Custom Search

Thursday, March 20, 2008

ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!


இப்ப என் மனசில ஏற்பட்டுக்கொண்டிருக்கிற உணர்ச்சிகளையும் ஞாபகங்களையும் இந்த ஒரு பதிவுக்குள்ள அடக்க முடியுமா என்று தெரியேல்ல இருந்தாலும் எழுதுறதுதான் மனசை லேசாக்கும் என்றதால எழுதத் தொடங்கிட்டன்.

அவளுக்கு பெயர் ஜீவிதா. முதலாம் வகுப்பில இருந்து 5ம் வகுப்பு வரைக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில படிச்சிட்டு பிறகு ஆறாம் வகுப்புக்கு இன்னொரு பெரிய பள்ளிக்கூடத்துக்கு போவமெல்லோ அப்பிடி நான் பருத்தித்துறை மெதடிஸ் மகளிர் கல்லூரிக்கு போய் ஒரு கிழமைல நேவி அடிக்குப் பயந்து பள்ளிக்கூடம் போமாட்டன் என்று வீட்டில நின்டிட்டன். அப்பா வேற அந்தநேரம் லண்டனால வந்து நிண்டவர் வீட்டுக்கு பக்கத்திலயே படிக்கட்டும் என்று செல்லையாக் கம்பஸ்ல கொண்டுபோய் சேர்த்து விட்டிட்டார். புதுப் பள்ளிக்கூடம் புது இடம் கொஞ்சம் பயம் வேற. முதல் கிழமைதான் பயமெல்லாம் பிறகு எங்களைப் பார்த்துத்தான் மற்றாக்கள் பயப்பட்டவை அது வேற கதை. செல்லையால அறிமுகமான என் நண்பிகள்தான் துசி கஸ்தூரி கார்த்திகா சோபர்ணா அகல்யா மந்தாகினி ஜீவிதா சோபியா மைத்திரேயி மேகலா சுனிதா இந்த பட்டியல் ரொம்ப நீளம். இப்ப ஏன் இதெல்லாம் சொல்றன் என்று யோசிக்கிறீங்கிளா?

முதல்ல சயந்தன் அண்ணாக்கு ஒரு பெரிய நன்றி. சயந்தன் அண்ணா மட்டும் "பூவைப் போல புன்னகை காட்டு " பாடலைத் தந்து என்னைப் பார்க்கச் சொல்லாட்டால் நான் ஜீவீதாவை எப்பிடிப் பார்த்திருப்பன். அந்தப் பாட்டை போட்டிட்டு வேற ஏதோ வேலை செய்துகொண்டிருந்தனான் தற்செயலா பாட்டு window வைப்பார்த்தால் ஒரு மரக்கிளைக்கு நடுவில தெரிஞ்சது ஜீவிதாட முகம். என்னால ஒரு நிமிசம் நம்ப முடியேல்ல. திரும்ப கொஞஞ்சம் பின்னால இழுத்துப்போட்டு அவளேதான். அந்தக் கண் காட்டிக்குடுத்ததிட்டு. கத்திட்டன் நான். பக்கத்தில இருந்த அம்மாவும் அக்காவும் பயந்திட்டினம்.அக்காக்கும் ஜீவிதாவைத் தெரியும். இங்க பார் அக்கா ஜீவிதா இந்தப்பாட்டில வாறாள் என்றன் . ஒரு நிமிசம் நான் பயந்திட்டன் அவச்சத்தம் மாதிரிக் கத்துது என்று அம்மா திட்டுறா எனக்குப் பயங்கர சந்தோசம் அவளைப் பார்த்தது.


ஊாரை விட்டு வந்து 10 வருசமாச்சு. 4-5 வருசத்துக்கு முதல் ஒரு நண்பியோடு ஊரிலுள்ள மற்ற நண்பிகளைளப்பற்றிக் கேட்கும்போது எல்லாற்ற காதல் கதை எல்லாம் சொன்னாள் ஜீவிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லே்ல.கடைசியா சொன்னாள் ஜீவிதா இயக்கத்துக்குப் போட்டாள் என்று, எனக்கு நம்பக் கஸ்டமா இருந்தது. இவை இவைதான் போராடப் போவினம் என்ற ஒரு நினைப்பு எனக்கிருந்தது இந்த நினைப்பின் படி ஜீவிதாவை என்னால போராளியாக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியேல்ல. ஆனால் நாங்கள் நினைச்சதுக்கு எதிர்மாறா நிறைய விசயங்கள் நடக்கேக்க அவள் மட்டும் விதிவிலக்கா என்ன. ஜீவிதான்ர நெருங்கிய நண்பி அனிதா. 6ம் வகுப்பில இருந்து 8ம் வகுப்பு வரைக்கும் நாங்கள் எல்லாரும் நண்பிகள்.ஜீவிதா, மந்தா, அனிதா, அகல்யா இவையெல்லாம் பக்கத்து வகுப்பு. அநேகமாக எங்களுக்குப் படிப்பிக்கிற ரீச்சர்தான் அவைக்கும் படிப்பிக்கிறது அதால பக்கத்து வகுப்பெண்டாலும் எங்களுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டி எப்பவுமே இருந்தது. முக்கியமா எனக்கு இப்ப ஞாபகம் வாறது கிருஸ்ணகுமார் சேர். எங்களுக்கு கணிதம் படிப்பிச்சவர் அவர். ஜீவிதா வாய்காரி எங்களோட மட்டுமில்ல கிருஸ்ணகுமார் சேரோடயும் நல்லாச் சண்டை பிடிப்பாள். ஜீவிதான்ர அக்காவும் எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிச்சவா அவா ஜீவிதாக்கு நேரெதிர்.

எனக்கு அவளை இந்தப் பாட்டில பார்த்த சந்தோசத்தில மூளை வேலை செய்யேல்ல. சயந்தனண்ணாட்ட ஜீவிதைப் பற்றி விளங்கப்படுத்துறன் அவர் யாரைச் சொல்றீங்கள் இந்தப்பாட்டின்ர முக்கிய பாத்திரமா என்று அப்பத்தான் முழுப்பாட்டையும் திரும்பப் பார்த்ததன் அதுவரைக்கும் எனக்கு அவளுக்காகத்தான் பாடினம் என்றது புரியவேயில்லை.

இந்தப் பாட்டைப் பார்க்க எனக்கு செல்லையாக் கம்பஸ் மாமரமும் தெய்வம் ரீச்சர் வீட்ட நாங்கள் எல்லாரும் சைக்கிள் park பண்றதும் செல்லையா கன்ரீனும் செல்வி ரீச்சரும் (எங்கட வாழ்க்கைத்திறன் ரீச்சர் - என்னைமாதிரி ஜீவிதா மாதிரி எதிர்த்துக் கதைக்கிற பெட்டையள அவாக்கு ரொம்பபபபப் பிடிக்கும்:-) இன்னும் என்னென்னவோ எல்லாம் ஞாபகம் வருது எழுதத்தான் பயமா இருக்கு. எங்களுக்கு ஆங்கிலம் படிப்பிக்கிறது ஒரு ரீச்சர். ஜீவிதாவைக்கு ஆங்கிலம் படிப்பிக்கிறது ஒரு மாஸ்டர். இரண்டு பேரும் வயசுபோன ஆக்கள். இரண்டு வகுப்புக்கும் ஒரே நேரத்திலதான் ஆங்கில வகுப்பு நடக்கும். அவை எங்களுக்குப் படிப்பிக்கிறத விட்டிட்டு பிஸியாயிருப்பினம்.அந்த நேரத்தில ஜீவிதா எங்கட வகுப்புக்கு ஓடி வந்து இரகசியம் சொல்றன் என்டுபோட்டு பிலத்த சத்தமா நளினத்தோட கதை சொல்லுவாள்.இப்பிடி நிறைய ஞாபகம் வருது. ஜீவிதா மட்டும் இதை வாசிச்சு என்னைத் தொடர்புகொண்டாள் என்டால் ஐயோ அதை விட சந்தோசம்... ஜீவிதாவைத் தெரிந்த 2 நண்பிகளுக்கு மெஸேஜ் பண்ணிட்டன் அவையும் பார்த்திட்டு கத்தி அம்மாட்ட பேச்சு வாங்கப்போயினம்.

திரும்பவும் சயந்தனண்ணாக்கு நன்றி.

Sunday, March 02, 2008

ஒரு பயங்கரவாதியாக ஒசாமா தோத்துக்கொண்டிருக்கிறார்!!!