Custom Search

Wednesday, December 30, 2009

சுய தம்பட்டம் என்று சொல்லலாம்.


எல்லாருக்கும் மீண்டுமொரு வணக்கம். அடிக்கடி காணாமல் போறது வழக்கமாப்போச்சு. என்ன பண்றது எழுதணும் என்டு ஆசை இருந்தாலும் நேரம் கூடி வராதாம் ( சும்மாமாமா பில்ட் அப்தான்). 2009 முடியமுதல் ஏதும் எழுதணும்னு நினச்சன் ஆனால் உருப்படியா எதும் எழுதத் தோணல சரி 2010 ம் வந்திட்டு இப்பவாவது எழுதுவம் என்டு நினைச்சு login பண்ணினன் ஆனால் எழுதுறத விட வாசிக்கிறதுதான் சுகமா இருக்கு இப்பெல்லாம். ஆனால் நல்ல பதிவுகளை வாசிக்கும்போது ஐயோ நானும் எழுதோணும் என்டு ஆசை வருவதென்னவோ உண்மைாதான்.

அதான் இந்த Live Traffic Feed இருக்குத்தானே ..அதில போய் நானே என்ர ப்ளாக்க நோட்டம் விட்டன். யார் எல்லாம் வரினம் எந்த எந்தப்பதிவெல்லாம் கிட்டடியில படிச்சிருக்கினம் என்டு பாப்பம் என்டு வெளிக்கிட்டால் சந்தோசம் துக்கம் இப்பிடிக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வேறு சில உணர்வுகளும் வருது.

அல்சர் , மல்லுக்கு ,வயதுக்கு ,நிம்மதியான தூக்கம் ,உடல் நலம் ,கல்யாணம் ,தத்துவங்கள்,சாப்பாடு,பாலியல் துன்புறுத்தல் போன்ற சொற்களை எல்லாம் கூகில்ல ஆக்கள் தேடேக்க அவையள் எல்லாம் என்ர வலைப்பக்கம் வந்து போயிருக்கினம் என்டு Live Traffic Feed சொல்லுது.

அதோட விக்கிப்பீடியால பூப்பு என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்து எழுதப்பட்ட கட்டுரையின் கீழ் நான் நட்சத்திர வாரத்தில் எழுதிய " வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும் " என்ற கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே விக்கிப்பீடியாவில் பூப்பு பற்றி வாசிக்க வந்தவர்களில் பலரும் என்னுடைய வலைப்பக்கம் வந்து சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

சரி இப்ப என்ன எழுதலாம் என்று யோசிச்சிட்டு வாறன்.

அப்புறம் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்.

Saturday, September 26, 2009

1999, உறுதி , லெனின் எம்.சிவம்

\\ ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.

பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள்.\\

http://snegethyj.blogspot.com/2009/08/blog-post.html

\\பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்.அம்மா அப்பாவிடம் இருந்து கிடைக்கவேண்டிய நியாயமான அன்பு கிடைக்காமல் ஏங்கி ஏங்கியே ஒருநாள் மாண்டு போகிறார்கள்.ஆனால் வெளியில தெரியிற உண்மை??? அந்தப்பெடியன் காங்ஸராம்.அந்தப்பெட்டை பாரில வேலை; டான்ஸ் ஆடுறளாம்.பெடியங்களோட திரியிறாளாம்.கதைக்க நல்லாயிருக்கும்.நீங்கள் குடுக்க வேண்டிய அன்பை அவர்களுக்குக் குடுத்தா அவர்கள் ஏன் அதை வெளியில் தேடிப்போகிறார்கள்.\\ - http://snegethyj.blogspot.com/2007/02/blog-post_18.html


\\Its stories are of immigrants from a Sri Lanka torn by years of bloody conflict, youths who in Canada lack the support they got from extended families back home. They are caught between opposing cultures - one at home, the other at school.

"They tend to pick the bad things from both cultures," Sivam explained. "Gangs give them a purpose and a sense of belonging."\\

\\ஆண்கள் அழமாட்டார்களாம் ஆதிரை. ஏன் அவைக்கு கண்ணீர்ச்சுரப்பியில்லையா? ஆண்கள் அழுவதில்லை. அவர்கள் பிறப்பிலேயே மனசாலும் உடலாலும் பலமுள்ளவர்கள் என்றொரு முகமூடியைச் சிறுவனாக இருக்கும்போதே போட்டு விட்டாச்சு. ஆண்களுக்கு பிரச்சனைகளே வராது அப்பிடியே வந்தாலும் அவர்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது தாங்களாகவே சமாளிக்கப்பழகவேணும் என்றெல்லாம் சொல்லிவச்சா\\ http://snegethyj.blogspot.com/2008/01/blog-post_15.html

" His short film Uruthy (Strength) in 2007 is about the stigma attached to mental illness in a culture where people believe "men should be macho and not cry."

இங்கே நான் தமிழில் கொடுத்திருப்பவை நான் தத்தக்க பித்தக்கவில் அப்பப்போ எழுதிய பதிவுகளிலிருந்து எடுத்த வரிகள். ஆங்கிலத்தில் இருப்பவை 1999 என்ற விரைவில் வன்கூவர் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடக் காத்திருக்கிற படத்தின் இயக்குநர் லெனின் எம் சிவம் ஒரு செவ்வியில் சொன்னவை. 2 கருத்துக்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக எனக்குப் படுகிறது.



குழுவன்முறைகள் பற்றிய ஒரு படம் உருவாகிக்கொண்டிருப்தாக ஏற்கனவே facebookdன் புண்ணியத்தில் அறிந்துகொண்டேன். நேற்று www.insidetoronto.com ல் இந்தப்படம் பற்றிய ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதை வாசித்ததும் இதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோணியது. அதற்கு முக்கியமான இன்னொரு காரணம் அண்மையில் கேள்விப்பட்ட ஒரு கொலைச்சம்பவம்.

பல வருடங்களுக்கு முன்னர் வேறொரு நாட்டில் குடியேறியிருந்த ஒரு குடும்ப நண்பரின் மகன் முன்பு குழுவன்முறையில் ஈடுபட்டவர். வீட்டுக்காரர் கேட்கும்போதெல்லாம் நான் நல்லவர்களுடன் சண்டைக்குப் போவதில்லை. பெட்டையளுக்கு torture குடுக்கிறவன்களை அடிச்சிருக்கிறன். சின்னப் பெட்டையளை வன்புணர்ந்தவன் சட்டத்தில இருந்து தப்பிட்டான். அவனை நாங்கள் கொஞ்சப்பேர் தூக்கிப்போட்டு மிரிச்சம் இப்ப அவன் நல்லாயிருக்கிறான். ஆங்கிலமே தெரியாத ஒரு அண்ணா தமிழ்க்கடையில வேலை செய்தவர் அவருக்குக் கொஞ்சப் பெடியங்கள் பிரச்சனை குடுத்தாங்கள்...பாவம் அந்தண்ணை மனிசையை ஸ்பொன்ஸர் பண்ணிட்டு காத்திந்தவர் அந்த நேரத்தில அவர் இவங்கள் மேல கையை வைச்சா அவருக்குப் பிரச்சனை அதான் நாங்களே அவன்களைச் சாத்தினாங்கள்.நாங்கள் ஒண்டும் நீங்கள் நினைக்கிறது போல பொறுக்கியில்லை என்டெல்லாம் சொல்லுவான். இப்ப கொஞ்சம் கொஞ்சமா நண்பர்கள் வாழ்க்கையில் செட்டிலாகத் தொடங்கியதும் வீடு வேலையென்று இருக்கிறமாதிரித்தான் தெரியுது ஆனால் அந்நியன் விக்கிரம் போலயா இல்லையா என்று யாருக்கென்ன தெரியும் என்று அவனுடைய தந்தை நக்கலாச் சொல்லுவார்.இப்ப கிட்டடியில அவன்ர நண்பன் ஏன் எதற்கு என்று தெரியாமல் சிலபேரால் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.அந்த மரணம் அவனின் நண்பர்களை மிகவும் பாதித்திருக்கிறது.

அப்படி ஒரு மரணத்தின் பாதிப்பிலிருந்து தொடங்கியதுதான் இந்த 1999 படமும் என்று அதன் இயக்குநர் லெனின் சிவம் குறிப்பிடுகின்றார். இதில் நடித்திருப்பவர்களை ஏற்கனவே வேறு சிலக் கனேடியத் தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். படங்களின் பெயர்களை நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை. இந்த 1999ல் குமாராக நடிப்பவர் இன்னுமொரு படத்தில் ஒருவருடைய வீட்டுக்கு துவக்கு வேண்டப்போகும் ஒரு காட்சியில் பார்த்த ஞாபகம்.



1997-1999 குழுவன்முறைகள் உச்சத்தில் இருந்த காலம்.Cross Country Donuts at Bridletowne Circle and Finch Avenue East - இந்த இடத்தில் வைத்து கபிலன் பாலச்சந்திரன் என்ற 19 வயது Waterloo பல்கலைக்கழக மாணவன் வன்முறைக்குழுச் சண்டையில் அநிநாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறான். அதே பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த லெனின் சிவத்தால் இந்தப்படம் இயக்கப்பட்டிருக்கிறது.

" வெள்ளிக்கிழமை இரவுகளில் தமிழ் இளைஞர்கள் சில இடங்களுக்குச் சென்றால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் சில இடங்கள் இருக்கின்றன" என்று கூறும் லெனின் சிவம் குழுக்களில் இருந்த பலரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். "அவர்கள் இப்போது திருமணமாகி அவர்களுக்கு சிறு குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்."

மீனவப்பெண் என்ற ஈழத்துத் திரைப்படத்தில் ஜெயகாந்த் என்ற பெயரில் நடித்தவரும் உதவி இயக்குநருமான V.M.L. சிவம் என்பவரின் மகன்தான் இந்த லெனின் சிவம்.

( உறுதி)

மனவழுத்தம் பற்றி ' உறுதி' ஒரு படம் எடுத்திருக்கிறார் முன்பு. இந்தப்படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கவேண்டும். வேறும் சில படங்கள் எடுத்திருக்கிறார்கள் இந்தக்குழுவினர்.

1999 படத்தின் பாடல் வெளியீடு Oct. 1 ம்திகதி 3330 Pharmacy Ave ல் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிறது.

Premiere Show :Oct. 22 ம் திகதி Scotiabank Cineplex Theatre, Toronto .

மிச்சம் இந்தப்படம் பார்த்த பிறகு....

மேலதிக தகவல்களுக்கு :
1999 : http://www.1999movie.com/
உறுதி : http://www.bagavan.com/Uruthy/story.htm


* பின் குறிப்பு : 1999 திரைப்படத்துக்கு இசையமைத்த ராஜ் தில்லையம்பலம் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவராம் என்று வந்தியண்ணா சொல்கிறார் *

சர்வதேசத் திரைப்படவிழாவுக்குப் போகும் தமிழரின் படம்

இதைப்படியுங்க விரைவில் தமிழில் எழுதுகிறேன்..


New film to put spotlight on Tamil gang violence
Scarborough story will open at Vancouver Film Festival

New film to put spotlight on Tamil gang violence. Thelepan Somasegaram, left, and Deva Gasperson appear in the Tamil anti-violence film, '1999'. Courtesy photo One December night in 1997, four hooded men fired guns into Cross Country Donuts at Bridletowne Circle and Finch Avenue East. They fled, not caring they had just killed Kapilan Palasanthiran, 19, an aspiring scientist never in trouble with the law.
The murder of Palasanthiran - one of several innocents killed by chance during the years the VVT and AK Kannans fought in Scarborough's streets - was not recreated for 1999, Lenin M. Sivam's film drama about Tamil youth gangs, but Sivam remembers Palasanthiran's funeral as a turning point.

"He was such a bright student and didn't know these things were happening. The issue was bothering people," said the director, whose first full-length feature will be shown at next month's Vancouver International Film Festival (VIFF) and then premiere in Toronto at Scotiabank Cineplex Theatre on Oct. 22.

Like Palasanthiran, Sivam was attending the University of Waterloo in 1997, but the filmmaker says he is more aware of the war between the gangs and the dangers that went with it.

"There were places I knew I shouldn't be at on a Friday night. Being Tamil, you don't want to be there."

But years after arrests and changes of heart removed gang leadership, there were questions Sivam wanted answered about who the gang members were and how the violence happened.

Over a year, he met and interviewed youth workers and a number of ex-gangsters, none of whom, Sivam said, were still engaged in crime. "They are all out of it. They have little kids. They admit how stupid and foolish they were," he said.

"They really think through my movie they will bring an awareness, so these things will not happen again."

Those interviews formed 1999's main characters: the underachiever Anpu, Kumar the gang leader and Ahilan, a straight-arrow university student.

"These characters did exist. You could have found one," Sivam said. "The way they talk, what they do on a Saturday morning, why do they fight, how do they get involved (in a gang), how do they get out of it. These were stories that I got from the real people."

1999 is not a Hollywood treatment of gangs. Its stories are of immigrants from a Sri Lanka torn by years of bloody conflict, youths who in Canada lack the support they got from extended families back home. They are caught between opposing cultures - one at home, the other at school.

"They tend to pick the bad things from both cultures," Sivam explained. "Gangs give them a purpose and a sense of belonging."

Though this summer fights between young Tamils have again resulted in deaths in Scarborough, trouble on the streets now is "totally different" and "not as organized as back then," said Sivam.

"Right now, it's guys hanging in the park or the mall and claiming it's their territory. These guys have no idea how to get a gun."

Making the film took investments and volunteer work from more than 100 people, mainly young family members and friends, willing to work 14 to 16-hour days over a dozen weekends in Scarborough, said executive producer Sebesan Jeyarajasingam, who had production equipment from a past project when he met Sivam a few years ago.

"We want to make this a full-time job," Jeyarajasingam said.

Sivam said the crew had to be particularly creative to "achieve a million-dollar shot with almost nothing" as his idol, the director Robert Rodrigues, did (as every aspiring independent filmmaker knows) when making El Mariachi for $7,000.

His father V.M.L. Sivam was a filmmaker too, assistant director in one of Sri Lanka's first Tamil-language films, then (under the screen name Jeyakanth) playing the male lead in another, Meenavapenn.

After working as a computer programmer and computer architect, Sivam realized he wanted to take on "touchy subjects." His short film Uruthy (Strength) in 2007 is about the stigma attached to mental illness in a culture where people believe "men should be macho and not cry."

Sivam said he had a cousin who killed himself. "He was suffering from depression and didn't know what he was going through."

The subject of 1990s gang violence may also offend some members of the Tamil community - groups such as the Canadian Tamil Youth Development Centre have worked to wipe the "gangs" association away and prove Tamil youth deserve a positive image - but Sivam said issues from those years must be faced.

"This is going to be our home for generations. It is important to look at our past. We should take this movie as a positive. We had a problem and we solved it," he said.

The Canadian Tamil Congress apparently agrees. It called 1999 "a rare and powerful story" and said the VIFF selection is a milestone for Tamil Canadians, the first time a film made by members of the community will be shown at an international festival.

1999, a Khatpanalaya Production, will open the festival's Canada Images Program on Oct. 14 and Oct. 15.

The soundtrack, featuring Lyrically Strapped and S.P. Balasubramaniyam, will be launched Oct. 1 at 3330 Pharmacy Ave. in a free event starting at 6:30 p.m.

Source : http://www.insidetoronto.com/news/local/article/151934--new-film-to-put-spotlight-on-tamil-gang-violence

Wednesday, September 23, 2009

கறுப்பான கையால....

இன்னமும் பார்க்காத ஆக்களுக்காக....

Monday, September 21, 2009

நானெல்லாம் வாயே திறக்கக்கூடாது



கொஞ்சநாளாவே என் புலம்பல்ஸ் கூடிட்டுது. நேரம் காணாது. வேலை கூடிட்டுது. நேரத்துக்கு வேலை எல்லாம் செய்து முடிக்கேலாம இருக்கு. நித்திரை காணாது இப்பிடி நிறையப் புலம்பிக்கொண்டிருந்தன். ஒன்டில் எல்லாரும் சரியான busy அல்லது செய்ய எதுவும் இல்லாமல் வெட்டியா இருக்கினம். இரண்டுமே பிரச்சனைதான். அதால என்னை நீ கவனிக்கேல உன்னை நான் கவனிக்கேல்ல என்டு மனஸ்தாபமும்....அடிபடாத குறைதான். இந்த நிலையில இதெல்லாம் ஒரு பிரச்சனை பொத்திக்கொண்டு போய் வேலையப் பாருடி என்று சொல்றமாதிரி ஒரு வீடியோ பார்த்தன் facebook ல:) நீங்களும் பாருங்கோ.

Monday, September 14, 2009

மறந்து போகுமா மண்ணின் வாசனை...

கொஞ்சக்காலமா இந்தப்பாடல் ஒருநாளைக்கு 4-5 தரம் கேட்டடிருக்கிறன். எங்கட வீட்ட 4 றேடியோ இருக்கு. ஒன்று அம்மான்ர றேடியோ அது எப்பவும் குசினில இருக்கிற பிறிட்ஜ்க்கு மேல இருந்து ஓயாமா கத்திக்கொண்டேயிருக்கும். மற்றது அப்பம்மான்ர றேடியோ அது அப்பம்மான்ர அறையில அவா நித்திரையெண்டாலும் றேடியோ அலறிக்கொண்டேயிருக்கும். அப்பான்ர றேடியோ செற் அது எல்லாத்தையும் விட மோசம் அதுக்கும் ஓய்வு கிடையாது. இதெல்லாத்தையும் விட எல்லாருக்கும் பொதுவாவும் ஒரு றேடியோ இருக்கு. இப்பிடி எப்பவும் ஏதோ ஒரு றேடியோ வேலை செய்துகொண்டிருக்கும். சில நேரம் ஒரே நேரத்தில 2 றேடியோவும் வேலை செய்யும்.

தை 2009 ல இருந்து வைகாசி 2009 வரைக்கும் கவனயீர்ப்பு கண்டன ஊர்வலத்துக்கு வரச்சொல்லி மக்களை அழைத்துக்கொண்டேயிருக்கும் வானொலிகள் எல்லாமே 'மறந்து போகுமா மண்ணின் வாசனை' என்று நடுகலும் கேட்டுக்கொண்டிருக்கும். நான் நினைக்கிறன் இந்தப் பாட்டைக் கேட்டுத்தான் அரைவாசிச் சனம் இந்த ஊர்வலங்களுக்கு வெளிக்கிடும் என்று.
நான் முதல் தரம் இந்தப் பாடலைக் கேட்டபோது " தூர தூர தூர தூர தூர தூர தேசத்தில் சுகல்யா ரகுநாதன் பாடிக்கொண்டிருந்தா. உண்மையைச் சொல்றன் எனக்கு அவா தூர தூர என்று பாடினது அப்பேக்க பிடிக்கேல்ல. பிறகொருநாள்தான் பாடலை முழுமையாக் கேட்டனான். அப்ப மனசைப்பிழியிறதெண்டு சொல்லுவினம் அப்பிடித்தான் எனக்கும் ஏதோ மாதிரியிருந்தது. பிறகு றேடியோவில எப்ப அந்தப் பாட்டுக்கேட்டாலும் நிண்டு கேப்பன். அந்தப்பாடல் வரிகளில் இழையோடும் சோகம் ஏக்கம் எல்லாருக்கும் பொதுதானே அதான் கேக்குற எல்லாருக்கும் பிடிச்சிடுதெண்டு நினைக்கிறன்.



மறந்து போகுமோ மண்ணின் வாசைன
தொலைந்து போவமோ தூரதேசத்தில்

வேப்பமரக்குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா
ஏக்கமுடன் நீபாடும் ஒத்தைக்குரல் ஒலிக்கிறதா?
மேப்பிள் மரநிழலோரம் மெல்ல விழி மூடுகையில்
கேட்குதடி உன்பாடல் தேம்புதடி என்னிதயம் - மறந்து

காலையிலே கண்விழித்தேன் காணவில்லை என்முகத்தை
சாலையிலே தொலைத்தேனோ வேலையிலே அழித்தேனோ?
தேடுகின்றேன் தேடுகின்றேன் தேடல் இன்னும் ஓயவில்லை
வாடுகின்றேன் ஊர் நினைவில் வாழ்க்கையென்று ஏதமில்லை - மறந்து

வந்தஇடம் ஒட்டவில்லை வாழ்நிலமோ கிட்டவில்லை
சொந்தங்களோ பக்கமில்லை சொல்லியழ நேரமில்லை
இந்தநிலை மாறிஎங்கள் சொந்தமண்ணை சேர்வதெப்போ
அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ -மறந்து


என்ர facebook ல 2-3 பேர் இசையரங்கத்தின் "மெல்லக் கசிந்தது'என்ற இசைத்தட்டு பற்றிய செய்தியுடன் அதற்கான இணைப்பும் கொடுத்திருந்தார்கள். ஆனால் அப்போது அதைப் போய்க் கேட்கும் நேரமோ மனநிலையோ இருக்கவில்லை. பின்னர் ஒருநாள் யாரோ அந்த இசைத்தட்டில் தமிழ்நதியும் பாடல்கள் எழுதியிருக்கிறார் என்று சொன்னபிறகுதான் இணையத்தில் போய் தேடினால் இன்ப அதிர்ச்சி. எனக்கும் எல்லாருக்கும் பிடித்த அந்த 'மறந்து போகுமா மண்ணின் வாசனை' பாடலை எழுதியவர் சாட்சாத் தமிழ்நதியேதான்.

2) நிலவும் வானும் பிரிந்திருந்தால் அழகேதடி
நீயும் நானும் ஒன்று பெண்ணே விலகாதேடி

3) பிரம்மனோடு செவ்விகாண வேண்டும் - அவள்
பிறப்பின் ரகசியம் அறியவேண்டும்

4)வாழ்க்கையென்பதென்ன
கனவின் தொகுப்பா கடலில் உப்பா

5)கண்களுக் காயிரம் காரணம் சொல்லியே
சென்றது நாள் நூறடி

6)மெல்லக் கசிந்தது புல்லாங்குழலே
மேவி இசைத்தது கொல்லைக்குயிலே

7)பெண் என்பவள் கவிதை
ஆனாலென்ன அடிமை

8)இசையெனும் மழைதனில் நனைகிறதே -

9)கண்களால் எழுதிடும் கவிதையே காதலோ
கருத்தினால் இதயங்கள் கலப்பதே காதலோ

10)இசையே உனைப்போல் துணை ஏது

11)பனிப்பாலை வெளி வெறுத்து ஊரேகினோம்
இனித் துயர் இல்லையென்று வேரேகினோம்

12)மழை என்றழைக்காதே... அன்பே
காலம் தவறி பொழியும் என்னை

போன்ற பாடல்களையும் தமிழ்நதியே எழுதியிருக்கிறார். எல்லாப்பாடல்களும் இணையத்தில் இல்லை. நான் இன்னும் இசைத்தட்டும் வாங்கவில்லை.

நீங்களும் பாடல்களைக் கேட்க/ வாங்க. http://www.isaiyarangam.com/cd_release.html

போனமாதம் ஒருமாதிரி அம்மணியைச் சந்திக்க முடிந்தது.வேலையால் போனதால் சற்றுத் தாமதாயே போய்ச் சேர்ந்தேன். தேவுடா என்று என்னைத் திட்டிக்கொண்டே காத்திருந்தார்கள் போலும். படத்தில பார்த்ததை விட நேரில முகத்தில நிறையப் பால்வடியுது. இளவேனில்ல வெளுத்து வாங்கிறவாவா இவா என்று எனக்கு நம்பவே முடியல்ல. அவ்வளவு அப்பாவியா இருந்தா பார்க்க:) வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" மற்றும் "சூரியன் தனித்தலையும் பகல்" 2ம் தந்துவிட்டவா. நாங்கள் சந்தித்த அன்று என் அக்காவின் திருமண நாள். நான் அதை மறந்து தமிழ்நதியை பார்க்கவாறன் என்று சொல்லிட்டன். ஆனால் கனநேரம் கதைபேச முடியாமல் போயிற்று.

ஐயோ ஐயோ அவாட தொடர்மாடிக்கட்டிடத்தின் இட்டுமுட்டான பாரக்கிங்ல காரைவிட்டிட்டு நான் வெளில வரப்பட்டபாடு இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. அத விட காரை எங்கயோ விட்டிட்டு 2 பேரும் போய் பக்கத்து பில்டிங் பார்க்கிங்லொட்ல கார் தேடினாங்கள் கொஞ்சநேரம்...என்னத்த சொல்லி என்னத்த விட்டு.

Sunday, September 13, 2009

விரதம், நோன்பு , பசி , சாப்பாடு

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எலந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ :)

இதெல்லாத்தையும் விட மக்டோனல்ட்ஸ் KFC , Taco , Wendy's , Arby's ,Harvey's , Mr Sub , Subway தவிர Pizza Pizza , Piza Nova , Piza Hut , Dominos இப்பிடி 1008 சாப்பாட்டுக்கடைகள் போற வழியெல்லாம் இருக்கேக்க ஒரு மனுசரால எப்பிடி விடிய 5 மணில இருந்து பின்னேரம் 7.40 வரைக்கும் சாப்பிடாம இருக்கலாம்??

வேலையால ஒரு பயிற்சிப் பட்டறைக்குப் போயிருந்தோம் ஒரு இடத்துக்கு. காலைல 9 மணில இருந்து பின்னேரம் 6 மணி வரைக்கும் 3 பட்டறைகள். அவர்கள் கொண்டு வந்து வைத்திருந்த சாப்பாட்டை நாங்கள் வெள்ளனவே சாப்பிட்டு முடிச்சிட்டம். பசியெடுத்த கொஞ்சாக்கள் மதிய இடைவேளைக்கு வெளில சாப்பிடுவம் என்று வெளிக்கிட்டம். எங்களுடன் ஒரு பெங்காலிப் பெடியனும் வந்திருந்தான். அவன் தான் நோன்பிருக்கிறன் சாப்பிட மாட்டன் என்டான். சாப்பிடாட்ட அப்ப ஏதும் வேண்டிக் குடியெண்டால் அதுவும் கூடாதெண்டான். எங்களுக்கு சங்கடமாப்போச்சு. நோன்பு இருக்கிற ஒராளை வைச்சுக் கொண்டு எப்பிடிச் சாப்பிடுறதெண்டு. அவன் சொன்னான் நாங்கள் சூரியன் உதிக்கிற நேரம் அதாவது காலைல 5 மணியில இருந்து சூரியன் மறையிற நேரம் மாலை 7.40 வரைக்கும் சாப்பிடக்கூடாதெண்டு. அதும் இப்ப இங்க கோடை காலம் அதால சூரியன் மறைய நேரமெடுக்கும் அதால அவர்களின் மதகுருக்கள் கணிப்பிட்ட நேரத்தின் படி 7.40 வரை சாப்பிட முடியாதாம். அவன்ர அம்மா விடுமுறைக்கு வந்து நிண்டவா அப்பா நல்லாச் சமைச்சுக்குடுத்திருப்பா போல. அவா போனதும் சும்மாவே பெடியன் சோர்ந்து போயிருந்தான். இதில நோன்பு வேற. அவன்ர துரதிஸ்டம் அந்த ஏரியால Bangladesh கடைகளும் இருந்தன. அவனுக்கு நல்ல பசி போல. இந்த Bangladesh கடையில சாப்பாடு நல்லா இருக்குமெண்டு வேற சொன்னான்.

நான் கேட்டன் இப்படி உங்களை வருத்தி கட்டாயம் நோன்பிருக்கோணும் என்டு கடவுள் சொன்னவரா? அதுவும் ஒரு மாசம் எப்பிடி முடியுமென்டு. ஒருதரும் கட்டாயப்படுத்திறேல்ல ஆனால் ஒருமுறை நோன்பிருக்கத் தொடங்கினால் தொடர்ந்து நோன்பிருக்கத்தான் மனசு சொல்லுமாம். இது மனக்கட்டுப்பாடு சம்மந்தப்பட்டது. நான் ஆரம்பித்தில என்னால என்னுடைய நாவை உடம்பை மனசை் கட்டுப்படுத்த முடியுமா என்று சோதிக்கத்தான் நோன்பிருக்கத் தொடங்கினான். இன்டைக்கு இந்த பட்டறையில கேட்ட விசயத்தையே கேட்டு வெறுத்திட்டு அதான் நானிப்பிடி இருக்கிறன். நான் வீட்ட போய் கொஞ்சமா தண்ணியடிச்சிட்டு சாப்பிட்டால் ஓகே என்டான். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி.

நான் சொன்ன் எங்கட மதப்படி விரதம் பிடிச்சால் தண்ணியடிக்கிறேல்ல என்டு. அவன் சொன்னான் ஓம் தெரியும் நீங்கள் மச்சமும் சாப்பிட மாட்டிங்கள் என்டு. பிறகு சொன்னான் நாங்கள் நோன்பு முடிய நல்லா மச்சம் சாப்பிடுவம். கொஞ்சம் தண்ணியடிப்பம்.

என்ர அம்மா என்னோட கோவிச்சுக்கொள்றது இந்த விசயத்திலதான். எனக்கு விரதம் சரிப்பட்டு வாறேல்ல. நான் நினைக்கிறன் ஒரு 10 வருசத்துக்கு முதல் சரஸ்வதிபூசை நேரம் கடைசி 3 நாளும் விரதம் பிடிச்சனான் என்று. கடவுள் பல சந்தர்ப்பத்தில காலை வாரி விட்டதால எனக்கு கடவுளுக்கும் பெருசா ஒத்து வாறேல்ல. முடியாக்கட்டத்தில கோயிலுக்குப்போனாலும் எரிச்சலோட திரும்பி வாறது என்னமோ போங்கோ கடவுளுக்குத்தான் தெரியும் உண்மை.கிட்டடியில Rogester க்கும் Pittsburgh வெங்கடேஸ்வரா கோயிலுக்கும் போனம். கோயிலுக்குள்ள போறதுக்கு ஒரு பெரிய கியு. அதில நிண்டு உள்ளுக்கு போனா சாமிக்கு முன்னால ஒரு நிமிசம் கூட நிக்கேலாது. பொலிஸ் மாதிரி நீட்டுக்கு ஆக்கள் நிண்டுகொண்டு காணும் சாமியைப் பார்த்தது போங்கோ அங்கால துரத்திக்கொண்டு நிக்கினம். ஒரு 5 நிமிசம் கோயிலுக்குள்ள போய் வெளில வாறதுக்கு 8 மணித்தியாலப் பிரயாணம். மியுசியத்தில கூட இத விட வடிவாப் பார்க்கலாம் சாமி சிலையை.

கிட்டடில இங்க ரொரன்டோவில ஐயப்பன் கோயியல்ல எண்ணெய்க்காப்பு சாத்தினவை. ஒராளுக்கு $5 கொடுக்கோணுமாம். அம்மா சொன்னா லட்சக்கணக்கில சனம் வந்ததெண்டு. காலம 8 மணிக்கு போய் கியுல நிண்டு பின்னேரம் 3மணிக்குத்தான் எண்ணெய்க்காப்புச் சாத்தினவையைாம். கனடா கந்தசாமி கோயில் , நயினை நாகபூசணி அம்மன் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், நல்லூர்க்கந்தன் , வரசித்தி விநாயகர், சிறீ துர்க்கா, சந்நிதி முருகன் ,சந்திரமெளலீஸ்வரர் ,ஐயப்பன் கோயில் இதத்தவிர இன்னும் ஒரு புதுக்கோயில் வரப்போவுது.

மில்லியன் கணக்கில காசைக்கொட்டி இப்பிடிச் சந்திக்கொரு கோயில் திறக்கிறத விட இருக்கிற கோயில்கள்ல பூசையோடு சேர்த்து வேற நல்ல காரியங்களையும் செய்தா நல்லம்.

பசிக்குது சாப்பிட்டு வாறன்.

Friday, September 11, 2009

பள்ளிப் பயின்றதொரு காலம் - தொடர் விளையாட்டு



இந்தக்கிழமை நிறைய ஆசிரியர் பற்றிய பதிவுகள் வாசிச்சிட்டன். ஆயில்யான் சந்தனமுல்லை மற்றும் சிலர் ஆசிரியர் பற்றி எழுதியிருந்தார்கள்.அதெல்லாம் வாசிச்சிட்டு ஆசிரியர்களின் நினைவுகளுடன் கூகிலில் நான் படித்த பாடசாலை மற்றும் ஆசிரியர்களின் பெயர்களைப்போட்டுத் தேடினேன். யாழ்ப்பாணத்தில் படிப்பித்த ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை ஆனால் ஒரு சந்தோசமான ஆச்சரியம் நான் மாத்தளையில் படித்த பாக்கியம் தேசியக் கல்லூரிக்கு ஒரு இணையத்தளமே உருவாக்கியிருக்கிறார்கள். அநேகமா இந்த வருடம்தான் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால் நான் போன வருடமும் தேடிய ஞாபகம் உண்டு.

மலையகப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கென்று ஒரு தனி domain வழங்கப்பட்டிருக்கிறது போல. சில பாடசாலைகள் தங்களுக்கென்று இணையத்தளம் அமைத்திருக்கிறார்கள். நேற்று கனநேரமா இந்த இணையத்தளத்தில் போய் படம் பார்க்கிறதிலேயே செலவழிச்சன். ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நான் பழைய ஞாபகங்களையெல்லாம் கொண்டுவர முயற்சி செய்தேன்.

முதல் பக்கத்திலயே சிரிச்சுக்கொண்டு நிண்டவா பள்ளிக்கூட அதிபர். அவாவையும் அவான்ர மகன் மகளையும் ஞாபகமிருக்கு.மற்றம்படி பெருசா ஒன்டும் ஞாபகமில்ல...ம் ம் பாடசாலையில் சேரும்போது கொடுத்த donation தொகை ஞாபகமிருக்கு.

எனக்குப் பிடிச்ச தமிழ் ஆசிரியர் றூபினி மிஸ்; அவான்ர படத்தை தேடுறன் தேடுறன் காணேல்ல. தமிழ்ப் பிரிவு என்று போட்டு ஒரு படமிருக்கு. அதில இருக்கிற ஒராளைப் பார்த்தா றூபினி மிஸ் போலவும் இருக்கு ஆனா அது அவா இல்லை. எனக்கு உண்மையா கணிதத்தில இருந்த ஆர்வம் தமிழ்ல இருக்கேல்ல.என்ன ஒரே நிறைய எழுதச்சசொல்லினம் என்று பெருசா ஆர்வமில்ல. அதோட கணிதமெண்டா எதையோ நாங்கள் தேடிக் கண்டடையிற சுகமிருக்கும். ஆனால் தமிழ்ல அப்பிடியில்ல. நிறையப் பொய்தான் சொல்ற மாதிரியிருக்கும். ஆனால் றூபினி மிஸ் நல்ல வடிவா ஆசையாத் தமிழ் படிப்பிப்பா. நான் இந்தப் பாடசாலையில போய் சேரேக்க எங்கட வகுப்பில நான் மட்டும்தான் யாழ்ப்பாணத்துப்பிள்ளை.மிச்ச எல்லாரும் அநேகமா அங்கயே பிறந்து வளர்ந்தாக்கள். பிடுங்கி நடப்பட்ட செடி வளர கொஞ்சம் கஸ்டப்படும்தானே. எனக்கு அங்க இருந்த மாணவர்களோட பெருசா ஒட்டேல்ல. அப்ப றூபினி மிஸ்தான் என்னைக் கூப்பிட்டு யாழ்ப்பாணத் தமிழ்ல கதைக்கச்சொல்லுவா. வகுப்பில யாரும் சிரிச்சால் நீங்கள் கதைக்கிறதுதான் பிழை இந்தப்பிள்ளை எப்பிடி வடிவா அறுத்துறுத்துக் கதைக்குதெண்டு சொல்லுவா. எனக்கென்னவோ நான் மட்டும் வேற்றுக்கிரகத்தில இருந்து வந்த மாதிரியிருக்கும். முதல் termல்லயே எனக்கு எல்லாப்பாடமும் நல்ல மார்க்ஸ். பிறகு நண்பர்களும் கிடைத்தார்கள். முதல்ல முறைச்சுக்கொண்டு திரிஞ்சாக்கள் எல்லாம் நண்பர்களான பிறகு சந்தோசமாப்படிச்சன்.



எனக்கு விஞ்சானம் படிப்பிச்சது விஜி(?) மிஸ். ஆளை ஞாபகமிருக்கு. இந்தப்படத்தில பச்சை சாறி - கண்ணாடி போட்டிருக்கிறா. பெரிய விருப்பம் எண்டில்ல ஆனா ஒரு பிரமிப்பு இருந்தது. அப்ப அவாக்கு என்ன ஒரு 30 வயசிருக்குமென்டு நினைக்கிறன். லண்டன்ல கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில படிச்சவா. கொஞ்சம் வித்தியாசமாத்தான் பேப்பரெல்லாம் திருத்துவா. மார்க்ஸ் எல்லாம் அள்ளி அள்ளித் தரமாட்டா. மைனஸ் மார்க்ஸ் எல்லாம் போடுவா. ஆனால் நல்லாப் படிப்பிப்பா. கரும்பலகைல வடிவாப் படம் கீறி விளங்கப்படுத்துவா. முதுகில அடிப்பா நல்லா. சும்மா கதைக்கேக்க கூட அடிச்சிடுவா. பரீட்சை முடிஞ்சு மார்க்ஸ் பார்க்கப் போகேக்க நான் பயப்பட்டுக்கொண்டு போறது இவாட்ட மட்டும்தான். என்னதான் நல்லாப் படிச்ச எழுதினாலும் மார்க்ஸ் எதிர்பார்க்கிறமாதிரி வராது.



சமூகக்கல்வி படிப்பிச்சது கமலாம்பாள் மிஸ்.இந்தப்படத்தில முதலாவதா இருக்கிறா. பள்ளிக்கூடத்துக்கு கிட்ட மிஸ்ஸின்ர வீடு. குழப்படி செய்தா தலையில குட்டுவா. அம்மா போல எல்லாப்பிள்ளையள்லயும் சரியான பாசம் அவாக்கு. அவாக்கு பொம்பிளைப்பிள்ளையள் இல்லை. ஒரேயொரு மகன்தான். கொஞ்சம் குழப்படி. எல்லா மாணவர்களின் பிரச்சனைகளும் அவாக்கு அத்துப்படி. மாணவர்களின் பெற்றோருடனும் நெருக்கமான உறவைப் பேணுவதன் மூலம் தன் மாணவிகள் எல்லாரும் நல்லாப் படிக்கோணும் என்று எப்போதும் அக்கறைப் படுபவர். நான் மீண்டும் சந்திக்கோணும் என்று நினைக்கும் ஒரு அன்புள்ள ஆசிரியர்.

இப்படி நான் அன்புடன் நினைவில் வந்து போகும் என்னுடைய பாலர் வகுப்பு ரீச்சர் மங்கையற்கரசி மிஸ் முதற்கொண்டு கணிதம் படிப்பித்த கிருஸ்ணகுமார் மாஸ்டர் வரை எல்லோரும் எனக்குப்பிடித்த ஆசிரியர்கள்.கனடாவிலும் எனக்கு நல்ல ஆசிரியர்கள் கி்டைந்திருந்தார்கள். களைச்சுப்போனன். இன்னொருநாள் ஆறுதலா எழுதிறன்.

இதையும் ஒரு தொடர்விளையாட்டாக ஆக்குவம் என்று நினைக்கிறன்.

1. உங்களுக்குப்பிடித்த ஆசியர்கள் பற்றிச் சொல்லலாம்.
2. பள்ளியில் நீங்கள் அடி/ திட்டு வாங்கிய சம்பவங்கள்
3. பிடித்த பிடிக்காத பாடசலை ரியூசன் அனுபவங்கள்
4. பப்பி லவ் கதைகள்
5. இவை தொடர்பான சுவாரிசயமான வேறு விடயங்கள்.

பற்றி எழுத நான் அழைப்பவர்கள்

1. வந்தியண்ணா
2. துளசிப் பெரியம்மா
3. எம்.ரிஷான் ஷெரீப்

Friday, September 04, 2009

ப்றும் ப்றும்

ஐயோ சிரிச்சு சிரிச்சு என்னால முடியல...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


Wednesday, September 02, 2009

பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டு


எதையாவது எழுதுவம் எழுதுவம் என்டிட்டு தொடங்கி தொடங்கிப்போட்டு அப்பிடியே நிறைய drafts இருக்கு ஆனால் இது இன்டைக்கு எழுதி முடிக்கிறதெண்டு முடிவெடுத்திட்டன். வந்தியண்ணாக்கு ரொம்ப நன்றி.


2005 வைகாசி மாதத்திலிருந்து எழுதுறனாம் என்டு சொல்லுது என்ர தத்தக்க பித்தக்க றங்குப்பெட்டி சொல்லுது. என்ர ராசா அப்ப எழுதத் தொடங்கி 4 வருசம் முடிஞ்சா?? அடக்கடவுளே.

நான் ஏற்கனவே நடந்து வந்த பாதை தனை திரும்பி பார்க்கிறேன். எண்டொரு பதிவு எழுதினான். அது எழுத வந்து 6 மாசத்தில எழுதின பதிவு.

அந்தப்பதிவு இப்பிடித் தொடங்கி

\\ வைகாசி ,இருபத்தேழாம் திகதி ,2005 தொடங்கிய என் தொடர்வண்டிப் பயணம் 50 தரிப்புகள் கடந்தும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

நிலவு நண்பனின் உதவியோடு பிரயாணத்தை தொடங்கினேன்.டி.சேயின் உதவியோடு தமிழ்மண நட்சத்திரங்களையும் சூடிக்கொண்டேன்.பிறகென்ன கிடுகிடு வேகம்தான்.இடையிடையில பயணக்கழைப்பால் தூங்கியும் இருக்கிறேன்.நித்திரை முழிச்சு வர்ற நேரத்தில நீ யார் என்று கேக்காமல் இருந்த பக்கத்துச்சீட்டு பிரயாணிகள் எல்லாருக்கும் நன்றி.

பிரயாணத்தின் போது கொஞ்ச நேரம் அலட்டியிருக்கிறன்.கொஞ்ச நேரம் படம் காட்டியிருக்கிறன்.மிச்ச நேரம் என் சிற்றறிவுக்குத் தெரிந்த சில உருப்படியான கருத்துக்களைப் பரிமாறியிருக்கிறன்.\\

இப்பிடி முடிஞ்சிருக்கு.


\\ வலைப்பதிய தொடங்கி ஆறு மாதத்தில ஐம்பத்தேழு பதிவ போட்டாச்சு மூன்று பதிவு தூக்கியாச்சு..693 பின்னோட்டம் வாங்கியாச்சு.8344 பேர் தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கினம்.\\

ஐயோ ஐயோ என்ன கொடுமையிது...எப்பிடித்தான் என்ர இம்சையெல்லாம் தாங்கினிங்கிளோ:) நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க!!!

நான் பறவால்ல தம்பி கிருத்திகன் (கீத்) எழுத வந்து 6 மாசத்திலயே 140 பதிவுக்கு மேல எழுதியிருக்கிறாராம் :))

என்ர விண்ணானக் கதை :

கதையாச் சொல்றளவுக்கு எனக்குப் பெருசா ஒண்டும் ஞாபகம் இல்லை. எப்பிடி அறிமுகமாச்செண்டு தெரியேல்ல ஆனால் நிலவுநண்பனின் வலைப்பதிவில் கவிதைகள் படிக்கிற பழக்கமிருந்தது. அவருடைய வலைப்பதிவுக்கு எப்பிடிப்போனான் என்டெல்லாம் ஞாபகம் இல்லை. ஆனால் நிலவுநண்பன் தான் வலைப்பதிவு எப்பிடி ஆரம்பிக்கலாம் என்டெல்லாம் சொல்லித்தந்தவர். அவருக்கு நன்றி. எழுத வர பெரிசா ஒரு காரணமும் இல்லை. இதுவரை எழுதினவை சொல்ற மாதிரி தனிமையெல்லாம் இல்லை. ஆனால் தமிழ் கதைக்க ஒருதரும் இல்லாததாலயா இருக்கலாம்.அதுக்குப்பிறகு நடந்த எல்லாம் தான் உங்களுக்குத் தெரியும்தானே.

இங்க கனடாவில 'தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி' என்ற கல்லூரியில் தமிழ் படிச்சனான். அங்க ஒரு ஒப்படை தந்தவை. 10 தலைப்பு தந்து அதில் ஒன்றைத் தெரிவு செய்து ஒரு நூல் மாதிரிச் செய்யவேணும். நான் தெரிவு செய்த தலைப்பு " தமிழீழ விடுதலைப்போராட்டம் - தோற்றமும் வளர்ச்சியும்". அந்த ஒப்படைக்காக நான் இணையங்களில் தேடல் புரிந்த காலம் 2001. இப்ப யோசிக்கிறன் நான் எப்பிடித் தேடியிருப்பன் எண்டு. ஆனால் எனக்கு அப்பவே யுனிகோட்ல ரைப் பண்ணத் தெரிஞ்சிருக்குமோ??? சந்தேகமா இருக்கு.

ஓகே இங்க இருந்து தட்டச்சு அனுபவம் தொடங்குது சரியா :)

அந்தக்கல்லூரியில நான் தொண்டராவும் வேலை செஞ்சனான் அப்ப அங்க தமிழ் கீபோட் இருந்தது. அதிலதான் நான் தமிழ் ரைப்பிங் பழகினான். யாரும் எனக்குச் சொல்லித் தரேல்ல ஆனால் ஒருநாள் பொழுது போகாமல் ஒரு தட்டில இருந்த தமிழ் கீபோட் எடுத்துக் கொழுவி கையிலயும் பாமினி எழுத்துரு மாதிரி ஒரு பிறின்ர் அவுட் எடுத்து வைச்சுக்கொண்டு என்னென்னவோ முயற்சியெல்லாம் செய்து நான் ரைப்பிங் பழகினான். நான் சொன்ன அந்த தமிழ்ப் பாடம் ஒரு வருசக் course. வருசக்கடைசிலதான் அந்த ஒப்படை குடுக்கோணும். மிச்சாக்கள் எல்லாம் வேற ஆக்களிட்ட குடுத்து ரைப் பண்ணினவை. அக்கா கையால எழுதிக்குடுத்தவா ( அவான் கையெழுத்து கையால எழுதினாலே ரைப் பண்ணினது போலதானிருக்கும்)

நான் ஏதோ வெறி பிடிச்சது போல நிறைய ரைப்பினான். அம்மா அப்பா மாமா சித்தப்பாவைக்கெல்லாம் அந்த நேரம் எவ்வளவு விசராயிருந்திருக்கும் என்று யோசிக்கிறன். கொஞ்சநாளா அவையை நான் படுத்தின பாடு. பழைய வரலாறு ஒண்டும் தெரியாது தானே அதால குட்டி மணி யாரு? குமரப்பா யாரு என்டு அவையளைப்போட்டு படுத்தியெடுத்திட்டன்.
கடைசில என்ர ஒப்படை 150 பக்கத்துக்கு கிட்ட வந்திட்டுது. எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது. தங்கப்பதக்கம் எல்லாம் தந்தவை ஆனால் அதுக்குப்பிறகுதான் சோகம். ஒரு கண்காட்சி வைச்சவை அப்பத்தான் என்ர ஒப்படையைக் கண்ணால பார்த்தனான். அதுக்குப்பிறகு நோர்வேக்கு அனுப்பிட்டம் அங்க அனுப்பிட்டம் இங்க அனுப்பிட்டம் ...எடுத்துத்தாறம் எண்டிச்சினம். கடைசி வரைக்கும் அதைத் தரவேயில்லை. அது என்ர எத்தின நாள் உழைப்பு. இப்பிடி வடலியெண்டெல்லாம் பதிப்பகம் வருமெண்டு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே புத்தகம் போட்டிருப்பன் சா.

அப்ப நான் அந்த ஒப்படையை பாமினி எழுத்துருவிலதான் ரைப் பண்ணினான்.அந்த ஒப்படையைத் திருத்தின ஒரு ஆசிரியர்களில் ஒருவரை அண்மையில சந்திச்சனான். கேக்கணுமென்டு நினைச்சனான் என்ர ஒப்படைக்கு என்ன நடந்தது விபரம் ஏதும் உங்களுக்குத் தெரியுமா என்டு ஆனால் அவேன்ர பின்னவீனத்துவம் பெருங்கதையாடல் எல்லாம் கேட்டதில எனக்கு மூளை விறைச்சுப்போய் எல்லா தொழிற்பாடுகளும் நிண்டிட்டு. ஒன்டுமே கேக்கேல்ல நான்.

வாசிக்கிறாக்கள் நல்லா நற நறக்கிறீங்கிளா?? பதிவெழுத வந்த கதையைச் சொல்லச்சொன்னா இதென்ன கதையென்டு :))

நான் வலைப்பதிவெழுத முதலே யாழ் இணையத்தில் இணைந்திருந்தேன் ஆனால் அங்கும் ஒன்றும் எழுதியதில்லை. ஆனால் பாமினியில் எழுதினால் யுனிகோட்டுக்கு மாற்றலாம் என்று தெரிந்திருந்தது. அதனால் யாழ் மற்றும் சுரதா அண்ணாவின் உருமாற்றிப் பாவித்துத்தான் என்னுடைய முதல் பதிவை எழுதினான். பிறகு யாரோ ஈ கலப்பை பற்றிச் சொல்லித் தந்ததால் இப்ப அதான் பாவிக்கிறன். ஆனால் இந்தக் கலப்பையிலயும் மாடு என்னவோ பாமினிதான். நான் குழப்பியடிக்கிறனோ தெரியா ஆனால் இந்த தொழில்நுட்ப விசயங்கள் பெரிசா தெரியாது. இப்பவும் பாமினியில் ரைப் பண்ணும்போது அ=m , k=ம் , kh=மா என்று எழுதினனோ அதையேதான் செய்றன் ஆனால் என்ன மேல ஒரு பெட்டி கீழ ஒரு பெட்டியெண்டில்லை. ஆங்கில எழுத்திலும் ( comma) போன்றவை எல்லாம் இலகுவாக எழுத முடியுது. அது ஒரு பெரிய நன்மை.


பின்னோட்டங்கள் மற்றும் அனுபவங்கள்.


நான் எழுத வந்த புதிசில சரியான ஓட்டைவாய். நிறைய அலட்டுவன். அதால நல்லதும் நடந்திருக்கு கெட்டதும் நடந்திருக்கு. நிறைய நண்பர்கள் அண்ணர்கள் அக்காக்கள் ஏன் தாத்தா கூட கிடைத்தார். நிறையப்பேர் பின்னோட்டம் போட்டு தனிப்பட்ட முறையிலும் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் எழுதத் தொடங்கினான். அப்ப இருந்த வேகம் இப்ப இல்லை. நேரமும் இல்லை. மற்றது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலும் சில மிரட்டல்கள் எல்லாம் அனுப்பினார்கள். எனக்கு மட்டுமில்லாமல் எனக்கு நண்பர்களாக இருந்தவர்களையும் சிலர் காயப்படுத்தினார்கள். என்னிடம் ஐபி பார்க்கும் வசதி இருந்ததில்லை. யார் இதெல்லாம் செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பவில்லை நான்.

என்னுடைய அலட்டல் பதிவுகளை விரும்பி வாசிப்பவர்கள் சிலர். உளவியல் தொடர்பான பதிவுகளை வாசிப்பவர்கள் சிலர். ஒரு சிலர் இரண்டு விதமான பதிவுகளையும் வாசிப்பார்கள். இப்பிடி 2ஐயும் வாசித்து என்னை அடிக்கடி பப்பாவில் ஏத்துறவா சந்தனமுல்லை :)) இன்னும் எனக்கு உறுதுணையா இருந்தவர்கள் இருப்பவர்கள் நிறையப்பேர்.

அண்மையில் என்னைக் கொஞ்சம் பாதித்த யோசிக்க வைத்தது ஒரு பின்னோட்டம். அண்மையில் நான் "உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்" என்றொரு பதிவெழுதினான். அதில் நான்

\\அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.\\

என்று எழுதியிருந்தேன். இதற்கு ஒரு கேவலமான பின்னோட்டம் வந்திருந்தது. இதற்கு நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அந்தப்பின்னோட்டத்தை வாசித்ததும் கவலையா இருந்தது. பிறகு அதை நான் மறந்திட்டன். ஆனால் இந்தப் பதிவு எழுத தொடங்கினதும் அந்தப்பின்னோட்டம் ஞாபகம் வந்திட்டுது.

இன்னும் சில அனுபவங்கள்
ஆக்களின்ட உண்மையான பெயர் போட்டு பதிவெழுதிய அறிவுக்கொழுந்து நான். வெள்ளவத்தை ராமகிருஸ்ணமிஸனில் ஒன்றாகத் தங்கியிருந்த அக்கா ஒருவர் நான் என் ரீச்சர் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு மூலம் என்னை அடையாளம் கண்டு கொண்டிருந்தார்.

" ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!" என்டொரு பதிவு எழுதினேன். வலைப்பதிவுகள் மூலமாக அறிமுகமான ஒரு அண்ணா மூலம் அவளுடன் எப்படியும் தொடர்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தேன் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அவள் உயிரோடு இருந்தால் போதும்.

* வலையுலகில் அறிமுகமான பல நண்பர்களை நேரில் சந்திந்திருக்கிறேன். அது பற்றி பின்னர் ஆறுதலாக எழுதுகிறேன்.


கதை சொல்ல நானழைப்பவர்கள் :


1. சந்தனமுல்லை

2. சகாராத்தென்றல்

3. ஆயில்யன்

4. கோபிநாத்

5. வி.ஜே. சந்திரன்

6. அகிலன்

7. சோமிதரன்

8. கலை

9. தமிழ்நதி

10. டிஜே

11. நிவேதா - ரேகுப்தி



உங்களுக்கான விதிமுறைகள்: ஆனால் நீங்க எப்பிடி வேணுமென்டாலும் எழுதுங்கோ :)

விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட :) பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

Thursday, August 20, 2009

Toronto வில் Tornado






படம் பெறப்பட்டது : www.cp24.ca ( City Pulse 24)

இரவு 7 மணி அப்பிடியிருக்கும் நான் அத்தை வீட்ட நின்டனான். திடிரென்டு பெரிய இரைச்சலுடன் இடியிடிக்க மழை கொட்டத் தொடங்கியது. மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடத்தொடங்கிச்சு. நானிருந்த அறையில இருந்து பார்க்க பக்கத்து வீட்டிலிருந்த மரத்திலிருந்து பியர்ஸ் காய்கள் எல்லாம் காத்துக்குப் பறக்குது. சுவாரிசயமாக் கதைச்சுக்கொண்டிருந்த அத்தை அம்மா அப்பம்மா எல்லாரும் கதையை நிப்பாட்டிட்டு வாசலுக்குப் போட்டினம் புதினம் பார்க்க.

இருளத்தொடங்கியிருந்தது 7 மணியளவில். புயலுடன் கூடிய மழை அடிச்சு ஓய்ஞ்சுது கொஞ்ச நேரத்தில. மழை நிண்டதும் இருளத்தொடங்கியிருந்த வானம் பட்டப்பகல் போல மீண்டும் வெளிச்சமாகியது. என்னதான் நடக்குது எண்டிட்டு செய்தியைப் போய்ப் பார்த்தால் எங்கள் மார்க்கம் ( வீட்டிலிருந்து ஒரு 20 கி.மீ தொலைவில் ) நகரில் சில வீட்டுக்கூரைகள் சேதம் ,அங்கால இன்னும் கொஞ்சம் தள்ளியுள்ள நகரங்களிலும் வீடுகள் சேதம் , ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் அறிவித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

புயலுடன் கூடிய மழை ஓய்ந்து விட்டாலும் சாதுவான மழை தூறியபடியே இருக்கிறது. இடி இடித்துக்கொண்டேயிருக்கிறது. வீட்டிலிருந்து அடுத்த தொலைபேசி அழைப்பு வரமுதல் அத்தை வீட்டிலிருந்து வெளிக்கிடோணும் ஆனால் கார் ஓடவும் பயமா இருக்கு. நான் கொண்டு போய் விட்டிட்டு வாறன் என்று சின்ன மச்சான் நக்கல் அடிக்கிறான் ..ரோசம் வந்து வெளிக்கிட்டம் நானும் அம்மாவும். வீட்ட வந்தால் அப்பாவைக் காணேல்ல.

அக்கா சொன்னா நிமல் அண்ணா வீட்டு கூரை எல்லாம் உடைஞ்சிட்டாம் வீடெல்லாம் தண்ணியாம்..அவையைக்கூட்டிக்கொண்டு வர அப்பா போட்டார் என்டு. என்னால நம்ப ஏலாம இருந்தது ஏனென்டால் ஒரு சின்ன விசயத்துக்கும் ரென்சன் ஆகிற / பயப்படுற ஆள் நிமலண்ணா அப்ப நான் நினைச்சன் அக்கா சும்மா வேணுமென்று சொல்றா என்டு. அம்மாவும் சொன்னா ஏனப்படி சொல்றாய் பாவம் நிமல் விளையாட்டுக்கும் அப்பிடிச்சொல்லாத எண்டு.

