Custom Search

Saturday, June 25, 2005

தண்ணியடிக்கிற ஆக்கள் உளறுவினமோ??யெவன்(ள்) சொன்னான்(ள்)?

-சினேகிதி-

நேற்று மாமா மொன்றியலிலிருந்து வந்தவர்.அம்மாக்கு முன்னால இருந்து தண்ணியடிக்க அவருக்கு வெட்கம் போல அதால அம்மாட்ட சொன்னார்.... தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறன் எண்டு மாத்திரம் நினைக்க வேண்டாம்….அண்ணி கோவிக்கக்கூடாது விஜி வேலைக்குப் போட்டாள் அப்ப அங்கயும் போக ஏலாது.குலம் மச்சான்ர மனுசியைப் பத்தி எனக்குத் தெரியுத் அங்க போனா சண்டை தான் வரும் குணம் மச்சான்ர மனுசி எல்லாரையும் வெண்டவ அதான் யோகன் மச்சானுக்குப் போன் பண்ணினான் மச்சான் வரச்சொன்னார் வந்திட்டன்.நீங்கள் ஒன்றும் செய்து தரத்தேவையில்லை நாங்களே எல்லாத்தையும் பாரத்துக் கொள்றம்.நான் தண்ணியடிச்சா உண்மைதான் கதைக்கிறனான்....

சுரி இங்க வந்திட்டங்கள் எண்டு மனுசிக்குப் போன் பண்ணிச் சொல்லிட்டீங்களே??

மகன் போன் பண்ணினவன் அதில இருந்து அவாக்குத் தெரியும் அப்பன் உருப்படியாப் போய்ச் சேர்ந்திருப்பபன் எண்டு சொல்லிட்டு ஒரு சிரிப்புச் சிரிச்சார்... …யெப்பா

பிறகு அப்பாக்குச் சொல்லிக் கேட்குது மச்சான் நான் நேற்று அண்ணைக்குப் போன் பண்ணினான் சரியோ அண்ணன் கேட்டார் டேய் ஏன் நீ இவ்வளுவு தலைமுடி வைச்சிருக்கிறாய் அதுவும் இந்த வெக்கைக்கு அளவா வெட்டலாம் தானே…உடனே நான் சொன்னன் ஏனண்ணே வெட்டுவான் வேர்க்கிற நேரம் கழட்டி வைக்கலாம்தானே…ஹி ஹி.

இப்படி மாமான்ர உருப்படியான உளறல்கள் விடிய விடிய நடந்ததாம் நான்தான் மிச்சத்தை கேக்காம நித்திரையாப் போனன்..

0 comments: