Custom Search

Thursday, December 22, 2005

சொக்காக் கணக்கு

1. உங்களுக்கு ஒரு கிழமையில எத்தின சொக்கா (1 ல இருந்து பத்துக்குள்ள) வேணும் என்று எழுதுங்கோ ஒரு பேப்பரில(சத்தியமா நான் வாங்கித் தர மாட்டன் அத்தின சொக்கா)

2. அதை 2 ஆல் பெருக்குங்கோ

3. இப்ப அதோட 5 ஐ கூட்டுங்கோ

4. இப்ப இருக்கிற எண்ணை 50 ஆல் பெருக்குங்கோ (கல்குலேற்றர் தேடுறீங்களோ)

5. இந்த வருசம் உங்கட பிறந்தநாள் ஏற்கனவே முடிஞ்சிருந்தா 1755 ஐ கூட்டுங்கோ.இனிமதான் எண்டால் 1754 ஐ கூட்டுங்கோ.

6. இப்ப நீங்கள் பிறந்த நாலு இலக்க ஆண்டை கழியுங்கோ.

7. இப்ப ஒரு மூன்றிலக்க எண் வந்ததா? ஆதில முதலாவதுதான் நீங்கள் கேட்ட சொக்கா எண். கடைசி இரண்டிலக்க எண் உங்கட வயசு

சரியா??

Wednesday, December 21, 2005

மகிந்தவிற்கு கனடிய மாணவர் சம்மேளனம் கடிதம்

யாழ். பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவத்தை உடன் அகற்றுக - மகிந்தவிற்கு கனடிய மாணவர் சம்மேளனம் கடிதம்

சிறீலங்கா இராணுவத்தை யாழ். பல்கலைக்கழக சுழலில் இருந்து உடன் அகற்றுமாறு கோரி சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு, கனடிய மாணவர் சம்மேளனத்தின் சார்பில், அதன் ஒன்ராரியோ மாநில பிரதிநிதி அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். ஒன்ராரியோ மாநிலத்தின் இரண்டு லட்சத்து ஜம்பது ஆயிரம் மாணவர்களை பிரிதித்துவப்படுத்தும் பிரதிநிதி, ஜெசி கிரேனார் என்பவரே இக்கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளாhர்.

கனேடிய தலைமை அமைச்சர் போல் மாட்டின், மற்றும் நோர்வே தலைமை அமைச்சர் ஜேன்ஸ் ஸ்ரொட்ல்ன்பேர்க் ஆகியோருக்கும் நகல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ.; பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், அதிகாரிகள் மீது ஒரு அமைதியான போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த எமது கரிசனையை உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;. மேலும் யாழ் மாணவர் அலுவலகங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இராணுவக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பல மாணவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டதாகவும் அறிகின்றோம்.

கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவது அடிப்படை மனித உரிமை. மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்பதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில், யாழ். பல்கலைக்கழக சூழலை விட்டு இராணுவத்தை உடன் அகற்றுவது மட்டுமன்றி, கல்வி கற்றலுக்கான மாணவர்களின் அனைத்து தேவைகளையும் உடன் பூர்த்தி செய்யுமாறும் உங்களை வேண்டுகின்றோம். பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களைக் கொண்ட வவுனியா பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் பல்வேறு தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படாமையையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வடபகுதி மாணவர்கள் மீது தொடரும் வன்முறைகள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானால், அதன்பால் அனைதுலக கவனம் திருப்பப்பட வேண்டியது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நான்கு ஆண்டுகளிற்கு முன்னரும் யாழ். பல்கலைக்கழக சமுகத்தின் மீது தொடுக்கப்பட்ட இராணுவ நெருக்குவாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் 'நெருக்குவாரங்கள் தணிந்து புரிந்துணர்வு வரும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு தற்போது வரும் செய்திகள் ஏமாற்றம் அளிப்பதாகவும், இது குறித்து உங்கள் அரசின் கண்டனத்தையும், வன்முறைகளை நிறுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் வேண்டி நிற்கின்றோம்", எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய மாணவர் சம்மேளனம், கனடாவில் உள்ள மாணவர்கள் அனைவரையும் அதன் 10 மாநிலங்களிலும் பிரிதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு அமைப்பு என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

Written by Paandiyan
http://www.sankathi.com/

Friday, December 16, 2005

Muller Lyer














பெரியது கேட்கின்??

Wednesday, December 14, 2005

GeT tHe F**k OuT oF mY cAr

http://media.putfile.com/FromMetacafe-Grandma_1

என்னடா சினேகிதி ஒரே படம் காட்டிக்கொண்டிருக்கிறா என்று நினைக்காதயுங்கோ எல்லாம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கொள்கைதான் :-)

இந்தப் பாட்டின்ர லொள்ளைப் பாருங்க.

Tuesday, December 13, 2005

ஐ லவ்யூடா















ஐ லவ்யூடா செல்லம்…எங்க இந்த மாமா பார்த்து ஐ லவ்யூ சொல்லுடா செல்லம்!


இங்க போய்ப் பாருங்ககககககககககக







pic from :http://www.lalecheleague.org/03conf/pix/dog.jpg

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்.




ஒரு நாள் ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

பக்தா ஏன் அழுகிறாய்?

கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன்.

சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை சுவாமி.

சரி கொஞ்சம் பொறு என்று போட்டு திரும்ப தண்ணிக்குள் போய் வெள்ளிக்கோhடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை கடவுளே.

இன்னுமொரு சான்ஸ் தா பக்தா

திரும்ப ஸ்விம்மிங்.இந்த தடைவ இரும்புக் கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இதான் இதான்!!!

பக்தனே உன் நாணயத்தைப் பார்த்து நான் மகிழ்சியடைந்தேன்.ஆதலால் இந்த மூன்று கோடரிகளையும் நீயே வைத்துக்கொள்.

கடவுளே உங்கள் கருணையே கருணையென்று அந்த விறகு வெட்டுறவரும் மூன்று கோடாரியோட சந்தோசமா வீட்ட போனாராம்.என்னதான் பொற்கோடாரி கிடைத்தாலும் அவர் விறகு வெட்டும் தொழிலைக் கைவிடவில்லையாம்.

ஒரு நாள் விறகு வெட்டியின் மனைவி ஆற்றுக்குள் விழுந்து விட்டாவாம் அப்ப உடனே விறகு வெட்டி கடவுளைக் கூப்பிட ஓடி வந்த கடவுள் என்ன பக்தா எப்பிடி இருக்கிறாய் என்று கேட்க அவர் சொன்னார் கடவுளே கடவுளே என்ர மனைவியைக் காப்பாத்துங்கோ.

கடவுள் தண்ணிக்குள் போய் நம்ம அஸினோட வந்தாராம்.

பக்தா இது உன் மனைவியா?

ஆமாம் கடவுளே இவளே தான். ரொம்ப நன்றி கடவுளே.

ஆ ஆ ஆ ஆ பக்தனே உனக்கு என்னாச்சு உன் நாணயம் எங்கே போய்விட்டது?

மன்னியுங்கோ கடவுளே! நான் இல்லை என்று சொன்னா நீங்கள் அடுத்து ஜோதிகாவோட தண்ணிக்குள்ளிருந்து வருவீங்கள் அப்ப நான் இது என் மனைவி இல்லை என்று சொல்லுவன்.உடனே நீங்கள் என் மனைவியோட வெளிய வருவீங்கள்.நான் இவள் தான் என் மனைவியென்;று சொன்னவுடனே நீங்களும் உங்கட வள்ளலதைனத்தைக் காட்ட மூன்றுபேரையும் வீட்டுக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லுவீங்கள்.நடக்கிற காரியமா அது.அதான் நான் அஸினோடயே போயிடுறன்.

கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்….




(இந்தக் கதை நான் ஏற்கனவே கே.எஸ்.பாலச்சந்தர் சொல்லக் கேட்டிருக்கிறன்.நேற்று நண்பன் ஒருவன் ஆண்கள் ஏன் பொய் சொல்லுகிறார்கள் என்ற தலைப்பில அனுப்பிய fwd mail ல இருந்த இந்தக்கதை சில மாற்றங்களுடன் உங்களுக்காக :-)

Saturday, December 10, 2005

ஒரு குட்டிப்பதிவு


எங்கட Apartment ல எல்லாரும் பழைய நிலமைக்கு திரும்பி வந்து 2 நிமிடமிருக்கும் .

11வது மாடியில ஒரு சின்ன fire accident.Jacket எடுத்துக்கொண்டு வந்திருந்தவை தவிர apartment ல இருக்கிற மற்றவை எல்லாரும் 20 நிமிடத்துக்கு குளிரில வெடவெடக்க நிக்கிறம்.ஆனால் பாருங்க எனக்குப் பக்கத்தில நிண்ட 1 குழந்தை கேட்டுதே 1 கேள்வி.
ஏனம்மா உந்த பெரிய போன் ring பண்ணிக்கொண்டேயிருக்கு ஒருதரும் answer பண்ணினம் இல்லை.

Monday, December 05, 2005

என்ர கடவுளே…



ஹலோ…

ஹலோ லூசு என்ன நித்திரையா?

யாருக்கு லூசு சாமத்தில போன் பண்ணி நித்திரையா என்று கேக்கிற உனக்குத்தான் லூசு.

பாவம் பெட்டைன்ர மானம் சிப் ஏறிப் போகுது காப்பாத்துவம் என்று நினைச்சு போன் பண்ணினா பெரிசா அலட்றா.

ஏய் இப்ப என்ன வேணும் போன் பண்ணின விசயத்தை சொல்லு அலம்பாம.

ஆ யாரு? அலம்பிறனா இப்ப நான் சொன்னா நீ புலம்புவாய் பார்.

ஆதை நான் டிசைட் பண்ணனும்.

உன்ர ஈமெயில் ஐடில இருந்து எனக்கொகு நாஸ்ரி ஈமெயில் வந்தது.

எ வட்?

காதென்ன றென்ருக்கு விட்டாச்சே?

காது கேட்டது.என்ன நாஸ்ரி மெயில்?

ஆ இனி இவாக்கு எல்லாத்தையும் விலாவரியாச் சொல்லுங்களேன்.

நான் யாருக்கும் ஒரு நாஸ்ரி மெயிலும் அனுப்பல சும்மா அலட்டாம போ லூசு.தனக்கு நித்திரை வராததுக்கு மற்றவையை நிம்மதியா படுக்க விடாதாம்.

அடியேய் நான் சீரியசாய் சொல்லுறன்.ஐ வோஸ் சொக்ட் இவளா இப்பிடியெல்லாம் (all ***) அனுப்பினவள் எண்டு.

ஐயோ கடவுளே இப்ப என்ன நான் செய்யிறது. ஓ ம காட்.சத்தியமா நான் அனுப்பேல்ல.

சரி பெட்டை ரென்ஸனாயிட்டுது.

ஏய் சொன்னதெல்லாம் அப்ப பொய்யா?

ஹி ஹி

சரியான வெருளியொண்டு.

பொய்யில்ல மெயில் வந்தது உண்மை ஆனா உன்னட்ட மட்டுமில்ல என்ர அட்றஸ் புக்ல இருக்கிற நிறையபேரின்ர ஈமெயில் ஐடில இருந்து வந்தது.பிரன்ட் சொன்னான் என்ர ஸ்பைவெயர் நாத்திப்போட்டுது எண்டு .கணனி வேலை செய்யல என்று சொன்னான் எல்ல. ஸ்பைவெயர் எல்லாத்தையும் trace பண்ணிப்போட்டுது.ஆனால் உன்ர மெயில்தான் முதல் வந்தது.

அட கடவுளே நான் பயந்திட்டன்.வேற யாருக்கும் உப்பிடி போயிருந்தா என்ர நிலமை.

ஹி ஹி

காணும் லூசு போய் முதல் computer ஐ திருத்துற வழியைப்பார்.

ஒ.கே குட்நைற்.

நல்ல நித்திரையைக் குழப்பிப்போட்டு குட் நைற்றாம்.காலம போன் பண்றன் bye.

bye g.night.

Wednesday, November 30, 2005

நான் உனக்கு சாபம் தரமாட்டேன்.


பொறுமையின் சிகரமா நீ.
அக்கிரமக்காரி!

இரு கரம் கூப்பிக் கேக்கிறேன்.போதும் உன் ருத்ர தாண்டவம்.

நான் என்னத்தை பிரட்டி போட்டாலும் பூமியின் பிடிவாதம் குறையாதாம்.

சுனாமி வந்த சுவடழியுமுன் வெள்ளப்பெருக்கு. பொறுமை தாயே பொறுமை.
கீழிறங்கி பொழிந்து எடுக்கப் போவது பலி. அதுக்குள்ள என்ன றொமான்ஸ் வேண்டியிருக்கு.




இயற்கைத்தாய்க்கு அறளை பிடித்ததால் முதலைகள் ஊருக்குள் தஞ்சம்.










எனக்கும் யானைக்கும் தண்ணீர் தாகம்.உனக்கு ஏன் உயிர்த்தாகம்.
நிம்மதியான தூக்கம் வேண்டியே இங்கு இருக்கிறேன்.

என் பாலர்களை தூர்த்த மாதிரி என்னையும் சுவடில்லாமல் ஆக்கங் கங்கணமா?
பலியெடுத்தது போதும் இங்கு கொஞ்சம் பொழிவாய். பாவமன்னிப்பு பெறுவாய்.
அடைமழையில் மிஞ்சியிருக்கும் பறவைகளே என்னிடம் வாருங்கள்.முடிந்தவரை நான் உங்களைத் தாங்குவேன்.
நான் உன்னை குடித்தால் அது கிரமம்.நீ மனிதரைக் குடித்தல் அக்கிரமம்.




உணவு உடை உறையுள் இன்றி அல்லலுறும் மக்களின் சோக முகம் கண்டு குதூகலிக்கிறாயா தாயே.நான் உனக்கு சாபம் தரமாட்டேன்.

Monday, November 28, 2005

பஞ்சவர்ணக்கிளியும் கில்லாடி நாயும்



இவர்கள் வித்தியாசமானவர்கள்.
வித்தியாசமான யாரோவின்
சிந்தனையில் வித்தியாசமாகப்
படைக்கப்ட்டிருக்கிறார்கள்.
உயிர் கொடுத்தாலும் நன்றாக
இருப்பார்கள் போலிருக்கிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.








Sunday, November 27, 2005

தோழா

U OF T மாணவர்களின் தோழா குறும்படத்தை இங்கே பார்க்கலாம்.

Friday, November 25, 2005

ஓ கார்த்திகைப் பூக்களே!


















சாவு உம்மை அணைத்துக் கொள்ளும் முன்னரே
சாவை நீர் அணைத்துக் கொண்டீர்
உதிக்கும் ஒவ்வொரு அதிகாலைப் பூவும்
உதிர்ந்து விடக்கூடாது என்பதற்காய்

எம் வாழ்வாதாரங்களை அழித்த எம் எதிரி
வாசல் தேடி வரும் முன்னரே
மார்போடு குண்டணைத்து
மடிந்த நீர் எல்லாம்
மறத்தமிழ் மாவீரர்கள்

இனியும் தமிழினம்
குனியும் இனமல்ல என
இடியாய் உரைத்து
வெடியாய் வெடித்து
விடியலை நீர் தேடித்தந்தீர்

கண் மூடும் முன்னர் நீர் கண்ட
கன்னித்தமிழ் ஈழ மண்
கண் முன்னே வரும் நாள்
காத தூரம் இல்லை என
கங்கணம் கட்டி நாம்
களத்திலே நிற்கிறோம்.

-தாயகம்-

என்னத்தை சொல்வேனுங்க







இப்பிடி நிறை நீங்க எல்லாருமே பாத்திருப்பீங்க கேட்டிருப்பீங்க.சில நேரம் செய்தும் இருப்பீங்க:-)

ஒரு நாள்ல எனக்கு ஏற்பட்ட் அனுபவங்களை வைச்சு MS Word , Paint உதவியோட உங்களுக்குப் படம் காட்டுறன்.Photo shop வேலை செய்யாதாம்.சீதாராமனிட்டதான் photo shop க்கு என்னோட என்ன பிரச்சனையெண்டு கேக்க வேணும்.

படங்கள் சுடப்பட்டது இவற்றிலிருந்து.
http://www.offthemarkcartoons.com/search-results/key/idiots/http://
www.strato.de/STRATO_CLIPART/artmania/CLIP_ART/OCCUPATN/
http://www3.sunysuffolk.edu/Cashier/index.asp

Sunday, November 20, 2005

நடந்து வந்த பாதை தனை திரும்பி பார்க்கிறேன்.

வைகாசி ,இருபத்தேழாம் திகதி ,2005 தொடங்கிய என் தொடர்வண்டிப் பயணம் 50 தரிப்புகள் கடந்தும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

நிலவு நண்பனின் உதவியோடு பிரயாணத்தை தொடங்கினேன்.டி.சேயின் உதவியோடு தமிழ்மண நட்சத்திரங்களையும் சூடிக்கொண்டேன்.பிறகென்ன கிடுகிடு வேகம்தான்.இடையிடையில பயணக்கழைப்பால் தூங்கியும் இருக்கிறேன்.நித்திரை முழிச்சு வர்ற நேரத்தில நீ யார் என்று கேக்காமல் இருந்த பக்கத்துச்சீட்டு பிரயாணிகள் எல்லாருக்கும் நன்றி.

பிரயாணத்தின் போது கொஞ்ச நேரம் அலட்டியிருக்கிறன்.கொஞ்ச நேரம் படம் காட்டியிருக்கிறன்.மிச்ச நேரம் என் சிற்றறிவுக்குத் தெரிந்த சில உருப்படியான கருத்துக்களைப் பரிமாறியிருக்கிறன்.

முதல் முதலா
அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்? என்று ஒரு நகைச்சுவை சம்பவத்தைப் பற்றி சொல்லத் தொடங்கினன். பக்கத்தில இருந்த ஆக்களும் கதை கேக்கத் தொடங்கிட்டினம்.எனக்கு பயங்கர சந்தோசம்.அப்பிடி நான் சொன் முதல் கதையைக் கேட்ட பிரயாணிகள் நிலவு நண்பன் வீ.எம் மரவண்டு கணேஷ் துளசி பெரியம்மா தமிழ்விரகன் லதா கிஸோக்கண்ணடடன்.பிறகு பிறகு நான் கதைசொல்ற விதம் நிறைய பேருக்கு பிடிச்சுப் :-) போட்டுது என்று நினைக்கிறன் தொடர்ந்து நான் பிரயாணம் செய்த கம்பாட்மென்ற்றுக்கு நிறையப் பேர் வரத்தொடங்கிட்டினம்.அவையெல்லாருக்கும் மனசில இடமிருக்கு இங்க இடமில்லை:-)

ஆனந்தம் ஆனந்தம் பாடும் தளராத துணிவோடு களமாடினாய என்று இரண்டு பாட்டு பாடிக்காட்டினன் நல்லாயில்ல எண்டு சொல்லிப்போட்டினம் பின்ன நானும் பாட்டு பாடுறதை நிப்பாட்டிட்டன். கல்யாணம் என்பது நீ அங்கே நான் இங்கே என்றிரண்டு உண்மைக் கதைகளைச் சொன்னன். பசியின் ருசியென்ன? என்று என்ர சொந்தக்கதை சோகக்கதையைச் சொன்னன. முதல் முதலா நான் சொன்ன கதைகளில் நிறையப் பேர் ரசித்தது இந்தக்கதை தான்.அடுத்து நானும் என் நண்பர்களும என்று என்னைப் பற்றிய உண்மைகளைக் கொஞ்சம் எடுத்து விட்டன் இன்னும் சொல்லப்பட வேண்டிய நிஜங்கள் இன்னும் என்னோடு.தோழி ஒருவருக்கு ஏற்பட்ட நிலையால் ஆதங்கப்பட்டு சில ஆண்கள் ஏன் இப்படி? என்று ஒரு விடயத்தை சக பிரயாணிகள் காதுகளிலும் போட்டு வச்சன். வண்டில இருக்கிற அத்திம்பேர்கள் யாராவது நான் சொன்ன அத்திம்பேர் மாதிரி இருந்தா கொஞ்சம் நான் சொல்றதையும் கேட்பார்கள் என்ற நப்பாசைதான்.

தரிசனம் கிடைக்காதா? பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள என்று இன்னும் இரண்டு உண்மைக் கதைகள் சொன்னேன்.இவாக்கு வேற வேலையில்லை கதைகதையா அளந்து விடுறா என்று நினைக்காமல் பக்கத்தில இருந்த ஆக்கள் எல்லாரும் நல்லாக் கதை கேட்டினம்.எனக்கதானே முக்கியம்.பயணம் அலுப்படிக்காம இருக்க வேண்டுமே.இடையிடையே மற்றவர்கள் சொல்லும் கதைகள் கவிதைகள் என்று பயணம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
தண்ணியடிக்கிற ஆக்கள் உளறுவினமோ??யெவன்(ள்) சொன்னான்(ள்)? என்று மாமா உளறின கதையை நானும் உளறிவிட்டன்.

தெரிந்தால் நீங்கள் சொல்லக்கூடாதா? என்று கேக்கப் போய் ஒரு பேப்பர் சொல்ற கதைகளையும் கேட்கத் தொடங்கினேன்.எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம் இருந்தாலும் அதையும் விடுவதில்லை என்று முயற்சி செய்து மாவீரர் நீங்களே என்று ஒரு கவிதையும் வாசிச்சன் இரண்டு பேர் தான் பறவாயில்லை என்று சொன்னார்கள்:-
"
Mr.Temple come to me" என்று தமிழ் தேவையா என்று கருத்துச் சொல்லப்போய் தற்குறி என்றொரு வார்த்தையைப் பிரயோகித்து சகபிரயாணி ஒருவருக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தினேன்.மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன். "Mr.Temple come to me" தொடர்கதையாக தேடல் எங்களிடையே உண்டு என்று வாயடிச்சேன்.

எல்லாருக்கும் தூக்கம் வாற மாதிரி இருந்ததால கையோடு கொண்டுவந்திருந்த படங்களான
மாயா மாயா மாயா எல்லாம் மாயா – I, மாயா மாயா மாயா எல்லாம் மாயா – பகுதி II ,கத்தரிக்காய் வாழைக்காய , சக்தியும் காவலனும் என்று காட்டினன்.நித்திராதேவி விடுறமாதிரி தெரியல பின்ன பெருக்கி கூட்டி பாருங்க கணக்குச் சரியா இருக்கும் என்று கணக்கு காட்டினன்.

திரும்பவும் கதை
இருதய நரம்பினை அறுத்தவன் என்றொரு கதை சொன்னன்.நல்லா இருந்தது என்று சொல்லிச்சினம். நான் நினைத்தவை - உறுதிப்பூக்கள் 2005 பற்றியும் சொன்னன்.சில மாற்றுக் கருத்துகளையும் கேட்டறிந்தேன். தேமாப்பூ பற்றி ஒரு குட்டி கவிதை என்ற பெயரில் அலட்டி சில பேரின் சிறு வயது ஞாபகங்களை மீட்டு வந்தேன்.

ஐயோ கை நோகுது.தனித்தனியா சொல்லியிருக்கத் தேவையில்லையோ என்று இப்ப நினைக்கிறன்.

பிறகு
சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு என்று என்னட்ட கொஞ்ச நாளா ரிய+சனுக்கு வந்த பிள்ளையைப் பற்றிச் சொன்னன்.முதல் முதலா சாலை விபத்தை சந்தித்த அனுபவத்தைப் பற்றி அப்படியே ஆகட்டும் என்ற அம்மா சொன்ன கதையோடு சொன்னன். மொன்றியல் அனுபவம் பற்றியும் சொல்லிட்டன்.என்னத்த விட்டு வச்சிருக்கிறன்.தெரிஞ்ச எல்லாத்தையும் எல்லாருக்கும் சொல்லிப் போட்டன்.நல்ல பழக்கம் என்ன?

இடையில ஒருக்கா எல்லாருக்கும்
டாட்டா காட்டிப்போட்டு வண்டி மேல்தட்டில போய் நல்லா நித்திரை கொண்டு போட்டு திரும்ப வந்து நலம் விசாரிச்சன்.

மதுமிதா சின்னவயதுக் கதை சொன்னா அப்பா நான் எப்பிடி சும்மா இருப்பன் நானும்
புத்தம் சரணம் ஹச்சாமி என்று தொடங்கிட்டன்.
Psychology வகுப்பில ஒரு வித்தியாசமான syndrome பறறிப் படிச்சம்.என்னெண்டால் இது ஒரு 60-65 வயசில வருமாம் இது இருக்கிற ஆக்களுக்கே தாங்கள் செய்யிற கோல்மாலெல்லாம் தெரியாது.உதாரணமா
AHS இருக்கிற ஒராள் உங்களில ஒருவருடன் உரையாடும் போது தன்ர சட்டை button கழட்டுவார்.அல்லது safety pin ஐ கழட்டி எறிவார் ஆனால் நீங்க ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறீங்கள் என்றால் கேட்டால் தான் அப்பிடி ஒன்றுமே செய்யவிலை என்று வாதாடுவினம்.ஏனென்றால் அவைக்கு தங்கட கையைக் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை.அவர்களுக்கும் தெரியாமலே இந்த கோல்மால் நடக்கும்.நான் இதைப் பற்றிச் சொன்ன உடனே எல்லாரும் பயந்து போய் கதை கேக்காமலே நித்திரை கொண்டிட்டினம்.

அடுத்த நாள்
தோழியர் தினம் எல்லாருக்கும் வாழ்த்துச் சொன்னா நிறைய பேருக்கு அப்பிடியொரு தினம் இருப்பதே தெரியாது. எனக்கும் இந்த வருடம் தான் தெரியும்:-

ரீச்சர் சொன்ன கருத்து வித்தியாசமா இருந்ததால் உங்களுக்கும்
நான் என்ன மெஸினா? என்று கேட்டன்.அதுக்கு எந்த மெஸினும் நான் சொன்னதப் பற்றி ஒண்டுமே சொல்லமாட்டன் என்று சொல்லிட்டினம்.

சிவகாசி வெடி கொழுத்திப் போட்டன்.உஷாவும் வெடி போட்டா.அப்புறமென்ன கொஞ்ச நாளா வெடி வெடிச்சு ஓய்ந்தது.சரி கொஞ்சம் சிரிக்க வைப்பம் என்று திரும்பப் படம் பார்த்துக் கதை சொன்னன்.அக்கா பையன் ரினிஷ் படம் காட்டி அவனுக்கு காய்ச்சல் வாங்கிக் குடுத்தன்:-)

அடுத்த நாள் நாங்க
பயணம் செய்த வண்டி மக்கர் பண்ணி சில மணிநேரம் அசையாமல் நிண்டிட்டுது.என்னடா இது இப்படியாப் போச்சு என்று கவலைப் பட்டா வண்டி பழைய மாதிரி ஓடத் தொடங்கிட்டுது.
எத்தின நாளாச்சு இன்னும் போக வேண்டிய இடம் வந்து சேரவில்லை.பயணம் முடியும் வரை ஏதாவது உருப்படியா கேக்கவேணும் சொல்ல வேணும் இல்லையா.அதான் நான் கேள்விப்பட்டதெல்லாத்தையும்
"I now pronounce you man and wife" என்று சொல்லத் தொடங்கினன்.

என்னதான் இருந்தாலும் இருக்கிற இடத்தை நேசிக்கப் பழகவேணும் என்று
Hamilton நகர அழகை என் கையடக்கத் தொலைபேசியில் சிறைப்பிடித்து வைத்திருந்ததை உங்களுக்கும் காட்டி மகிழ்ந்தேன்.
அக்கா எழுதின ஒரு கவிதை கண்ணில மாட்டிச்சுதா அதையும் உங்களுக்குச் சொல்லிட்டன்.நான் ஆசையா வைச்சிருந்த யேசுவின் ஓவியங்களையும் உங்களுக்குக் காட்டினன்.வரைந்தவருக்கு நன்றி.கறுப்பி தெரியும்தானே எல்லாருக்கும்.அவா சாப்பாடு செய்து தருவா என்று சொல்லி உங்களுக்குக் கவிதைப் போட்டி வச்சன்.உங்களில் நிறைய பேர் ஆர்வத்துடன் எழுதினீர்கள்.ஆனா கறுப்பிதான் சமைச்சே தரல்ல உங்களுக்கு.

மதி அக்கா படம் காட்டுதலை சிலரிடம் செல்லமாக கண்டித்திருந்த போதிலும்
நானும் படம் காட்றதை நிப்பாட்டவில்லை.பல்கழைக்கழக முதல் வாரத்தில் எடுத்த சில படங்களைக் காட்டினேன்.இனிமேலாவது படம் காட்றதை கொஞ்சம் குறைப்பம்.

வலைப்பதிய தொடங்கி ஆறு மாதத்தில ஐம்பத்தேழு பதிவ போட்டாச்சு மூன்று பதிவு தூக்கியாச்சு..693 பின்னோட்டம் வாங்கியாச்சு.8344 பேர் தத்தக்க பித்தக்கவுக்கு வந்திருக்கினம்.இப்பிடி ஒருக்கா திரும்ப போய் எல்லாத்தையும் பார்த்தாதானே என்ர நிலவரம் தெரியுது.
நான் ஒருநாளும் இவ்வளவு எழுதினது கிடையாது.கை வலிக்குது.நித்திரா தேவி அழைக்கிறா சென்று வருகிறேன்.

அக்கா கிறுக்கியது I


நிலவானவளே
கருணை கொண்டு
கவியே என் காதலை
ஏற்றுக்கொள்

இளைஞன் என்னை
ஈர்த்து இம்சை
கொடுக்காதயடி
உன் வேதம் கேட்க நான்
ஊருக்குள் வரலாமா?

அண்டங்கள் சாட்சியாக
ஆண்டவன் முன்னே
சம்மதம் சொல்லடி.


-கார்த்திகா உதயன்-

Saturday, November 19, 2005

அழகழகே

இந்தப்படங்கள் Hamilton Bus ல் இருந்து கைத்தொல்லைபேசியால் எடுத்த படங்கள். என்னால் இந்தத் தரத்தில்தான் எடுக்க முடிந்தது:-)




Sunday, November 13, 2005

"I now pronounce you man and wife"
















ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்போது பாதிரியார் கூறும் கூற்று -"I now pronounce you man and wife".திருமணத்துக்கும் முன்பும் பின்பும் ஆண் ஆண்தான்.பெண் என்பவள் திருமணத்துக்கு முன்னர் பெண்ணாகவும் திருமணத்துக்குப் பிறகு மனைவியாகவும் அறிவிக்கப்படுகிறாள். கல்யாணம் பண்ணிக்கொண்ட எல்லாரும் சொல்லுங்க.இதுக்கு என்ன அர்த்தம்?? இதுக்கு என்ன அர்த்தம்?? (எல்லாருக்கும் இந்தப் பாட்டு தெரியும் தானே?)

இப்ப ஒரே பால் திருமணம் செய்து வைக்கும் போது “"I now pronounce you man and man" என்று சொல்வார்களோ?

தமிழ்க்கல்யாணத்தில் “மாங்கல்யாம் தந்துனானே” ....(மிச்சம் தெரியாதுங்கோ :-)) என்று சொல்வதன் அர்த்தம் இந்தப்பெண்ணை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி அதன் பிறகு உனக்கு தாரை வார்க்கிறேன் என்று அர்த்தமாமே... உண்மையாவா??ஆமா இதே இன்னும் தெரியாது இந்த லட்சணத்தில இவா “"I now pronounce you man and wife என்று பதிவு போட வந்திட்டா என்று சொல்லாதங்கோ.தெரியாததை தெரியாதெண்டு தானே சொல்லணும்.

இந்தத் தமிழ்க்கல்யாணம் என்று ஒரு சொல்லிருக்கா?? நானாவது கொஞ்சம் பறவாயில்லை 13 வயசு வரைக்கும் ஊரிலயும் பிறகு மூன்று வருசம் மலைநாட்டிலயும் இருந்த புண்ணியத்தில தமிழை கொஞ்சமாவது தெரிஞ்சு வைச்சிருக்கிறன்.என்ர தங்கச்சி விரதக் கோப்பையை தமிழ்க்கோப்பை என்று சொல்லுவாள்.முதலாவது லாச்சியை மூத்த லாச்சி என்று சொல்லுவாள் உப்பிடி நிறைய சொற்கள் (இதுக்குமொரு தனிப் பதிவு போட்டுட்டாப் போச்சு :- காசியங்கிள் என்ன காசா கேக்கப்போறார்)

மொழியாழுமையில கூட பெண்களை தள்ளியே வைச்சிட்டுதுகள் படிச்ச அறிவுஜீவிகள்.ஆங்கிலத்தில எனக்குத் தெரிந்த சொற்களை இங்க எழுதுகிறேன் நீங்க தமிழில் இந்த வரிசையில் வரும் சொற்களை அறியத்தாருங்கள்.

Bachelor of Arts
Bachelor of master
Master of ceremony
Policeman
Mailman
Tradesman
Milkman
Mankind
Manhole

To be continued:-

தமிழில் பால்க்காரி பெண் காவலதிகாரி இப்படியான வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு.

கனடா நண்பிகளே!!!
உங்கள் எல்லாருக்கும் எங்களை அதாவது மகள்மாரை கனடா தன் தேசிய கீதத்திலிருந்து தள்ளி வைத்திருக்கிற விசயம் தெரியுமா?

“O Canada!
Our home and native land!
True patriot love in all thy sons command.” இவ்வாறு எழுதிய மதிப்புக்குரிய “Mr. Justice Robert Stanley Weir ” மகளவையே இல்லையேர்? யாமறியோம் பராபரமே.

சரி சரி ரொம்ப கோபப்படவேண்டாம் தோழிகளே தொடர்ந்து வாசியுங்க. (இதைப் படிச்சுட்டு வாசிச்ச குறையில ஓடவும் வேண்டாம் தோழர்களே)

1981ம் ஆண்டு Canadian charter of rights and freedom யாப்பில்(?) "man” என்றிருந்த எல்லாச் சொற்களுமே “personn” என்ற சொல்லாக மாற்றப்பட்டது.

1986 ல் ஒட்டாவா “National museum of man" “ National museum of civilization” ஆக மாற்றப்பட்டது.

1988 ல் Toronto Alderman என்ற பதம் Toronto Counselor ஆக மாற்றப்பட்டது.

அதே வரிசையில் Workman’s compensation ம் worker’s compensation ஆக மாற்றப்பட்டது.

அப்புறம் என்ன?அப்புறம் சொல்லுங்க. ..
நாளைக்கு வந்து சொல்லுறன்.

Saturday, November 12, 2005

Blaster மணம்





ஒரு சில நிமிடங்களுக்கு முதல் தமிழ்மணத்துக்கு வந்து பார்த்தேன் ஆனால் அங்கு Blaster மணம் வந்து கொண்டிருந்தது.பத்மாசுரன் சிவன் தலையில கையை வச்சு சாம்பலாகிறாரா என்று ரெஸ்ற் பண்ணின மாதிரி மோகன்தாஸ்ம்(http://imohandoss.blogspot.com/2005/11/hacking.html) தமிழ்மணத்தில ரெஸ்ற் பண்ணிப்பார்த்திருப்பாரோ? :-)




அச்சுக்குட்டி

அக்கான்ர மகன் சரஷ்வதி பூசையில என்னல்லாம் செய்யுறார் என்று பாருங்க.



Friday, November 11, 2005

Ha Ha






உஷா எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான்

இந்தப் பதிவை வாசிக்க முதல் என் இதற்கு முதலான பதிவில் உஷாவின் பின்னோட்டத்தை வாசிச்சிட்டு வாங்க.
http://www.blogger.com/comment.g?blogID=13204662&postID=113174835510547584

உஷா
சோசலிச சமுதாயம் உருவாகணும் என்பது நல்ல கருத்துதான் இதற்கு மாறாக நான் என்ன சொல்லியிருக்கிறேன்?