உண்மையா எந்தக் கெட்டதும் எங்களுக்கு நடக்காதெண்டதுதான் எல்லாற்ற எண்ணமும் ஆனால் அது சிலநேரம் நடந்திடும். அப்பிடித்தான் நிமலண்ணா வீட்ட வந்து நிண்ட அவற்ற நண்பர் ஒராள் கார்ல ஏதோ எடுக்க எண்டு போனவர் ..அவற்ற மனைவியின் அலறல் சத்தம் கேட்டு நிமலண்ணா வெளியில ஓடிப்போனால் வேகமா வந்துகொண்டிருந்த புயல் நிமலண்ணாவை மேல தூக்கி இழுக்குதாம். கீழ நிமலண்ணா , நிமலண்ணான்ர மனைவி ,நண்பரின் மனைவி இவ்வளவு பேரும் அவரை மேல போகவிடாமல் அழுத்திப்பிடிக்கிறார்களாம். ஏற்கனவே புயலில் அள்ளுப்பட்டுக்கொண்டு வந்து மரத்துண்டுகள் , கொப்புகள் மற்றைய பொருட்கள் எல்லாம் இவர்களுக்கு மேல் விழுந்து அழுத்துகிறது...அப்பிடியே மேலெழும்பிய புயல் நிமலண்ணாட வீட்டுக் கூரை ,கதவு யன்னல் எல்லாத்தையும் சேதமாக்கிக் கொண்டு பக்கத்து வீடுகளையும் பதம் பார்த்துக்கொண்டு கொஞ்சம் அமைதியாகிக் கடந்து போகிறது.

என்ன நடந்தது என்று திகைச்சு நிக்கிறதுக்கள்ளயே எல்லாம் நடந்து முடிந்திற்று. இதுவரையில் இந்தப் புயலால் ஒருவர் இறந்திருக்கிறார் காயப்பட்டோர் போன்ற ஏனைய தகவல்கள் இன்னும் வரவில்லை. ஒவ்வொரு ஊர் ஊராக அலையும் இந்தப் புயல் இப்ப எங்க என்ன ஆட்டம் போடுதெண்டு தெரியேல்ல.

இன்றைய இந்தச் சூறாவளியால் Vaughan , Maple போன்ற நகரங்களிலிருந்து இதுவரை 120 குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டிருக்கின்றது. 2 நாட்களுக்கு முதல் எங்கள் பகுதியிலும் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைபட்டிருந்தது. நாளையும் புயலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது வேலைக்குப் போகாமல் விடலாம் போலத்தான் தெரிகிறது.


இப்ப எனக்கு ஞாபகம் வாறது "Dante's Peak" என்ற திரைப்படம் தான். வாழ்வதற்கு சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் வெடிக்கவிருக்கும் எரிமலை பற்றி எதிர்வுகூறும் நிபுணரின் கருத்துகளை புறக்கணித்துவிட்ட பின்னர் அந்த இடத்தில் உள்ள மக்கள் படும் துன்பங்களையும் பூகம்பம் , எரிமலை வெடிப்பு வெடிப்புக்கு பின்னர் நடைபெறும் லாவா மக்மாக்களின் களியாட்டம் என எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்த படம் அது. பார்த்துப் பல வருடங்களாகியும் பலகாட்டிசிகள் இப்பவும் ஞாபகம் வருது. அதும் முக்கியமா இந்தப்படத்தில போட்டிருக்கிற காட்சியில அந்தக் கொதி பிடிச்ச மேலதிகாரி சாகுற காட்சி. சாவது போல காட்சி இல்லை ஆனால் பாலம் முறிஞ்சிடும்.

அம்மாட்ட நானிந்த படத்தைப் பற்றிச் சொல்றன். அம்மா பல வருடங்களுக்கு முன்பு வடமராட்சியில் ஏற்பட்ட சூறாவளியில் தாத்தான்ர கடையின் கூரையைச் சேதமெதுவும் இல்லாமல் காற்று எப்பிடித் தூக்கிப் பக்கத்து தோட்டத்தில போட்டதெண்ட கதையைச் சொல்றா எனக்கு.

Monday, August 10, 2009

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?

{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது }

எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது.

எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளிச்சு நிண்டே கேட்கும்?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறேன். ஆனால் எல்லாமே எங்களுடைய மனம்தான் என்று இப்போது தெரிகிறது.

பிறந்ததிலிருந்தே எங்களுடைய மனதில் விதைக்கப்படும் எண்ணங்களே நாங்கள் வளர்ந்து எப்படிப்பட்ட மனிதராக உருவாகிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ‘என்ர பிள்ளை கெட்டிக்காரி, அவளால் நன்றாகப் படிக்கமுடியும் , அவள் வளர்ந்து தனக்குப் பிடித்த ஒரு துறையில் மிளிர்வாள்’ என்று தாயொருத்தி மற்றவர்களிடம் சொல்வதை அந்தப்பிள்ளை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப்பிள்ளை பிற்காலத்தில் ஏதோ ஒரு துறையில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஒருவர் எங்களைப் பற்றி நல்ல விதமாகக் கதைக்கும்பொழுது அது எங்களின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கச் செய்கின்றது.

இந்தச் சுயமதிப்பீடு அல்லது சுயமரியாதையை வளர்த்துக்கொள்ள காலமெடுக்கும். ‘நான் என்னைச் சுற்றி இருப்பவர்களால் நேசிக்கப்படுகிறேன், எனக்கென்று சில சிறந்த குணங்களுள்ளன, என்னால் முடியும், என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடியும்’ போன்ற எண்ணங்கள்தாம் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர்ந்து உயிர்வாழும் ஆசையைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகின்றன.

சுயமதிப்பை வளர்த்துக்கொள்ளும் எண்ணங்கள் உருவாகும் வகையில் குழந்தைகளை வளர்க்கும் கடமை பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் தான் அதிகம் அடங்கியிருக்கிறது. அவர்கள் அந்தக் கடமையைச் செய்யத் தவறுகையில் அந்தப் பணி நண்பர்களுடையதாய் அமைகிறது. அம்மா அப்பாவிடம் சரி சமமாகக் கதைக்கப் பழக்க வேண்டும்; எதையும் மனம் திறந்து பெற்றோருடன் உரையாடக் கூடிய இடத்தை வழங்க வேண்டும்; ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.



சில குடும்பங்களில் என்ன நடக்கிறது? பாடசாலையில் குடியமர்வு ஆலோசகராக பணிபுரியும் ஒருவருடன் அண்மையில் உரையாடும்போது அவர் சொன்னார், ‘உண்மையில் இந்தப்பிள்ளைகள் இப்படி ஓராளை ஓராள் அடிச்சுக்கொண்டு சாகிற அளவுக்கு நடந்துகொள்றதுக்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்தான்.’ வெளிநாடுகளில் ஆசிரியர்கள் "என்னைப் பார் , என் கண்ணைப் பார்த்துப் பேசு "என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் சில வீடுகளில் "என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிற அளவுக்கு நீ வளந்திட்டியோ " என்று சொல்லி பிள்ளைகளை அடிக்கிறார்கள். அப்போ அந்த பிள்ளை ஆசிரியர் சொல்வதைக் கேட்பதா, பெற்றோர் சொல்வதைக் கேக்கிறதா? ஆசிரியர் கேள்வி கேட்கும்போதெல்லாம் அந்த மாணவன் தலை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை, குனிந்துகொண்டே பதில் சொல்வான். இது தொடர்பாக அந்த குடியமர்வு ஆலோசகர் அவனுடைய தந்தையிடம் பேசும்பொழுது அவர் சொன்னாராம் "நான் என்ர அப்பாவை இதுவரைக்கும் நிமிர்ந்து பார்த்துக் கதைத்ததில்லை. ஆனால் இவன் இப்பவே என்னை நிமிர்ந்து பார்த்துக் கதைக்கிறான் ,அப்ப இவனை அடிக்காமல் என்ன செய்றது?"

பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு சுயமதிப்பீடு , வெறுப்பு , குழப்பம் , விரக்தி போன்றவற்றோடுதான் வாழ்கிறார்கள்.



பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை அதில் மேலும் ஈடுபடச்செய்து அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை வீட்டுக்கும் நாட்டுக்கு நல்லவர்களாக உருவாக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் என்ன செய்கிறார்கள்? பிள்ளைக்கு ஒரு விடயம் சரியாகச் செய்யத் தெரியாவிட்டால் "எருமை மாடு எத்தனைதரம் சொல்லித் தந்தனான் சனியன்… சனியன் " என்று திட்டுவார்கள். இன்னும் சில பெற்றோர் பொது இடங்களில் வைத்தே பல்லை நெறுமிக்கொண்டே, "இண்டைக்கு வீட்ட வா உனக்கிருக்கு" என்று சொல்லும்போது வீடு செல்லும்வரைக்கும் அந்தப்பிள்ளை அதையே நினைச்சு நினைச்சு என்ன நடக்குமோ என்று பயந்து ஏங்க ஏங்க அந்தப்பிள்ளையின் சுயமதிப்பீடு குறைந்து கொண்டே போகும்.

ஆனால் பாடசாலையில் பிள்ளை ஒரு பிழை விட்டால் ஆறுதலாக பொறுமையாக விளங்கப்படுத்தி அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அவர்களாகவே தங்களுக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து அந்தச் செயலை செய்ய வைத்து விட்டு, "பார்த்தாயா திரும்ப முயற்சி செய்தபோது உன்னால் அந்தக் காரியத்தை எளிதாகச் செய்ய முடிந்ததல்லவா" என்று பாராட்டி ஒரு பேனாவைக் கொடுத்து அந்தப்பிள்ளையின் சுய மதிப்பீட்டை வளர்க்கிறார்கள். இது எல்லாப்பெற்றோரையும் குறை கூறி எல்லா ஆசிரியரையும் தலையில் தூக்கி வைக்கும் முயற்சியில்லை. ஆனால் பொதுவாகவே மாணவர்களிடம் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பள்ளியிருக்கிறது. ஆனால் பிள்ளைகளிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோருக்குச் சொல்லித்தர எந்தப்பள்ளியியும் இல்லை.

பிறந்த குழந்தைக்குக் கூட அம்மாவின் தொடுகையில் , பார்வையில் அன்பிருக்கிறதா, கோபம் இருக்கிறதா, கவலையிருக்கிறதா என்று இனம்காண முடியும். தன்னைச்சுற்றி நடக்கும் விடயங்களில் இருந்தே தன்னை வளர்த்துக்கொள்ளும். எனவே குழந்தையின் முன்னால் எப்போதும் சந்தோசமாகத் தென்படுங்கள். நான் நேசிக்கப்படுகிறேன் என்று அந்தக் குழந்தை உணரவேண்டும். உணர்தல் வேறு உணர்த்தப்படுதல் வேறு. குழந்தை தானாகவே உணரவேண்டும்.

இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது அக்காவின் மகன் விளையாட்டில் தோற்றுவிட்டதால் றிமோட்டை எறிந்துவிட்டு அழுதுகொண்டு ஓடி வந்து கதவைப் பூட்டிக்கொண்டான்.

இப்போ, "நீ தோத்துவிட்டாய் ந ந ந ந" என்று சின்னப்பிள்ளைகள் நெழிப்பது போலும் பழிக்கலாம். அல்லது “தோத்துப்போறதும் ஒருவிதமான பாடம் தான் நீங்கள் போனதடவை நல்லா விளையாடி வென்றனீங்கள்தானே என்று உற்சாகப்படுத்தித் திரும்ப விளையாட வைக்கலாம். விளையாட்டாக நெழித்துப் பழிக்கும்போதும் சுயமதிப்பீடு குறைக்கப்படும். ஆனால் முன்பு வென்றதை நினைவுபடுத்தி, உற்சாகப்படுத்தி மீண்டும் விளையாட வைக்கும்போது அப்பிள்ளையின் சுயமதிப்பீடு அதிகரிக்கப்படும். ‘இதென்ன சாதாரணமான விளையாட்டுப் பற்றியது இதில் என்ன இருக்கு’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் குழந்தை வளர்ந்துவந்து வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் தோல்வி ஏற்படும்போது அதன் சுயமதிப்பீடு அவ்வளவாகப் பாதிக்கப்படாது; ஏனென்றால் அந்தப்பிள்ளைக்குத் தெரியும் தன்னால் இதிலிருந்து மீளமுடியுமென்று.



உயர்ந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள் எப்போதும்:

*பிறரை மட்டுமே நம்பியிருக்கமாட்டார்கள்.
*என்னால் முடியும் என்று பெருமையுடனும் சுதந்திரமாகவும் வாழ்வார்கள்.
*பொறுப்புடன் கடமைகளைச் செய்வார்கள்.
*எப்போதும் தேடலுடன் புதியவற்றைத் தேடிக்கற்றுக் கொள்வார்கள்.
*மகிழ்ச்சியையும் சோகத்தையும் சரிசமமாக எதிர்கொள்வார்கள்.
*கோபத்தையும் எரிச்சலையும் கையாளத் தெரிந்திருப்பார்கள்.
*மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.



குறைந்த சுயமதிப்பீடு உள்ளவர்கள்:
*புதிதாக எதையும் செய்யப் பயப்படுவார்கள்.
*என்னை யாருக்கும் பிடிக்கவில்லை,நான் யாருக்கும் தேவையில்லை என்று எண்ணுவார்கள்.
*தன் பிழைக்கும் மற்றவர்களையே குறை கூறுவார்கள்.
*தன்னையும் தன் திறமைகளையும் குறைத்தே மதிப்பிடுவார்கள்.
*கோபம், கவலை, மகிழ்ச்சி இப்படி எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டுவார்கள்.
*சட்டென்று யாரையும் நம்புவார்கள். நம்பி அவர்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள்.


சுயமதிப்பீட்டை அதிகரிக்க என்ன செய்யலாம்?

*இயலாமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து திறமைகளை அடையாளம் கண்டு அவற்றில் ஈடுபடல்.

*பக்கத்திலிருப்பவர்களின் கருத்தை விட யாருக்கு சுயமதிப்பீடு அதிகரிக்க வேண்டுமோ அவர்களை மட்டும் கணக்கிலெடுத்தல்.

*என்னைச் சுற்றியிருப்பவர்களால் "நான் நானாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளேன்" என்று காட்டுதல்.

*பிழை விடலாம், எல்லோரும் பிழை விட்டிருக்கிறார்கள் என்று தாங்கள் விட்ட பிழைகளையும் பகிர்ந்துகொள்ளல்.

*தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது நான் உன்னிலும் பெரியவன் , நான் உன் சரி பிழைகளை அடையாளம் காணும் உயர்ந்த நிலையிலிருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளாமலிருத்தல்.

*அந்நபரால் செய்து முடிக்கக்கூடிய சின்னச் சின்ன நோக்கங்களையும் , குறிக்கோள்களையும் நினைவூட்டல்.

*குறிக்கோள்களைப் படிப்படியாகத்தான் அடைய முடியும் என்று நினைவூட்டல்.

*எப்போதும் அந்நபரின் நேர் தன்மைகளை(Positiveness), திறமைகளைப் பற்றி உரையாடுதல்.

*பிழை விட்ட காரியத்தை அடுத்த முறை எப்படி இன்னும் திறம்படச் செய்யலாம் என்று அந்நபரோடு சேர்ந்து கலந்துரையாடி நல்ல வழிகளைக் கண்டடைதல்.

*முன்பு நடந்த விடயங்களில் இருந்து பட்டறிதல்.



உன்னையறிந்தால் – நீ

உன்னையறிந்தால்

உலகத்தில் போராடலாம்

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை

வணங்காமல் நீ வாழலாம்.

Friday, August 07, 2009

Men's Brain VS Women's Brain

Wednesday, July 29, 2009

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின்றனதான். சமீபத்தில் கனடியர்களான ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்களின் மரணம் சர்ச்சையை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை குடும்பம்தான் கொலை செய்ததாக ("Honor killing ") கிடைத்த தகவலின் படி விசாரணை நடக்கிறது தற்பொழுது ஆனால் அது கொலைதான் என்று நிரூபிக்கும் முதலே ஒவ்வொருதரும் ஒவ்வொருவிதமாகக் கதை கட்டுகிறார்கள். இதற்கு முதலும் சில வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் பெண் ஒருவர் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார்.

தமிழர் அல்லது ஆப்கான் போன்ற சிறுபான்மை இனமக்களிடையே இடம்பெறும் பிரச்சனைகள் பூதாகரமாக்கப்படுவதோடு "தமிழ் இளைஞர் கொலை " அல்லது "ஆப்கான் பெண்கள் கொலை" என்று போடுவார்கள் பத்திரிகையில். கொலை கொள்ளை என்று வரும்போது அவர்கள் கனடியர்களாகப் பார்க்கப்படுவதில்லை. அண்மையில் அமெரிக்காவில் 29 வயதான ஒருவருக்கு 21 பிள்ளைகள் இருக்காம் என்ற செய்தியை வெகு சாதாரணமாக ஒரு சாதனை போல எழுதியிருந்தார்கள் அதை வாசித்த ஒரு முஸ்லிம் நண்பி சொன்னாள் இதே ஒரு முஸ்லிம் ஆண் செய்திருந்தால் இவர்கள் என்னவெல்லாம் எழுதியிருப்பார்கள் என்று.

அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

அதேபோல children aid socity யால் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்ட கதை இங்கு நிறையச் சமூகங்களில் உண்டு. தமிழர்களிடம் மட்டுமல்ல மற்றைய 4மூகங்களிலும் children aid socity எண்டாலே பிள்ளை பிடிகாறர் என்றமாதிரியான பயமுண்டு. மற்றைய மக்களின் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததால் பலர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாத்தையும் சொல்ல முடியவில்லை ஆனால் உதாரணத்துக்கு பிள்ளை கக்கா இருந்ததும் அம்மா இல்லாத நேரம் அப்பா கழுவி விடுவது சாதாரணமாகத்தான் எனக்குப் படுகிறது ஆனால் அது அசாதாரணமாக மற்றவர்களால் பார்க்கப்படலாம். இப்படி பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டுச் சட்ட திட்டங்களால் தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது தண்டனைக்கு மிக அருகில் போய் மனவுளைச்சல் பட்டவர்கள் உள்ளார்கள். உண்மையில் இதுக்கெல்லாம் என்ன காரணம்? யார் தப்பு?

மற்றது Dating Violence பற்றியது : தமிழ் இளைஞர்கள் தங்கள் காதலிகளைக் கொடுமைப்படுத்துகிறார்களாம். எல்லாச் சட்டமும் ஆய்வுகளும் பெண்களுக்கே உதவி செய்யுது. ஆண்களைப் பற்றிக் கவனிக்க ஒருதருமில்லை என்றும் சொல்லலாம்தான். எங்காவது ஒரு சில இடங்களில் நடப்பதை வைச்சுக்கொணடு ஒரு முடிவுக்கும் வரேலாது ஆனால் பல தசாப்த காலமாக யுத்த தேசத்திலிருந்து வந்த இந்தச் சந்ததிக்கும் இங்கு நடக்கும் வன்முறைகளுக்கும் dating violence க்கும் தொடர்பிருக்கா என்ற ரீதியில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதாவது ஒரு காரசாரமான சண்டையில் காதலியைக் கை நீட்டி அடிப்பது, பெருந்தெருவில் இறக்கி விட்டுவிட்டு வருவது, உடலுறவுக்குச் சம்மதிக்காதபோது வார்த்தைகளால் நோகடிப்பது, வேறு பெண்களைக் கூட்டிக்கொண்டு வந்து நீ உடலுறவுக்குச் சம்மதிக்காட்டால் நானிப்படித்தான் செய்வன் என்பது இன்ற இந்தப்பட்டியல் நீள்கிறது.

இங்கு நான் எழுதியது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய அனுபவங்கள் என்ன?

Monday, July 20, 2009

படங்கள் NYMH











கனடாவுக்கு 5 வருடத்துக்குள் வந்த இளையவர்களைப் பற்றித்தெரிந்துகொள்ளும் நோக்கில் University of Toronto வும் Access Alliance Multicultural Health and Community Services ம் சேர்ந்து நடத்திய Sri Lanka , Columbia , Afghanistan & Sudan ஆகிய நான்கு இடங்களிலிரிந்தும் புலம்பெயர்ந்து ரொரன்டோவில் வசிக்கும் இளையோர்கள் பற்றி ஆய்வின் முடிவில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் படக்கண்காட்சியும் இடம் பெற்றது. அந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற படங்கள்.

முதல் 4ம் நான் எடுத்தது. 5வது கூட்டாளி எடுத்த படம்.

நீ எப்பிடி இருக்கிறாய்?

எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல.

கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா? நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு " உம்மோட பெரிய உபத்திரம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப்போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்டதுதான் உண்மை.


Newcomer Youth Mental Health Youth Project க்கு நான் எடுத்த படம்


மரணங்கள் சாதாரணமானவையல்ல ஆனால் ஒராள் இயற்கையா மரணமெய்தினால் அதைக் கொண்டாட 31 நாள் கணக்கு வைச்சிருக்கிறம். அதே ஒரு அவச்சாவு என்டால் 3 மாதத்துக்கு துக்கம் கொண்டாடுறம். ஆனால் குடும்பம் குடும்பமா கிராமம் கிரமமா எங்கட சனம் செத்துப்போனதுக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்? எத்தின நாள் அழுதனாங்கள்? யாரைப்பார்த்தாலும் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரே மரணம் பற்றிய செய்திகள். கொஞ்சாக்காலத்தில யார் யார் செத்தது யார் யார் உயிரோட இருக்கினமெண்டதே மறந்திடும் அவ்வளவுக்கும் மனங்கொள்ளாத செய்திகள் தினம் தினம் கேட்டு முடிச்சாச்சு. மரணச்செய்திகள் வந்த மாதிரி இன்னாருக்கு காலி்லை இன்னாருக்கு கையில்லை என்ற செய்திகள் பெருசா வந்துசேரேல்ல. ஒரு கட்டத்தில நேரில் அவர்களைச் சந்திக்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்பிடி ஒரு காலம் வருமா? கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊார்வலங்கள் அனைத்தினுடைய ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் விடுகிறார்களாம்.

அவர்கள் அங்கிருந்து அனுபவித்த அதே கொடுந்துயரை அவர்கள் அளவுக்கு இல்லாவிடிலும் நாங்களும் அனுபவித்திருக்கிறோம். முந்தின காலங்களில் நடந்த கொடூரமான போர் பற்றிய செய்திகள் படங்கள் காணொளிகள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் இப்ப அங்க இருக்கிற மக்கள் தெரிஞ்சுகொள்ள முதலே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை அவை வந்தடைகின்றன. யுத்தகள படங்களைப் பார்ப்பதால் அப்பிடி என்ன பாதிப்பு வந்திடப்போது என்று நானும் நினைச்சிருக்கிறன் ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு செய்திகளைப் பார்க்காமல் ஒதுங்கியிருக்க முயற்சித்தபோதும் ஈமெயில் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மரணங்களையும் இரத்தத்தையும் சதையையும் பார்த்துப்பார்த்து மரணங்கள் சாதாரணம் என்று மனம் பழகிப்போனாலும் அந்த வடுக்கள் எங்களுக்குள்ளேதான் இருக்கு.

வியட்நாம் போரிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களின் குணமாற்றங்களைப் படித்தே நெருக்கீட்டுக்குப் பின்னான உளவடு (Posttraumatic stress disorder (PTSD))என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.அது யாருக்கு இருக்கு யாருக்கில்லை என்று சொல்றது என்ர நோக்கமில்லை. ஆனால் எங்கட மனசில ஒரு கொடுந்துயருக்குப்பின்னான வடு இருக்குது என்டது மட்டுமுண்மை. உண்மையா துயர் இன்னும் முடியேல்ல அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கு. இருந்தாலும் கடந்த மாதங்கள் போல எப்பவும் சாவுச்செய்தியும் மரணங்களின் எண்ணிக்கைகளும் வாறதில்ல.

retraumatization என்று சொல்லப்படுகிற கொடுந்துயர் பற்றிய பழைய நினைவுகளால் வரும் மனவுளைச்சலும் ஒரு சிக்கல்தான். உதாரணமா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நாங்கள் படிச்சது வளர்ந்தது எல்லாமே செல்லடிக்குள்ளயும் குண்டுச் சத்தத்திலயும்தான். பள்ளிச்சீருடையோட பங்கருக்குள்ள ஓடியிருக்கிறம் மேசைக்குக் கீழ விழுந்து படுத்திருக்கிறம். அதையே நாங்கள் காணொளிகளில " குத்தப்போறான் படுங்கோ " என்டு கதறிக்கொண்டு குழந்தைப்பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சிக்கிற தாய்மாரைப் பார்க்கேக்க எனக்கு என்ர ரீச்சர்மாற்ற ஞாபகம் வாறது. அவையள் கனவிலயும் வாறவை. இது ஒரு சின்ன உதாரணம் தான். இலங்கையை விட்டு வரும்போது பாலியல் ரீதியா மனவுளைச்சலுக்கு்ள்ளாகி அல்லது வன்புணரப்பட்ட ஒரு பெண் இப்ப தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்படும்போது அவளுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்து அவளுடைய அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த வடுக்களிலிருந்து நாங்கள் விடுபடணும். மனசில ஏற்படுற மாற்றங்கள் எங்கட உடம்பையும் பாதிக்கும். மனசு பலவீனமாகேக்க உடம்பின் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். அப்பிடிக் குறையிறதாலே சாதாரணமா வாற காய்ச்சல் தலைவலி கூட நீண்டநாட்களுக்குத் தொடரும். அதால மனசைப் பலவீனம் அடையாமல் வைச்சிருக்கிறது நல்லது. ஆனால் அது எப்பிடி என்டு எனக்கும் சரியாத் தெரியேல்ல.

சில நேரம் வேலையில ஒரு ஆலோசகரா மற்றாக்களுக்கு ஆலோசனை வழங்கிற எனக்கு எனக்கு ஆலோசனை தர யாருமில்லையா என்று யோசிச்சிருக்கிறன். யார் யாரையோ நீங்கள் எப்பிடியிருக்கிறீங்கள் என்று கேக்கிறம். ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா? மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா? மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான் அப்பிடிக் கேட்டதில்லை என்னையும் யாரும் கேட்டதில்லை.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் ஈடுபட்டதால நேரமின்மை ஒரு பிரச்சனை. அல்லது இருக்கிற நேரத்தையும் எப்பிடி அட்டவணைப் போட்டு பயன்படுத்தலாம் என்று தெரந்துகொள்ளாமல் இருக்கிறன். வீட்டிலுள்ளவர்களினதும் சரி வெளியிலுள்ளவர்களினதும் சரி அவர்களுடைப பிரச்சனைகளையும் என் தலையில போட்டுக்கொள்றது மிகப்பெரிய பிரச்சனை. எல்லாத்துக்கும் மேல "NO: இல்லை என்னால முடியாது என்று சொல்லத் தெரியாமலிருக்கிறது". இப்பிடியிருக்கிறதால மற்றவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ற மாதிரி எனக்கென்ன பிரச்சனை என்ற தெளிவில்லாதது அப்பிடியே தெரிந்தாலும் அதை வெளிப்படையா பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறது.

எல்லாருக்கும் ஏதொ ஒரு சுமை ஏதொ ஒரு பிரச்சனை. எங்களில எத்தினை பேர் பக்கத்தில இருக்கிறாளைப் பார்த்து நேசத்தோட கதைக்கிறம். ஏதோ கடமைக்கு hello how are you? என்டிட்டு எங்கட வேலையைச் செய்றம். நான் புலம்பிறனோ என்டு தோணுது ஆனால் ஒரு வேளை மற்றவர்கள் இப்பிடி நினைச்ச நேரத்தில நான் அவைக்கான இடத்தையோ நேரத்தையோ குடுக்காமல் இருந்திட்டனோ தெரியாது ஆனால் நான் யாரிட்டயும் மனம் விட்டுப்பேசோணும் என்று நினைக்கிற தருணத்தில சுற்றியிருக்கிறவர்கள் எல்லாமே தங்கட சுமைகளைச் சுமப்பதில் பிஸியாக இருக்கினம். யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் ? நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு.

நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ :

வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது...
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது...

உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது...
பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது!



மிச்சம் அடுத்த கிழமை:)

அடுத்த கிழமை என்ன எழுதப்போறன் எண்டு தெரியாது ஆனால் ஏதும் எழுதணும் என்டு மட்டும் தெரியுது.

Tuesday, March 31, 2009

War Torn Island



http://www.youtube.com/watch?v=o7HsMWj7_5U

Monday, March 30, 2009

The silent horror of the war in Sri Lanka - Arundhati Roy


The horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media — or indeed in the international press — about what is happening there. Why this should be so is a matter of serious concern.


From the little information that is filtering through it looks as though the Sri Lankan government is using the propaganda of the ‘war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, hospitals and shelters are being bombed and turned into a war zone. Reliable estimates put the number of civilians trapped at over 200,000. The Sri Lankan Army is advancing, armed with tanks and aircraft.


Meanwhile, there are official reports that several ‘‘welfare villages’’ have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in The Daily Telegraph (Feb 14, 2009), these villages ‘‘will be compulsory holding centres for all civilians fleeing the fighting’’. Is this a euphemism for concentration camps? The former foreign minister of Sri Lanka, Mangala Samaraveera, told The Daily Telegraph: ‘‘A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.’’


Given its stated objective of ‘‘wiping out’’ the LTTE, this malevolent collapse of civilians and ‘‘terrorists’’ does seem to signal that the government of Sri Lanka is on the verge of committing what could end up being genocide. According to a UN estimate several thousand people have already been killed. Thousands more are critically wounded. The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell. What we are witnessing, or should we say, what is happening in Sri Lanka and is being so effectively hidden from public scrutiny, is a brazen, openly racist war. The impunity with which the Sri Lankan government is being able to commit these crimes actually unveils the deeply ingrained racist prejudice, which is precisely what led to the marginalization and alienation of the Tamils of Sri Lanka in the first place. That racism has a long history, of social ostracisation, economic blockades, pogroms and torture. The brutal nature of the decades-long civil war, which started as a peaceful, non-violent protest, has its roots in this.


Why the silence? In another interview Mangala Samaraveera says, ‘‘A free media is virtually non-existent in Sri Lanka today.’’


Samaraveera goes on to talk about death squads and ‘white van abductions’, which have made society ‘‘freeze with fear’’. Voices of dissent, including those of several journalists, have been abducted and assassinated. The International Federation of Journalists accuses the government of Sri Lanka of using a combination of anti-terrorism laws, disappearances and assassinations to silence journalists.


There are disturbing but unconfirmed reports that the Indian government is lending material and logistical support to the Sri Lankan government in these crimes against humanity. If this is true, it is outrageous. What of the governments of other countries? Pakistan? China? What are they doing to help, or harm the situation?


In Tamil Nadu the war in Sri Lanka has fuelled passions that have led to more than 10 people immolating themselves. The public anger and anguish, much of it genuine, some of it obviously cynical political manipulation, has become an election issue.


It is extraordinary that this concern has not travelled to the rest of India. Why is there silence here? There are no ‘white van abductions’ — at least not on this issue. Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war. So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country.


It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late.

Saturday, January 31, 2009

கனடாவின் பிரதான ஊடகங்களில் மனிதச் சங்கிலி பற்றிய செய்திகள்


City Pulse 24


CBC


680 News

City TV

Toronto Star

Toronto Sun

Msn

CTV

Macleans



Yahoo

570 News

CFRB

Metro

Bradenton

Los Angeles times

Startribune

The Record

tri-cityherald

seattlepi.nwsource

expressbuzz

wtop

Friday, January 30, 2009

Tamils forms human chain in downtown T.O.

Tamils forms human chain in downtown T.O.

Updated: Fri Jan. 30 2009 6:28:21 PM

ctvtoronto.ca

Toronto's Tamil community came out en masse to draw attention to the Sri Lankan government's military offensive aimed at crushing the separatist Tamil Tigers, spilling onto Front Street outside Union Station for a time.

By 6:30 p.m., Front Street had cleared, allowing traffic to flow again.

Friday's event was the second major protest on Toronto's streets in the last 24 hours, with a large protest held downtown on Thursday night.

The protesters were attempting to construct a human chain from Yonge and Bloor Streets to Union station on Front Street before travelling back up University Avenue to Bloor Street. That distance is about five kilometres.

They held up signs with messages such as "Stop the Tamil genocide in Sri Lanka." They could be heard chanting "We want justice!" as media vehicles drove by.

Const. Wendy Drummond of the Toronto Police told ctvtoronto.ca that the demonstrators had been very peaceful and orderly, although they worried about the prospect of congestion when the demonstration breaks up. She said police don't provide crowd estimates.

A civil war has ebbed and flowed in Sri Lanka since 1983. The rebels, formally known as the Liberation Tigers of Tamil Eelam, are fighting for a separate Tamil homeland in the country's north.

Tamils are a minority in Sri Lanka, which sits just over 30 kilometres offshore from the south tip of India. The Sinhalese form the majority. They are Buddhists. Tamils tend to be either Hindu or Roman Catholic. Tamils speak Tamil while the Sinhalese speak Sinhala.

According to Statistics Canada's 2006 census, just under 94,000 people in the GTA claim Tamil as their mother tongue. About 5,800 claim Sinhala.

In 2002, the combatants signed a ceasefire agreement brokered by Norway, with peace talks failing in 2006 -- the same year the Canadian government declared the Tamil Tigers to be a terrorist organization (the U.S. made the declaration in 1997).

In January 2008, the Sri Lankan government withdrew from the ceasefire agreement, with fighting subsequently escalating in the last 12 months. In September, it ordered the withdrawal of UN and most humanitarian organizations from the conflict zone in the country's northeast.

Earlier this month, government forces captured Kilinochchi, long a Tamil Tigers stronghold. Sri Lanka's President Mahinda Rajapakse called on the rebels to surrender.

But the battling is taking a toll on non-combatants.

On Wednesday, Human Rights Watch called on both sides to allow an estimated 250,000 civilians trapped in the conflict zone safe passage out and to allow them to obtain desperately needed humanitarian aid.

HRW, one of the world's major human rights watchdogs, has accused the Tigers of not allowing civilians to flee. When they do flee, the Sri Lankan military has arrested those civilians and slapped them in militarized detention camps.

"Civilians are scrambling for shelter in an area that is under heavy artillery fire, including many children, wounded, and elderly who need urgent assistance," said Brad Adams, HRW's Asia director. "The UN and concerned governments should press Sri Lanka to take all necessary steps to spare civilians from harm."

The full picture isn't emerging because the Sri Lankan government has slapped restrictions on the movement of journalists and human rights monitors.

The Sri Lankan military has claimed it has killed no civilians and is only targeting rebel forces.

http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20090130/tamil_protest_090130/20090130?hub=Toronto

Thursday, January 29, 2009

பாடகி மாயா தன் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார்.

Slumdog Millionare படத்தில் இடம்பெற்ற Paper Planes பாடலுக்கான Grammy awards கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. Grammy awards வழங்கப்படும் Feb 8ம் திகதிதான் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறதாம்.

National TVல் இடம்பெற்ற மாயாவின் நேர்காணலில் இலங்கையில் 27 வருசமாகத் தன் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் ; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கை அரசு தான் பிறந்ததிலிருந்தே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமா அழித்து வருகிறது என்று சொல்கிறார்.மிகுதியை நீங்களே கேளுங்கள்.

மானசீகமாக மாயாவுக்கு நன்றி.

video link : http://www.vakthaa.tv/play.php?vid=2892