Custom Search

Monday, January 15, 2007

விரல் மீட்டும்போது வீணை நாதம் தரும்

ஏற்கனவே நான் சொன்னது போல மூங்கில் நிலா அல்பத்தில் இடம்பெற்ற எனக்குப்பிடித்த இன்னுமோர் பாடலின் வரிகள் இதோ.

இசை : நிரு
பாடல்வரிகள் : சாரங்கன்
பாடியவர்கள் : அனுராதா சிறீராம் & மாதங்கி

திருடா திருடா- எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
திருடா திருடா எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான் என்
பெண்மைக்கு அர்த்தம் வரும்


சந்திக்கின்ற போது எல்லாம்
சின்னச்சின்ன சில்மிசம் செய்வாய் (2)
போதும் போதும் என்றபோதும்
எல்லை கடந்து எங்கோ செல்வாய்
உதடுகள்தான் வேண்டாம் சொல்லும்
உள்ளம்தான் ஏங்கிக்கொள்ளும் (2)
இடைவெளியின்றி -உந்தன்
வெப்பம் வேண்டும்
திருடா திருடா-எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான் என்
பெண்மைக்கு அர்த்தம் வரும்

ஈரமான ஆடைசொட்டும்
நீரில் கூட தீயின் வெப்பம் (2)
இமைகளிரண்டும் மூடுவதில்லை
இதுதானா இளமைத்தொல்லை
நிலவோடு இரவில் இனிமை
நீயுமில்லை இரவும் கொடுமை (2)
தீரும் தாகம் உன்னைச் சேரும் நேரம்
திருடா திருடா-எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான்
என் பெண்மைக்கு அர்த்தம் வரும்.

2 comments:

இளங்கோ-டிசே said...

நிருவும், நானும் ஊரில் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்தும்.... ஏன் நான் மட்டும் இப்படி இருக்கின்றேன் என்று யோசிக்கின்றேன் :-(???

சினேகிதி said...

we seldom think of what we have but often think abt what we miss...ஏன் டிசே உமக்கென்ன தெரியாது? நிருவுக்கு உம்மளை மாதிரி எழுதத் தெரியாமலிருக்கலாம்.நீர் மிருதங்கம் பழகினதாக ஏதோவோர் பதிவில் வாசித்த ஞாபகம்.என்ன வகைப் பாடல்களாக இருந்தாலும் அதை உள்வாங்கி நீரெழுதுற விமர்சனங்கள் பலநேரம் என்னைப் பிரமிக்க வைத்ததுண்டு.நானிந்தப் பாட்டைக் கேட்டனே ஏனெனக்கு இப்படி எழுதலாம் என்ற எண்ணமே வரவில்லை என்று பலதடவை யோசிச்சிருக்கிறன்.அநேகமா எல்லாப்பதிவுளையும் வாசித்திருக்கிறேன் ஓருசில நீண்டடடட பதிவுகளைத் தவிர ஆனால் பின்னோட்டம் எழுதப்பஞ்சி.இன்றைய காலநிலை காரணமாக வகுப்புக்களெதுவுமில்லை அதான் தமிழ்மணத்தோடயே நேரம் போகுது :-)