Custom Search

Friday, November 25, 2005

ஓ கார்த்திகைப் பூக்களே!


















சாவு உம்மை அணைத்துக் கொள்ளும் முன்னரே
சாவை நீர் அணைத்துக் கொண்டீர்
உதிக்கும் ஒவ்வொரு அதிகாலைப் பூவும்
உதிர்ந்து விடக்கூடாது என்பதற்காய்

எம் வாழ்வாதாரங்களை அழித்த எம் எதிரி
வாசல் தேடி வரும் முன்னரே
மார்போடு குண்டணைத்து
மடிந்த நீர் எல்லாம்
மறத்தமிழ் மாவீரர்கள்

இனியும் தமிழினம்
குனியும் இனமல்ல என
இடியாய் உரைத்து
வெடியாய் வெடித்து
விடியலை நீர் தேடித்தந்தீர்

கண் மூடும் முன்னர் நீர் கண்ட
கன்னித்தமிழ் ஈழ மண்
கண் முன்னே வரும் நாள்
காத தூரம் இல்லை என
கங்கணம் கட்டி நாம்
களத்திலே நிற்கிறோம்.

-தாயகம்-

0 comments: