Custom Search

Friday, June 08, 2007

மனிதராய் இருத்தல் தமிழராய் விளங்கல்

3வது தமிழியல் ஆய்வு மாநாடு, தொறொன்டோ மே 15- 17, 2008

3வது தமிழியல் ஆய்வு மாநாடு 2008 மே 15, 16, 17ம் நாட்களில் தொறொன்டோ நகரில் இடம்பெறும். இந்த மாநாட்டை தொறொன்டோ பல்கலைக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகின்றன. மாநாட்டில் கட்டுரை வழங்க விரும்பும் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், அவைக்காட்சிக் கலைகளில் ஈடுபட்டு உழைப்போர், தமிழியல் செயற்பாட்டாளர்கள் போன்ற அனைவரிடம் இருந்தும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.

2008ம் ஆண்டுக்கான மாநாட்டின் ஆய்வுப் பொருள், “மனிதராய் இருத்தல்;
தமிழராய் விளங்கல்” என்பதாகும்.

எப்போதும் எங்கேயும் பொருந்தி வரக்கூடிய வகையில் மானுடம் என்பதையும் அடையாளம் என்பதையும் கற்பனை செய்ய முடியுமா என்ற கேள்வியைப் புலமையாளர் பலர் எழுப்பி வருகின்றனர். “மானுடம்”, “மனிதராய் இருந்தல்”, “ஆழ்நிலை” போன்ற எண்ணக்கருக்கள் தமிழ் வழங்கும் நாடுகளிலும் இடங்களிலும் தமிழ் மரபுகள் ஊடாகவும் காலந்தோறும் எவ்வாறு உருவகப்படுத்தப்பட்டு வந்துள்ள? எவ்வாறு நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன? மானுடத்தின் தமிழ் முகங்களும் படிமங்களும் பற்றிய நமது பண்பாட்டு இலக்கியப் புரிந்துகொள்ளல்கள் யாவை? இந்தப் புரிந்து கொள்ளலின் அறிவுசார்ந்த மற்றும் புலமை சார்ந்த வரலாறுகள் யாவை? தமிழ் மரபில் பரந்து விரிந்த மானுடம் என்பது எப்போதாவது குறிப்பாகப் பேசப்பட்டுள்ளதா? ”தான் அல்லது தன்னிலை” என்பது எவ்வாறு கட்டியமைக்கப்படுகிறது? இத்தகைய கட்டமைப்பு தமிழ் மரபில் எவ்வாறு மாற்றம் பெற்று வந்துள்ளது? ஆண், பெண், பாலினம், சாதியம் போன்றன எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன? போன்ற கேள்விகளுக்குக் கட்டுரையாளர்கள் சிறப்புக் கவனம் தருவது நல்லது. கூடவே பின்வரும் கேள்விகளிலும் கவனம் செலுத்தலாம்.

==> மத நிலைப்பட்ட, மதம் சார்பற்ற தன்னிலைகளுக்கான ஊற்றுக்கள் எவை?

==> மனிதராய் இருத்தலுக்கான சடங்கியல் சார்ந்த காரணிகள் யாவை?

==> அச்சு, எழுதிய எழுத்து, பாடங்கள் (text) போன்றன எவ்வாறு தனி மனிதர்களின்
பங்களிப்புகளையும் வெளிப்பாட்டையும் மாற்றியமைத்துள்ளன?

==> புவியியலுக்கும் நிலக்காட்சி அமைப்புக்கும் தனிமனித அடையாளங்களுக்கும் இடையே
எவ்வகையான உறவுகள் சாத்தியம்?

==> கருத்தியலுக்கும் பாகுபாட்டியலுக்கும் இடையே எத்தகைய உறவு இருக்க முடியும்?

==> தனிமனித உரிமைகளுக்கும் கூட்டு உரிமைகளுக்கும் இடையேயான உறவுகள்,
சிக்கல்கள் எவ்வாறு தமிழ்ச் சூழலில் வெளிப்பாடு கொள்கின்றன? குறிப்பாக, பாலினம்,
சாதியம் தொடர்பாக இத்தகைய உரிமைகளின் ஊடாட்டங்கள், சிக்கல்கள் என்ன?

==> புலம்பெயர்வு, அழைந்துழல்வு, கலப்பு போன்றவை அடையாளம், இனங்காணல்
என்பவற்றின் தமிழ் வெளிப்பாடுகளை எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றன?


ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர், தமது ஆய்வுக் கட்டுரைத் தலைப்பையும் 300 சொற்களுக்கு மேற்படாமல் ஆய்வுக் கட்டுரையின் பொழிப்பையும் 2007 ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்படலாம்.

Plenary Speakers:
Prof. Vidya Dehejia, Columbia University, New York
Prof. David Shulman , Hebrew University, Jerusalem

Abstract Submission by August 31, 2007 to tamils@chass.utoronto.ca

மேலதிக விவரங்களுக்கு: www.chass.utoronto.ca~tamil
tamils@chass.utoronto.ca

2 comments:

தமிழ்பித்தன் said...

ஆமாம் நீங்கள் இந்த முறை மாநாட்டுக்கு போனீரோ அடுத்த முறை நான் எப்படியும் பங்கு பெறுவேன் சில காரணங்களால் என்னால் பங்கு பெற முடியவில்லை
கட்டுரைகள் எழுதிற அளவுக்கு எமக்கு அறிவு போதாது

Anonymous said...

பயனுள்ள தகவல்.

நன்றி.