Custom Search

Wednesday, January 24, 2007

இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்



இரண்டாவது தமிழியல் மாநாடு
இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்


தொறொன்ரோ பல்கலைக்கழகம்

தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மாநாடு இடம்பெறவுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் மிக அதிக அளவில் வாழும் நகரங்களில் ஒன்றாகத் தற்போது தொறொன்ரோ விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழியல் கற்கைகளுக்கான ஓரு முக்கிய நகராகவும் தொறொன்ரோவை உருவாக்கி வருகிறது.

இந்த ஆண்டின் மாநாட்டுக் கட்டுரைகள், தமிழ் வழங்கும் இடங்களது வரலாற்றின் ஒட்டுமொத்த அடையாளம், சமூகத் தொடர்பு, அகழ்வாராய்ச்சி ஆய்வுகள், பண்டை இலக்கியங்கள், இடைக்கால சமய வழமைகள், “தேசியமும்” இக்காலப் புரிதல்களும் எழுச்சியும் போன்றவற்றை தற்கால தென்னிந்தியா, ஈழத்தின் சமூக மற்றும் பண்பாட்டு அடையாள மாற்றங்கள் வழியாக ஆய்வு செய்கின்றன. அத்துடன் கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் வளர்ச்சியையும் பண்பாட்டு வழமைகளையும் கட்டுரைகள் ஆராய்கின்றன.

அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர். மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய இணையத்தளம்: www.chass.utoronto.ca/~tamils இந்த இணையத்தளத்தில் மாநாடு, பங்கேற்கும் பேராளர்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்க: tamils@chass.utoronto.ca

அமைப்புக்குழு:

பேராசிரியர் செல்வா கனகநாயகம் (தொறொன்ரோ பல்கலைக்கழகம்)

பேராசிரியர் சேரன் (வின்சர் பல்கலைக்கழகம்)

கலாநிதி தர்ஷன் அம்பலவாணர்

Tuesday, January 23, 2007

ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும்

மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன்.

பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை.

என்ன சத்தம் நறநற என்று? இதைப்படிக்கிற யாரோ ஒரு ஆணுடைய பல்லுத்தான் நறநறக்குது.இதுகள் பண்ணின வால்தனத்துக்கெல்லாம் ஊர்க்காரர் எங்களைத்தானே அடிச்சிருக்குதுகள் என்றுதானே மனசுக்குள்ள திட்டுறீங்கள்.சரி சரி மறந்துபோங்கோ மன்னிச்சுடுங்கோ பால்ய சினேகிதிகளை.

இலந்தப்பழம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பாலர் வகுப்புப் படிக்கும்போது ரியூசனுக்குப் போனது தேவா ரீச்சரிட்ட பிறகு அவான்ர தங்கை சாந்தாக்காட்ட.அவேன்ர வீட்டுக்குப் போற வழியில ஒரு இலந்தப்பழ மரம் நிக்குது.மரமோ சரியான உயரம்.நான் என்ர நண்பர்கள் சுஜித்தா சுபாசினி டொம்மா இன்னும் கொஞ்சப்பேர் பாலர் வகுப்பில எவ்வளவு உயரம் இருந்திருப்பம் என்று சொல்லவும் வேணுமா? இலந்தப்பழ மரத்துக்குப் பக்கத்தில கிழங்குக்கு தாக்குறதுக்கா ஊமல்கொட்டை பறிச்சு விட்டிருப்பினம் காணிச்சொந்தக்காரர்.எங்களுக்கு கல்லில கொஞ்சம் பாசம் பாருங்கோ அதால கல்லை விட்டிட்டு ஊமல்கொட்டையை எடுத்து போட்டிக்கு மரத்துக்கு எறிவம்.மரத்தில இருக்கிற கொஞ்ச நஞ்ச பழம் அப்பத்தான் பழுக்கத்தொடங்கியிருக்கிற செம்பழம் எல்லாம் விழும் பாய்ஞ்சு பாய்ஞ்சு பொறுக்கிறது.கொஞ்ச நேரம் மரத்துக்குக் கீழ நிண்டா காணிக்காரர் வந்து “யாரடா அது இலந்தைக்குக் கீழ” என்று சத்தம்போடுவாரெல்லோ.ஒரு விசயம் பாருங்கோ ஒரு நாள் கூட “யாரடி அது மரத்துக்குக் கீழ” அவர் கேட்டதே இல்லை :-) எங்கட குட்டிச்சைக்கிளை மெல்லமா உருட்டிக்கொண்டு ரியூசனுக்குப்போவம்.ம் ம் அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பர்களே...

பிறகு கொஞ்சம் வளர்ந்தாப்போல ஸ்கொலர்சிப் ஸ்பெஸல் கிளாஸ் போற வழியிலதான் அணிஞ்சில்பழ மரம் இருக்கு.என்னத்துக்கு அணிஞ்சில் என்று பெயர் வந்திருக்கும் என்று தெரியேல்ல..அணில் சாப்பிடுற பழமாயிருக்குமோ?? எனக்கென்றா அந்த மரத்தில அணிலைப்பார்த்ததா ஞாபகம் இல்லை.அணிஞ்சில் பழமும் ஒரு வித்தியாசமான ரேஸ்ற்தான்.கிட்டத்த றம்புட்டான் பழத்தின்ர உள்ளான் மாதிரி சின்னனா இருக்கும் என்று நினைக்கிறன்.பழத்தை சாப்பிட்ட அணிஞ்சில்பழக் கொட்டையை நிலத்தில தேய்ச்சு ஒரு சிறிய துவாரத்தை உண்டாக்கினா அதில ஒரு விதமான ஓசை வரும் அதை வைச்சு விசிலடிக்கலாம் :-)

இன்னொரு வீட்டில ஜம்புக்காய் இருக்கு.றோஸ் நிற ஜம்புக்காயை விட பச்சை நிற ஜம்புக்காயைத்தான் எனக்குப் பிடிக்கும்.நாங்கள் களவெடுக்காம சாப்பிட்டதெண்டா ஜம்புக்காய்தான்.அந்த வீட்டுக்கார அம்மம்மான்ர பிள்ளைகள் எல்லாரும் கொழும்பில அதால அவாக்கு நாங்கள்தான் பேரப்பிள்ளைகள் மாதிரி ஜம்புக்காய் சீசனில மறக்காம ஒரு பெரிய பாக்ல கொண்டுவந்து தருவா வீட்ட.அத விட நாங்களும் விருப்பமான நேரத்தில போய்ச் சொல்லிட்டு ஆய்ஞ்சு சாப்பிடலாம். எங்கட காணிக்குள்ள காரைக்காயும் சூரைக்காயும் இருக்கு.எங்களுக்குத் தனியா அங்க போறதுக்கு அனுமதியில்லை இருந்தாலும் நிறைய நாள் அப்பப்பாவுக்குத் தெரியாம காணிக்குள்ள நுழைஞ்சிருக்கிறம் சூரைக்காய் பிடுங்க.ஒரு நாள் நாங்கள் காணிக்குள்ள நிக்கிறநேரம் பார்த்து யாரோ வாற சத்தம் கேட்டு பதட்டத்தோட ஓடுபட்டு விழுந்தெழும்பி கைகாலெல்லாம் சிராய்ப்புகளோட ஓடித்தப்பியிருக்கிறம்.

வீட்டில நிக்கிற கொய்யாக்காய் மாதுழம்பழம் நெல்லிக்காய்களையும் விட்டு வைக்கிறதில்லை. நெல்லிக்காயைத் தாத்தா ஏதோ மருந்துக்குப் பாவிக்கிறவர் என்று அம்மாக்கு நாங்கள் சும்மா புடுங்கி எறிஞ்சு விளையாடுறது விருப்பமில்லை அதால அம்மா வீட்டில இல்லாத நேரமாப் பார்த்து நாங்கள் நெல்லிமரத்தில ஏறிடுவம்.அப்பிடித்தான் ஒருநாள் நான் நெல்லிமரத்தில கீழ என்ர நண்பிகள் கொஞ்சப் பேர் சட்டையைத் தூக்கிப் பிடிச்சுக்கொண்டு நிக்கினம் நான் ஆய்ஞ்சு போடுற காய்களைப் பிடிப்பதற்கு.நெல்லிமரம் நிற்பது மதில் கரையோட.எங்கட வீடு தெருவோரத்தில கடைசி வீடு.அங்கால எல்லாம் தோட்டங்கள்.தோட்ட வேலை முடிஞ்சு தியாகண்ணை வந்துகொண்டிருந்தவர் டக்கெண்டு கேற்றைத்திறந்துகொண்டு வீட்டுக்குள்ள வந்ததும் மட்டுமில்லை கேற்றில ஏறி என்னை வலுக்கட்டாயமாத் தூக்கிக்கொண்டு இறங்கிட்டார்.நான் பிலத்த சத்தமா அவரோட வாய்காட்டுறன் “இப்ப என்னத்துக்கு என்னைத்தூக்கினீங்கள் நான் என்ன உங்கட வீட்டு மரத்திலயோ ஏறி நின்டனான்” அது இது என்று ஒரே சத்தம். அவர் ஒன்றும் சொல்லாம நான் நின்ற கொப்பைக் காட்டினார்.நான் நின்ற இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கோடாலிப்பாம்பு நிக்குது.ஐயோ என்று கத்திக்கொண்டு ஒரே ஓட்டம்.அதுக்குப்பிறகு தியாகண்ணையை எங்க கண்டாலும் அவர் நான் கத்தின மாதிரிக் கதைச்சுக் காட்டுவார் எனக்கு ஐயொ மானம்போகுதே என்று கத்தோணும் போல இருக்கும்.

யாராவாது எக்ஸோறாப்பழம் சாப்பிட்டு இருக்கிறீங்கிளா? ஓருதரும் சிரிக்க வேண்டாம் ஓகே.நான் மட்டுமில்லை என்ர பிரண்ட்ஸ்ம் சாப்பிட்டு இருக்கினம்.அந்தப்பழம் சிவப்பாகிக் கறுப்பாகும் ஆனால் அது கறுப்பாக முதலே நாங்கள் சாப்பிட்டுடுவமே :-)

கனடாவில் ஒரு பாகிஸ்தான் கடையில் இலந்தப்பழம் நாவல் பழம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறன் இப்ப அந்தக் கடையைத்தான் போய்த் தேடவேணும்.

பிறகு எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும்போது மாத்தளைக்கு போயிட்டம்.அங்க இந்த இலந்தப்பழம் எல்லாம் இல்லை.அங்க ரியூசனுக்குப் போன ரீச்சர் வீட்ட வெரலிக்காய் மரம் இருக்கு. வெரலிக்காய் ஒரு கசப்பு உவர்ப்பு எல்லாம் மிக்ஸ் பண்ணின மாதிரி ஒரு ரேஸ்ற் பச்சை நிறத்தில இருக்கும். உப்புத்தண்ணில ஊறப்போட்டு தூள் தடவி விற்பார்கள் கடைகளில் பேருந்துகளில்.நினைக்கவே வாயூறுது.பழமும் சாப்பிடலாம் எனக்குக் காய்தான் விருப்பம்.

மற்றது ஆம்பரலங்காய்.ரீச்சற்ற மாமிக்கு எங்களைக் கண்டாலே பிடிக்காது ஏனென்றால் ரீச்சர் எங்களை ஆய்ஞ்சு சாப்பிடுங்கோ என்று விட்டிடுவா நாங்களும் உப்பு தூளெல்லாம் கொண்டுபோய் ரீச்சற்ற மாமிக்கு காட்டிக் காட்டி சாப்பிடுவம்.பிறகு கேள்விப்பட்டம் ரீச்சற்ற மாமி சுங்கான் குடிக்கிறதுக்காக ஆம்பரலங்காய் பக்கத்து வீட்டு ஆக்களுக்கு விக்கிறவாவாம் அதில நாங்கள் ஆப்பு வைச்சதாலதான் எங்களை அவாக்குப் பிடிக்காதென்று.

இன்னும் பழங்கள் காய்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு.நீங்களும் உங்களுக்குப் பிடித்த பழம் காய்களைப் பற்றிச் சொல்லுங்கோ.

{இந்தப்திவு எழுதி கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்களுக்கு என்னால பப்ளிஸ் பண்ண முடியாம இருந்தது.இப்பிடி(550 Could not open: Read-only file systemblog/43/44/9) ஒரு வந்துகொண்டே இருந்தது பிறகு தானாச் சரியாயிட்டு.வேற யாருக்கும் இந்தப்பிரச்சனை இருந்ததா? }

Friday, January 19, 2007

உதிர்கின்ற இலையதனில் மரணத்தின் பயமில்லை

இசை : நிரு
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ் + சுஜாதா
வரிகள் : சுதன்ராஜ்

ஆ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் -அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா- பருவம்
எழுதுகோல் ஆனால் உயிரே -உயிர்
கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
இதயத்திலெழுகின்ற உயிரோசை நீதானே
காதலின் முகவரி நீதானே

ஆ+பெ:
அன்பே என் கவிதையின் முதல்வரி நீதானே

பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
புன்னகை செய்வோமா
பூக்களைக் கொய்வோமா
வன்முறை இல்லாத
ஓர் உலகம் காண்போமா

பெ:
ப+வுக்குள் வாழ்வோமா
புவியோடு சேர்வோமா
புயலிங்கு வந்தாலும்
எதிர் கொண்டு நிற்போமா

ஆ:
உதிக்கின்ற சூரியனில்
விடியலின் களைப்பில்லை
உதிர்கின்ற இலையதனில்
மரணத்தின் பயமில்லை

ஆ+பெ:
ஒளிபோல இலை போல நாம்
காதல் செய்வோம் வா அன்பே

ஆ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ:
ஆகாயம் ஆவோமா
அடிவானில் சாய்வோமா
ஆழ்கடல் நாம் சென்று
சிப்பிக்குள் வாழ்வோமா

பெ:
காற்றாகித் தொலைவோமா
காடெங்கும் அலைவோமா
காலத்தை நமதாக்கி
அமைதியை அடைவோமா

ஆ:
விதிகொண்ட வாழ்வினை
மதிகொண்டு வெல்வோமா
விடியாத பொழுதினை
விடைகண்டு ஆழ்வோமா

ஆ+பெ:
இமை சேரும் செயல்போல நாம்
காதல் செய்வோம் வா அன்பே

ஆ+பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

ஆ+பெ:
இதயத்திலெழுகின்ற உயிரோசை நீதானே
காதலின் முகவரி நீதானே

ஆ+பெ:
அன்பே என் கவிதையின் முதல்வரி நீதானே

ஆ+பெ:
காதல் போர்க்களம் தானா
பார்வை ஆயுதம் தானா - பருவம்
கோபங்கள் ஆனால் அழகே
இதழ்கொண்டு யுத்தம் செய்வோமா

ஆ+பெ:
காதல் காகிதம் தானா
பார்வை வார்த்தைகள் தானா - பருவம்
எழுதுகோல் ஆனால் -உயிரே
உயிர் கொண்டு கவிதை நெய்வோமா

Monday, January 15, 2007

விரல் மீட்டும்போது வீணை நாதம் தரும்

ஏற்கனவே நான் சொன்னது போல மூங்கில் நிலா அல்பத்தில் இடம்பெற்ற எனக்குப்பிடித்த இன்னுமோர் பாடலின் வரிகள் இதோ.

இசை : நிரு
பாடல்வரிகள் : சாரங்கன்
பாடியவர்கள் : அனுராதா சிறீராம் & மாதங்கி

திருடா திருடா- எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
திருடா திருடா எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான் என்
பெண்மைக்கு அர்த்தம் வரும்


சந்திக்கின்ற போது எல்லாம்
சின்னச்சின்ன சில்மிசம் செய்வாய் (2)
போதும் போதும் என்றபோதும்
எல்லை கடந்து எங்கோ செல்வாய்
உதடுகள்தான் வேண்டாம் சொல்லும்
உள்ளம்தான் ஏங்கிக்கொள்ளும் (2)
இடைவெளியின்றி -உந்தன்
வெப்பம் வேண்டும்
திருடா திருடா-எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான் என்
பெண்மைக்கு அர்த்தம் வரும்

ஈரமான ஆடைசொட்டும்
நீரில் கூட தீயின் வெப்பம் (2)
இமைகளிரண்டும் மூடுவதில்லை
இதுதானா இளமைத்தொல்லை
நிலவோடு இரவில் இனிமை
நீயுமில்லை இரவும் கொடுமை (2)
தீரும் தாகம் உன்னைச் சேரும் நேரம்
திருடா திருடா-எனைத்
திருடடா திருடா
இதழால் விரல் நுனிகளால்-என்னைச்
சிற்பமாக்கடா அழகா
விரல் மீட்டும்போது
வீணை நாதம் தரும்
காற்று நுழையும்போது
மூங்கில் ஓசை தரும்
நீ தீண்டும் போதுதான்
என் பெண்மைக்கு அர்த்தம் வரும்.

பொங்கலோ பொங்கல்

தாயகப்பறவைகள் பொங்கல் சிறப்பு மலருக்காக - சிநேகிதி-

தாயகத்திலிருந்த போது பொங்கல் எப்போது வரும் எத்தனை புத்தாடைகளணியலாம் எத்தனை வீட்டுப் பொங்கலை ருசி பார்க்கலாம் என்று எதிர்பார்ப்புகள் எத்தனை.அம்மாவோட பாட்டியோட பொங்கல் நாள் பார்த்து வாய்காட்டி ஏதாவது மண்டகப்படி வாங்கினாத்தான் அந்த வருசப் பொங்கலே கொண்டாடின மாதிரியிருக்கும்.

ஆனால் புலம் பெயர்ந்து வாழும் சூழலில் பொங்கல் அதுபாட்டுக்கு வந்த சுவடு தெரியாமல் வந்து போகுது.சாணி வாங்கிக்கொண்டு வந்து முத்தத்தை முதல் நாளே மெழுகி வைக்கத்தேவையில்லை.மெழுகி வைச்ச வட்டத்துக்குள் என்ன விளையாட்டு என்று பாட்டிமாரிட்ட திட்டுவாங்கத் தேவையில்லை.அதிகாலை எழும்பி கொஞ்சம் மஞ்சள்ல கொஞ்சம் அரிசிமாவில கோலம் போடத் தேவையில்லை.பொங்கல் பொதி என்று பொங்கலுக்குத் தேiவாயான எல்லாப் பொருட்களுமடங்கிய பொதியை வாங்கிக் கொண்டுவந்து நாங்களும் தமிழர்கள் பொங்கல் என்றொரு பண்டிகை எங்களுக்கு இருக்கு என்றதுக்காகத்தான் பொங்கல் பொங்கி சாப்பிட்டு விட்டு படிக்கச் செல்வோர் பாடசாலைக்கும் மற்றவர்கள் வேலைக்கும் சென்று வர நேரம் சரியாகயிருக்கும்.

நேரமும் வசதியும் இருப்போர்இ தங்கள் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களோடு இருப்பவர்கள் பொங்கல் என்றால் என்ன அதை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று தெரிந்து சந்தோசமாகக் கொண்டாடுகின்றார்கள்.

சங்க காலத்திலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது ஆனாலும் எப்போது இந்தப் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வழக்கம் எப்போது தொடங்கியதென்று எங்கும் அறுதியாகச் சொல்லப்படவில்லை.தைநீராடும் வழக்கம் சங்க காலத்திலிருந்து பின்பற்றப்படுவதால் பொங்கலும் சங்க காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சங்க காலத்தில் வாழ்ந்த கன்னிப் பெண்கள் மார்கழி தொடக்கம் அம்மனுக்கு விரதம் இருந்து தை மாதத்தில் விரதத்தை முடித்துக்கொள்வார்;கள்.இவ்வாறு கன்னிப் பெண்கள் மண்ணினால் செய்யப்பட்ட அம்மன் சிலையை வழிபட்டு வந்தால் தைமாதத்தில் விவசாயத்துக்குத் தேiவாயான மழையை அதிகமாகப் பொழியும் என்பது சங்க கால மக்களின் நம்பிக்கை.

பல்லவர் காலத்தில் பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான தைநீராடுதல் முக்கியமாகக் கருதப்பட்டிருக்கின்றது.ஆண்டாள் பாடிய திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளின் திருவெம்பாவை போன்றவற்றில் தைநீராடுதல் பற்றிய பல குறிப்புக்களுண்டு.

வீரராகவர் கோயிலிலுள்ள ஏடொன்றில் குலொத்துங்க சோழ மன்னன் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கென தன் நிலங்களைக் கோயில்களுக்குப் பரிசாக வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் மூன்றுநாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது போகிப்பண்டிகையோடு ஆரம்பமாகிறது.அறுவடைக்கு முதல் நிகழும் சிறப்புப் ப+சை உழுவதற்கு அறுவடைக்குப் பயன்படுத்தும் கருவிகள் இயந்திரங்கள் போன்றவற்றைச் சுத்தம்செய்து சந்தனமிடல் மற்றும் தேவையற்ற பண்டங்களை சுற்றுப்புறச்சூழலிலிருந்து அப்புறப்படுத்துதல் போன்றன போகிப்பண்டிகையின் முக்கிய அம்சங்கள்.அடுத்த நாள் உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.பொங்கல் பொங்கி விவசாயத்துக்கு உதவி செய்யும் சூரியனுக்குப் படைப்பதும் பின்னர் சூரியனுக்குப் படைத்த பொங்கலை அடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று மாட்டுக்குக் கொடுப்பதும் வழக்கம்.

மாட்டுப்பொங்கலன்று அநேகமான கிராமங்களில் மணிகட்டப்பட்ட மாடுகள் குளிப்பாட்டப்பட்டு கொம்புகளுக்கு வர்ணம் பூசப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு ஜில் ஜில் என்று ஒலியெழுப்பிக்கொண்டு கம்பீரமாய்த் திரிவது கண்கொள்ளாக்காட்டிசிதான்.

இந்த மாடுகளைப்பற்றி ஒரு சுவாரிசயமான கதையுண்டு.ஓரு நாள் சிவபெருமான் தன் வாகனமாகிய எருமைக்கடாவிடம் ஒரு வேலை செய்யச் சொன்னாராம். “நீ ப+மிக்குச் சென்று அங்கு வாழும் மக்களை எண்ணெய் தேய்த்துத் தினமும் நீராடி மாதத்தில் ஒருமுறை உணவருந்தச் சொல்” என்று சொன்னாராம்.ப+மிக்கு வந்த எருமைக்கடா தவறுதலாகத் தினமும் உணவருந்தி மாதத்திலொருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்குமாறு சொல்லிவிட்டதாம்.இதனால் கோபம் கொண்ட சிவன் தினமும் உணவருந்துவதற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கு உதவியாக நீ ப+மியிலேயே தங்கி நிலங்களை உழுதுகொண்டு இருக்கக் கடவாய் என்று சபித்து விட்டாராம்.

நல்ல கதை என்ன? ம் வாசிச்சது காணும் போய் பொங்கல் வேலையைப் பாருங்கோ.

ம் ம் எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே.

-பொங்கல் வாழ்த்துக்களுடன் சிநேகிதி-