Custom Search

Friday, January 19, 2007

உதிர்கின்ற இலையதனில் மரணத்தின் பயமில்லை

இசை : நிரு
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் + சுஜாதா
வரிகள் : சுதன்ராஜ்

ஆ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் -அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா- பருவம்
எழுதுகோல் ஆனால் உயிரே -உயிர்
கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
இதயத்திலெழுகின்ற உயிரோசை நீதானே
காதலின் முகவரி நீதானே

ஆ+பெ:
அன்பே என் கவிதையின் முதல்வரி நீதானே

பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
புன்னகை செய்வோமா
பூக்களைக் கொய்வோமா
வன்முறை இல்லாத
ஓர் உலகம் காண்போமா

பெ:
ப+வுக்குள் வாழ்வோமா
புவியோடு சேர்வோமா
புயலிங்கு வந்தாலும்
எதிர் கொண்டு நிற்போமா

ஆ:
உதிக்கின்ற சூரியனில்
விடியலின் களைப்பில்லை
உதிர்கின்ற இலையதனில்
மரணத்தின் பயமில்லை

ஆ+பெ:
ஒளிபோல இலை போல நாம்
காதல் செய்வோம் வா அன்பே

ஆ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
ஆகாயம் ஆவோமா
அடிவானில் சாய்வோமா
ஆழ்கடல் நாம் சென்று
சிப்பிக்குள் வாழ்வோமா

பெ:
காற்றாகித் தொலைவோமா
காடெங்கும் அலைவோமா
காலத்தை நமதாக்கி
அமைதியை அடைவோமா

ஆ:
விதிகொண்ட வாழ்வினை
மதிகொண்டு வெல்வோமா
விடியாத பொழுதினை
விடைகண்டு ஆழ்வோமா

ஆ+பெ:
இமை சேரும் செயல்போல நாம்
காதல் செய்வோம் வா அன்பே

ஆ+பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ+பெ:
இதயத்திலெழுகின்ற உயிரோசை நீதானே
காதலின் முகவரி நீதானே

ஆ+பெ:
அன்பே என் கவிதையின் முதல்வரி நீதானே

ஆ+பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

0 comments: