Custom Search

Wednesday, December 30, 2009

சுய தம்பட்டம் என்று சொல்லலாம்.


எல்லாருக்கும் மீண்டுமொரு வணக்கம். அடிக்கடி காணாமல் போறது வழக்கமாப்போச்சு. என்ன பண்றது எழுதணும் என்டு ஆசை இருந்தாலும் நேரம் கூடி வராதாம் ( சும்மாமாமா பில்ட் அப்தான்). 2009 முடியமுதல் ஏதும் எழுதணும்னு நினச்சன் ஆனால் உருப்படியா எதும் எழுதத் தோணல சரி 2010 ம் வந்திட்டு இப்பவாவது எழுதுவம் என்டு நினைச்சு login பண்ணினன் ஆனால் எழுதுறத விட வாசிக்கிறதுதான் சுகமா இருக்கு இப்பெல்லாம். ஆனால் நல்ல பதிவுகளை வாசிக்கும்போது ஐயோ நானும் எழுதோணும் என்டு ஆசை வருவதென்னவோ உண்மைாதான்.

அதான் இந்த Live Traffic Feed இருக்குத்தானே ..அதில போய் நானே என்ர ப்ளாக்க நோட்டம் விட்டன். யார் எல்லாம் வரினம் எந்த எந்தப்பதிவெல்லாம் கிட்டடியில படிச்சிருக்கினம் என்டு பாப்பம் என்டு வெளிக்கிட்டால் சந்தோசம் துக்கம் இப்பிடிக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வேறு சில உணர்வுகளும் வருது.

அல்சர் , மல்லுக்கு ,வயதுக்கு ,நிம்மதியான தூக்கம் ,உடல் நலம் ,கல்யாணம் ,தத்துவங்கள்,சாப்பாடு,பாலியல் துன்புறுத்தல் போன்ற சொற்களை எல்லாம் கூகில்ல ஆக்கள் தேடேக்க அவையள் எல்லாம் என்ர வலைப்பக்கம் வந்து போயிருக்கினம் என்டு Live Traffic Feed சொல்லுது.

அதோட விக்கிப்பீடியால பூப்பு என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்து எழுதப்பட்ட கட்டுரையின் கீழ் நான் நட்சத்திர வாரத்தில் எழுதிய " வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும் " என்ற கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே விக்கிப்பீடியாவில் பூப்பு பற்றி வாசிக்க வந்தவர்களில் பலரும் என்னுடைய வலைப்பக்கம் வந்து சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

சரி இப்ப என்ன எழுதலாம் என்று யோசிச்சிட்டு வாறன்.

அப்புறம் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களும்.