சாலும் அதற்கான அன்ரிபயோற்றிக்ஸ் 1995ம் ஆண்டுதான் பாவனைக்கு வந்ததாம். ஏனென்றால் அந்தநேரம் இருந்த மருந்து தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த Helicobacter pylori பக்ரீரியா பற்றின ஆராய்ச்சியில அக்கறை காட்டாம விலை குறைவான Tagamet, Zantac போன்ற மருந்துகளையே உற்பத்தி செய்துகொண்டிருந்தனவாம். பிறகு 1995 ல Helicobacter pylori அன்ரிபயோற்றிக்ஸால 86 % அல்சர் திரும்ப வாறதைத் தடுக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டதால இப்ப இந்த Erythromycin, Ampicillin, Amoxicillin போன்ற அன்ரிபயோற்றிக்ஸ்களைப் பயன்படுத்துகிறார்களாம். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லினமம்மா 13 வருசமா இழுத்தடிக்காம முதலே அன்ரிபயோற்றிக்ஸ்களை உற்பத்தி செய்றதில மருந்து தயாரிக்கிற நிறுவனங்கள் ஆர்வம் காட்டியிருந்தால் ஒரு வருசத்துக்கு அல்சருக்காக சத்திரசிகிச்சை போன்றவற்றில் விரயமாகும் பணத்தில் 600 மில்லியனிலிருந்து 800 மில்லியன்வரை மிச்சப்படுத்தியிருக்கலமாம்.

அல்சர் ஐ பற்றி எல்லாத்தையும் தெரிஞ்சுவைச்சுக்கொண்டுதான் இப்ப நீ கூட்டரைக்க வெளிக்கிட்டனி என்ன உங்களைத் திருத்தவே முடியாது...எங்க பார்ப்பம் சாம்பார் எந்த நிலமைல கிடக்கெண்டு.

அம்மா இப்ப நில்லுங்கோ ஓடிவாறன்...எஸ்கேப்.


தாயகப்பறவைகள் - யூன் இதழ்

Friday, May 18, 2007

பூவை எடுத்து ஒரு..

இதற்கு முதல் பதிவில போட்ட அதே பூவை வைத்து இன்னும் சில effects குடுத்துப் பார்த்தன் அதோட சயந்தன் அண்ணா தந்த பூவையும் விளையாட்டில சேர்த்திருக்கிறன்.






















Thursday, May 17, 2007

பெயர் தெரியாத பூவெடுத்தேன்....

செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் என்று பாடுவம் என்று நினைச்சன் ஆனால் இது செவ்வந்திப்பூவில்லை எனக்கிந்த பூவின்ர பெயரும் தெரியாது.

ஒரிஜினல் படம் விஜேன்ர நான் அதை எடுத்துச் சும்மா போட்டோசொப்ல விளைாயாட்டுக் காட்டியிருக்கிறன் எப்பிடியிருக்கு??



விஜேட ஒரிஜினல் படம்