Custom Search

Wednesday, April 04, 2007

அன்புள்ள தாயகமே ஆசை மகன் எழுதும் மடல்...






இன்றைய ஒலிப்பதிவில் சஞ்சீவ்காந்த் இன் உராய்வு என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப்பிடித்த "கடிதம்" "ஈழம்" என்ற இரண்டு கவிதைகளை உங்களுக்காகத் தருகின்றேன்."கடிதம்" என்ற கவிதை நோர்வேயில் வெளியிடப்பட்ட "இராகம் 2001" என்ற இசைத்தட்டில் ஒரு பாடலாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்குப்பிடித்திருந்தால் எனக்குப்பிடித்த மற்றைய கவிதைகளையும் இங்கே பதிவிடும் எண்ணமுள்ளது.

9 comments:

கானா பிரபா said...

வணக்கம் தங்ஸ்

உங்கள் குரற்பதிவை வீட்டில் தான் போய்க் கேட்கவேண்டும். இக் கவிதை பாடலானதை ராகம் 2001 இசைத் தட்டின் மூலம் நானும் கேட்டிருக்கின்றேன். ராகம் 2000 என்று அதே குழுவினரால் முன்னர் வந்த இசைத் தட்டில் அனைத்துப் பாடல்களும் அருமை. நோர்வேயிலிருந்து செய்திருந்தார்கள்.

இக்கவிதை பாடலானது கொஞ்சம் மெட்டில் நெருடலை உண்டு பண்ணி முதல் வரிகளை மாற்றிப் போடிருக்கலாமோ என்று என்ண்ணத் தோன்றியது.

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி வணககம்,
இளைஞனுடைய கவிதைகளை பற்றி ஒரு சிறு குறிப்பு எழுத வேணும் எண்டு கன நாள நினைக்கிறன் இன்னும் எழுதெல்லை. அவருடைய கவிதைகள் பல நன்றாகவே இருக்கிறன.

உங்கள் குரல் தளம்பலடையாமல் கவனித்தீர்கள் என்றால் நல்லது.

Thillakan said...

எல்லாம் நல்லாயிருக்கு :)!!!!!

வணக்கம் நன்றி எண்டு சொலுர பகுதிய ஒருக்க கவனியுங்க.

மலைநாடான் said...

சிநேகிதி!

இம்முறை சரியான விடயத்தை அளவாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்தத் துறையில் உங்களுக்கு ஆர்வமிருப்பின் குரல் பயிற்சி எடுப்பது நல்லதென்று கருதுகின்றேன்.
உங்கள் ஒலிப்பதிவுகளை. உயர்ந்த சத்தத்தில் வைத்துக் கேட்டுப்பாருங்கள். உங்கள் தவறுகள் உங்களுக்கே புரியத் தொடங்கும்.
திலகன் குறிப்பிட்ட விடயத்தையும் கவனத்திற்கொள்ளுங்கள்.

தொடர்ந்து முயற்சியுங்கள். உங்களுக்குப் பொருத்தமான விடயங்களைத் தெரிவு செய்யுங்கள்.

நன்றி.

அற்புதன் said...

நல்ல முயற்சி,
நித்தியா தனது கவிதைகளை, மெல்லிய பின்னணி இசையோடு வாசித்த ஒலிப்பதிவுகளைக் கேட்டிருப்பீர்கள்.யாழ்க் களத்தில் இளைஞனால் முன்னர் இணைக்கப்பட்டது.அது போல் செய்தால் நன்றாக இருக்கும்.

சினேகிதி said...

prabanna enna neengal innum veeda pokeleyeo:-))) nan antha paadalgalai kedkavailai inithan thedi kekavenum.

Vaanga VJ...ilagnani kavithaikalai patri naanum eluthanum endu ninachan ninapoda sari..neenga elluthunga:-)

சினேகிதி said...

Nanri thilakan...vanakam nanri endu solrathu alupoda solramaathiri irukenna :-)))

Malainaadan matrum Atputhan ungal aalosanaikaluku nanri..kavanathil edukiren.

கானா பிரபா said...

பின்னணியில் இசை கோர்த்து, கொஞ்சம் மெதுவாகப் படித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சினேகிதி said...

okay prabanna...ipathan palakiran :-)) adutha kavitai innum sirapa varum :-)))