Custom Search

Saturday, September 15, 2007

கண்டுபிடி கண்டுபிடி IX

கண்டுபிடி கண்டுபிடி 8 ன் சரியான பாடல்கள்

1 - என் செல்லப்பேரு அப்பிள் (போக்கிரி)
2 - தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ ( பொன்னியின் செல்வன்)3
3 - நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே (வேட்டையாடு விளையாடு)
4 - சங்கம் வைத்துக் காதல் வளர்த்த(கருப்புசாமி குத்தகை்காரர்)
5 - அழகா அழகா (By 2)


3 வது பாடலைக் கண்டுபிடித்த கதிரவனுக்குப் பாராட்டுக்கள்!

இந்தமுறைக்கான பாடல்கள் இதோ!













Friday, September 14, 2007

KFC & Taco Bell ல் எலிகளின் அட்டகாசம்

கொஞ்சம் பழசுதான்!

Tuesday, September 11, 2007

Paul ன்ர கதை II

8 அல்லது 9 வயதிலேயே தனக்கு மற்றவர்கள் மீது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேணும் என்ற எண்ணம் வந்ததாம்.மற்றவர்களால் தன்மீது ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றால் தன்னாலும் அது முடியுமென்று தன் குடும்பத்தினரை கஸ்டப்படுத்துவதற்காகவே தான் ஒழுங்காகப் பாடசாலைக்குச் செல்லாமல் தீய நட்புகளைத் தேடினானாம்.கடைகளில் சிறிய திருட்டில் ஆரம்பித்துப் பின்னர் 12 வயதில் கார் றேடியோ போன்றவற்றை திருடி ஒரு கூட்டத்துடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியில் தங்க வெளிக்கிட்டானாம்.15 வயதில் மீண்டும் foster home வாழ்க்கை ஆரம்பமானது.அன்றிரவு தன் காதலியுடன் ஒரு சின்ன விசயத்துக்காகச் சண்டை போட்டுத் தோற்றுப்போன ஆத்திரத்தில் போதைமருந்து உட்கொண்டுவிட்டு foster home க்கு வந்தபோது அங்கே வசித்த ஒரு 6 வயதுச் சிறுமியைத் தான் sexual abuse க்குள்ளாக்கியதையும் தானா அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னால் நம்பமுடியவில்லையென்கிறான்.

சரியான சாட்சியங்களில்லாததாலும் தான் அப்படி அந்தச் சிறுமியிடம் நடந்துகொண்டதற்கு தான் சிறுவயதில் sexual abuse க்குள்ளாக்கப்பட்டது ஓரு காரணமாக இருக்கலாம் என்று தான் foster home mother க்குச் சொன்னதாலும் தன்னை அவர்கள் counselling க்கு அனுப்பினார்களாம்.தான் counselling க்குச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் கூட கனவில் வன்மமான எண்ணங்கள் வந்ததாம்.சிறுவர்களையும் சிறுமிகளையும் தன்னால் கனவில் கூட அப்பிடி நினைத்துப்பார்க்க முடியவில்லையாம் அத்தோடு கனவில் நடப்பது போல நிஜத்திலும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சியாக தன் நாளங்களை அறுத்துக்கொண்டானாம்.

தெரப்பிக்குச் சென்று வந்ததால் தான் இப்போது தன் இறந்தகாலத்தை மறந்து நிம்மதியாக இருக்கிறானாம்.தனக்கு ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் இருக்கிறார்களாம்.வளர்ந்த ஆண்கள் அதாவது X ன் வயதையொத்த (>30) ஆண்களைத் தன்னைச் சாதாரணமாகத் தீண்டினால் கூட தனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து தொல்லைப்படுத்துவதால் இயன்றளவு அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து வருகிறானாம். பெண்களுடன் டேற்றிங் செல்லும்போது தன்னைப் பற்றித் தான் அதிகம் சொல்வதில்லையாம்.Foster home ல் வாழும் தன்னைப் போலவே மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டானாம்.தாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்களாம்.

இரவில் தூங்கும்போது யன்னல்கள் எல்லாம் மூடியுள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் தன்னால் தூங்க முடிகிறதாம். முன்பு sirens ஒலி கூடத் தன் தூக்கத்தை கெடுப்பதில்லையாம் ஆனால் இப்பொழுதெல்லாம் ஒருவர் மூச்சு விடும் ஒலிகூடத் தன்னை டிஸ்ரப் பண்ணுதாம்.அதனால் தான் ஒரு பெண்ணோடு பழகி உடலுறவு வரை செல்ல தனக்குக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தேவைப்படுகிறதாம்.அதனாலோ என்னவோ தற்போது தனக்கு காதலி என்று யாரும் இல்லையாம்.

தெரப்பிக்குச் சென்றதால் தான் தற்போது normal ஆக இருக்கிறானாம்.தனது social worker உடன் தன்னால் மனம்விட்டுப் பேச முடிகிறதாம்.ஒரு snowball போல தன்னுள் வளர்ந்துவந்த வன்மக் குணம் இல்லாது போய் தன்னால் தன் நிகழ்காலத்தையம் எதிர்காலத்தை நேசிக்கக் கூடியதாக உள்ளதாம். சில வருடங்களில் தான் ஒரு truck driver ஆக இருப்பானாம். ஒரு இரவுப்பறவையாக நீண்ட பெருந்தெருக்களில் தனியாகச் சுதந்திரமாக ஒரு truck driver ஆகப் பயணம் செய்தாலும் தனக்கென்று குடும்பம் அமைத்துக்கொள்ள ஆவலாக இருக்கிறானாம்.தன்னைப் போன்றவர்களுக்கு குடும்பம் மிகவும் அவசியமாம் அதுவும் முக்கியமாகத் தன் தாய்க்கு குடும்பம் என்றால் என்னவென்று உணர்த்தும் அவசியம் தனக்குண்டாம்.


குறிப்பு : Dón't Tell - The Sexual Abuse of Boys என்ற புத்தகத்திலுள்ள பல உண்மைக் கதைகளில் ஒன்றே Paul ன் கதை.Michel Dorais ஆல் French ல் எழுதப்பட்ட இந்தப் புத்தம் Isabel Denholm Meyer ஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Monday, September 10, 2007

Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?

Sexual abuse ஆ ? ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நானும் நினச்சதில்ல உங்களில் சிலரைப் போல. ஆனால் Paul ன் கதையை வாசிச்ச பிறகு என்னால அதை உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியேல்ல. இதையெல்லாம் ஏன் எழுதுவான்? என்ன லாபம் என்று கேக்க வேண்டாம். இதைத்தான் இதை வாசிக்கிறது மூலம் உங்களால யாராவது ஒருவர் abuse பண்ணுப்படாமல் போகலாம் அல்லது ஏற்கனவே பாதிக்கப்ட்ட ஒருவருடன் மனம் விட்டுப் பேச இந்தப் பதிவு உங்களுக்கு உதவலாம்.

அவனைப் பார்த்தால் வெகு சாதாரணமாத்தானிருப்பான். ஆனால் அவனுக்குள் பல போராட்டங்கள், பல விடை தேடிச் சலித்துப்போன கேள்விகள், குழப்பங்கள் என்று கிட்டத்தட்ட தன்னையே வெறுத்து துன்புறுத்திப் பார்க்கும் ஒரு மனநிலை.தன்னைத்தானே பச்சோந்தி என்று குறிப்பிடுகிறான் அவன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ தன்னைத் தன் பலவீனங்களோடும் இயலாமைகளுடனும் ஏற்றுக்கொள்வார்களோ என்ற குழப்பத்தில் தன்னுடைய உண்மைத் தன்மையை வெளிக்காட்டாமல் தன்னை ஒரு சாதாரணனாகத் தான் மற்றவரிடத்தில் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறான்.



பிறந்தது முதல் 2 ஆண்டுகள் அம்மம்மாவுடனும் பின்னர் 7 வயது வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உறவினர்களுடனும் வளர்ந்தான்.அதாவது வளர்ந்துவரும் ஒரு செடியை இடம் மாற்றி மாற்றி நட்டால் என்ன நடக்கும்?? அத்திவாரம் அடிக்கடி ஆட்டம் காணுமில்லைாயா? அவன் பந்தாடப்பட்டான்.இறுதியில் 7 வயதில் foster home ல் சேர்க்கப்பட்டான்.அங்கு போனதும் அவன் இவ்வளவு நாளாக யாரை அம்மா என்று நினைத்தானோ அது தன் உண்மையான அம்மா இல்லையென்ற உண்மை அவனுக்குத் தெரிய வருகின்றது.அப்பா யாரென்று ஆரம்பித்திலிருந்து அவனுக்குத் தெரியாது தற்போது அம்மா என்ற உறவும் பொய்த்துப்போக தன்னை தன் உறவினர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவர்களை வெறுக்கத் தொடங்குகிறான்.அம்மாவாக நினைத்தவர் அன்ரியாகிவிட அன்ரியாக இருந்தவர் அம்மா என்றாக அவனுக்கு உறவுகள் புரிபடவில்லை.

இந்நேரத்தில் அம்மாவின் நண்பராக அறிமுகமாகிறார் X. பழைய உறவுகள் பொய்த்துப்போக புதிதாக வந்த X ஐ ஏனோ Paul க்குப் பிடித்துப்போய்விட X அவனுடைய நண்பனாக ஆசானாக Mentor ஆக தன்மேல் அக்கறை காட்டும் ஒரோயொரு ஜீவனாக நினைக்கிறான் Paul.X Paul ஐ விளையாட அழைத்துச்செல்வது வழக்கம்.அப்படிச் சென்றபொழுது ஒரு பூங்காவில் வைத்துத்தான் முதன்முறையாக Paul ஐ கிச்சு கிச்சு மூட்டுவது போல தொடங்கிப் பின்னர் எல்லை மீறியுள்ளது.Paul க்கு ஓரளவுக்கு நடப்பது என்னென்று விளங்கினாலும் தனக்கு நெருக்கமாகவுள்ள ஒரேயுறவையும் இழக்க விரும்பாமல் வெறும் விளையாட்டுப் போல என்று ஆரம்பத்தில் சகித்திருக்கிறான். தனக்கது violent touching ஆகத் தெரியாததாலும் X தானாகவே ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவார் என்று நினைத்தும் அவர் மது அல்லது போதை வஸ்துவின் வேலையால் தன் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொள்கிறார் போல என்று பல காரணங்களைத் தனக்குத்தானே அறிவுறுத்தியாகச் சொல்கிறான் ஏனென்றால் அவனிருந்த சூழ்நிலையில் X உடன் வெளியில் போய் வருவதுதான் அவனுக்கு இருந்த ஒரு பொழுதுபோக்கு.



முதல் தடவை நடந்தபோது காரணங்களைத் தேடியவனுக்கு 2ம் முறையும் X நடந்துகொண்ட விதம் அப்படி நினைக்க விடவில்லை.X வேணுமென்றே அப்படிச் செய்கிறார் என்பதை அவன் புரிந்துகொண்டான்.இருந்தாலும் Paul X ன் மீது கொண்டிருந்த பாசம் அவனைக்கட்டிப் போட்டது.இப்போதும் கூட அவனால் X ஐக் குற்றம் சொல்ல முடியவில்லை.அவனைப் பொறுத்தவரைக்கும் X தன் மீது அளவு கடந்த பாசம் செலுத்தியவர்.மீண்டும் சில நாட்கள் இது தொடர Paul தன் மறுப்பை மெல்ல வெளிப்படுத்தினான்.அதன் பிறகு X அவனை வெளியே அழைத்துச்செல்வதில்லை அதனால் Paul மிகவும் கவலைப்பட்டான்.தன்னை X ஓதுக்குவதையும் தன்னோடு கதைக்காமலிருப்தையும் அவனால் தாங்க முடியவில்லை.ஒரு பக்கம் தனக்கு sexual abuse லிருந்து விடுதலை என்று மகிழ்ச்சியாகவும் X ஐப் பார்க்க முடியாது போனது கவலையாகவும் இருந்ததாம்.

X foster home க்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.Paul அவனை நேசித்ததாலும் தன் குடும்பத்தின் முன்னிலையில் அவன் அவமானப்படக்கூடதென்றும் அவன் ஜெயிலுக்குப் போகக்கூடாதென்றும் நினைத்து Paul தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்ல முற்படவில்லை.கொஞ்சம் வளர்ந்தபின் பாடசாலையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் குழந்தைகளோடு உறவு வைத்துக்கொள்ள விரும்புவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது தன்னால் அங்கு இருக்க முடியாது போனதால் தான் பாத்றூமில் போய் நின்றுவிட்டு வந்தானாம்.அவனுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் உருவாகிய பொழுதுதான் அவன் புரிந்து கொண்டான் தான் மட்டுமல்ல தன் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களாலயே sexual abuse க்குள்ளாக்கப்பட்டிருப்பதை. இதை விட ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு. தன்னுடைய தாத்தாவே ஒரு sexual abuser என்றதும் அவர் தன் மகள்களையே sexual abuse க்குள்ளாக்கியதையும் அவர்தான் தன் தந்தை என்பதைத் தெரிந்துகொண்டதிலிருந்து அவன் போக்கே மாறிவிட்டது.


-இப்போதைக்கு முடியாது..தொடரும்-

Tuesday, September 04, 2007

September PIT போட்டிக்கு !!!




Monday, September 03, 2007

பழைய Quebec நகரம்

பழைய கியுபெக் நகரத்துக்கு ferry லபோக வேணும்.வானோட ஏத்திக்கொண்டுபோய் பழைய நகரத்துக்குள்ள விடும் போட்.ஆனால் அந்த ferry க்குப்போற பாதையில நிறைய அழகான இயற்கைக் காட்சிகள்.அபாயமானதும் கூட :-). சில றோட் நேர தண்ணிக்குள் இறங்குற மாதிரியிருக்கும். கிட்டப்போகுமட்டும் பயமா இருக்கும்.அதுவும் நாங்கள் GPS ஐ நம்பி போனாங்கள் அது எங்கயோ எங்களைக் கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளிவிடப்போதோ என்று நினைச்சுக்கொண்டே போனம்.








இதான் பழைய கியுபெக் நகரம்.இறங்குங்கோ எல்லாரும்!

St.Lawrence நதியில் திமிங்கிலம்

St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating season ஆம் அதால நிறையத் திமிங்கிலங்களைக் காணலாம் என்று சொல்லிச்சினம் பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம்.எங்களுக்கு முதல் போனாக்கள் தாங்கள் ஒரெயொரு திமிங்கிலத்தைத்தான் கண்டதெண்டு போட்லயே இருந்திட்டினம் இறங்காமல்.ஆனால் எங்கட போட்ல யாரோ நல்லவை இருந்தவை போல நாங்கள் போன நேரம் கனக்க திமிங்கிலம் சீல் எல்லாம் பார்த்தம்.ஒரு அம்மாத் திமிங்கிலமும் பேபித் திமிங்கிலமும் வந்து கனக்க விளையாட்டெல்லாம் காட்டிச்சினம்.அப்ப எங்கட guide சொன்னா ஒரு திமிங்கிலங்கள் கிட்டத்தட்ட 50 தொன் எடையுள்ளதாம் அதோட 17m நீளமாம் அதால அதுகள் ஒருநாளைக்கு கி்ட்டத்தட்ட 30cm அளவு வளருமாம்.



ஆண் திமிங்கிலம் பெண் திமிங்கிலத்தைக்கவர டான்ஸ் ஆடுமாம்.பெண் திமிங்கிலங்கள் அவ்வளவு கெரியா mating க்கு ஓத்துக்கொள்ள மாட்டினமாம் நிறைய ஆண் திமிங்கிலங்கள்ட டான்ஸ் ஐ பார்த்திட்டு ஒராளுக்கு ஓகே பண்ணுவினமாம் ஆனால் இந்த ஆண் திமிங்கிலங்கள் பெண் திமிங்கிலங்களைக் கர்ப்பமாக்கிட்டு கர்ப்பகாலத்தில வேற பெண் திமிங்கிலங்களுக்கு முன்னால டான்ஸ் ஆடப்போயிடுவினமாம் அதால குட்டித் திமிங்கிலங்களுக்கு நீந்த இரைதேடப் பழக்குறதெல்லாம் அவேன்ர அம்மாவைதானாம்.


(வானுக்குள்ள இருந்து எடுத்த படம்)
போன வழி..எப்பிடியிருக்கு? றோலர்கோஸ்ரல்ல போன மாதிரித்தான்.2 பக்கமும் அதள பாதாளம் .கரணம் தப்பினால் மரணம்தான்.









Montmorency நீர்வீழ்ச்சி

Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ!






இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-))


இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?

Sunday, September 02, 2007

திருவடியார்களுக்குத் திருவணக்கம்!!!

தாயகப்பறவைகள் ஐப்பசி இதழ் சமுதாயக் கண்ணோட்டத்துக்கு எழுதியது.

"திருவடியார்களே, இன்றைய திருநாளில் நாமனைவரும் ஆண்டவன் சந்நிதானத்தில் கூடியிருக்கிறோம். ஒரு திருப்பணிக்காக அதிஸ்டலாபச்சீட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குப் பிரியமானவர்களின் பெயர்களில் அதிஸ்டலாபச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் அவர்கள் அதிஸ்டசாலிகளாயின் ஒரு camry அவர்கள் வசமாகும் . திருப்பணிக்காக ஒவ்வொருவரும் 10 டொலர்களை அளித்து அதிஸ்டலாபச்சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள்"

அப்பா : அறிவிப்பாளர் சரியில்லை.

அம்மா : பின்ன நான் போய்ச் சொல்றன் ஒலிபெருக்கியை உங்களிட்டத் தரச்சொல்லி

அப்பா : ஓ பின்ன நானிவரை விட வடிவாக் கதைப்பன்

அம்மா : சுமி அர்ச்சனை ரிக்கற் வாங்கிக்கொண்டு வாங்கோ .அப்பா 10 டொலர் குடுத்துவிடுங்கோ.சகானா அக்காவோட கூடப்போய் ரிக்கற் எடுத்துக்கொண்டு வாங்கோ.

சகானா : அப்பா 15டொலர் தாங்கோ 5 டொலர் ஐஸ்கிறீம் வாங்க.

அப்பா : வந்த உடனயா முதல் ரிக்கற்றை வேண்டிக்கொண்டு வாங்கோ இரண்டு பேரும். வீட்டில ஒரு துரும்பை எடுத்து அங்கால போடச்சொன்னா காய்ச்சல் தடிமன் எல்லாம் வரும்.ஐஸ்கிறீம் ஐ கண்டால் அதெல்லாம் எங்க போகுதோ தெரியேல்ல.

சகானா: ம்.

நான் : ஒரு அர்ச்சனை ரிக்கற் தாங்கோ. (10 டொலர் ஐ குடுக்கிறன்)

ரிக்கற் விற்பவர் : இன்றைக்கு ரிக்கற் 11 டொலர்.

நான் : வழமையா 10 டொலர்தானே?

ரி.வி. திருவிழா நேரம் ரிக்கற் விலை கூட.

நான் : அப்ப ஏன் ரிக்கற்ல 10 டொலர் என்று போட்டிருக்கு.

(கோயிலுக்கு 1 டொலர் கூடக்குடுக்க யோசிக்குதுகள் என்ற தோரணையில் முகத்தை உர் என்று வைச்சிருக்கிறார்)

நானும் மனசுக்குள்ள கோயிலும் சந்தையாப் போச்சு.என்று நினைச்சுக்கொண்டு சகானா கொண்டுவந்த 1 டொலரைக்குடுத்திட்டு ரிக்கற்றை வாங்கிக்கொண்டு பெயரை எழுதுவம் என்று குனிய ரிக்கற் வித்தவருக்கு நான் கேள்வி கேட்டிட்டன் என்று கோவம் அதால என்னைத்தள்ளி நின்று எழுதச் சொன்னார் பெயரை.(ரிக்கற் வாங்க பின்னால ஒருதரும் லைன்ல இல்லை).நானும் கோயிலாச்சே என்று வாயை மூடிக்கொண்டு ரிக்கற்றை கொண்டே அம்மாட்ட குடுக்க அம்மான்ர பிரண்ட் கேட்டா:

அ.பி. : என்ன சுமி அர்ச்சனைத்தட்டு எங்க?

நான் : என்ன தட்டு? எனக்குத்தெரியா அவை ஒன்றும் தரேல்ல.

அம்மா : எல்லாத்திலயும் அவசரம். அவை தந்திருப்பினம் நீங்கள் கவனிக்காமல் வந்திருப்பீங்கள் போய் கேட்டு வாங்கிக்கொண்டு வாங்கோ

(கொர்ர்ர்ர்ர் திரும்பவும் அந்த உர் பார்ட்டின்ர போகணுமா நான் )

நான் : நீங்கள் அர்ச்சனை தட்டுத் தரேல்ல.

ர.வி : நீங்கள் கேக்கவேயில்லையே.

நான் 10 டொலர் ரிக்கற்றை 11 டொலருக்கு விற்கத்தெரியும். ஆனால் சின்னப்பிள்ளையள் 10 டொலர் ரிக்கற்றுக்கு அர்ச்சனைத்தட்டும் வருமென்று தெரியாமலிருக்கலாம் என்று குடுக்கவெல்லோ வேணும் என்று மனசுக்குள்ள திட்டிக்கொண்டே ஒரு அர்ச்சனைத் தட்டை எடுத்துக்கொண்டு போய் கோவத்தோட குடுத்தன் அம்மாட்ட.

நான் : இதுக்குத்தான் நான் கோயிலுக்கு வரமாட்டன் என்று சொல்றனான். இங்க வந்தால் எனக்கு கோயிலுக்கு வந்திருக்கிறம் என்ற நினைப்பே வாறேல்ல.

அம்மா : இப்ப ஏன் கத்துவான்? உங்களுக்கு கோயில் வேண்டாம் கடவுள் வேண்டாம் சொந்தக்காரர் வேண்டாம். ஒரு செல்போனும் லாப்ராப் ம் பிரண்ட்ஸ் மட்டும் காணும். வேற ஒன்றும் (ஒருதரும்) தேவையில்லை.நீங்கள் எல்லாம் நாங்கள் இல்லாத நேரத்தில என்ன செய்யப்போறீங்கிளோ தெரியேல்ல.

நான் : காணும் தொடங்காதயுங்கோ இப்ப. நான் சொல்றதில என்ன பிழை? யாரிட்டாவது கேட்டுப்பாருங்கோ இது கோயிலே?. அன்டைக்கு இப்பிடித்தான் உங்கட கல்யாண நாளுக்குக் கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்யேக்க அர்ச்சனை செய்து முடிக்க முதல் அந்த ஐயா எத்தின தரம் அங்கால டான்ஸ் பிறக்ரிஸ் பண்ணின ஆக்களைத் திரும்பி திரும்பி பார்த்தவர் என்றும் விளக்கை விழுத்தினவர் என்றும் பார்த்தனீங்கள்தானே. பிறகும் சுருதி தாளம் ஒன்றுமில்லாம அங்க நடக்குற கூத்தை நின்றுப் பார்க்கட்டாம் எங்களை நீங்களும் வெக்கம் இல்லாம நின்று பார்த்திட்டு வாறீங்கள். காசும் வேணும் ஆனால் ஒழுங்கா பக்தியோட அர்ச்சனையும் செய்ய மாட்டினம் அவை அதில இந்த கோயில் நிர்வாகி மாரின்ர லொள்ளு வேற. எல்லாம் உங்களை மாதிரி ஆக்களால வாறதுதான்.கடவுளின்ர நினைப்பு மனசில இருந்தாக்காணும்.உங்களைப்போல கோயிலுக்கு வந்ததான் கடவுளை நினைக்கோணும் என்றில்லை.

அம்மா : காணும் நிப்பாட்டு இது கோயில்.

நான் : நான் நிப்பாட்டுறன் நீங்கள் கஸ்டப்பட்டு ரிக்கற் எடுத்ததுக்கு அர்ச்சனையைச் செய்திட்டு வாங்கோ நாங்கள் இதில இருக்கிறம். அப்பா சகானா வாங்கோ.

அம்மா : அர்ச்சனை செய்தாச்சு வாங்கோ கோயிலுக்குள்ள போய் சுத்திக்கும்பிட்டிட்டு போவம் வீட்ட.

நான் : கோயிலுக்குள்ள சரியான சனம் வாங்கோ வீட்ட போவம்

அம்மா : கோயிலுக்குள்ள போகாமல் வீட்ட போறேல்ல நடவுங்கோ கோயிலுக்குள்ள.

கோயில் நிர்வாகியொருவர் : இப்ப சாப்பாடு குடுக்கமாட்டம். சாமி வெளியிலதான் நிக்குது.

(எனக்கு வந்த கோவத்துக்கு அம்மாவைத்திரும்பி பார்த்து முறைக்க எனக்கு முன்னால நின்றவர் )

ஒருவர் : வோஸ்றூம் போறாக்கள் நடந்து காலுளைஞ்சவை இப்பிடியானவையம் கோயிலுக்குள்ளதான் போகணும் தம்பி.

கோ.நி. : போங்கோ போங்கோ ( அவர் கை காட்டின விதம் என்னவாவது பண்ணித் துலையுங்கோ என்றது மாதிரி)

நான் : அம்மா இதுக்கு மேலயும் நீங்கள் கட்டாயம் கோயிலுக்குள்ள போகோணுமே? இவைக்குக் குடுக்கிற காசை செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு மாசம் மாசம் 30 டொலர் இல்லாட்டா வருசத்துக்கு 250 டொலர் குடுத்தா யாரோ ஒரு பிள்ளை உங்கட புண்ணியத்தில நல்லாயிருக்கும்.

அம்மா : ம் சரி இப்ப டக்கென்டு சுத்திட்டுப்போவம்.

கோயிலுக்குள்ள அப்பான்ர ஊர் ஐயர் ஒராள் நின்டார்.

அப்பா : என்ன ரத்தினய்யா கோயில் இப்பிடியாகிட்டுது. எல்லாரையும் எடுத்தெறிஞ்சு கதைக்கினம் நிர்வாகத்தாக்கள்

ரத்தினய்யா : என்ன தம்பி செய்யிறது. எங்களுக்கும் மரியாதையில்லை. வேற வழியில்லாமல் கடவுள் மேல பாரத்தைப்போட்டிட்டு இங்கயே இருக்கிறன். இது முழுக்க முழுக்க பணத்தை எதிர்பார்த்து நடக்குற மாதிரியாகிட்டுது. றோட்டுக்கொரு கோயில். ஐயர் மாருக்குள்ளயும் போட்டி.நிர்வாகத்துக்குள்ளயும் போட்டி பொறாமை.எங்க போய் முடியுமோ.

அப்பா : சரி ஐயா நாங்கள் போப்போறம்.

ஐயா : சரி தம்பி சந்திப்பம்.

இதோ திரு சரவணபவானந்தன் 20 டொடலர்களையளித்த 2 அதிஸ்டலாலப்சீட்டுகளைப் பெற்றுக்கொள்கிறார் . திருவடியார்களே கோயில் திருப்பணிக்குதவுங்கள்!