Custom Search

Thursday, June 09, 2005

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

“பூவே உனக்காக” படத்தில் இடம்பெற்ற “ஆனந்தம் ஆனந்தம் பாடும்” என்ற பாடலில் சில மாற்றங்களை செய்து எட்டு வருடங்களுக்கு முன்பு நான் படித்த பாடசாலையில் நடந்த ஆசிரியர் தின விழாவிற்கு சில அக்காமார் பாடினார்கள்.எனக்கு அவர்கள் மாற்றிய வரிகள் சரியாக ஞாபகம் இல்லை இருந்தாலும் இயன்றளவு ஞாபகப்படுத்திச் சில மாற்றங்களுடன் எழுதியிருக்கிறேன்.

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசான் புகழைப் பாடும்

ஆயிரம் ஆயிரம் காலம்
உங்கள் சேவைகள் ஞாபகம் ஆகும்
வகுப்பிலே உம்மைத்தானே தேடுவோம்
கல்வியைப் பாடி பாடி வாழ்த்துவோம்
நீர் வரும் பாதையில்
பூக்களாய் பூத்திருப்போம்

உம்மைப் போன்ற ஆசான்கள்
கனிவாய்ப் பாடம் கற்பித்தால்
கணிதம் கூட சுகமாகும்
கல்வி நல்ல வரமாகும்
உம் வாழ்வில் செல்வங்கள்
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
ஆசான் உம் புன்னகை என்றும்
சந்தோசம் தந்திடவேண்டும்
ஆசைக் கல்வி கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கமாகுமே

இன்னும் நூறு ஞென்மங்கள்
படிக்க வேண்டும் பாடங்கள்
கல்வியோடு வேதங்கள்
ஐந்து என்று கூறுங்கள்.

தமிழீழச் சுதந்திரக் காற்று
எம் வாசல் வந்திட வேண்டும்
மாணவர் நாம் உம் வாசல்
வருவோமே மீண்டும் மீண்டும்
நீர் கண்ட கனவுகள் எல்லாம்
நியமாக செய்வோம் நாமே

- சினேகிதி -

3 comments:

G.Ragavan said...

நல்ல பாடல். சிறப்பாகச் செய்திருக்கின்றார்கள்.

வீ. எம் said...

மிக நன்றாக உள்ளது .. அருமையான பாடல் !!

சினேகிதி said...

Tx Ragavan and V.M.

Snegethy