Custom Search

Monday, September 10, 2007

Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?

Sexual abuse ஆ ? ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நானும் நினச்சதில்ல உங்களில் சிலரைப் போல. ஆனால் Paul ன் கதையை வாசிச்ச பிறகு என்னால அதை உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியேல்ல. இதையெல்லாம் ஏன் எழுதுவான்? என்ன லாபம் என்று கேக்க வேண்டாம். இதைத்தான் இதை வாசிக்கிறது மூலம் உங்களால யாராவது ஒருவர் abuse பண்ணுப்படாமல் போகலாம் அல்லது ஏற்கனவே பாதிக்கப்ட்ட ஒருவருடன் மனம் விட்டுப் பேச இந்தப் பதிவு உங்களுக்கு உதவலாம்.

அவனைப் பார்த்தால் வெகு சாதாரணமாத்தானிருப்பான். ஆனால் அவனுக்குள் பல போராட்டங்கள், பல விடை தேடிச் சலித்துப்போன கேள்விகள், குழப்பங்கள் என்று கிட்டத்தட்ட தன்னையே வெறுத்து துன்புறுத்திப் பார்க்கும் ஒரு மனநிலை.தன்னைத்தானே பச்சோந்தி என்று குறிப்பிடுகிறான் அவன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ தன்னைத் தன் பலவீனங்களோடும் இயலாமைகளுடனும் ஏற்றுக்கொள்வார்களோ என்ற குழப்பத்தில் தன்னுடைய உண்மைத் தன்மையை வெளிக்காட்டாமல் தன்னை ஒரு சாதாரணனாகத் தான் மற்றவரிடத்தில் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறான்.



பிறந்தது முதல் 2 ஆண்டுகள் அம்மம்மாவுடனும் பின்னர் 7 வயது வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உறவினர்களுடனும் வளர்ந்தான்.அதாவது வளர்ந்துவரும் ஒரு செடியை இடம் மாற்றி மாற்றி நட்டால் என்ன நடக்கும்?? அத்திவாரம் அடிக்கடி ஆட்டம் காணுமில்லைாயா? அவன் பந்தாடப்பட்டான்.இறுதியில் 7 வயதில் foster home ல் சேர்க்கப்பட்டான்.அங்கு போனதும் அவன் இவ்வளவு நாளாக யாரை அம்மா என்று நினைத்தானோ அது தன் உண்மையான அம்மா இல்லையென்ற உண்மை அவனுக்குத் தெரிய வருகின்றது.அப்பா யாரென்று ஆரம்பித்திலிருந்து அவனுக்குத் தெரியாது தற்போது அம்மா என்ற உறவும் பொய்த்துப்போக தன்னை தன் உறவினர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவர்களை வெறுக்கத் தொடங்குகிறான்.அம்மாவாக நினைத்தவர் அன்ரியாகிவிட அன்ரியாக இருந்தவர் அம்மா என்றாக அவனுக்கு உறவுகள் புரிபடவில்லை.

இந்நேரத்தில் அம்மாவின் நண்பராக அறிமுகமாகிறார் X. பழைய உறவுகள் பொய்த்துப்போக புதிதாக வந்த X ஐ ஏனோ Paul க்குப் பிடித்துப்போய்விட X அவனுடைய நண்பனாக ஆசானாக Mentor ஆக தன்மேல் அக்கறை காட்டும் ஒரோயொரு ஜீவனாக நினைக்கிறான் Paul.X Paul ஐ விளையாட அழைத்துச்செல்வது வழக்கம்.அப்படிச் சென்றபொழுது ஒரு பூங்காவில் வைத்துத்தான் முதன்முறையாக Paul ஐ கிச்சு கிச்சு மூட்டுவது போல தொடங்கிப் பின்னர் எல்லை மீறியுள்ளது.Paul க்கு ஓரளவுக்கு நடப்பது என்னென்று விளங்கினாலும் தனக்கு நெருக்கமாகவுள்ள ஒரேயுறவையும் இழக்க விரும்பாமல் வெறும் விளையாட்டுப் போல என்று ஆரம்பத்தில் சகித்திருக்கிறான். தனக்கது violent touching ஆகத் தெரியாததாலும் X தானாகவே ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவார் என்று நினைத்தும் அவர் மது அல்லது போதை வஸ்துவின் வேலையால் தன் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொள்கிறார் போல என்று பல காரணங்களைத் தனக்குத்தானே அறிவுறுத்தியாகச் சொல்கிறான் ஏனென்றால் அவனிருந்த சூழ்நிலையில் X உடன் வெளியில் போய் வருவதுதான் அவனுக்கு இருந்த ஒரு பொழுதுபோக்கு.



முதல் தடவை நடந்தபோது காரணங்களைத் தேடியவனுக்கு 2ம் முறையும் X நடந்துகொண்ட விதம் அப்படி நினைக்க விடவில்லை.X வேணுமென்றே அப்படிச் செய்கிறார் என்பதை அவன் புரிந்துகொண்டான்.இருந்தாலும் Paul X ன் மீது கொண்டிருந்த பாசம் அவனைக்கட்டிப் போட்டது.இப்போதும் கூட அவனால் X ஐக் குற்றம் சொல்ல முடியவில்லை.அவனைப் பொறுத்தவரைக்கும் X தன் மீது அளவு கடந்த பாசம் செலுத்தியவர்.மீண்டும் சில நாட்கள் இது தொடர Paul தன் மறுப்பை மெல்ல வெளிப்படுத்தினான்.அதன் பிறகு X அவனை வெளியே அழைத்துச்செல்வதில்லை அதனால் Paul மிகவும் கவலைப்பட்டான்.தன்னை X ஓதுக்குவதையும் தன்னோடு கதைக்காமலிருப்தையும் அவனால் தாங்க முடியவில்லை.ஒரு பக்கம் தனக்கு sexual abuse லிருந்து விடுதலை என்று மகிழ்ச்சியாகவும் X ஐப் பார்க்க முடியாது போனது கவலையாகவும் இருந்ததாம்.

X foster home க்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.Paul அவனை நேசித்ததாலும் தன் குடும்பத்தின் முன்னிலையில் அவன் அவமானப்படக்கூடதென்றும் அவன் ஜெயிலுக்குப் போகக்கூடாதென்றும் நினைத்து Paul தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்ல முற்படவில்லை.கொஞ்சம் வளர்ந்தபின் பாடசாலையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் குழந்தைகளோடு உறவு வைத்துக்கொள்ள விரும்புவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது தன்னால் அங்கு இருக்க முடியாது போனதால் தான் பாத்றூமில் போய் நின்றுவிட்டு வந்தானாம்.அவனுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் உருவாகிய பொழுதுதான் அவன் புரிந்து கொண்டான் தான் மட்டுமல்ல தன் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களாலயே sexual abuse க்குள்ளாக்கப்பட்டிருப்பதை. இதை விட ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு. தன்னுடைய தாத்தாவே ஒரு sexual abuser என்றதும் அவர் தன் மகள்களையே sexual abuse க்குள்ளாக்கியதையும் அவர்தான் தன் தந்தை என்பதைத் தெரிந்துகொண்டதிலிருந்து அவன் போக்கே மாறிவிட்டது.


-இப்போதைக்கு முடியாது..தொடரும்-

0 comments: