Custom Search

Monday, May 29, 2006

உரிமைக்குரல்


உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உலகத்தின் கண்களுக்கு
உண்மையை கொடுக்க
உரிமைக்காய் எழும் குரல்

புலம் பெயர்ந்த நம்மவர்களே
பறி போகின்றது நம் உரிமைகள் அங்கே
துடிக்கின்றது இளம் குஞ்சுகளின் உயிர்கள்
பறிக்கின்றான் எதிரி அவர்கள் உடமைகளை

நாம் தவழ்ந்து பழகின நிலமாடா அது
நாதிகளாற்று நம் இனம் மடிகின்றது அங்கே
பாடி பாட்டம் விட்டு வட்டம் அடித்த நிலம் அது
பாவிகள் பறிக்கிறார்கள் நம்ம இள வட்டத்தை அங்கு

எம் நிலத்தை இழந்து கொண்டு இருக்கின்றோம்.
எம் உரிமையை இழந்து கொண்டு இருக்கின்றோம்
எம் உணர்வை இழக்கின்றோம் ஆனாலும்
வாழ்கின்றோம் நடைபிணங்களாய் இங்கு

கட்டங்கள் உயர்ந்து நிற்கும் ரொன்றோ மாநகரத்தில்
ஒலிக்கட்டும் நம்ம குரல்கள் உரிமைக் குரல்களாக
இழந்து விட்ட நம் தந்தை நினைப்போம்
தாலியை இழந்து விட்ட நம் அன்னையை நினைப்போம்

கற்பை பறி கொண்ட சகோதரி கதறுகின்றாள் அங்கு
கற்பனைகளுடன் காலத்தை போக்கின்றோம் நாம் இங்கு
காலை இழந்து விட்ட அண்ணன் தவழ்கின்றான் அங்கு
காசு தான் கடவுள் என்று அலைகின்றோம் நாம் இங்கு

போதுமாடா பொறுத்தது போதுமாடா
நம்மவர் துயர் கேட்கையில் எரியுதாடா உள்ளம்
துயில் கொண்டது போதுமாடா
துள்ளி எழுந்து வாடா

படைப்போம் நாம் ஒரு அரண் நம்ம இனத்திற்காக
காப்போம் நாம் சந்தியினரை கொடிய அரக்கரிடம் இருந்து
காத்திருந்தது போதுமாடா
உரக்கச் சொல்லிடுவோம் உரிமைக்குரலால்.

- ரமா -
Image by -Nitharshan-

0 comments: