Custom Search

Monday, May 29, 2006

உறவுகள் வாழ்வுக்காய் குரல் கொடு!


நீ காலாற நடந்த நிலமெங்கும் - இப்போ
காலமானவரை சுமக்கும் ஊர்வலம்
விடியும் பொழுதுக்காய் அங்கு நீ இல்லை
விண் ஊர்தி ஏறி நீ பறந்தாய்
விண் ஊர்தி கொண்டழிக்கின்றார்-அங்கு
சருகாகி போகிறதே தாய் நிலம்
மனசில் சஞ்சலம் ஏதும் உனக்கு உண்டா.....!

தாய் எரிய பார்த்திருந்தாய் உன்னை
தாங்கியவர் உடல் நீறாக பார்த்திருந்தாய்
எட்டுத்திசையும் எரிகிறது பார் தாய் நிலம்
இனி விட்டு விட்டு வீணே கிடப்பாயா?
இன்னும் நீ மனிதனா எப்படியென்று சொல்லு!

உனக்காய் வாழ்ந்தது போதும் இனி
எம் உறவுகள் வாழ்வுக்காய் குரல் கொடு
உறவுகள் அழுத கண்ணீரில்
உடல் சிலிர்க்க நீராடுவாயா?
உரிமைக்காய் குரல் கொடேன்
உன்னை ஈன்ற பூமி ஒப்பாரியில் மிதந்தாலும்
உன் செய்நன்றிக்காவும் சேர்த்து கண்ணீர்விடும்......!

-இரசிகை-
Image by -Nitharshan-

0 comments: