Custom Search

Monday, May 29, 2006

உறவுகள் வாழ்வுக்காய் குரல் கொடு!


நீ காலாற நடந்த நிலமெங்கும் - இப்போ
காலமானவரை சுமக்கும் ஊர்வலம்
விடியும் பொழுதுக்காய் அங்கு நீ இல்லை
விண் ஊர்தி ஏறி நீ பறந்தாய்
விண் ஊர்தி கொண்டழிக்கின்றார்-அங்கு
சருகாகி போகிறதே தாய் நிலம்
மனசில் சஞ்சலம் ஏதும் உனக்கு உண்டா.....!

தாய் எரிய பார்த்திருந்தாய் உன்னை
தாங்கியவர் உடல் நீறாக பார்த்திருந்தாய்
எட்டுத்திசையும் எரிகிறது பார் தாய் நிலம்
இனி விட்டு விட்டு வீணே கிடப்பாயா?
இன்னும் நீ மனிதனா எப்படியென்று சொல்லு!

உனக்காய் வாழ்ந்தது போதும் இனி
எம் உறவுகள் வாழ்வுக்காய் குரல் கொடு
உறவுகள் அழுத கண்ணீரில்
உடல் சிலிர்க்க நீராடுவாயா?
உரிமைக்காய் குரல் கொடேன்
உன்னை ஈன்ற பூமி ஒப்பாரியில் மிதந்தாலும்
உன் செய்நன்றிக்காவும் சேர்த்து கண்ணீர்விடும்......!

-இரசிகை-
Image by -Nitharshan-

உரிமைக்குரல்


உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உலகத்தின் கண்களுக்கு
உண்மையை கொடுக்க
உரிமைக்காய் எழும் குரல்

புலம் பெயர்ந்த நம்மவர்களே
பறி போகின்றது நம் உரிமைகள் அங்கே
துடிக்கின்றது இளம் குஞ்சுகளின் உயிர்கள்
பறிக்கின்றான் எதிரி அவர்கள் உடமைகளை

நாம் தவழ்ந்து பழகின நிலமாடா அது
நாதிகளாற்று நம் இனம் மடிகின்றது அங்கே
பாடி பாட்டம் விட்டு வட்டம் அடித்த நிலம் அது
பாவிகள் பறிக்கிறார்கள் நம்ம இள வட்டத்தை அங்கு

எம் நிலத்தை இழந்து கொண்டு இருக்கின்றோம்.
எம் உரிமையை இழந்து கொண்டு இருக்கின்றோம்
எம் உணர்வை இழக்கின்றோம் ஆனாலும்
வாழ்கின்றோம் நடைபிணங்களாய் இங்கு

கட்டங்கள் உயர்ந்து நிற்கும் ரொன்றோ மாநகரத்தில்
ஒலிக்கட்டும் நம்ம குரல்கள் உரிமைக் குரல்களாக
இழந்து விட்ட நம் தந்தை நினைப்போம்
தாலியை இழந்து விட்ட நம் அன்னையை நினைப்போம்

கற்பை பறி கொண்ட சகோதரி கதறுகின்றாள் அங்கு
கற்பனைகளுடன் காலத்தை போக்கின்றோம் நாம் இங்கு
காலை இழந்து விட்ட அண்ணன் தவழ்கின்றான் அங்கு
காசு தான் கடவுள் என்று அலைகின்றோம் நாம் இங்கு

போதுமாடா பொறுத்தது போதுமாடா
நம்மவர் துயர் கேட்கையில் எரியுதாடா உள்ளம்
துயில் கொண்டது போதுமாடா
துள்ளி எழுந்து வாடா

படைப்போம் நாம் ஒரு அரண் நம்ம இனத்திற்காக
காப்போம் நாம் சந்தியினரை கொடிய அரக்கரிடம் இருந்து
காத்திருந்தது போதுமாடா
உரக்கச் சொல்லிடுவோம் உரிமைக்குரலால்.

- ரமா -
Image by -Nitharshan-

Saturday, May 06, 2006

90:10 என்றொரு அடிப்படைக் கொள்கை

90:10 என்றொரு அடிப்படைக் கொள்கைஇருக்காமே?உங்கள் எல்லாருக்குமே அது தெரியுமோ? சத்தியமா எனக்குஇதுவரைக்கும் தெரியாது. அம்மா சொல்றவா நான் ஒரு அவசரக் குடுக்கையாம்.என்ன செய்யிறதெண்டாலும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்து போட்டு பிறகு இருந்துயோசிக்கிறனாம். பதறாத காரியம் சிதறாதாம் என்று சொல்றவா தான் நான் கேட்டால் தானே.அப்பா ஒரு கதை சொன்னா நான் பத்துக் கதை சொல்லுவன் பிறகு வாய்க்கு வாய் காட்டதா என்று அப்பா பளார் என்று ஒன்று போட்டாப் பிறகு மூஞ்சையைத் துÖக்கி வைச்சுச்கொண்டு கொஞ்ச நேரம் திரிவன்.


சும்மா மாடு சொன்னா கேக்காட்டாலும் மணி கட்டின மாடு சொன்னாக் கேக்கேணும் தானே. ஒரு மணி கட்டின மாடு 90:10 கொள்கை பற்றி எனக்கு சொல்லிச்சுது அதான் நான் உங்கள் எல்லாருக்கும் மாட்டுப் பாசை விளங்காதெண்டு மனித பாசையில சொல்றன் கவனமாக் கேட்டிட்டு வாழ்க்கைக்கு பிரஜோசனமாப் பயன்படுத்துங்கோ என்ன.


ஒரு நாளைக்கு ரெயின் வர லேட்டானா அடுத்த ரெயின் வர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகுமெண்டால் அன்றையநாள் வகுப்பு அம்பேல்தான். போற வழியில கார் மக்கர் பண்ணலாம் அல்லது ஒரு வோல்வோ ட்றக் சாரதி நித்திரை தூங்கிக் கொண்டே வந்து காரை இடிக்கலாம். இப்பிடி வாழ்க்கையில எதிர்பாரமா நடக்கிற விசயங்கள் 10% தான் ஆனால் இப்பிடி ஏதாவது நடந்தாப் பிறகு நாங்கள் என்ன செய்ய முடிவெடுக்கிறம் என்றதிலதான் வாழ்க்கையின் மிச்ச90% தங்கியிருக்காம்.


ரெயின் வரத் தாமதமாவதை என்னாலோ, உங்களாலேயோதடுக்க முடியாது. ஆனால் ஒரு மணித்தியாலம் வெள்ளன வெளிக்கிட்டா ஐயோ ரெயின் லேற்றா வந்திட்டுதே இனிம நான் எப்ப வகுப்புக்குப் போய் எப்ப அஸைன்மன்ற் ஐ குடுக்கிறது என்று புலம்புறதை நிப்பாட்டலாம். (வேற வேலை இல்லை 8.30 வகுப்புக்கு 6 மணிக்கா வீட்டை விட்டுப் போறது:-).


சரி இந்த 90% எங்களிலதான் தங்கியிருக்கா என்று பார்ப்பம்.
காலமச் சாப்பாடு எல்லாரும் ஒன்றா இருந்து சாப்பிடுறியள். மகள் கவின்யான்ர கை பட்டு வேலைக்கு வெளிக்கிட்டு நின்ற அப்பான்ர சேர்ட்டில மேசையில கிடந்த தேத்தண்ணி ஊத்துப்பட்டிடுத்து. தேத்தண்ணிய ஊத்தோணும் என்று கவின்யா ஊத்தேல்ல. எதிர்பாராத விதமா நடந்தது இது. ஆனால் அடுத்து அப்பா என்ன செய்யிறது என்றது அப்பான்ர கையிலதானிருக்கு.


ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியாது.இப்பவும் சூட்டி பபாவுக்கு நிக்கிறது.கண்டறியாத ரீவி ஒன்று. ரீவியை ஆவென்று பாத்துக் கொண்டு தேத்தண்ணிய அருமந்த சேர்ட்டில ஊத்தியாச்சு.


அவள் என்ன வேணுமென்றா ஊத்தினவள்.பள்ளிக்கூடம் வெளிக்கிட்ட பிள்ளைய அழ வைச்சாச்சு. - இது அம்மா.


எல்லாம் உன்னாலதானப்பா. தேத்தண்ணியக் கொண்டு வந்து நுனி மேசையில வைக்க வேண்டியது பிறகு மகாராணிக்கு வக்காலத்து வாங்கிறது.


அடுத்த 10 நிமிசத்தில அப்பா வேலைக்கு ஆயத்தம் ஆனா கவின்யா அழுதும் முடிக்கேல்ல சாப்பிட்டும் முடிக்கேல்ல.
எனக்கு நேரம் போட்டுது. அழுதது காணும் கார் ஸ்ரார்ட்டில நிக்குது கெரியா வா கவின்யா.


காருக்கயும் அவளைத் திட்டாதயுங்கோ. போட்டு வாங்கோ.-இது அம்மா.

கவின்யாவக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில விட்டிட்டு வேலைக்கு போற அவசரத்தில 120ல ஓட வழியில மாமா மறிச்சு ஒரு 100 டொலருக்கு ரிக்கற் தந்து விட்டார் போனஸாக. பள்ளிக் கூட வாசல்ல கவின்யாவ இறக்கி விட கோவத்தில கவி போட்டு வாறன் அப்பா என்று சொல்லாமப் போக, கோவம்,வருத்தம் எல்லாம் கூடிட்டுது. வேலைக்கு அரை மணித்தியாலம் தாமதமாப் போய் அங்கயும் பத்தாதக்கு யாரோடயும் சத்தம் போட்டு ...சா தேவையா இதெல்லாம்? தெரியாம தேத்தண்ணி தட்டுப்பட்டு ஊத்துப்பட்டதில தொடங்கி எங்க வந்து நிக்கிறார் அப்பா.


இதுக்கு யார் காரணம்?தேத்தண்ணியா?கவின்யாவா?அம்மாவா?ரிக்கற் தந்த மாமாவா? இல்லாட்டா அப்பாவா?
அப்பாதான் காரணம்.

தேத்தண்ணி ஊத்துப்பட்ட உடனே அப்பா கோவப்பட்டு சத்தம் போட்ட அந்த சில வினாடிகளதான் எல்லாத்துக்கும் காரணம்.


அப்பா கவியில கோபப்படாம, பறவாயில்ல கவிம்மா... இனிம இப்பிடி கவலைனமா இருக்கக் கூடாது. பள்ளிக்கூடம் போற நேரத்தில கட்டாயம் ரீவி பார்க்கோணுமோ.வந்து பார்க்கலாம் என்ன. நீங்கள் வெளிக்கிட்டாச்சா? அப்பா இரண்டு நிமிசத்தில உடுப்பு மாத்திக் கொண்டு ஓடி வாறன். அம்மா எனக்கு இன்னொரு ரீ போடுங்கோ.


கவியை ஸ்கூல்ல விட கவி அப்பா போட்டு வாறன் பின்னேரம் மாமா வீட்ட போறம் தானே? ஓம் போறம். மூன்றரைக்கு வெளில வந்து நில்லுங்கோ கவி அப்பா வாறன் ஏத்த. அப்பா வேலைக்குப் போய் நிம்மதியாய் வேலை செய்திட்டு வீட்ட வாறார்.


அப்பா தேத்தண்ணி ஊத்துப் பட்டதுக்காக கோபப்பட்டுக் கத்தினார். அப்பிடி கத்தாம கவியை இனிம இப்பிடிச் செய்யக் கூடாதெண்டு சொல்லியிருக்கலாம்.


இப்பத்தான் 90:10 தெரியுமே.. . யாராவது உங்களைப் பற்றி குறைவாச் சொன்னா உடன நீங்கள் எந்த விதத்திலயும் குறையப் போறதில்லை. உடனே ஆத்திரப்பட்டுசத்தம் போட்டால் வீணா மனஉளைச்சல் தான் மிஞ்சும். அவசரத்தில செய்யுற எதுவுமே நல்ல முடிவைத் தாறதில்லை.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொல்லி வைச்சிருக்கினம்?அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டிட்டு பிறகு கவலைப்படுறது. மேலாளரோட சண்டை பிடிச்சிட்டு வேலையை விட்டிட்டு வாறது. பிறகு வேலை போச்சே என்று கவலைப்படுறது.கவலைப்படுறத விட்டிட்டு அடுத்த வேலையைத் தேட அந்தச் சக்தியை பயன்படுத்தச் சொல்லித்தான் 90:10 சொல்லுது.


நண்பர்களோட வாக்குவாதப்படுவானேன் பிறகு அநியாயமா நல்ல ஒரு நட்பைத் தொலைச்சிட்டன் என்று புலம்புவானேன்?என்ன காரியம் செய்ய முதலும் 90:10 கொள்கையை ஒரு கணம் ஞாபகப்படுத்தி இனிமேலாவது நல்லாயிருப்பமே.


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்:-)

Thursday, May 04, 2006

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..




சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொல்லோணும் என்ன.

அப்ப எனக்கொரு மூன்று வயசிருக்கும்.அம்மாவும் அப்பாவும் வீட்ட இல்லை நானும் அக்காவும் அம்ம்மா வீட்டதான் நின்டனாங்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்ட வந்திட்டினம் அம்மம்மா சாய்மனைக் கட்டில்ல தடியோட இருக்க நானும் அக்காவும் ஹ_ட்வாசல்ல முழசிக் கொண்டிருக்கிறம்.அம்மா வந்ததுதான் தாமதம் அம்மம்மா போட்டுக்குடுக்கத் தொடங்கிட்டா.

அம்மம்மா: பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.

அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?

அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.

அம்மா:என்னம்மா? புவுண் சம்பலோ?

அம்மம்மா:அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து காப்பு சிமிக்கி எல்லாத்தையும் கழட்டி உரலுக்கை போட்டு இடிச்சு வைச்சிருக்குதுகள்.

உரலுக்கு நசிஞ்சு போய்க் கிடந்த எல்லாத்தையும் அம்மம்மா எடுத்துக் கொண்டு வந்து காட்டினா அவ்வளவும் தான் தெரியும் அடுத்த நிமிசம் புக்கத்தில நின்ற செவ்வரத்தையை முறிச்சு இரண்டு பேருக்கும் நல்ல வெளுவை.

அடுத்த திருவிழா ஒரு புpறந்த நாள் விழாக்குப் போட்டு வந்த இரவு நடந்தது.வீட்டுக்குள்ள வரும்வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.அப்பா நல்லாத்தான் கதைச்சுக் கொண்டு வந்தவர்.வீட்டுக்குள்ள வந்த உடன கதிரைல தூக்கி இருத்தினார்.இருத்திப்போட்டு பிரம்பு எடுத்துக்கொண்டு வந்தார்.

அப்பா:இரண்டு பேரும் கையை நீட்டுங்கோ.

நானும் அக்காவும் : ஏனப்பா நாங்கள் ஒரு குழப்படியும் செய்யேல்லயே.

அப்பா: கைய நீட்டைச் சொன்னான்.

இரண்டு பேருக்கும் மூன்று மூன்றடி.

அப்பா: எத்தினாள் சொன்னான் உடைஞ்ச பலூனை வைச்சு விளையாட வேண்டாம்.முட்டை விட வேண்டாம் என்று.பிரவீனாக்கு பலூன் துண்டு தொண்டைல ஒட்டி என்ன நடந்தது என்று தெரியும் தானே.இனிம பலுனைக் கண்டாலே இந்த அடிதான் ஞாபகம் வரோணும்.

ஒரு நாள் நாங்கள் பக்கத்து வீட்டு பிள்ளையள் எல்லாரும் சேர்ந்து உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்.பரலில படுத்துக்கொண்டு காலால உருட்டினா இது உருளும்.எத்தின பேர் இந்த விளையாட்டு விட்டிருப்பியள்.அதில கிடந்த ஒரு உக்கின இரும்புத் துண்டு அக்காக்கு குத்தி இரத்தம் வந்திட்டுது.டாக்குத்தர் மாமாட்ட போய் மருந்தெல்லாம் போட்டிட்டு வந்திட்டு இரண்டு பேருக்கும் விளாசல் தான்.

பிறகொருநாள் அக்கா நெல்லி மரத்தில ஏறி நின்டுகொண்டு நெல்லிக்காய் ஆய்ஞ்சு போட போட நான் கீழ நின்று பொறுக்கிக் கொண்டு நிண்டனான்.அக்கா ஒருநாள் நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத அம்மாட்ட கோள்மூட்டிட்டா அந்தக் கோவத்தில சும்மா அவாவை வெருட்டுறதுக்காக அக்கா நீ நிக்கிற கொப்புக்குப் பின்னால கோடாலிப் பாம்பு நிக்குது என்று ஒரு பொய்யைச் சொன்னன்.அவா பயத்தில பலன்ஸ் இல்லாம தொபுக்கடீர் என்று விழுந்திட்டா.பெரிய உயரம் இல்லை நெல்லி மரம் ஆனால் விழுந்த இடத்தில இருந்த கல்லு உள்ளங்கையில குத்திட்டுது அவாக்கு.அன்டைக்கும் எனக்கு புூசைதான்.

இன்னொருநாள் உப்பிடித்தான் கோயில் திருவிழா நெரிசல்ல "அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான " என்று நான் கத்திட்டன்.அவருக்கு ஒரு மாதிரிப் போட்டுது.அம்மாக்கு ஏன்தான் என்னை கோயிலுக்குக் கூட்டிக் கொண்டுவந்தம் என்று ஆயிடுச்சு. என்னைக்.கோயிலுக்குள்ள கூட்டிக்கொண்டே போய் இறுக்கி நுள்ளி விட்டா.

இன்னும் நிறைய சளார் பளார் சடீர் எல்லாம் இருக்கு.ஆனால் இனிம நீங்கள் சொல்றதைக் கேப்பம்..நான் நிப்பாட்டுறன் நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.

-சினேகிதி-

Wednesday, May 03, 2006

உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும்


நாங்கள் எல்லாருமே தினம் தினம் எத்தின பேரை பார்க்கிறம் பழகிறம் ஆனால் ஒரு சிலரைத்தான் நல்ல நண்பர்களாகவோ காதலன் காதலியாகவோ அல்லது இன்ன பிற உறவுகளாகவோ ஏற்றுக்கொள்ளுறம். ஏன் நாங்கள் சில பேரை மட்டும் நேசிக்கிறோம்? சில பேரை வெறுக்கிறோம்? எங்கட விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் அகக்காரணிகள் புறக்காரணிகள் எவை?

முதலாவது காரணம் பரிச்சயம்.ஒரு பொருளாயிருந்தாலும் நபராயிருந்தாலும் ஏற்கனவே பழக்கம் என்றால் கூடுதலான நாட்டம் காட்டுவம்.யாரையும் அடிக்கடி சந்திச்சா அவையிலுள்ள நேசம் மதிப்பு எல்லாம் அதிகமாகும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்களான சொல்லினம்.

பல்கழைக்கழக மாணவர்கள் சிலர் ருசி பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கு என்று சொல்லி கூப்பிட்டுட்டு வேற ஒரு ஆராய்ச்சி செய்தவையாம {இந்த ஆராய்ச்சியாளர்களே இப்பிடித்தான்.மில்கிறம் செய்த அதிகாரிகளுக்கு எவ்வளவு தூரம் ஒருவர் பணிந்து போவார் என்ற ஆராய்ச்சி பற்றி யாருக்குத் தெரியும்? இன்னொருநாள் அதைப்பற்றி சொல்றன்}.ஆராய்ச்சியின் போது ஒவ்வொரு அறையிலயும் போய் ஒவ்வொரு குடிவகையையும் ருசி பார்க்க வேண்டும்.இந்த ஆராய்ச்சியின போது சில பேர் பத்துக்கு மேற்படட தடவைகள் சந்தித்துக் கொண்டார்களாம் சில பேர் ஒன்றிரண்டு தடவைகள் சந்தித்துக் கொண்டார்களாம. ஆராய்ச்சி முடிவில் நடந்த ஒரு சின்ன கணக்கெடுப்பில் ஆராய்ச்சியின் போது நிறைய தடவைகள் சந்தித்துக் கொண்டவர்களை அதிகமாகப் பிடிக்கும் என்றும் குறைய தடைவ சந்தித்தவர்களை குறைவாகப் பிடிக்கும் என்றும் பங்குபற்றியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதான் " நண்பனே எனக்குக் காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ" என்று ஜோதிகா பாடினவவோ (பாடல் வரிகள் யாற்றயோ தெரியேல்ல). அதிகமாகப் பிடிக்கும் என்றும் குறைய தடைவ சந்தித்தவர்களை குறைவாகப் பிடிக்கும் என்றும் பங்குபற்றியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதான் " நண்பனே எனக்குக் காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ" என்று ஜோதிகா பாடினவவோ (பாடல் வரிகள் யாற்றயோ தெரியேல்ல).

200 பெண்களிடம் ஒரு 7 வயதுக்குழந்தையின் படமும் அந்தக் குழந்தை பாடசாலையில் மற்றக் குழந்தைகளுடன் சண்டை பிடிப்பது அடிப்பது பற்றிய விபரங்களும் குடுத்திட்டு அந்தக் குழந்தையைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள் என்று கேட்டினமாம்.. இந்த 200 பேரில் சிலரிடம் பார்த்தாலே கொஞ்சத் தோன்றும் அழகான குழந்தையின் படமும் சிலரிடம் வடிவில்லாத குழந்தையின் படமும் குடுத்திச்சினமாம்.(குழந்தைகள் எல்லாம் வடிவுதானப்பா அடிக்க வராதயுங்கோ).வடிவான குழந்தையைப் பார்த்தவை சொல்லிச்சினமாம் ஓ இந்தப்பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளையைத் தெரியுது.இந்த வயசுக்கான குழப்படிதானே அதான் மற்றப் பிள்ளையளை அடிச்சிருக்கும் வளர வளர நல்ல பிள்ளையா வரும் என்று.வடிவில்லாத பிளளைன்ர படத்தை பார்த்தாக்கள் சொல்லிச்சினமாம் ஓ இதப்பார்த்தாலே தெரியுதே இது கூடப்படிக்கிற பிள்ளையளுக்கெல்லாம் அடிக்கிற நுள்ளுற பிள்ளைதான்.அதின்ர கண்ணப் பாருங்கோ இது வளர்ந்தும் ஒரு காவாலியாத்தான் வரும் என்று சொல்லிச்சினமாம். இதாலதான் ஆசிரியர் ரீச்சர்மாரெல்லாம் வடிவான பிள்ளையளில கூட அன்பாயிருக்கிறவையோ?

ஆ 200 பேரும் பெண்கள் தானே.அவைக்கு புற அழகுதான் முக்கியமாக்கும் என்று சொல்ற ஆக்களுக்குத்தான் இது. 60 ஆண் மாணவர்களிடம் மாணவிகளின் கட்டுரை ஒன்றை மதிப்பீடு செய்யக் குடுத்தார்களாம். கட்டுரைத்தாளில நல்ல வடிவான மாணவிகளின் படமும் கொஞ்சம் வடிவான மாணவிகளின் படமும் இணைத்துக் குடுத்தவை ஆனால் எல்லாருக்கும் குடுத்த கட்டுரை ஒரே கட்டுரை.நல்ல வடிவான ஆக்கள் எழுதின கட்டுரைக்கு நிறைய புள்ளிகள் வாரி வளங்கினார்களாம்.இதையெல்லாம் தெரிஞ்சதாலதான் பல்கழைக்கழகங்களில் TA ஆக வாற ஆக்களுக்கு பயிற்சி வழங்கும்போது இந்த மாதிரியான தேர்வு எல்லாம் வைக்கிறது.கட்டுரைகள் மற்ற தேர்வுத்தாள்கள் திருத்தக் குடுக்கும்போதெல்லாம் கவர் பேஜ் ஐ எடுத்து வச்சிட்டுத்தான் திருத்தோணும் என்று சொல்லிக் குடுக்கிறவை.எத்தினபேர் அத எல்லாம் கடைப்பிடிக்குதுகளோ யாருக்குத் தெரியும். இத விட மோசமான கண்டுபிடிப்பு என்னென்றால் நீதிமன்றத்தில தீர்ப்பு வழங்கும் போதும் இந்த புற அழகு ஒரு காரணியாயிருக்கென்று உளவியளல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லினம்.வடிவான ஆக்களுக்கு கிடைக்கிற தண்டனை வடிவில்லாத ஆக்களோட ஒப்பிடும்போது குறைவாயிருக்காம்.

ஓராளை பிடிச்சுப்போக இன்னொரு காரணம் பழக்கவழக்கங்களிலும் குணாதிசயங்களிலும் உள்ள ஒற்றுமை.எங்களை மாதிரி கதைக்கிற யோசிக்கிற ஆக்களைப் பாரத்தா அவைய எங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? ஆதி படத்தில மழையில ஐஸ்கிறீம் குடிக்கிறதால விஜய திரிசாவுக்குப் பிடிக்கும் அப்பிடித்தான் இதுவும் ஹா ஹா.

மற்ற காரணம் நாங்கள் நேசிக்கிற நபர் எங்களை நேசிக்கிறாரா இல்லையா என்றது.சில பேரை முதற்சந்திப்பிலயே பிடிக்கும்.சில பேரை வாழ்நாள் முழக்கப் பிடிக்காது.சில பேரை ஆரம்பத்தில பிடிக்காட்டிலும் பழகப் பழக பிடிக்கும்.ஒரு ஆராய்ச்சியின் போது ஒராளைப் பற்றி இன்னொராள் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள வச்சார்களாம்.உதாரணமா என்னப் பற்றி நீங்கள் ஒராளுக்கு சொல்றதை நான் உங்களுக்குத் தெரியாம கேட்டுக்கொண்டிருக்கிறன் என்று வைப்பமே:

1.நீங்கள் என்னப் பற்றி நல்லதா எதுவுமே சொல்லேல்ல.
2.என்னப் பற்றி எல்லாமே நல்லதாத்தான் சொன்னீங்கள்.
3.நல்லதாச் சொல்லத் தொடங்கி கடைசியா பிளேற்ற மாத்தீட்டிங்கள்.
4.கெட்ட குணங்களைச் சொல்லி ஆனால் சினேகிதி நல்லவா அவாட்ட நிறைய நல்ல குணங்கள் இருக்கு என்று என்ர நல்ல குணங்களைச் சொல்லி முடிக்கிறீங்கள்.

என்னப்பற்றி நல்லதா சொல்லி கடைசில கவுத்த ஆளைத்தான் நான் அதிகமா வெறுப்பன்.அதே நேரம் குறையைச் சொல்லத் தொடங்கி நிறைகளைச் சொல்லி முடிச்ச ஆளைத்தான் அதிகமாக நேசிப்பேன்.மற்ற இரண்டு ஆக்களும் இந்த இரண்டு பேருக்கும் இடையில வருவினம்.

கடைசிக் காரணி என்னென்றால் ஒராளைப் பற்றி எங்களுக்கு முதல்ல என்ன தெரிய வருதோ அதை வச்சுத்தான் எங்களுக்கு அந்த நபரை எவ்வளவு பிடிக்கும் பிடிக்காது என்று தீர்மானிக்கிறமாம்.அதான் நேர்முகத் தேர்வுப் போகும்போதெல்லாம் அறிவுரை சொல்வார்களே.ஒரு ஆராய்ச்சியின் போது ஒராளைப் பற்றிய விபரம் இரண்டு பந்தியில எழுதி கொஞ்ச ஆக்களிட்ட குடுத்தினமாம்.அரைவாசிப் பேரிட்ட குடுத்த விபரத்தில் முதலாவது பந்தியில் ஒருவரின் நல்லியல்புகளிருந்தன.மற்றாக்களிட்ட குடுத்த விபரத்;தில முதல் பந்தியில கெட்ட இயல்புகளையும் இரண்டாவது பந்தியில நல்லியல்புகளையும் சொல்லியிருந்தார்கள்.முதல்ல நல்ல குணங்களை வாசிச்சவையில 78% ஆக்கள் ல அந்த X ஐ நல்லவன் என்று சொல்லிச்சினமாம்.கெட்ட குணங்களை முதல்ல வாசிச்சவையில 18% ஆக்கள் அந்த X ஐ நல்லவன் என்று சொல்லிச்சினமாம்.

-சினேகிதி-