Custom Search

Saturday, April 07, 2007

Bartholin's Gland Cyst ...அப்பிடின்னா??

இந்து : ஹலோ டொக்டர் !

டொக்டர் : ஹலோ இந்து ! என்ன இந்த விடிய வெள்ளன என்னத் தேடி வந்திருக்கிறாய் .. என்ன விசயம் ?

இந்து : அது வந்து டொக்டர் ...

டொக்டர் : கமோன் இந்து என்னட்ட என்ன தயக்கம் ? உன் அம்மாட்ட ; சொல்லாத உன் போய்பிரண்ட் ஐ பற்றியே என்னட்ட சொல்லியிருக்கிறாய் இப்ப என்ன புதுசா தயக்கம் ?

இந்து : தயக்கம் என்றில்லை .. கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம் .. அதான் உங்களிட்ட எப்பிடிக் கேக்கிறதெண்டு ..

டொக்டர் : வெளிப்படையாப் பேசினாத்தான் குழப்பம் தீரும் . என்ன விசயமம்மா ?

இந்து : செக்ஸ்ல ஒருக்காலும் ஈடுபடாத ஆக்களுக்கும் ஜெனிற்றல் வார்ட் வருமா டொக்டர் ?


டொக்டர் :
இல்லை ! ஜெனிற்றல் வார்ட் வாறதுக்கு தகாத உடலுறவு , கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் போன்ற பல காரணங்கள் இருக்கு . இப்ப உனக்கு குறிப்பா என்ன குழப்பம் என்று தெளிவாச் சொல்லு . அம்மா அப்பா என்னை நம்பி உன்னை இங்க தங்கிப் படிக்க விட்டிருக்கினம் . என் தலைல கல்லைத் தூக்கிப் போட்டிடாதம்மா .

இந்து : இல்லை அன்ரி ... ஐ நெவர் காட் செக்ஸ் பட் எனக்கு வந்திருக்கிற கட்டின்ர அறிகுறிகளை வச்சு நான் கூகிள்ல தேடிப் பார்த்தன் . ஜெனிற்றல் வார்ட் ன்ர அறிகுறிகளோட ஒத்துப்போகுது அதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு .

டொக்டர் : சரி காட்டு நான் பார்க்கிறன் .

இந்து : இல்லப் பறவாயில்ல நீங்கள் எனக்கு ஒரு பெயின் கில்லர் தாங்கோ . நான் எக்ஸாம் முடிய திரும்ப பின்னேரம் வாறன் .
டொக்டர் : இந்து இது விளையாட்டில்ல . யு ஓகே ?

இந்து : யா ஐ ஆம் ஓகே . நான் எக்ஸாம் முடிய வாறன் .


டொக்டர் :
ம் குட்லக்டா .

இந்து : தாங்ஸ் ! போட்டு வாறன் !

டொக்டர் : ( மனசுக்குள்ள ) இந்தக்காலப் பிள்ளையள எப்பிடித்தான் வளர்க்கிறது ?

இந்ந்துக்கு என்ன பிரச்சனையாயிருக்கும் ?? ம் ம் எதுக்கும் அவசரப்பட்டு தாயக்குப் போன் பண்ண வேண்டாம் . பின்னேரம் இந்து வர இன்னொருக்கா கதைச்சுப் பார்ப்பம் .

பரீட்சை மண்டபத்தில் :
கண்காணிப்பாளர் : இந்த கணிதப் பரீட்சை முடிய இன்னு 1.30 மணித்தியாலங்கள் உள்ளன .

( இந்து கையை உயர்த்தி தன்னுடைய வினாத்தாளைக் கண்காணிப்பாளரிடம் குடுத்துவிட்டு இருக்கையை விட்டு எழும்ப முயற்சித்து சோர்ந்துபோய் தோல்வியுற்று மீண்டும் அமர்கிறாள் .)

கண்காணிப்பளர் : என்னாச்சு இந்து . கடைசி நான்கு கணக்கும் செய்யேல்லயா ?

இந்து : -------

கண்காணிப்பாளர் : இந்து இந்து ... என்னாச்சு .

இந்துவிடமிருந்து பதிலில்லை . மூச்சு மட்டும் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது .

அடுத்த 15 நிமிடங்களில் இந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்னும் மயக்கத்தில் இருக்கிறாள் . தகவலறிந்து வந்த இந்துவின் டொக்டர் அன்ரி காலையில் நடந்த உரையாடலை தலைமை வைத்தியருக்கு விளக்கி தன்னையே இந்துவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி பெற்று இன்னும் சில தாதியருடன் துணையுடன் இந்துவின் உடலைப் பரிசோதனை செய்கிறார் .



அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்விழித்த இந்துவின் தலையைக்கோதியபடி டொக்டர் அன்ரி .

இந்து : அன்ரி நானெப்பிடி கொஸ்பிற்றலுக்கு வந்தனான் ? என்ர எக்ஸாம் பேப்பர் .

டொக்டர் : எக்ஸாம் அடுத்த ஸெமஸ்டரும் செய்யலாம் . இப்ப நீ ஓய்வெடு . நான் போய் இரண்டுபேருக்கும் குடிக்க ஏதும் வாங்கிக்கொண்டுவாறன் .

இந்து : இல்ல அன்ரி நான் திரும்பவும் எக்ஸாம் ஹோலுக்கு ... ஐயொ அம்மா .. ஆ ஆ ..

டொக்டர் : ஹேய் இப்ப ஏன்மா கட்டிலை விட்டு இறங்கினாய் ? எழும்பாத எண்டு சொல்லத் திரும்பினன் அதுக்குள்ள பார் .. திரும்ப பிளீடிங் ஆயிற்று .

இந்து : ஐயோ என்ன அன்ரி இது ... எனக்கே உயிரே போயிடும் போல இருக்கு . இவ்வளவு பிளீடிங்கா இருக்கு .. என்னை என்ன செய்தனீங்கள் .

டொக்டர் : உனக்கு வந்திருக்கிறது Genital wart இல்லை . பார்த்தோலின் கிளான்ட் சிஸ்ற் (Bartholin's Gland Cyst). அவசரமா ஒரு சின்ன சத்திரசிகிச்சைசெய்ய வேண்டியதாப் போயிற்று . கவலைப்படாத நான்தான் செய்தனான் . உண்மையா இன்றைக்கு வேற இரண்டு male doctors தான் கடமைல இருக்கினம் .

இந்து கேவிக்கேவி அழத்தொடங்க டொக்டர் சமாதானப்படுத்தி ..

டொக்டர் : என்ன இந்து ? உண்மையிலேயே வலியிலதான் அழுகையா ? இல்லாட்டி .. ... இதப்பாரு இந்து நானொரு டொக்டர் . எப்ப இந்த வெள்ளைக் கோர்ட்டைப் போடுறமோ அப்ப எங்களுக்கு இது ஆண் இது பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை . நானும் உனக்கு அம்மா மாதிரித்தானே . அழுகையை நிப்பாட்டு முதல்ல .


இந்து : ம் என்னால தாங்க முடியேல்ல அதான் அழுதிட்டன் ... அன்ரி பார்த்தோலின் கிளான்ட் சிஸ்ற எண்டால் என்ன ?

டொக்டர் : கொஞ்சம் இரு .. உன்னை வேற றூமுக்கு மாத்தோணும் . அ சையாம அப்பிடியே இரு . உடம்பைப் புண்ணாக்காத . நான் ஆறுதலா எல்லாம் சொல்றன் .
--------------------------------------------------------------------------------------------------------
டொக்டர் : எங்கட வெஜினா வாசல்ல இருக்கிற இரண்டுபக்க லபியாவில இருக்கிற குட்டிச் சுரப்பிதான் இந்த பார்த்தோலின் கிளான்ட் . இந்தச்சுரப்பிக்குள்ள குட்டி குட்டி நாளங்கள் இருக்கு . வெஜினாவை வளவளப்பா வச்சிருக்கிற ஒரு திரவத்தை இந்த சுரப்பிதான் சுரக்கும் . சில பேருக்கு சில நேரங்களில் எங்கட தோலில இருக்கிற அல்ல வெயினாவில இருக்கிற தேவையில்லாத கிருமிகளால அல்லது இந்த சுரப்பியின் நாளங்கள் திரட்சியடைவதால் அழற்சி ஏற்படும் . அதாவது இந்த சுரப்பி வீங்கத் தொடங்கும் . இது வெஜினாவிலதான் வரவேணுமென்றில்லை . உடலின் மென்மையான எப்பாகத்திலும் வரலாம் . சில பேருடைய வீக்கம் வலியில்லாம ஒரு ஒருசதமளவுக்கு சின்னனா இருக்கும் . சிலருக்கு ஒரு தோடம்பழம் அளவுக்கு வளரும் . இந்த அழற்சி வளர ஒரு சில மணித்துளிகள் காணும் . என்ர சொல்லைக்கேக்காம எக்ஸாம் ஹோலில்ல போய் ஒரே இடத்தில நீ இருந்ததால உனக்கு வந்த வீக்கம் ஒரு கோல்ப் பந்தின்ர அளவுக்கு வளர்ந்திட்டு . நீ எப்பிடித்தான் காலைல நடந்து போனீயோ தெரியேல்ல . வலியே இருக்கேல்லயா ?

இந்து : வலி இருந்ததுதான் செமஸ்டர் வேஸ்ட் ஆகக்கூடாதெண்டுதான் எக்ஸாமுக்குப் போனான் .

டொக்டர் : வீக்கத்தில ஒரு சின்ன துவாரம் போட்டு அழற்சியில இருந்த திரவத்தை முழக்க வெளியேற்றியாச்சு . ஒரு கிழமைக்கு உனக்கு வலி இருக்கும் .

டொக்டர் : ரொம்ப வலியா இருந்தா ஒரு இன்ஜெக்சன் போடுறன் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றியா ?

இந்து : இல்லை நீங்கள் தொடர்ந்து சொல்லுங்கோ .


டொக்டர் :
இந்த அழற்சி திரும்ப வாறதுக்கு சான்ஸ் இருக்கு . அப்பிடி திரும்ப வந்தா Catheter என்ற சின்ன ரியுூப் ஐ அந்த அழற்சிக்குள்ள இரண்டு மூன்று கிழமைக்கு வச்சு பாரத்தோலின் சிஸ்ற் ஐ கரைக்க வேணும் . உனக்கு திரும்ப வரக்கூடாதெண்டு கடவுளிட்ட கேள் . இப்ப நானுனக்கு செய்தது marsupialization . ஒரு சின்ன துவாரம் போட்டு கட்டியை உடைச்சு எல்லா அழுக்கையும் எடுத்தாச்சு . கொஞ்ச நாளைக்கு டிஸ்சார்ஜ் இருக்கும் . தினமும் கொஞ்சநேரம் bathuab க்குள்ள தண்ணியைத் திறந்து விட்டிட்டு இருக்கவேணும் . அதெல்லாம் நான் பார்த்துக்கொள்றன் . கவலைப்படாத நல்லா மாறினாப்போல அம்மாட்ட சொல்லலாம் சரியா . நானிப்ப றவுண்ட்ஸ் முடிச்சிட்டு வாறன் . ஓகே .

இந்து : சரி அன்ரி .
_____________________________________________________________
தோழிகளே இப்பிடி நமக்கு துரதிஸ்டவசமா வாற வருத்தங்களைப் பற்றி கனக்க யோசிச்சு உங்களையும் குழப்பி கூட இருக்கிறவையையும் கஸ்டப்பட வைக்காம உடலின் எப்பாகத்திலும் சந்தேகப்படக்கூடிய வலியோ வீக்கமோ என்ன வந்தாலும் உடனடியாக உங்கள் மருத்துவரோட தொடர்பு கொள்ளுங்கள் . இந்துவைப்போல கடைசிவரை குழம்பிக்கொண்டிருந்து மேலும் மேலும் வருத்தத்தை வளர்க்காதீர்கள் . அடுத்த முறை ஜெனிற்றல் வார்ட் பற்றி விரிவாகப் பார்ப்போம் .

4 comments:

Anonymous said...

Thank you Snegidi for raising awareness among women.

Keep up the good spirit.

Anonymous said...

நல்ல மீள்பதிவு சினேகிதி, நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட விதம் மிக நன்று.

வாழ்த்துக்கள்

VSK said...

சங்கடம் எனக் கருதப்படும் ஒரு நிகழ்வை, அருமையாக மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
நன்றி.

சினேகிதி said...

vaango anonoys and VSK,

nanri solave payama iruku :-)) mokai pathivar sangathinta kanila padama nanri solran :-))