Custom Search

Saturday, February 24, 2007

சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்

படம் : கிச்சா வயது 16
இசை : தீனா
பாடியவர் : உன்னி மேனன்
வரிகள் : ???



சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது
நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயரெழுது(2)
லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பது கூடச் சிறு புள்ளிதான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்விதான

(சில நேரம்)

வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது
நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்தொன்றும் போகாது
சோகமென்;றும் முடியாது கவலையென்றும் அழியாது
இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையென்றும் தோற்காது
நெஞ்சே ஓ நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் இரும்பு
தோல்வி..அவையெல்லாம் சில காயத்தழும்பு
ஏறு முன்னேறு ஒளியோடு திரும்பு
பறவை..அதற்கு சிறகு சுமையா
தோல்வி ஒரு தடையா

(சில நேரம்)

உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாக்கள் நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும்போது தம்மை நம்பி வாழ்ந்தார்கள்
கோடு...அது நீள ஒரு கோலம் பிறக்;கும்
மேடு ..அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாறை சில போனால் புதுப் பாதை பிறக்கும்
நேற்றை மறப்போம் நாளை ஜொலிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்

(சில நேரம்)

Friday, February 23, 2007

ஆணிவேர் - ஜான் உடன் ஒரு நேர்காணல்

இப்பவும் சென்னையில் ஈழம் பற்றி செய்தியை பார்க்கும் போது மனசு பதறுது... இலங்கை ராணுவம் குண்டு வீச்சு என்று செய்தி கேட்டால்... ‘‘ஐய்யோ நம்மளோட ஆணிவேர் படத்தில் நடிச்ச அந்த பாட்டி உயிரோட இருப்பாங்களா? அசிஸ்டென்டாக வேலை பார்த்த அந்த பொடியன் உயிரோட இருப்பானோண்ணுதான் இப்பவும் மனசு பதறுது’’ உடனே போன் போட்டு அவங்களை பிடிச்சு நாலு வார்த்தையாவது பேசிவிடுவேன்’’ என்கிறார் ஆணிவேர் படத்தின் இயக்குநர் ஜாண். இயக்குநர் மகேந்திரனின் மகன். மனைவி மகன் மற்றும் மகளோடு சென்னை தி.நகரில் வசிக்கிறார்.

கேள்வி: ஆணிவேர் முயற்சியின் தொடக்கம் பற்றி...

பதில்: ‘‘நான் சச்சின் படம் பண்ணி முடித்து அது தியேட்டரில் ஒடிக்கொண்டிருந்த போது சுவிட்சர்லாந்தில் 'தமிழ் லீவிங் மீடியா நெட் வொர்க்' நிறுவனத்தை நடத்திவரும் பிரபாகரன் அவர்கள் சச்சின் பார்த்துவிட்டு என்னை அழைத்து விஷ் பண்னினார். அப்புறம் என்னிடம் ஈழத் தமிழர்களுக்காக ஒரு படம் பண்ணித்தர முடியுமா என்று கேட்டார். ஒரு பிலிம் மேக்கரா எனக்கு இலங்கையில் உள்நாட்டு பிரச்சனை தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் இருக்குண்ணு தெரியும், ஆனா அதோட அரசியலோ கடந்த காலம் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் ஈழ மண்ணில் யுத்தம் நிகழ்த்தியிருக்கும் கோர தாண்டவம் பற்றியோ எனக்கு தெரியாது.. ஆனால் ஒரு யுத்த பின்னணியை வைத்து ஒரு சினிமா பண்ணவேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. பிரபாகரன் நிறைய புத்தகங்கள், வி.சி.டி என கடந்த கால வரலாற்று ஆவணங்களை கொடுத்தார். முதன் முதலாக ஈழத்தமிழர்கள் அடைந்த துயரங்களை பார்த்தேன். படம் எடுப்பதற்கு முன்னால் ஈழப்பகுதிகளுக்கு போகவேண்டும் என்று சொன்னேன். அங்கே போய் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து மக்களை சந்தித்தேன். ஒவ்வொரு கதைகளும் ஒரு ஈழ சினிமாதான். நிறைய பேரை சந்தித்தேன். நீண்ட நேரம் பலமான அவர்களின் கதையை, வாழ்க்கையை வீடியோவில் பதிவு செய்தேன். நான் பதிவு பண்னின மொத்த விஷவலையும் வெச்சு இரண்டு வருஷத்துக்கு ஒரு மெகா சீரியலே பண்ணலாம். அங்கே ஈழத்தில் இரண்டு விதமான மக்கள் வாழ்கிறார்கள். ஒன்று யுத்தத்தின் நெருக்குவாரத்தை சந்தித்து தினம் தினம் மரணத்தோடு இன்னும் சொந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இன்னொரு புறம் புலம் பெயர்ந்து உலகெங்கிலும் தாயகம் பற்றிய கனவுகளோடு வாழ்பவர்கள். ஐம்பதுகளில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இவளவு கொடூரம் நடந்தும் இன்னும் இது சரியாக வெளியுலகத்துக்கு வரவில்லை என்கிற ஏக்கமும் கோபமும் அவங்ககிட்டே இருக்கு. இரண்டு சமூகங்கள் ஒரு பிரச்சனை காரணமாக மோதி அதில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டா அதுக்கு பேர் கலவரம். ஆனா இலங்கையில் காலம் காலமா தமிழர்கள்தானே பாதிக்கப்படுறாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் இலங்கையில் தமிழர்கள் மேல் நடத்தப்படுகிற தாக்குதலை கலவரமாகத்தான உலக மீடியாக்கள் பார்க்குது. இப்படிபட்ட வருத்தங்கள் அவங்களுக்கு இருக்கு. அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட இரண்டாவது ஆயுதமாக சினிமாவை கையிலெடுத்திருக்காங்கண்னு நினைக்கிறேன்.



கேள்வி: ஆணிவேர் படம் எடுப்பதற்க்காக நீங்கள் ஈழத்தில் எவளவு காலம் தங்கியிருந்தீர்கள்? அந்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கியிருந்தேன்.சென்னையில் இருந்து கொழும்புக்கு போய் இறங்கிய போது ஒரு தமிழ் நாளிதழை வாங்கி பார்த்தேன் ‘‘கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள்’’ என்று தலைப்பு செய்தி போட்டிருந்தார்கள். ஈழத்தில் உள்ள போராளிகளாக உள்ள பொது நிலையினரின் வாழ்க்கையை அந்த தலைப்பு எனக்கு உணர்த்தியது. ஏகப்பட்ட பரிசோதனைகள் கொழும்பில் உலவுகிற ஒவ்வொரு மனிதனும் ஆயுதங்களோடு கண்காணிக்கப்படுகிறான். புல்லட் நிரப்பப்பட்ட ஒப்பன் செய்யப்பட்ட ஏகே 47 நவீன ரக துப்பாக்கிகள் வழியாக ஊர்ந்துதான் கடுமையான கெடுபிடிகளை தாண்டி ஈழத்துக்குள் பிரேவசிக்க முடிந்தது. என்னை அழைத்து வந்த காரோட்டி சொன்னார் ‘‘சார் கை தவறுதலாக பட்டால் கூட அந்த துப்பாக்கியின் குண்டுக்கு யாரோ ஒருத்தர் பலியாக நேரிடும்’’ என்றார். அப்புறம் ஈழத்துக்கு போய் என்னோட பணிகளை கவனித்தேன். அங்கு வாழ்கிற ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் தமிழ் பெண்ணுக்கும் ஒரு கதை இருக்கிறது. அது யுத்தத்தோடு தொடர்புடைய கதை. ஒவ்வொரு மனிதனும் சகோதரியையோ,தாயையோ.உறவுகளையோ இழந்த கதைகள் ஏராளமாக இருக்கிறது. ஒரு கலைஞனாகவோ மனிதனாகவோ இதற்க்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று எனக்கு தெரியவில்லை. ஒரு தாயை சந்தித்தேன் அவங்களோட மகனை சில வருடங்களாகவே காணவில்லை. பின்னர் செம்மணி புதை குழி மர்மங்கள் வெளிபட்ட போது அதில் அவங்களோட மகனும் கொலை செய்யப்பட்டாராம். அதே மாதிரி இன்னொருத்தங்க ஒரு கதை சொன்னாங்க. ஒரு நாள் ஆர்மிக்காரன் வருகிறான் என்று எல்லோரும் ஒடியிருக்காங்க அப்படி ஒடினபிறகு பார்த்தா அவங்களோட குழந்தையை மிஸ் பண்னிட்டாங்க பதறிப்போய் பார்க்கும் போது அந்த குழந்தையை எரிந்து கொண்டிருந்த தீயில் போட்டிருக்காங்க. அதே மாதிரி தன்னோட தாய் இறந்து போயிட்டாங்க எனபது கூட தெரியாமல் தாயோட மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையின் கதை ஒன்றை ஒரு டாக்டர் சொன்னாங்க. அவங்க அந்த சமூகத்தோட மனச்சாட்சி மாதிரி ஏண்ணா?அவங்கதானே யுத்தத்தால பாதிக்கப்பட்ட மக்களை நேரடியா பார்க்கிறாங்க மருத்துவம் செய்றாங்க. ஒரு நாள் ஷெல் அடிக்கும் போது குழந்தையோட பதுங்கின தாய்க்கு தோளில் நல்ல காயம் ஏற்ப்பட்டிருக்கு அந்தம்மாவுக்கு அவசரமா ஒரு ஆப்பரேஷன் பண்ணவேண்டும் அவங்ககிட்டே மயக்க மருந்து எடுத்துக்கோங்க கிட்டத்தட்ட நான்கு மணிநேரமாவது ஆகும என்று டாக்டர் சொன்னபோது ‘‘வேணாம் அவளவு நேரம் குழந்தை பால் குடிக்காம இருக்க முடியாது.மயக்க மருந்து இல்லாமலே பண்ணுங்க’’ எனறு சொல்லி மயக்க மருந்து இல்லாமலே அந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கு இதை மனத்தைரியமா எடுத்துக்கறதா?இல்லை போர் இப்படி ஒரு மன இறுக்கத்தை அந்த மக்களிடம் ஏற்ப்படுத்தியிருக்குண்னு நினைக்கிறதாண்னு தோணலை...தர்ஷினி கொலை செய்யப்பட்டது பற்றி ஒரு ஆசிரியரிடம் பேசினேன் அவங்க சொன்னதும் நான் பார்த்ததும் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது காரணம் மாணவிகள் பள்ளிக்கு செல்லும் போது அவங்களோட ஒவ்வொரு அடியும் இராணுவத்தால் கண்காணிக்கப்படுவதும் பரிசோதனை என்கிற பெயரில் கொடூரமான வக்கிரமான வதைகளுக்கு ஆட்படுவதும் இன்றும் தொடர்கிறது.அதை நேரில் என்னால் பார்க்க முடிந்தது.



கேள்வி: இத்தகைய கொடுமைகளை ஒரு ஆவணப்படமாகவோ, இல்லை ஒரு கட்டுரையாகவோ எழுதிவிட முடியும் ஆனால் புனைவுகள் கொண்ட ஒரு சினிமாவாக இதை எப்படி எடுக்க முடியும்?

பதில்: ஆணிவேர் படத்தை புனைவு என்று என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் நடந்தெல்லாம் உண்மையாக இருக்க எப்படி புனைவாகிவிடும்? நிகழ்ந்த சம்பவங்களை புனைவு என்கிற ஒரு வடிவத்துக்குள் கொண்டு வந்திருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் ஆணிவேரை புனைவு என்று சொலவதே வேதனையாகத்தான் இருக்க முடியும். தலைமுறை தலைமுறையாக கொல்லப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகிற மக்களின் நிஜமான கதைகளை அப்படி புனைவு என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. இது உண்மைக்கதை.

கேள்வி: பெரும்பாலான பாத்திரங்களாக ஈழத்தமிழர்களே நடித்திருக்கிறார்கள். ஆனால் மதுமிதாவையும்,நந்தாவையும் தமிழகத்திலிருந்து அழைத்து போய் ஏன் நடிக்க வைத்தீர்கள்? அதிலும் ஈழத்தமிழர்களே நடித்திருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்குமே?

பதில்: ஆணிவேர் படத்தை ஒரு பட்ஜெட் படமென்றோ பட்ஜெட் இல்லாத படமென்றோ சொல்லிவிட முடியாது. தவிரவும் இந்த படத்தை எடுக்கும் போதே இதை இந்தியாவில் ரிலீஸ் பண்ணமுடியாது என்று தோன்றியது. புலம் பெயர்ந்து அய்ரோப்பிய நாடுகளில் வாழும் மக்களும் இதை பார்ப்பாங்களா என்று அப்போ தெரியவில்லை. அதனால் பார்வையாளர்களை முதலில் தியேட்டருக்கு அழைத்துவரும் ஒரு முயற்சியாகத்தான் தெரிந்த முகமாக இருக்கட்டுமே என்றுதான் மதுமிதாவை அதில் நடிக்க தேர்ந்தெடுத்தேன். ஒரு நாள் நந்தாவே என்னை தேடி வந்தார் ‘‘நீங்க ஈழத்தமிழர்கள் பற்றி ஒரு படம் பண்றீங்களாமே அதில் எனக்கும் ஒரு ரோல் வேணும் என்றார்’’ அதனாலதான் ஆர்வமாக இருந்த அவரை இதில் நடிக்க வைத்தேன். மதுமிதாவும் நந்தாவும் இந்த படத்துக்கு கொடுத்த ஒத்துழைப்பை நான் நினைக்கும் போது உண்மையிலே மகிழ்ச்சியாக இருக்கு. காரணம் மதுமிதா தெலுங்கு காரங்க... ஈழ மக்களோட கஷ்டங்களை தெரிஞ்சி புரிஞ்சுக்கிட்டு நடிச்சாங்க, நானும் சரி கேமிராமேன் சஞ்சயையும் சரி நடிகர்களும் சரி யாருமே சம்பளம் பேசிட்டு வேலை பார்க்கவில்லை. அவங்க கொடுத்ததை வாங்கிட்டோம். முதன் முதலா யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்குண்னுதான் நினைக்கிறேன். அப்புறம் ஆணிவேர் படத்தில் நடிச்ச மற்ற நடிகர்களின் நடிப்பை சொல்லியாகணும். கையில்லாதவங்க...ஊனமானவங்க...என்று ஏராளமானவர்கள் என்னோட ஒன்பது மாதம் இருந்தாங்க. நடிப்பை அவங்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.. நிகழ்வுகளை ஞாபகப்படுத்திவிட்டாலே போதும் சிறப்பாக செய்வார்கள். ஒரு அம்மாவை அழச்சொல்லி கேட்டேன். அவங்களால அழ முடியவில்லை காரணம் யுத்தத்தில் அவங்களோட மூன்று குழந்தைகளை பலிகொடுத்திருக்காங்க. அழுவதற்க்கு கண்ணீர் இல்லாத வற்றி வரண்டு போன வாழ்கை அவங்களோடது. யாழ்குடாவை சிங்கள இராணுவம் ஆக்ரமித்த போது மொத்தமாக ஐந்து இலட்சம் மக்கள் இரவோடு இரவாக கால்நடையாக யாழை விட்டு வெளியேறுகிற காட்சியை எடுக்க வேண்டும். அதை செய்யுங்கள் என்றதும் அவர்களாகவே வீட்டில் போய் பாத்திரபண்டங்கள், பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக புலம் பெயர்ந்தார்கள். அந்த மக்களையே இந்த படத்தில் நடிக்க வைத்ததுதான் இந்த படத்தோட சிறப்பு. தவிரவும் இது முதல் படம்.

இனி அவர்களிடமிருந்தெ படங்கள் வர வேண்டும். அதோட ஒரு முன்னோட்டமாகவும் இது இருக்கலாம் இல்லையா? என்னதான் இருந்தாலும் அவங்க அந்த மண்னில் வலிகளோடு வாழ்கிறவர்கள் அவங்கிட்டேயிருந்து இப்படியொரு படைப்பு வரும் போது அது இன்னும் சிறப்பாக இருக்கும்ணு நினைக்கிறேன்...


கேள்வி: இது யுத்தத்துக்கு எதிரான படமா?

பதில்: ஆமாம் பிரபாகரன் என்னிடம் சொன்ன போது ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னார். இந்த படம் முழுக்க முழுக்க ஈழத்தமிழர்கள் பற்றியதாக மட்டுமே இருக்கவேண்டும் என்றார். அவங்களோட வேதனைகள் மட்டும் உலகத்துக்கு தெரியவேண்டும் என்றார். யாருக்கும் எந்த ஒரு அமைப்புக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இது இருக்க கூடாது என்றார். அதனாலதான் இந்த படத்தில் குழந்தைகளையும் பெண்களையும் மையப்படுத்தி கதை சொல்லியிருக்கோம். யுத்தத்தின் கொடூரங்களை, கந்தகம் ஈழத்தில் பிறக்கிற குழந்தைகளை கூட எப்படி ஊனமாக்கிவிடுகிறது என்பதை, அவங்களோட மனநிலையை எப்படி பாதிக்கிறது என்பதையும் சொல்லொயிருக்கிறோம். ஒரு விஷயம் தெரிந்தது இராணுவம் வெறும் குண்டு அல்லது ஆயுதங்களை மட்டுமல்ல பெண் உடலையும் தமிழருக்கெதிரான தாக்குதலுக்கு பயன் படுத்துகிறது. அதோட தொடர்ச்சிதான் பாலியல் வன்முறைகள், மாணவிகளை மனசளவில் கூச வைக்கிற சோதனைகள். இம்மாதிரி பிரச்சனைகளை பேசுவதாலும் இம்மக்களின் கோரிக்கை நியாமானது என்பதை படத்தை பார்க்கிறவர்களே புரிந்து கொள்வார்கள்.


கேள்வி: தமிழ் சினிமா என்றால் அது சென்னை கோடம்பாக்கத்தில் உற்பத்தியாகிற சினிமாதான். அந்த நிலையை இது எட்டுமா?வியாபார ரீதியாக வெற்றி பெற்றால்தானே அடுத்தடுத்து படங்கள் எடுக்க முடியும்?

பதில்: வியாபார நோக்கங்கள் எதுவும் இல்லாமல்தான் இந்த படத்தை எடுத்தோம். கோடம்பாக்கத்தில் ஒரு சினிமா எடுத்தால் நான்கு ஜெனரேட்டர் கேட்டாலும் கிடைக்கும் காரணம் அதோட பண புழக்கம் அப்படி. ஈழத்தில் போய் ஷ§ட் பண்னினப்போ ஒரு கிரேன். டிராலி, லைட்ஸ் என எதுவுமே கிடையாது. காலையில் சில மணிநேரம் மாலையில் சில மணிநேரம் என்றுதான் ஷ§ட் பண்னினோம். குறைந்த செலவில் ஒரு படத்தை பண்ணியதன் காரணம் அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றுதான். மற்றபடி நம்மூர்(கோடம்பாக்கம்)சினிமா மாதிரி வர்த்தக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படமல்ல. இந்த படம் நன்றாக ஒடி வசூலானாலும் அதுவும் இப்படி ஒரு முயற்சிக்குத்தான் செலவிடப்படுமே தவிர வேறெதற்கும் அல்ல...



கேள்வி: மணிரத்னத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்',சந்தோஷ் சிவனின் 'டெரரிஸ்ட்' படமெல்லாம் அவங்களோட பிரச்சனைகளை பேசியிருக்கா? அது அவங்களுக்கு திருப்தியா இருக்கா...?

பதில்: ஒரு சினிமாவை எடுத்து ஈழத்தமிழர்களுக்கு நாம உதவாம இருந்தாலும் போதும். ஆனால் அவங்களை ஒரு சினிமா எடுத்து இழிவு படுத்த கூடாது. நான் பெயரை சொல்ல மாட்டேன். சில படங்கள் ஈழத்தமிழ் பெண் போராளிகளை இழிவு படுத்தியிருக்கிறதாகத்தான் அவங்க நினைக்கிறாங்க. ‘முக்கியமான ஒரு தலைவர் என்னிடம் சொன்னார் ‘‘எங்களோட பெண்கள் உங்களோட சினிமாவில் வருகிற மாதிரி நடந்துக்க மாட்டாங்க’’ -என்றார். நான் அங்கு தங்கியிருந்த நாட்களிலும் அவரோட வார்த்தைகள் உண்மை என்று தெரிந்தது.. காரணம் நான் சிலரிடம் இவளவு பிரச்சனை இருக்கே நீங்க ஏன் இந்த மண்ணை விட்டு போகக்கூடாது? என்று கேட்டேன். இன்ணைக்கு நாங்க கஷ்டப்படலாம் ஆனா என்றாவது ஒரு நாள் எங்களுக்கு இல்லாட்டியும் எங்களோட சந்ததிக்கு விடுதலை கிடைக்கும் அதனாலதான் என்கிறார்கள். ஈழத்தமிழர்கள் பற்றி படம் எடுப்பவர்கள் முதலில் அவங்களோட வாழ்க்கைப் பாடுகளை தெரிஞ்சிருக்கணும். ஏன் போராடுறாங்க அவங்க யாருங்கறெதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு கத்துக்கிட்டு படம் பண்ண வேண்டும். இல்லாட்டி சும்மா இருக்கணும்.


கேள்வி: உங்களோட அப்பா படத்தை பார்த்துட்டு என்ன சொன்னார்?

பதில்: படம் பணறதுக்கு முன்னாடியே அவர் சொன்னது. ஈரான் படங்கள் என்றால் கொரியாவின் படங்களென்றால் ஒரு தனித்தன்மை இருக்கும். அதுமாதிரி இது ஈழ மண்ணோட படம் அவங்களோட வாசனை என்னவோ அதன்படி பண்ணு. சராசரி தமிழ் சினிமா மாதிரி இதை பண்னிடாதே என்றார். எடுத்து முடிச்சிட்டு சிங்கப்பூரில் வைத்து அவருக்கு காட்டினேன் கொஞ்சம் யோசனைகள் சொன்னார். நல்லாயிருக்குண்னு பாராட்டினார்...


எழுதியவர்: டி. அருள் எழிலன்
நன்றி : சலனம்

Sunday, February 18, 2007

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு!

வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல்.

சுஜீத்தின் சிங்கிள் என்ற அல்பத்தில் இடம்பெற்ற பாடல்களை நீங்கள் ஏற்கனவே சயந்தன் அண்ணாவின் சுஜீத்திடுனான நேர்காணலின் மூலம் அறிந்திருப்பீர்கள்.இன்று கூட வசந்தன் அண்ணா சுஜீத்தின் அடுத்த அல்பத்தில் இடம்பெறுகின்ற ‘விடுதலை” என்ற பாடலின் ஒளிப்பதிவை வசந்தம் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

ஒருதடவை பார்த்தபோதே "இது கதையல்ல நியம்" என்ற இந்தப்பாடல்என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.பாடலைப் பார்க்கும்போது மலேசியத்திரைப்படமான “ஆண்டாள்” கண்முன்னே வந்து போனது.மற்றும் கெல்லி கிளார்க்ஸனின் பாடலொன்று கூட நினைவுக்கு வந்தது.

பாடலாக்கப்பட்ட விதம் காட்சியமைப்புகள் என எல்லாமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.புலம்பெயர் நாடுகளில் பெற்றோர்கள் வேலை வேலை என்று ஓடியோடி யாருக்காக உழைக்கிறோம் என நினைத்து உழைக்கிறார்களோ கடைசியில் அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கையில் அக்கறை காட்டாமல் அவர்களைப் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையைத்தான் இந்தப்பாடலில் சொல்லியிருக்கிறார்கள்.சிறுமி அஞ்சு வேலைக்குச் செல்லும் நேரம் தவிர வீட்டில் ஓய்வெடுக்கும் தந்தையிடமும் சின்னத்திரைக்கிரையாகிப்போன தாயிடமும் பாசத்துக்காக ஏங்கி அது கிடைக்காத பட்சத்தில் நல்ல நண்பர்களைத் தேடுகிறாள் அதுவும் அவளுக்குக் கைகூடவில்லை.வருடங்கள் சில ஆனதும் அன்பு காட்டுமொருவனிடம் காதல்கொண்டு வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்கிறாள்.ஓரு வருடத்தில் தாயுமாகிறாள்.காதல் வாழ்க்கை சலித்து இருவரும் பிரிகிறார்கள்.கடைசியில் பிள்ளையுடன் நேரம் செலவவழித்து வேலையும் போனபின்னர் கடையில் திருடுகிறாள்.மானமும் போய் பிள்ளைளையும் அரசினர் தூக்கிச்செல்ல போதைக்கடிமையாகிப் பின்னர் போறவை வாறவையுடனும் இரவில் திரிய வேண்டிய நிலமைக்குத்தள்ளப்பட்டு வாழப்பிடிக்காமல் இறந்து போகிறாள்.

இது வெறும் கதையல்ல புலம்பெயர் நாடுகளில் பல தமிழ் இளையோரின் உண்மைக்கதை.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான்.அம்மா அப்பாவிடம் இருந்து கிடைக்கவேண்டிய நியாயமான அன்பு கிடைக்காமல் ஏங்கி ஏங்கியே ஒருநாள் மாண்டு போகிறார்கள்.ஆனால் வெளியில தெரியிற உண்மை??? அந்தப்பெடியன் காங்ஸராம்.அந்தப்பெட்டை பாரில வேலை; டான்ஸ் ஆடுறளாம்.பெடியங்களோட திரியிறாளாம்.கதைக்க நல்லாயிருக்கும்.நீங்கள் குடுக்க வேண்டிய அன்பை அவர்களுக்குக் குடுத்தா அவர்கள் ஏன் அதை வெளியில் தேடிப்போகிறார்கள்.

ம் நான் எங்கயோ தொடங்கி எங்கயோ போயிட்டன்.பாடல்வரிகளைக் கீழே தந்துள்ளேன்.ஓரிரு சொற்கள் விளங்கவில்லை.பிழையிருப்பின் அறியத்தாருங்கள்.


இது கதையல்ல நியம்! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு
ஆகவில்லை இன்னும் பதினைஞ்சு
கேட்டது அவள் பாசம் அன்பாய்ச் சின்ன நேசம்
கிடைக்கலை பாசம் நேசம் வாழ்க்கையாகிப் போனதடா வேசம்
அப்பா அம்மா அவளில் காட்டவில்லை நேசம்
கடையில பணத்துக்கா வாங்கலாம் பாசம்?
அப்பா என்றும் வேலை வரவில்லை காலை மாலை
வந்தால் கூட தூக்கம் அஞ்சு கண்ணில் ஏக்கம்
அப்பா என்னைப் பாருங்கோ அஞ்சு என்று கொஞ்சுங்கோ
அம்மா அம்மா சொல்லுங்கோ அப்பாகிட்டச் சொல்லுங்கோ
அம்மா கண்ணில் கவலை காரணம் பிஞ்சு அஞ்சு இல்லை
அவள் முன்னே சின்னத்திரை அம்மா சின்னத்திரைக்கிரை!
அய்யோ பிஞ்சு பாவம் ஆசை ---- தாகம்
புலம்பெயர் நாட்டிலில்லை ஆரிட்டைத் தேடிப்போகும்

கதையல்ல நியம்! இப் புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!
பிஞ்சு அஞ்சு தனியானாள் பாசத்தைத் தேடிப்போனாள்
பாசம் கிடைக்குமா நேசம் கிடைக்குமா
தனியே அழுகிறாள்!

(இசை)

சொந்த நாடு விட்டு நாடு வந்தாள்
வீட்டில் அன்பிழந்தாள்
------ வாடுகிறாள் நண்பனைத் தேடுகிறாள்
அப்பாவும் மாறவில்லை அம்மாவும் மீளவில்லை
வருடங்கள் ஓடியது வயசும் ஓடியது
வீட்டிலே சேர்ந்திருந்தும் தனிமை வாட்டியது
நண்பர்கள் சேரவில்லை சேர்ந்தவர் சரியில்லை
நல்லவர் தேடிச்செல்லும் வழியும் தெரியவில்லை
என்ன செய்வாள் அஞ்சு இன்னுமவள் பிஞ்சு
அன்பு வந்து போச்சு காதல் என்று பேச்சு
கண்டவுடன் காதல் வீட்டுக்கது மோதல்
வீட்டைவிட்டுப் பிரிந்து குடும்பம் தனியானாள்
வருடமும் போக குழந்தைக்குத்தாயானாள்
சில காலம் போச்சுச் சிக்கல்கள் உருவாச்சு
அன்பு தந்த காதல் எங்கோ ஓடிப்போச்சு
பாசம் வற்றியாச்சு சண்டை முற்றிப்போச்சு
மணவாழ்க்கை முறிந்து உறவு பிரிந்தாச்சு
கைகளிலே மழலை கண்களில் வலி கண்ணில் மழை.

கதையல்ல நியம! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!
அஞ்சு அவள் தனியானாள் குழந்தை சுமையானாள்
என்ன செய்வாளோ???

(இசை)

அஞ்சோ இன்னும் பிஞ்சு அவளுக்கோர் குஞ்சு
பிள்ளை தந்த பாசம் ஓடிச்சு சில மாசம்
பிள்ளையோட கொஞ்சி கொஞ்சி நேரம் செலவிட
வேலைக்கு நேரம்போச்சு வேலையே ஒருநாள் போச்சு
கைகளில் காசு இல்லை உதவ யாரும் இல்லை
செய்வது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை
கடையிலே களவெடுத்து மரியாதை மீளவில்லை
அஞ்சு கதை வெளியாச்சு ஊர் முழுக்க இது பேச்சு
அரசுக்கும் கதை போச்சு அஞ்சு பிள்ளை பறிபோச்சு
மறுபடி தெருவில ஊர் சனம் சேரவில்லை
பிள்ளையும் போனதால உயிரில் ஜீவனில்லை
அஞ்சு தடம்புரண்டு போதைக்கடிமையானாள்
வந்தவை போறவையோட ராவில் சுத்தலானாள்
அஞ்சு வாழ்க்கை மாறிப்போச்சு மானம் மலையேறிப்போச்சு

என்ன செய்வாள் அஞ்சு இன்னுமவள் பிஞ்சு
என்ன செய்தும் முடியேல்ல பாசம் நேசம் கிடைக்கேல்ல
கண்ணாடி முன்னால நின்று இருந்தென்ன பயன்?
வாழ்ந்தென்ன பயன்? கேட்க கேள்விக்குப் பதிலில்லை
வாழ்வை முடிப்பதில் பிழையில்லை கதறினாள் அஞ்சு
அவள் குடிக்கிறாள் நஞ்சு!
வாழும்போது உதவாதவர் சாகும்போது தடுக்கிறார்
அவளையள்ளிக்கொண்டு வைத்தியரிடம் சேர்க்கிறார்
அஞ்சு அவள் விழி திறக்கப் பிள்ளை நிற்கக் காண்கிறாள்
ஐயொ என்னிடம் வருமோ என்று விழியிறுக்கி மூடுகிறாள்
உயிர் துறக்க மூடுகிறாள் !

(இசை)


இது கதையல்ல நியம! புலம்பெயர் வாழ்க்கையில் ஊறும் விசம்!

அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு.




Saturday, February 17, 2007

திருவாளர் திருமதி




திருவாளர் திருமதி என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் ஒலிபரப்பாகும் ஓரு புதிய நிகழ்ச்சி.சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்சிதான்.முதல் சுற்றை டுயட் றவுண்ட் என்று சொல்கிறார்கள்.அதாவது கணவன் மனைவியிருவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைத் தெரிவு செய்து அதற்கு நடனமாட வேண்டும்.புள்ளிகள் வளங்குவதற்கு பிரத்தியேகமாக அவர்கள் என்ன பொருட்களைப் பயன்படுத்தினார்கள் முகபாவனை தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இப்படி பல அம்சங்களைக் கவனிக்கிறார்கள்.

அடுத்த சுற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குடுக்கும் பட்ஜெட்டில் தம்பதிகள் சொப்பிங் செய்ய வேணும்.இரு தம்பதிகளில் யாருடைய பொருட்கள் பட்ஜெட்டையொட்டியிருக்கிறதோ அவர்களுக்க அதிக புள்ளிகள்.

மூன்றாவது றவுண்டில் தொகுப்பாளர் குடுக்கும் சிற்றுவேசனுக்கு 2 நிமிடத்துக்குள் தம்பதிகள் சண்டை பிடிச்சுச் சமாதானமும் ஆகவேணும்.2 நிமிசத்துக்குள்ள நடக்கிற காரியமா அது?

ஹி ஹி.

இருந்தாலும் தம்பதிகள் சண்டை பிடிக்கிறத பார்க்கிற எங்களுக்கே என்னடா இப்பிடியெல்லாம் சண்டை பிடிப்பினமா என்றிருக்கும்.தொகுப்பாளரைப் பார்த்தா பாவமா இருக்கும்.
இதிலொரு சுவாரிசயமான கதையொன்று சொல்கிறேன்.

போன வாரம் நடைபெற்ற திருவாளர் திருமதியில் ஒரு தம்பதியினர் சண்டை போட்டுக்கொள்ளும்போது மனைவி கணவனை நீ ,போ ,வா என்றெல்லாம் பேசி நிஜமாவே சண்டைபோட்டா.அந்தக் கணவரைப்பார்த்தாப் பாவமா இருக்கும்.அந்த மனைவியைப் பார்த்தா எங்களுக்கு எங்கட சித்தியொராள்ட ஞாபகம் வந்திட்டு.சித்தப்பா கொஞ்சம் அப்பாவி.பெற்றோல் போடுறதுக்குக்கூட சித்திட்டத்தான் காசு கேப்பார்.எல்லாரும் சேர்ந்துதான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.அந்தச்சுற்று முடிந்ததும் நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேட்டா அந்த மனைவிட்ட " என்னங்க உங்க வீட்டுக்காரரைப்போய் நீ வா என்றெல்லாம் பேசுறீங்கிளே அவங்க கோவிச்சுக்கமாட்டாங்களா? உங்களை அடிக்க மாட்டாங்களா?" அதுக்கு அந்த மனைவி "இல்லைங்க அவரு என் அத்தை பையன்.சண்டை வந்தா நான்தான் அவரை அடிப்பேன்" என்று.

எனக்கு தங்கைச்சிக்கு அம்மாக்கு ஒருதருக்கும் சிரிப்புத்தாங்க முடியல. எனக்கு அதுக்குமேல அந்தக்கேள்வியை கேக்காம இருக்க முடியல அதால "இந்த மனைவியைப் பார்த்தா எனக்கொராளின்ர ஞாபகம் வருது..யாரெண்டு சொல்லுங்க பார்ப்பம்" என்று சொல்லி நான் வாய் மூடேல்ல அம்மா தங்கச்சி அப்பா எல்லாருமே நான் நினச்ச சித்தியின்ர பெயரைச் சொல்லிட்டினம்.அன்றைக்கு முழுதும் ஒரே சிரிப்புத்தான்.இதில சிறப்பம்சம் என்னெண்டால் அடுத்த நாள் ஒரு வேலை விசயமா சித்தியும் சித்தப்பாவும் எங்கட வீட்ட வந்தவை.அப்ப எப்பிடியோ இந்த திருவாளர் திருமதி நிகழ்ச்சியைப் பற்றின கதை வந்திட்டு.சித்தி உடன "நேற்று அந்த நாவல் கலர் சாறி கட்டியிருந்தவா நல்லா டான்ஸ் ஆடினா நல்லா உண்மையாச் சண்டை பிடிக்கிற மாதிரியே சண்டை பிடிச்சா என்ன" நாங்களும் எல்லாரும் சிரிப்பையடக்கிக்கொண்டு தலையத்தலைய ஆட்டினம்.

அடுத்த ரவுண்டில் ஏழெட்டு வருசங்களுக்கு முதல் "ஜோடிப்பொருத்தம்" என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் செய்தார்களே ஞாபகம் இருக்கா? அந்த நிகழ்ச்சியில் வருவது போல கணவரைத் தனியாகவும் மனைவியைத் தனியாகவும் கேள்விகள் கேட்பார்கள்.இருவருடைய பதிலும் ஒத்துப்போனால் ஒவ்வொரு கேள்விக்கும் ரூபா 2000.இந்தச்சுற்றில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகள் மிகவும் சுவாரிசயமானவை.

உதாரணமாக
==>கல்லூரிக்காலத்தில் உங்களருகில் அமர்ந்திருப்பவர் ஆணா பெண்ணா?
==>குளிர்காலத்தில் உங்கள் வீட்டு மின்விசிறியின்வேகம் என்ன?
==>உங்களுக்கு வளைகாப்பு எப்போது நடந்தது.
==>ஒரு மாதத்துக்கு உங்கள் வீட்டில் சமையலுக்குப் பாவனையாகும் எண்ணெயின் அளவென்ன?

இந்நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அதைவிட்டா வேற என்ன இருக்கென்று கேக்கிறீங்கிளா?? உண்மையில திருமணம் செய்து பல வருடங்களான தம்பதிகளுக்கு இப்படி ஒரு பாடலுக்கு நடனமாடவோ அல்லது தங்களுடைய எண்ணங்கள் செயல்கள் எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது என்பதையோ தெரிந்துகொள்ள விருப்பம் இருந்திருக்குமா?அப்பிடியே விருப்பம் இருந்தாலும் அதை முயற்சித்திருப்பார்களா?அல்லது ஒருவரையொருவர் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறோம் என்றெல்லாம் யோசிச்சுப் பார்க்கிறார்களா? இல்லை என்றுதான் நான் சொல்வேன்.

அப்பா வேலையால வாற நேரமாச்சு பிள்ளையள் எல்லாரும் சத்தம் போடாம இருங்கோ.
அப்பா செய்திகள் பார்க்கவேணும் ரீவி பார்த்தது காணும் போய்ப் படியுங்கோ.
அம்மா இன்றைக்கு முட்டைக்குழம்பு வையுங்கோவன் பிளீஸ்.அப்பாக்கு முட்டைக்குழம்பு பிடிக்காது இன்றைக்கும் இறைச்சிக்கறிதான்.
இப்பிடி எப்வவுமே அப்பா அப்பா என்று உயிரை விடுற அம்மாக்கள் எல்லாம் இன்றைக்கு ரீவில வந்து அழகாகவோ இல்லை சும்மா ஏனோ தானோ என்றோ எப்பிடியோ தைரியமா சன்ரீவி செற்ல நடனம் ஆடினமா இல்லையா?? இருவரும் சேர்ந்து முயற்சித்தால்தான் பரிசு.ஒருவர் மட்டும் திறமையாகப் போட்டியில் கலந்துகொண்டால் அவர்களால் பணத்தையும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பையும் வெல்ல முடியாது.

இந்த அம்மாக்களுக்காகவே எனக்கு இந்த நிகழ்ச்சி பிடிச்சிருக்கு.உங்களுக்கு?

Saturday, February 10, 2007

சிரிக்க சிரிக்க சிரிக்க மட்டுமே.

இன்னும் இருக்கு....வலைப்பதிவில போடலாமா வேண்டாமா என்று யோசிச்சுக் கொண்டிருக்கிறன்...நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?






























ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு


படம் : பொறி
பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா
இசை : தீனா

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே!

ஆ: அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே!

பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெ : தேய்பிறை போல் போடும் நக??????
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே!

ஆ: பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே!

பெ: எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

Monday, February 05, 2007

பனியிலும் இளவேனிலிலும்

மக்மாஸ்ரர் பல்கலைக்கழகம்





































Thursday, February 01, 2007

பதின்மவயதுப்பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?

ஹலோ உங்களைத்தான் ! இதை வாசியுங்கோ. .

ஹலோ, சின்னக்கா நான் வத்சலா . ஐயோ இப்ப நான் என்னக்கா செய்வன் ? நிருஜா எங்களையெல்லாம் ஏமாத்திட்டு வீட்டை விட்டிட்டு அந்தப் பெடியனோட போட்டாள் . என்ர ஐயோ எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல . 100 தரம் போன் பண்ணிப்பார்த்திட்டன் நம்பரைப் பார்த்திட்டுக் கட் பண்றாள் போல கிடக்கு .
எங்கோ கேட்டது மாதிரி இருக்கா ? பதின்ம வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் ? அப்ப கட்டாயம் நிருஜான்ர கதை உங்களுக்குத் தெரியத்தான் வேண்டும் . நிருஜாக்கு இப்பத்தான் 16 வயதாகிறது . 16 வயதிலேயே தன்னால பெற்றோரை விட்டுத் தனியா காதலனுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் . நிருஜாவினுடைய இந்த முடிவுக்கு அவளுடைய பெற்றோர்தான் முழுக்க முழுக்க காரணம் என்றுதான் நான் சொல்வேன் . வாசிக்கிற உங்களுக்கு வேறு கருத்துக்கள் இருக்கக்கூடும் . அதுவும் நீங்கள் ஒரு பதின்ம வயதுப் பிள்ளையின் பெற்றோரா இருந்தால் நிச்சயம் என் கருத்தோட ஒத்துப்போக மாட்டீர்கள் . வெளிநாட்டில் வளரும் பிள்ளைகள் எங்கே அந்த நாட்டுக் கலாச்சாரத்தோடு ஒன்றிப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளைப் போட்டு எங்கட பிள்ளைகள் வாழ்க்கையில் தவறான பாதையில் போகக் காரணமாகி விடுகிறோம் .

எங்கட பிள்ளைக்கு இப்பத்தானே 15 வயதாகிறது . அது சின்னப்பிள்ளை அதுக்கு காதல், செக்ஸ் பற்றியெல்லாம் என்ன தெரியப்போகுது என்பதுதான் பலரின் நினைப்பு . ஆனால் எங்கட பிள்ளைகள் வளர்வது நாங்கள் வளர்ந்த மாதிரியான சூழலில் அல்ல என்பதை அநேகமான பெற்றோர்கள் மறந்துவிடுகிறார்கள் . அண்மையில் வடஅமெரிக்கப் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட ஆய்வின்படி அந்தப் பாடசாலையில் படிக்கின்ற 39 வீதமான ஐந்தாம் ஆண்டுப்பிள்ளைகள் தங்களுக்கு செக்ஸ் என்றால் என்னவென்று தெரியும் என்று கூறியிருக்கிறார்கள் . இன்றைய பெற்றோராகிய நீங்கள் பதின்ம வயதில் இருக்கும்போது உங்களுக்கு இருந்த காதல் எண்ணங்கள் புலத்தில் வாழும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒன்பது பத்து வயதுகளிலேயே வந்து விடுகிறது என்பதுதான் உண்மை .

இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்கள் தாங்களாகவே முன்வந்து காதலைப் பற்றியோ அல்லது செக்ஸ் ஐ பற்றியோ உரையாட முற்படும்போது “ வயசுக்கேத்த மாதிரிக்கதை ” , “ நீ சின்னப்பிள்ளை இதைப்பத்தியெல்லாம் கதைக்கக் கூடாது ” , “ படிக்கிற வயசில படிக்கிற வேலையை மட்டும் பார்க்கவேணும் “ இப்படியெல்லாம் உங்கட பிள்ளைகளைக் கதைக்கவிடாம சுலபமா அந்தத் தருணத்துக்கு தடுத்துவிடலாம் . அப்பாடா கதை இத்தோட நின்றுவிட்டது என்று அப்போதைக்கு நிம்மதி பெருமூச்சு விடலாம் . ஆனால் நீ சிந்திக்கிற விதம் சரியில்லை கதைக்கிற விடயம் பிழையானது என்று உங்கள் பிள்ளைகளுடைய சுயத்தை நீங்களே சிதைக்கிறீர்கள் அதனால்தான் அந்தப்பிள்ளைகள் வளர்ந்து பதின்ம வயதுக்கேயானா சந்தேகங்கள் , கேள்விகள் , தேடல்கள் தொடங்கும்போது உங்களிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி முடிந்தளவு தன் நண்பர்களோடு நேரத்தை செலவழிக்க நினைக்கிறார்கள் . உங்கள் பிள்ளைகள் பதின்ம வயதில் கொஞ்சம் கொஞ்சமாக ஆணாகவோ , பெண்ணாகவே உடலாலும் உள்ளத்தாலும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் அவர்களுக்குத் தேவையான ஒரு வழிகாட்டியாக நீங்கள் இல்லாமல் போவதால் தான் நிருஜா போன்ற பிள்ளைகள் 16 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் .

நிருஜாவினுடைய பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் . திருமணம் செய்துவிட்டோம் பிள்ளைகள் பெற்றுவிட்டோம் அதனால என்னதான் எங்களுக்குள்ள சண்டை வந்தாலும் பிள்ளைகளுக்கா நாங்கள் சேர்ந்துதான் வாழவேண்டும் என்று முட்டாள்தனமாக தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு போலி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் . நிருஜாவுக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலாக பெற்றோரின் வழமையான சண்டையையும் வாக்குவாதங்களையும் பார்த்து பார்த்து ஆண் பெண் உறவென்றால் இப்படித்தான் போல என்ற நினைப்பு . அதானால் தான் வீடு என்ற நரகத்திலிருந்து வெளியேறினாலே போதும் என்ற முடிவெடுக்க வைத்தது .

சின்ரெல்லா போன்ற கதைகளை வாசித்து கற்பனை உலகத்தில் வாழும் நிருஜா போன்றவர்கள் . கண்டதும் காதலில் விழுந்து பின்னர் அந்தக் காதலுக்கு அடிமையாகி காதலனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என யோசித்து யோசித்து அவர்களுக்காகவே வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள் . சின்ன சின்ன விடயங்களுக்குக் கூட உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டும் தங்களுக்குள்ள சண்டை வரக்கூடாது என்பதற்காக செய்யாத தப்புக்குக்கூட தாங்களாகவே முன்வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டும் நண்பர்களுடன் கழிக்கும் நேரங்களைக் கூட காதலனுடன் மட்டுமே கழிக்கவேண்டும் இனிமேல் தான் வாழ்வதே தன் காதலனுக்காகத்தான் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் அவனோடயே கழிக்கவேண்டும் என்ற மாதிரி ஒரு மனப்பிரமையில் அடிமையாகிப் போகிறார்கள் .

நான் இவனுடைய சொந்தம் என்ற எண்ணத்தோடுதான் நிருஜா போன்றவர்கள் தைரியமாக வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . அதுவே கொஞ்சநாளில் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுயகௌரவத்தையும் இழந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு மன்னிப்புக்கேட்பதிலயும் பயத்திலும் குற்ற உணர்விலும் சுழன்று திரும்பவும் வீட்டுக்குச் செல்லக்கூடிய சூழ்நிலையில்லை என முடிவு செய்து சிறுவர் காப்பகங்களில் தஞ்சம் புகவேண்டியவர்களாகின்றார்கள் .

" என்ன குறைவைச்சம் நாங்கள் ? வேலைக்குப்போய் வந்த அலுப்பில கூட ரியூசனுக்குக் கூட்டிக்கொண்டுபொய் விட்டிட்டு காருக்குள்ள எத்தினை நாள் படுத்து நித்திரை கொண்டிருப்பன் . ஒருநாள் முழுக்க நான் கஸ்டப்பட்டு உழைச்ச காசென்றும் பாராம எல்லாப்பிள்ளைகளைப் போல என்ர பிள்ளையும் சந்தோசமா இருக்க வேணும் என்று Baby phat ஜக்கற் , சப்பாத்து , நகைகள் , செல்போன் என்று எல்லாம் அவளுக்குப் பிடிச்ச பிரான்ட் நேமில வாங்கிக்குடுத்தனே இப்பிடிப்பண்ணிட்டுப் போய்ட்டாளே"
என்று ஒரு காலத்தில நீங்களும் புலம்பாம இருக்க வேண்டும் என்றால் உங்கள் பிள்ளைகளின் கருத்துக்களுக்கும் ஆசைகளுக்கும் மதிப்புக்கொடுங்கள் . தேவையான சுதந்திரம் கொடுங்கள் . அவர்களையும் உங்களுடைய எல்லா உரையாடல்களிலும் கலந்து கொள்ள வையுங்கள் . அவர்களுடைய எண்ணம் தவறானது என்று தோன்றினால் அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை விளக்கிவிட்டு முடிவை அவர்களையே எடுக்க விடுங்கள் . எல்லாத்துக்கும் மேலாக உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள் .

தாயகப்பறவைகள் ஜனவரி இதழுக்காக எழுதியது.

http://thayakaparavaikal.com/samudhayaalasal.php

- சிநேகிதி -