Custom Search

Saturday, February 10, 2007

ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு


படம் : பொறி
பாடியவர்கள் : மதுஸ்ரீ பாலகிருஷ்ணா
இசை : தீனா

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே!

ஆ: அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே!

பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெ : தேய்பிறை போல் போடும் நக??????
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே!

ஆ: பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே!

பெ: எழுதும் கவிதையில் எழுத்துப்பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்

பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே!

ஆ: பேருந்தில் நீ எனக்கு யன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

0 comments: