Custom Search

Wednesday, July 12, 2006

என்ன தான் விசித்திரமோ?

















கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது
இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது
மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது

என்ன தான் விசித்திரமோ?
பிரிந்து போன நம் காதல் மட்டும்
இன்னும் உயிர்ப்படைய வில்லை

தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது
இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது
நின்று போன யுத்தம் மீண்டும் தொடர்கிறது

என்ன தான் விசித்திரமோ?
நின்று போன நம் காதல் மட்டும்
மறுபடி தொடரவே யில்லை :wink

-சினேகிதி-

2 comments:

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Seekirame thodara vazhthukkal!

சினேகிதி said...

palasellam thoosi thaadi vasikreengal pola Sangeethan..nalla pear ungada.