நான் அசின் போட்ட உடையைப் பற்றித் தெளிவாகச் சொல்லவில்லை போலிருக்கிறது.பெண்கள் புடவை கட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் -நானே ஏதாவது விழாக்களுக்கு சேலை கட்டணும் எண்டா அக்காவைக் கொண்டு கட்டுவிக்கிறனான்-:

உஷா படத்தில அசின் சோட்ஸ்ம் ஸ்லீவ்லெஸ்ம் போட்டுக் கொண்டு வர விஜய் சொல்லுவாரு “தாவணியும் இல்லை பாவாடையும் இல்லை யட்டியோடயும் பிறாவோடயும் வந்து நிக்கிறாய்” .அந்தக் காட்சிக்குப்பிறகு அசின்ர அப்பா வீட்ட போய் அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு செல்லமா வளர்ந்திட்டா ...etc.பதிவிலயே சொல்லியிருக்கிறன் ஆடை அணிதல் அவரவர் விருப்பம் எண்டு.

படத்த பார்த்த பிறகும் நீங்க அசின் போடுற உடுப்பில பெண் சுதந்திரம் இருக்கெண்டு சொல்ல மாட்டீங்க என்று நினைக்கிறன்.பெண் சுதந்திரமா இருக்க சுதந்திரத்தைப் பயன்படுத்த வேறு உபயோகமான நேரங்கள் வழிகள் இருக்கென்று நான் நம்புகிறேன்.உதாரணமாக இரவு எட்டரை மணிக்குத்தான் ஒரு வகுப்பு முடியுமென்றால் பெண் சுதந்திரமாக அந்த வகுப்புக்கும் சென்று வர சுதந்திரம் தேவைதான்.

அம்மாக்களை பற்றி நான் சொன்னது உங்கள் பார்வையில் தப்பாக(?) தெரிகிறதா?என்னைப் பொறுத்தவரையில் எந்த அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு தன் மகள் சுயமாக சிந்தித்து செயற்படுவதையே விரும்புவாள்.

புதிய படம் ஒன்று வெளிவந்தால் அதைப்பற்றிய விமர்சனங்கள் எழுதுவது இயல்புதானே உஷா?? என் பதிவுகளைப் பார்த்தால் தெரியும் நான் இதுவரை சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளே போட்டதில்லை.நான் படம் பார்ப்பதும் குறைவு.நேற்று சிவகாசி பார்த்தேன்.2 தேர்வெழுதிப்போட்டு ரிலாக்ஸா இருக்க கொஞ்சம் சிரிக்க வைச்ச படம்.

நான் சொன்னவை என் சிற்றறிவுக்கு எட்டியவை.அவ்வளவே.ஒரு படம் எடுக்க எவ்வளவு பேர் எவ்வளவு உழைக்க வேணும் எண்டு எனக்கும் கொஞ்சம் தெரியும் உஷா.எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் “Beneath the skin” என்றொரு படம் எடுக்கத் தொடங்கி கையைச் சுட்டுக்கிட்டார்.

படத்ததைப் பார்த்திட்டு வாங்க திரும்பவும்.

உங்க பின்னோட்டத்தை பார்த்ததில எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான்.

உங்க லவ் எங்க லவ்வில்ல

உங்க லவ் எங்க லவ்வில்ல ங்கொக்காமக்க உலகமகா லவ்வுடியோவ்.

விஜய் :ஐ லவ்வுயாடா செல்லம்…எங்க மாமா பார்த்து ஐ லவ்யு சொல்லுடா செல்லம்.
அஸின் : same to u.

படம்னா சிவகாசிதான் படம்.எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.விஜய் பேசுற வசனங்களுக்காகவாவது எல்லாரும் பாருங்க (வசனகர்த்தா யாரோ எனக்குத் தெரியாது).
படத்தின்ர தொடக்கத்திலயே அஸின் சோட்ஸ்ம் சிலீவ்லெஸ்ம் போட்டுக்கொண்டு (விஜய்-வசனகர்த்தாவின் பார்வையில் அந்த உடுப்புக்கு வேற பெயர் என்றது வேற விசயம்) அட்டகாசமா கடைத்தெருவில பவனி வருவா அதுவும் அப்பாவோட.வெளிநாட்டில படிச்சிட்டு சொந்த ஊருக்குப்போற எல்லாரும் இந்தியாவில அப்பிடித்தான் உடுப்புப் போடிறவையோ?? தெரிஞ்சவங்க சொல்லுங்க.

உடுப்பு போடுறது ஒவ்வொருவருத்தருடைய விருப்பம் அதுக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தமோ எனக்கு விளங்கலப்பா.அம்மா இல்லாத பொம்பிளைப்பிள்ளையளுக்கு கல்லுரிக்குப் போற வயசிலயும் சொந்த புத்தி கிடையாதா? அதே பெடியங்களுக்கு அம்மா இல்லையெண்டால் அம்மா இல்லாம வளர்ந்தவன் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பான்.எப்பிடியாவது இருக்கட்டுமன் எதுக்கு அம்மாவைச் சாட்டுவான்.அம்மா இருந்தா அறிவுரை சொல்லுவாதான் இல்லையெண்டு சொல்லலை அதுக்கா அம்மா இல்லாட்ட பிள்ளையளால சுயமா சிந்திக்கவே தெரியாதெண்டமாதிரியெல்லோ இருக்கு.

சிவகாசி அஸின்ர கையை அவவை வந்து மோதினவன்ர கையோட உரசு உரசு உரசிட்டு கசாப்பு கடையில தசை இருக்கு போடா எண்டு சொல்லிப்போட்டு அஸினுக்கு ஒரு லெக்ஸர் குடுப்பார்.எல்லாப் பெண்களுக்கும் ரொம்பத் தேவையானது.முன்னம் உப்பிடித்தான் யூத் படத்தில விஜய் கதாநாயகி என் கையைப் பிடிச்சா எனக்கு பிடிக்கிற எல்லாம் பிடிக்கும் என்று சொன்னா என்று லவ் பண்ணிப்போட்டு அவா தான் லவ் பண்ணவில்லை என்று சொன்னவுடனே பொம்பிளையளுக்கெல்லாம் அம்மா என்றொரு ஸ்தானம் இல்லையெண்டா வேஸ்ற் என்று சொல்லுவார்.எல்லாப் படத்திலயும் பொம்பிளையளுக்கு மரியாதையோ மரியாதை.

படத்தில ஒரு காட்சி:
அசின் நல்லா குண்டான கொஞ்ச அன்ரீஸ் ஆக்களை கூட்டிக்டிக்கொண்டு வந்து இதோ சேலை கட்டி வந்திருக்கினம் கையெடுத்து கும்பிடு சிவகாசி என்று சொன்னா விஜய் துவக்கெடுத்து கொண்டு வருவார்.அதுக்குள்ள அவை குண்டா வடிவில்லாத ஆக்கள் எல்லாம் லவ் பண்ணக்கூடாதெண்ட மாதிரியான நக்கல் வேற.

காதலியோட அப்பா அண்ணனை எல்லாம் எதுக்கு தேவையில்லாம சேட்டைப் பிடிக்கிறாரு அடிக்கிறாருன்னு தெரியலை சிவகாசி.அஸின் நல்லாயிருக்கிறாவா என்று பார்க்கணும்னா போன் பண்ணிப் பார்க்கிறரு இல்லை வீட்ட போய் பார்;க்கிறது படத்தில சும்மா விஜய் போன போக்கில அசின் அப்பான்ர சட்டையைத் தான் பிடிப்பார்.அப்பாக்கள் அண்ணன்கள் எல்லாம் லூசுகளா??வீட்டுப்பொண்ணு லவ் பண்ணுது என்றா வீட்டில இருக்கிற மற்ற எல்லாற்ற மானம் மரியாதையை லவ்வரிட்ட அடகு வைச்சிடுறதா?

எனக்கு இன்னுமொண்டு விளங்கல படத்தில:தமிழ் நாட்டில பெடியங்கள் கல்லூரிக்குப் பணம் கட்டக் காசில்ல எண்டா “உங்களைப் பார்த்தா எங்க அம்மா மாதிரி இருக்கு : என் அம்மா செத்துப் போட்டா என் படிப்புக்கு காசு தாங்கோ” என்று கூடப் படிக்கிற பணக்காரப் பிள்ளையளிட்ட கேக்கறவையோ??? விஜய் அறுத்துக் குடுத்த அசின்ர சங்கிலியை குடுக்கத் திரும்ப வந்த பெடியன் மற்ற நண்பர்கள் தந்த காசில மீட்டது என்று சொல்லித்தான் குடுப்பார்.அப்பவாவது நான் பகுதிநேர வேலை செய்யுறன் என்று சொல்ல வைச்சிருக்கலாம்.

அப்புறம் சொல்ல மறந்திட்டன் படத்தின்ர கதை சூப்பர்.பிரகாஸ்ராஜ் நடிப்பு அந்த மாதிரி.மூளி முங்காரி மாமி சூப்பரோ சூப்பர்.

Wednesday, November 09, 2005

நான் என்ன மெஸினா?


அம்மா :
யப்பா என்ன சனம் கோயில்ல….சூரன் போருக்கெண்டா மட்டும் இவ்வளவு சனம் எங்க இருந்துதான் வருதுகளோ.

அப்பா :
அம்மா ஒரு ரீ குடிச்சா நல்லாயிருக்கும்.அம்மா: நானும் உங்களோடதானே வந்தனான்.நானென்ன மெஸினே?? மது அப்பாக்கும் எனக்கும் ஒரு ரீ போட்டுத்தாவனம்மா.

மது :
அம்மா எங்கட மிஸ் சொன்னவா நாங்கள் எல்லாம் மெஸின் போலதானாம். வட அமெரிக்காவின் குழந்தை பிறப்பு இரண்டு முறைகளில் ஒன்றான Technocratic model

Woman => object
Male body => norm
Body => machine
Pregnancy and birth => pathological
Hospital => factory
Baby => product



















என்று இருக்குதாம்.அப்பிடியெண்டால் பெண்கள் ஒரு பொருள் அவேன்ர மேனி ஒரு மெஸின் போல. கர்ப்பமாதல் குழந்தை பெறுதல் ஒரு வருத்தம் மாதிரி.வைத்தியசாலை ஒரு தொழிற்சாலை அங்க அன்பு இரக்கம் எல்லாம் இருக்காது.பெண் மெஸின்களின்ர வேலை வைத்தியர் சொன்ன நேரத்துக்குள்ள அவர் வைச்ச குறிப்பிட்ட தொழிலாளர்களின் உதவியோட விளைபொருளை உருவாக்க வேண்டும்.அப்பிடி பெண் மெஸின்களால அது முடியாது போகும்போது வைத்தியர் உற்பத்தியை துரிதமாக்குவதற்கு epilit போன்ற தூண்டுதல் தருவார்.அதன்படி விளைபொருள் உற்பத்தி செய்யப்படும்.அடுத்த நொடியே உற்பத்திப் பொருள் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடும்.

அம்மா:
மகள் தேத்தண்ணி கேட்டு எவ்வளவு நேரம்?

மது :
நான் சொன்னது சரிதானே….நாங்கள் மெஸின்தானே??

அம்மா :
வியாக்கியானம் சொல்லாம ரீ போட்டுக் கொண்டு வாறிங்களே??

மது :
அம்மா நான் போடுற ரீயை விட நீங்க போடுற ரீ தான் நல்லா இருக்கும்.

அம்மா :
நினைச்சன் ..நீயாவது கேட்டவுடனே ரீ போட்டுத்தாறதாவது.

அப்பா :
வீட்டில இருக்கிற இரண்டு மெஸிலயும் ஒன்றாவது ஒழுங்கா வேலை செய்யுதா பாருங்க.

தோழியர் தின வாழ்த்துக்கள்.




சக்த,மதுமிதா,ஷ்ரேயா,ரம்யா,சந்திரவதனா, அஞ்சலி , கயல்வழி (girl? :)),துளசி பெரியம்மா,கறுப்பி,மதி கந்தசாமி,கலையரசி,ிபத்மா அர்விந்த்,உஷா மற்றும் எல்லாத் தோஙியருக்கும் தோழியர் தின வாழ்த்துக்கள்.