Custom Search

Thursday, August 16, 2007

நான் மெல்பேர்னுக்கு வாறன்!

வணக்கம்,
Aug 23rd-Sep 3rd வரை மெல்பேர்னில் இருப்பேன்....யார் யாரைச் சந்திக்கலாம்?? சிட்னியில் வசிப்பவர்களுளும் மெல்பேர்னுக்கு வாறீங்கிளோ ?? எனக்்கு சிட்னிக்கு வரமுடியாது போலுள்ளது ஆனால் வர முயற்சி செய்கிறேன்.

அப்ப யார் யார் வாறீங்கள் என்னைச் சந்திக்க?

Tuesday, August 14, 2007

காணாமல் போன ஒரு கொப்பியிலிருந்து...

ஆவணி 9, 2001

கடந்த சனிக்கிழமை

அன்றைய வகுப்பு வழமையிலிருந்து சிறிதே மாறுபட்டதாக இருந்தது.ஆம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கழைக்கழகத்திலிருந்து வந்திருந்த விரிவுரையாளர் ஒருவர்தான் அன்று எங்களுக்கு வகுப்பெடுத்தார்.அவர் தன்னைப்பற்றிய அறிமுகம் எதுவுமின்றி எங்கள் வகுப்பைப் பற்றி விசாரரித்தார்.பின்னர் மெல்ல சங்க காலத்துக்குள் நுழைந்தார்.

இலக்கியம் என்றால் கடந்தகாலச் சமுதாயத்தைத் தெரிவுக்கும் ஒரு காலக்கண்ணாடி என்று கூறினார்.சங்க இலக்கியத்தில் வரும் அகப்பாடல், புறப்பாடல் பற்றி விளக்கினார்.அதாவது அகப்பாடலில் காதல் பேசப்படுகிறது அதை அனுபவித்துத்தான் உணரலாம் புறப்பாடலில் போர் மற்றும் வீரம் , கொடை என்பன பற்றி பேசப்படுகிறது இதை விளங்கப்படுத்தலாம் என்றார்.

அடுத்து சங்கப்பாடல்களில் தமிழ்ப்பண்பாடு எவ்வாறிருந்தது என்று கூறிவிட்டுத் திருமணமுறைகள் பற்றிப் பேசத்தொடங்கினார்.திருமணத்துக்கு முதலில் தலைவன் தலைவி என்றழைக்கப்பட்டவர்கள் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவி என்று அழைக்கப்படுகிறார்கள்.அக்காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஏற்றுக்கொள்ளப்பபட்ட முறையாக இருந்தது.பின்னர் Monogamy ,Polygamy,Polygyny,Polyandry பற்றி நீண்டது அவருடைய உரை.

நீலகிரியில் "தோடர்" என்ற பழங்குடி மக்களிடம் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் செய்துகொள்ளும் முறை இருந்துள்ளது.அந்த ஊாரில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒரே பெண்ணைச் பல சகோதரர்கள் சேர்ந்து மணம் செய்யும் முறையே அதிகமாம்.நீலகிரியில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையை எடுத்துச்சென்று எருமைப்பட்டியின் வாசலில் கிடத்திவிட்டு அப்பட்டியைச் சுற்றி நின்று தாரை தப்பட்டை போன்ற கிராமத்து வாத்தியங்களை முழங்கச்செய்வார்களாம்.உடனே எருமைகள் ஆவேசம் கொண்டு பட்டியைப் பிரித்துக்கொண்டு தறி கெட்டு ஓடுமாம்.அப்படி ஒடும் எருமைகளின் காலில் மிதிபட்டுச் இறக்காமலிருந்தால் அந்தப்பெண் குழந்தைகளைக் கொல்லாமல் பாதுகாப்பாக வளர்ப்பார்களாம்.இதனால் இவ்வாறு உயிர் தப்பிய பெண்கள் மிகவும் குறைவானதால் இத்திருமணமுறை அங்கே அவசியமாயிற்று.அதோடு சேர்த்து அக்காலத்திலிருந்து வந்ததும் தற்காலத்தில் சில இடங்களில் உள்ளதுமான உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிக் கூறினார்.இராஜஸ்தான் மாநிலத்திலத்தில்தான் இந்த உடன்கட்டை ஏறும் இவ்வழக்கம் வலுப்பெற்றிருந்தது. "கணவனை இழந்தால் காட்டுவது இல்" என்ற கூற்று நெடுஞ்செழிய மன்னன் இறந்ததும் கோப்பெருந்தேவி உடனிறக்கும் முன்னர் கூறியதாம் : அதாவது ஒரு கணவனை இழந்த பெண்ணுக்கு நான் அண்ணாவாக அப்பாவாக இருப்பேன் என்று ஆறுதல் சொல்லுவது போல நானுனக்குக் கணவனாக இருப்பேன் என்று சொல்லமுடியாதாம்.அதனால் தான் பெண்கள் உடன்கட்டை ஏறினார்களாம்.

அடுத்து உலகளாவிய விழுமியமான விருந்தோம்பல் எவ்வாறு சங்ககாலத்திலும் அதற்கு பின்னரும் இருந்ததென்று சொன்னார்.இளையான்குடிமாற நாயனார் தன் வறுமையிலும் வீட்டுக்கூரையை ஒடித்து விறகாகவும் குப்பைக்கீரையைக் கறியாக்கி முதல்நாள் விதைத்த நெல்மணிகளைப் பொறுக்கி குற்றி சோறு பொங்கி இறையடியாருக்கு எப்படி அமுது படைத்தார் என சுவைபடச்சொன்னார்.அடுத்து சிறுத்தொண்டர் சமைத்த பிள்ளைக்கறி பற்றியும் கூறினார்.ஒரு பெண் தன் கணவனோடு சேர்ந்துதான் விருந்தோம்பல் செய்யவேண்டுமாம்.மாதவி வீட்டிலிருந்து வீடு திரும்பிய கோவலனிடம் நீங்கள் இல்லாததால் நான் புரவலர்க்கு அமுது படைக்கும் தகுதியில்லாமல் எவ்வளவு துன்பப்பட்டேன் என்று கண்ணகி புலம்பினாராம்.

அடுத்த விழுமியம் வாய்மை.


-தொடரும்-

Sunday, August 12, 2007

நான் வந்திட்டேன் ...

ஹாய் ஹாய்...என்னை யாரும் மிஸ் பண்ணினீங்கிளா :-)
கோடை வகுப்புக்கள் வேலை என்று பிஸியாகிட்டன் இப்ப கிட்டகத்தட்ட ஒரு மாதம் விடுமுறை பார்ப்பம் அதுக்குள்ள என்ன எழுதலாமென்று.

ஒரு சின்னக்கதை சொல்றன் இன்டைக்கு.. நாளைக்கு ஏதும் உருப்படியா எழுதுவம்.

யாராவது யாரும் செத்தால் சந்தோசப்படுவீங்கிளா? நானும் நான் அப்பிடியில்லையென்றுதான் நினச்சனான் ஆனால் அது உண்மையில்லப் போல கிடக்கு!

5 வருசத்துக்கு முதல் மாமாவோட இருக்கேக்க பேப்பர் போடப் போறனான் சிலநேரம்.நேற்றும் அவேன்ர வீட்ட நின்டனான் அப்ப மாமான்ர பிள்ளையளோட பேப்பர் போடப்போவம் என்று வெளிக்கிட்டன்.அப்ப பக்கத்துவீடு சத்தமே இல்லாமல் இருந்திச்சு.நாள் முழுக்க வெளியில தவம் கிடக்கிற கிழவனைக்காணேல்ல.எனக்குப் பயங்கர ஆச்சரியம்.என்ன மாமா கிழவனைக்காணேல்ல என்றன்.மாமா சொன்னார் உனக்கு விசயம் தெரியாதே?? கிழவன் போனவருசமே மண்டையப்போட்டிட்டுது.

முந்தி நாங்கள் மாமா வீட்ட இருக்கேக்க வீட்டுக்கு முன்னால வெளியில இருந்து கதைக்கேலாது பாட்டுக்கேக்க ஏலாது சைக்கிள் ஓடேலாது.ஐயோ அந்தக்கிழவன்ர லொள்ளென்டால் தாங்கேலாது. சும்மா எந்த நேரம் அந்த ஏரியாவில இருக்கிற எல்லாச் சின்னப்பிள்ளைகளோடயும் கொழுவல். புறுபுறுத்துக்கொண்டெயிருக்கும் .ஒருநாள் நாங்கள் வேணுமென்று யன்னல் கரையில றேடியோ வச்சு றக்கோட் பண்ணிட்டம் கிழவன் சத்தம்போடுறதை ஒருநாள் ப்ளாக்மெயில் வேற பண்ணிப்பார்த்தம் இப்பிடி இனிம எந்த நேரமும் எங்களோட வம்பு பண்ணினால் பொலிஸ்க்குக் குடுப்பம் என்று.

பிறகு நாங்களும் வேற இடத்துக்குப்போட்டம்.கிழவன் போன வருசம் `ஹாட்அற்றாக் வந்து செத்துப்போட்டுதாம்.சத்தியமா எனக்கு மாமா சொல்லேக்க ஒரு கொஞ்சம் கூடக் கவலை வரேல்ல.இனிமலாவது இந்த ஏரியாப்பிள்ளையள் நிம்மதியா இருக்குங்கள் என்று சின்னச் சந்தோசம்தான்.