Custom Search
Showing posts with label என்னைச்சுற்றி. Show all posts
Showing posts with label என்னைச்சுற்றி. Show all posts

Thursday, August 20, 2009

Toronto வில் Tornado






படம் பெறப்பட்டது : www.cp24.ca ( City Pulse 24)

இரவு 7 மணி அப்பிடியிருக்கும் நான் அத்தை வீட்ட நின்டனான். திடிரென்டு பெரிய இரைச்சலுடன் இடியிடிக்க மழை கொட்டத் தொடங்கியது. மரங்கள் எல்லாம் பேயாட்டம் ஆடத்தொடங்கிச்சு. நானிருந்த அறையில இருந்து பார்க்க பக்கத்து வீட்டிலிருந்த மரத்திலிருந்து பியர்ஸ் காய்கள் எல்லாம் காத்துக்குப் பறக்குது. சுவாரிசயமாக் கதைச்சுக்கொண்டிருந்த அத்தை அம்மா அப்பம்மா எல்லாரும் கதையை நிப்பாட்டிட்டு வாசலுக்குப் போட்டினம் புதினம் பார்க்க.

இருளத்தொடங்கியிருந்தது 7 மணியளவில். புயலுடன் கூடிய மழை அடிச்சு ஓய்ஞ்சுது கொஞ்ச நேரத்தில. மழை நிண்டதும் இருளத்தொடங்கியிருந்த வானம் பட்டப்பகல் போல மீண்டும் வெளிச்சமாகியது. என்னதான் நடக்குது எண்டிட்டு செய்தியைப் போய்ப் பார்த்தால் எங்கள் மார்க்கம் ( வீட்டிலிருந்து ஒரு 20 கி.மீ தொலைவில் ) நகரில் சில வீட்டுக்கூரைகள் சேதம் ,அங்கால இன்னும் கொஞ்சம் தள்ளியுள்ள நகரங்களிலும் வீடுகள் சேதம் , ஒருவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் அறிவித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

புயலுடன் கூடிய மழை ஓய்ந்து விட்டாலும் சாதுவான மழை தூறியபடியே இருக்கிறது. இடி இடித்துக்கொண்டேயிருக்கிறது. வீட்டிலிருந்து அடுத்த தொலைபேசி அழைப்பு வரமுதல் அத்தை வீட்டிலிருந்து வெளிக்கிடோணும் ஆனால் கார் ஓடவும் பயமா இருக்கு. நான் கொண்டு போய் விட்டிட்டு வாறன் என்று சின்ன மச்சான் நக்கல் அடிக்கிறான் ..ரோசம் வந்து வெளிக்கிட்டம் நானும் அம்மாவும். வீட்ட வந்தால் அப்பாவைக் காணேல்ல.

அக்கா சொன்னா நிமல் அண்ணா வீட்டு கூரை எல்லாம் உடைஞ்சிட்டாம் வீடெல்லாம் தண்ணியாம்..அவையைக்கூட்டிக்கொண்டு வர அப்பா போட்டார் என்டு. என்னால நம்ப ஏலாம இருந்தது ஏனென்டால் ஒரு சின்ன விசயத்துக்கும் ரென்சன் ஆகிற / பயப்படுற ஆள் நிமலண்ணா அப்ப நான் நினைச்சன் அக்கா சும்மா வேணுமென்று சொல்றா என்டு. அம்மாவும் சொன்னா ஏனப்படி சொல்றாய் பாவம் நிமல் விளையாட்டுக்கும் அப்பிடிச்சொல்லாத எண்டு.

உண்மையா எந்தக் கெட்டதும் எங்களுக்கு நடக்காதெண்டதுதான் எல்லாற்ற எண்ணமும் ஆனால் அது சிலநேரம் நடந்திடும். அப்பிடித்தான் நிமலண்ணா வீட்ட வந்து நிண்ட அவற்ற நண்பர் ஒராள் கார்ல ஏதோ எடுக்க எண்டு போனவர் ..அவற்ற மனைவியின் அலறல் சத்தம் கேட்டு நிமலண்ணா வெளியில ஓடிப்போனால் வேகமா வந்துகொண்டிருந்த புயல் நிமலண்ணாவை மேல தூக்கி இழுக்குதாம். கீழ நிமலண்ணா , நிமலண்ணான்ர மனைவி ,நண்பரின் மனைவி இவ்வளவு பேரும் அவரை மேல போகவிடாமல் அழுத்திப்பிடிக்கிறார்களாம். ஏற்கனவே புயலில் அள்ளுப்பட்டுக்கொண்டு வந்து மரத்துண்டுகள் , கொப்புகள் மற்றைய பொருட்கள் எல்லாம் இவர்களுக்கு மேல் விழுந்து அழுத்துகிறது...அப்பிடியே மேலெழும்பிய புயல் நிமலண்ணாட வீட்டுக் கூரை ,கதவு யன்னல் எல்லாத்தையும் சேதமாக்கிக் கொண்டு பக்கத்து வீடுகளையும் பதம் பார்த்துக்கொண்டு கொஞ்சம் அமைதியாகிக் கடந்து போகிறது.

என்ன நடந்தது என்று திகைச்சு நிக்கிறதுக்கள்ளயே எல்லாம் நடந்து முடிந்திற்று. இதுவரையில் இந்தப் புயலால் ஒருவர் இறந்திருக்கிறார் காயப்பட்டோர் போன்ற ஏனைய தகவல்கள் இன்னும் வரவில்லை. ஒவ்வொரு ஊர் ஊராக அலையும் இந்தப் புயல் இப்ப எங்க என்ன ஆட்டம் போடுதெண்டு தெரியேல்ல.

இன்றைய இந்தச் சூறாவளியால் Vaughan , Maple போன்ற நகரங்களிலிருந்து இதுவரை 120 குடும்பங்கள் அவர்களின் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டிருக்கின்றது. 2 நாட்களுக்கு முதல் எங்கள் பகுதியிலும் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைபட்டிருந்தது. நாளையும் புயலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது வேலைக்குப் போகாமல் விடலாம் போலத்தான் தெரிகிறது.


இப்ப எனக்கு ஞாபகம் வாறது "Dante's Peak" என்ற திரைப்படம் தான். வாழ்வதற்கு சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்ட இடமொன்றில் வெடிக்கவிருக்கும் எரிமலை பற்றி எதிர்வுகூறும் நிபுணரின் கருத்துகளை புறக்கணித்துவிட்ட பின்னர் அந்த இடத்தில் உள்ள மக்கள் படும் துன்பங்களையும் பூகம்பம் , எரிமலை வெடிப்பு வெடிப்புக்கு பின்னர் நடைபெறும் லாவா மக்மாக்களின் களியாட்டம் என எல்லாவற்றையும் வெளிக்கொணர்ந்த படம் அது. பார்த்துப் பல வருடங்களாகியும் பலகாட்டிசிகள் இப்பவும் ஞாபகம் வருது. அதும் முக்கியமா இந்தப்படத்தில போட்டிருக்கிற காட்சியில அந்தக் கொதி பிடிச்ச மேலதிகாரி சாகுற காட்சி. சாவது போல காட்சி இல்லை ஆனால் பாலம் முறிஞ்சிடும்.

அம்மாட்ட நானிந்த படத்தைப் பற்றிச் சொல்றன். அம்மா பல வருடங்களுக்கு முன்பு வடமராட்சியில் ஏற்பட்ட சூறாவளியில் தாத்தான்ர கடையின் கூரையைச் சேதமெதுவும் இல்லாமல் காற்று எப்பிடித் தூக்கிப் பக்கத்து தோட்டத்தில போட்டதெண்ட கதையைச் சொல்றா எனக்கு.

Friday, August 07, 2009

Men's Brain VS Women's Brain

Saturday, January 31, 2009

கனடாவின் பிரதான ஊடகங்களில் மனிதச் சங்கிலி பற்றிய செய்திகள்


City Pulse 24


CBC


680 News

City TV

Toronto Star

Toronto Sun

Msn

CTV

Macleans



Yahoo

570 News

CFRB

Metro

Bradenton

Los Angeles times

Startribune

The Record

tri-cityherald

seattlepi.nwsource

expressbuzz

wtop

Friday, January 30, 2009

Tamils forms human chain in downtown T.O.

Tamils forms human chain in downtown T.O.

Updated: Fri Jan. 30 2009 6:28:21 PM

ctvtoronto.ca

Toronto's Tamil community came out en masse to draw attention to the Sri Lankan government's military offensive aimed at crushing the separatist Tamil Tigers, spilling onto Front Street outside Union Station for a time.

By 6:30 p.m., Front Street had cleared, allowing traffic to flow again.

Friday's event was the second major protest on Toronto's streets in the last 24 hours, with a large protest held downtown on Thursday night.

The protesters were attempting to construct a human chain from Yonge and Bloor Streets to Union station on Front Street before travelling back up University Avenue to Bloor Street. That distance is about five kilometres.

They held up signs with messages such as "Stop the Tamil genocide in Sri Lanka." They could be heard chanting "We want justice!" as media vehicles drove by.

Const. Wendy Drummond of the Toronto Police told ctvtoronto.ca that the demonstrators had been very peaceful and orderly, although they worried about the prospect of congestion when the demonstration breaks up. She said police don't provide crowd estimates.

A civil war has ebbed and flowed in Sri Lanka since 1983. The rebels, formally known as the Liberation Tigers of Tamil Eelam, are fighting for a separate Tamil homeland in the country's north.

Tamils are a minority in Sri Lanka, which sits just over 30 kilometres offshore from the south tip of India. The Sinhalese form the majority. They are Buddhists. Tamils tend to be either Hindu or Roman Catholic. Tamils speak Tamil while the Sinhalese speak Sinhala.

According to Statistics Canada's 2006 census, just under 94,000 people in the GTA claim Tamil as their mother tongue. About 5,800 claim Sinhala.

In 2002, the combatants signed a ceasefire agreement brokered by Norway, with peace talks failing in 2006 -- the same year the Canadian government declared the Tamil Tigers to be a terrorist organization (the U.S. made the declaration in 1997).

In January 2008, the Sri Lankan government withdrew from the ceasefire agreement, with fighting subsequently escalating in the last 12 months. In September, it ordered the withdrawal of UN and most humanitarian organizations from the conflict zone in the country's northeast.

Earlier this month, government forces captured Kilinochchi, long a Tamil Tigers stronghold. Sri Lanka's President Mahinda Rajapakse called on the rebels to surrender.

But the battling is taking a toll on non-combatants.

On Wednesday, Human Rights Watch called on both sides to allow an estimated 250,000 civilians trapped in the conflict zone safe passage out and to allow them to obtain desperately needed humanitarian aid.

HRW, one of the world's major human rights watchdogs, has accused the Tigers of not allowing civilians to flee. When they do flee, the Sri Lankan military has arrested those civilians and slapped them in militarized detention camps.

"Civilians are scrambling for shelter in an area that is under heavy artillery fire, including many children, wounded, and elderly who need urgent assistance," said Brad Adams, HRW's Asia director. "The UN and concerned governments should press Sri Lanka to take all necessary steps to spare civilians from harm."

The full picture isn't emerging because the Sri Lankan government has slapped restrictions on the movement of journalists and human rights monitors.

The Sri Lankan military has claimed it has killed no civilians and is only targeting rebel forces.

http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20090130/tamil_protest_090130/20090130?hub=Toronto

Thursday, January 29, 2009

பாடகி மாயா தன் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார்.

Slumdog Millionare படத்தில் இடம்பெற்ற Paper Planes பாடலுக்கான Grammy awards கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. Grammy awards வழங்கப்படும் Feb 8ம் திகதிதான் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறதாம்.

National TVல் இடம்பெற்ற மாயாவின் நேர்காணலில் இலங்கையில் 27 வருசமாகத் தன் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் ; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கை அரசு தான் பிறந்ததிலிருந்தே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமா அழித்து வருகிறது என்று சொல்கிறார்.மிகுதியை நீங்களே கேளுங்கள்.

மானசீகமாக மாயாவுக்கு நன்றி.

video link : http://www.vakthaa.tv/play.php?vid=2892


Wednesday, November 26, 2008

உடம்புக்கு வெளியே வளரும் இதயம்

நான்கு நாட்கள் வயதுடைய ஒரு பெண் குழந்தையின் இதயமும் ஈரலின் ஒரு பகுதியும் உடம்புக்கு வெளியே வளர்கிறதாம். இந்தியாவின் வட பெங்கால் மருத்துவக் கல்லூரி வைத்திய வளாகத்தில் இருக்கின்ற இந்த குழந்தைக்கு சத்திரசிகிச்சை மூலம் இதயத்தையும் ஈரலையும் உடம்புக்குள் செலுத்த முயற்சி நடைபெறுகிறது , ஆனால் இது மிகவும் புதியதாக இருக்கிறது எங்களாலான முயற்சியை செய்து வருகிறோம் என்று கூறுகிறார் குழந்தை வைத்திய நிபுணர் மிரிடுலா சட்டர்ஜி.

படங்கள் எடுக்கப்பட்டது Nove.26.08



Tuesday, November 11, 2008

கோணப்பா + உளநலம் குன்றியவர்கள் - எண்ணங்கள் சில

எங்கட ஊரில அம்மம்மா வீட்டுக்கு கிட்ட ஒரு அண்ணா இருந்தார். அவற்ற சொந்தப்பெயர்கூட எனக்கு ஞாபகமில்லை ஆனால் எனக்குத் தெரிஞ்சு எல்லாரும் அவரை கோணப்பா அல்லது கொப்பக்கடுவா என்றுதான் கூப்பிடுவார்கள். காலை ஒரு மாதிரி விந்தி விந்தித்தான் நடப்பார். சில நேரம் அவர் சிரிக்கேக்க வாயால உமிழ்நீர் வழியும். சரியான பெரிய நெத்தி அவருக்கு.கிட்டத்தட்ட 16 வயதினிலே சப்பாணி மாதிரித்தான் இருப்பார் பார்க்க. எண்ணை வடியுற ஒழுங்கா இழுக்காத தலை. வாயில எப்பவும் வெத்திலை பாக்கு இல்லாட்ட வீணீர் வடியும். வயிறுக்கு மேல இழுத்துக் கட்டின சாரம். திசைக்கொன்றா இருக்கும் விரல்களும் கோணல் மாணலா வளர்ந்து நிக்கிற நகங்கள். இதான் கோணப்பாவின் வெளித்தோற்றம்.

அம்மம்மா வீட்டுப் பக்கம் நிறையத் தோட்டங்கள் இருக்கு. எல்லாம் எங்கட சொந்தக்காரற்ற தோட்டம்தான். கோணப்பா எப்பவும் யாராவது ஒருவரின் தோட்டத்தில் நின்று ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பார். அவர் அவற்ற வீட்டில நிக்கிறார் என்றால் அன்டைக்கு அவருக்கு வலிப்பு வந்திருக்கு என்றுதான் அர்த்தம்.

அவற்ற அம்மாக்கு அவரை விட இன்னும் நிறையப் பிள்ளையள் இருக்கினம்.கொஞ்சம் கஸ்டப்பட்ட குடும்பம் அதால சில நேரம் அவேன்ர வீட்ட எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கிறேல்ல. இந்த கோணப்பா ஊரில எல்லாருக்கும் செல்லப்பிள்ளை மாதிரி. ஆற்ற தோட்டத்தில வேலை செய்யுறாரோ அவேன்ர வீட்ட அண்டைக்கு 3 நேரமும் சாப்பிடுவார். சின்ன வயசிலயே அடிக்கடி வலிப்பு வந்ததாலயோ அல்லது வறுமை காரணமோ தெரியா அவரை பள்ளிக்கூடம் அனுப்பேல்ல அவற்ற அம்மா அப்பா.

முந்தி அடிக்கடி வலிப்பு வருமாம். ஆனால் எனக்குத் தெரிஞ்ச காலத்தில எப்பவாவது இருந்திட்டொருக்காத்தான் வலிப்பு வரும். சிலதடவைகள் நானும் போய் புதினம் பார்த்திருக்கிறன் அவருக்கு வலிப்பு வாறதை. வலிப்பு வரத் தொடங்கினதும் ஒரு வித்தியாசமான சத்தம் போடுவார் பிறகு அப்பிடியே விழுந்திடுவார்.கண்ணெல்லாம் ஒரு மாதிரி மேல போய் சொருகி நிக்கும். கை கால் கிடந்து உதறும். வாயால ஒரு பக்கமா எச்சில் நுரை நுரையாத்தள்ளும். பக்கத்தில இருக்கிற கதவுத் திறபை எடுத்து அவற்ற உள்ளங்கைக்குள்ள வச்சால் வலிப்பு கொஞ்ச நேரத்தில குறைஞ்சிடும்.

கோணப்பா பள்ளிக்கூடம் போய் படிக்கேல்ல ஆனால் அவரோட வேலை செய்யிற மற்றைய கமக்காரர்களின் கைங்கர்யமோ என்னவோ அவர் பத்திரிகைகள் எல்லாம் வாசிப்பார். அரசியல் பற்றிக்கூட விவாதிப்பார் என்று அம்மா சொல்றவா.அப்படி ஒரு அரசியல் பற்றிய விவாதத்தில்தான் அவருக்கு கொப்பக்கடுவா என்ற பட்டப்பெயர் வந்ததாம்.ஊரில உள்ள சின்னப்பிள்ளைகளோடும் அவருக்கு நல்ல சிநேகிதம். தோற்றத்தில் மனநலம் குன்றியவர் போல இருந்தாலும் அவரை யாரும் கிண்டல் பண்ணுவதில்லை. நான் படித்த பாடசாலைக்கருகில் ஒரு பைத்தியம் இருந்தார். எப்பவும் ஒரே இடத்தில் இருப்பார் அவர். பக்கத்திலுள்ள குப்பைகளை பொறுக்கி ஒரு இடமாப் போடுவார். ஒருதரும் அவருக்கு கிட்ட போகாதவரை அவர் நல்லாத்தான் இருப்பார். தப்பித்தவறி கல்லெடுத்தெறிஞ்சு அவரைச் சீண்டினால் காணும் கன தூரத்துக்கு விட்டுத் துரத்துவார்.இன்னொரு பைத்தியம் இருந்தார் கோயிலில்.அவர் ஒரு M.A பட்டதாரி.அவற்ற தங்கச்சி சாதி குறைந்தவருடன் ஓடிப்போட்டா என்டதால அவற்ற அம்மா தற்கொலை செய்திட்டாவாம்.அம்மால அதிக பாசம் வைச்சிருந்த இவர் பைத்தியமாகிட்டார் என்று சொல்வார்கள் ஊரில். அந்தக் கோயில்ல ஒரு பொன்னொச்சி மரமிருக்கு. அந்த மரத்தோடும் அருகிலிருக்கும் மின் கம்பத்தோடும் மட்டும்தான் அவர் பேசுவார்.இப்படியான பைத்தியங்களை பார்த்த எனக்கு கோணப்பாக்கும் பைத்தியமோ என்று சந்தேகம் வரும்..அம்மாட்ட போய் கோணப்பாவுக்கு பைத்தியமா என்று கேட்டால் அம்மா என்னைப் பைத்தியமென்று பேசுவா.

கோணப்பாவுக்கு வலிப்பு மட்டுமின்றி 3 வயதுவரை நடக்கவில்லை 4 வயதுவரை பேச்சு வரவில்லை. வயதுக்கேற்ற மூளை வளர்ச்சியில்லை போன்ற குறைபாடுகளும் இருந்ததாம்.ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மருத்துவம் பார்க்கும் நிலையில் அவரின் குடும்பம் இருக்கவில்லை. இறைவன் விட்ட வழியென்று விட்டிட்டினம் போல. பணம் செலவழித்து மருத்துவம் செய்யவில்லை ஆனால் அவருடைய பெற்றோர் மட்டுமில்ல உறவினர்கள் அயலவர்கள் என எல்லாரும் கோணப்பாவில் பாசமாக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் அவரை ஒரு குறையாகப் பார்க்காமல் குறையுள்ள ஒரு மனிதனாகப் பார்த்திருக்கிறார்கள். அப்படி அவரையும் ஒரு மனிதனாக மதித்ததால் தான் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் அவருடைய பட்டறிவு அவரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது இப்பவும் ஒரு கமக்காரனாக.

ஊரில இருக்கிறாக்களே குறையுடன் ஒரு மனிதனை மனிதனாக ஏற்றுக்கொண்டிருக்கையில் கனடாவில் சகல மருத்துவ வசதிகளையும் அணுகும் நிலையிருக்கும் ஒரு குடும்பம் தங்கள் மனவளர்ச்சி குன்றிய மகனை வெளியுலகுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க நினைக்கிறது.எங்கட வீட்டை சில வருடங்களாக வாடகைக்கு விட்டிருந்தோம். கடிதம் எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தால் கதவை முழுவதுமாக திறக்கமாட்டார்கள் ஒரு சொட்டு திறந்துபோட்டு அந்த இடைவெளியில் கடிதத்தை தருவார்கள். வீடு வாடகைக்கு விட்டு பல மாதங்களாச்சே ஒருக்கா உள்ளுக்க போய் பார்த்திட்டு வரலாம் என்று ஒருநாள் அப்பா போனார். அப்பாவ வீட்டுக்குள்ளயே விடவில்லையாம் இன்னொருநாள் வாங்கோ என்று சொல்லியனுப்பி விட்டார்கள். பிறகும் 2-3 தடவை முயன்ற போது வீட்டில அம்மா அப்பா இல்லை பிறகு வாங்கோ என்றிச்சு அவேன்ர மகள். சரி வீட்டுக்குள்ளதான் விடேல்ல பின் வளவில மரங்களையாவது பார்த்திட்டு போவம் என்று நானும் அப்பாவும் ஒருநாள் போனம். ஒழுங்கா புல்லுகள் வெட்டாமல் பத்தையா இருந்திச்சு. ஆக்கள் இருக்கிற வீடு மாதிரித் தெரியேல்ல. மேல நிமிர்ந்து பார்த்தல் யன்னல் கண்ணாடிக்குள்ள இருந் நெற் பிஞ்சு பிஞ்சு தொங்குது, அப்பாட்ட காட்டினன் .எனக்கு வீட்டில ஏதோ வில்லங்கம் என்று விளங்கிட்டு. முன் பக்கம் வந்து கடிதம் வேண்ட நான்தான் போனன். தற்செயலா உள்ளுக்க பார்த்தால் sofa க்குப்பின்னால பிஞ்ச பேப்பர் துண்டுகள் கச்சான் கோது காஞ்ச பாண் துண்டுகள் இப்பிடி நிறையச் சாமான் குவிஞ்சு போயிருக்கு. நான் நினைக்கிறன் வீட்டுக்கு வாடகைக்கு வந்ததில இருந்து வீடு கூட்டிறதே இல்லையெண்டு. அப்பாட்ட சொன்னன் வீட்டில ஏதோ பிரச்சினையிருக்கு. பக்கத்து வீட்டு அங்கிள்ட்ட போய் கதைச்சம். அப்ப அவர் சொன்னார் தானும் பலமுறை அவையளோட கதைக்க முயற்சி செய்தவராம் முகத்தை திருப்பிக் கொண்டு போடுவினமாம்.

அடுத்த நாள் எனக்கு ஒரு தொலைபேசியழைப்பு வந்தது ஒரு உளவியல் ஆலோசகரிடமிருந்து.

உ.ஆ : என்னம்மா படிப்பு எப்பிடி போகுது? வீட்டில எல்லாரும் நலமா?

நா : படிப்புக்கென்ன அது தன்பாடு நான் என்பாடு.

உ.ஆ : அதுசரி வாடகைக்கு விட்டிருந்த உங்கட பழைய வீடு வித்திட்டிங்கிளோ?

நா : இல்லையே ஏன் கேக்கிறீங்கள்?

உ.ஆ : இல்ல எங்கட இல்லத்துக்கு ஒராக்கள் வந்திருந்தவை. அவை என்னட்ட ஒரு உதவி கேட்டிருக்கினம். அதைப்பற்றி உன்னட்ட சொல்லணும்.

நா : சொல்லுங்கோ முடிஞ்சால் நானும் உதவி செய்றன்.

உ.ஆ: என்ர இல்லத்துக்கு வந்திருந்தார்கள் உங்கட பழைய வீட்டு முகவரியைக் குடுத்து இந்த வீட்டில இருக்கிற ஆக்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமிருந்து தங்களைத் தாங்களே தனிமைப் படுத்தியிருக்கினமாம். அவைக்கு 3 பிள்ளைகள். ஒரு பிள்ளை மனவளர்ச்சி குன்றியது. அவனைப் பார்க்க மிக அமைதியா இருக்கிறான். ஆனால் சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் பயங்கரமா கோவப்படுறான். கோவம் வந்த உடன பக்கத்தில இருக்கிறத எடுத்த மற்றாக்களுக்கு அடிதான். உடன அவனக் கொண்டு போய் அவன ஒரு அறைக்குள்ள பூட்டி வைக்கினம். அந்த அறை யன்னல் நெற்றெல்லாம் கிளிஞ்சிட்டுது. சுவரில கூட சில இடங்களில ஓட்டை ஓட்டையா இருக்கு. அவன்ர கோவத்தை அவன் அறைக்குள்ள இருந்தே காட்டுறான். எங்க அந்த மகனைப் பற்றிய உண்மை வெளில தெரிஞ்சிடுமோ என்று பயந்து முந்தியிருந்த இடத்தை விட்டு இங்க வந்திருக்கினமிப்ப.மற்ற 2 பிள்ளையளையும் பள்ளிக்கூடத்தில தம்பியைப் பற்றி ஒருதருக்கும் சொல்லக்கூடாது நண்பர்கள் ஒருவரையும் வீட்டுக்கூட்டிக்கொண்டு வரக்கூடாதென்று சொல்லிவைச்சிருக்கினம். அதுகளையும் ஒரு இடத்துக்கும் போக விடுறேல்ல,போய் உண்மையை வெளில சொல்லிடுவினம் என்று பயம். சரியான சமையல் சாப்பாடில்லை. தகப்பன் இல்லாத நேரம் அவனைச் சமாளிக்கவே பெரிய கஸ்டப்படினம் ஆனால் நானும் கணவரும் எவ்வளவு சொல்லியும் ஒரு உளவியல் ஆலோசகரின் உதவியை நாட அவர்கள் தயாரில்லை. கிட்டத்தட்ட எங்களையும் emotional blackmail பண்ணித்தான் விட்டார்கள். இந்த விசயம் வெளியில தெரிஞ்சால் குடும்பத்தோட தற்கொலை செய்து கொள்வார்களாம் என்று அவை சொல்லிச்சினம்.இப்பவே ஒரு மகனால கிட்டத்தட்ட மொத்த குடும்பமும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்ற 2 பிள்ளைகளும் பெற்றோரிடமிருந்து மனவழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

நா : ஓ...நான் யோசிச்சனான் ஏன் நாங்கள் எங்கட வீட்டுக்குள்ள போய் பார்க்கிறதை விரும்பேல்ல..விட்டேற்றியாப் பதில் சொல்லினம் என்று யோசிச்சனான். இப்ப என்ன செய்யப் போறீங்கள்? எங்கட ஆக்கள் ஏன்தான் இப்பிடியிருக்கினமோ? எந்தக் காலத்தில இருக்கினம். ஒரு பிள்ளைக்கு வருத்தம் என்றதுக்காக மொத்தக் குடும்பமும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு ஏனிப்பிடி. மனவளர்ச்சி குன்றிப் பிள்ளை பிறக்கிறதுக்கு மரபியல்,உயிரியல் என்று எத்தனையோ விதமான காரணங்கள் இருக்கலாம். இதைப்பற்றின விழிப்புணர்வு எங்கட ஆக்களுக்கு தேவை. நாலுவிதமாக் கதைக்கிற நாலுபேற்ற கதைக்கு காது குடுக்கத் தேவையில்லை என்று சொல்லுங்கோ. அந்தப்பிள்ளையை உங்கட இல்லத்துக்கு கூட்டிக்கொண்டு போங்கோ.

உ.ஆ : அப்பிடித்தான் நானும் யோசிச்சனான்.நான் நேரில போய் அவேன்ர மகனைப் பார்த்தா பிறகு உனக்கு சொல்றன். அப்பாக்கு மெல்லமா விசயத்தை சொல்லு. வீட்டுக்கு அவர் பார்த்து பார்த்து நிறைய செலவழிச்சவர் என்று தெரியும். .

உ.ஆ : கட்டாயம் எனக்குத் தகவல் சொல்லுங்கோ.அநேகமா வீடு திரும்ப திருத்த வேணும் என்று நினைக்கிறன். அப்பா பாவம்தான்.

Sunday, March 02, 2008

ஒரு பயங்கரவாதியாக ஒசாமா தோத்துக்கொண்டிருக்கிறார்!!!

Sunday, January 27, 2008

உங்களுக்கு சமஷ்கிர்தம் தெரியுமா?

இந்தச் சொற்களுக்கு அர்த்தம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அர்த்தம் சொல்லுங்கோ plzzzzzzzz.

yac ca ks(.)usA
namaskaromy
kriyata
eva bibhyati
palAyan

நன்றி!

Thursday, August 16, 2007

நான் மெல்பேர்னுக்கு வாறன்!

வணக்கம்,
Aug 23rd-Sep 3rd வரை மெல்பேர்னில் இருப்பேன்....யார் யாரைச் சந்திக்கலாம்?? சிட்னியில் வசிப்பவர்களுளும் மெல்பேர்னுக்கு வாறீங்கிளோ ?? எனக்்கு சிட்னிக்கு வரமுடியாது போலுள்ளது ஆனால் வர முயற்சி செய்கிறேன்.

அப்ப யார் யார் வாறீங்கள் என்னைச் சந்திக்க?

Sunday, August 12, 2007

நான் வந்திட்டேன் ...

ஹாய் ஹாய்...என்னை யாரும் மிஸ் பண்ணினீங்கிளா :-)
கோடை வகுப்புக்கள் வேலை என்று பிஸியாகிட்டன் இப்ப கிட்டகத்தட்ட ஒரு மாதம் விடுமுறை பார்ப்பம் அதுக்குள்ள என்ன எழுதலாமென்று.

ஒரு சின்னக்கதை சொல்றன் இன்டைக்கு.. நாளைக்கு ஏதும் உருப்படியா எழுதுவம்.

யாராவது யாரும் செத்தால் சந்தோசப்படுவீங்கிளா? நானும் நான் அப்பிடியில்லையென்றுதான் நினச்சனான் ஆனால் அது உண்மையில்லப் போல கிடக்கு!

5 வருசத்துக்கு முதல் மாமாவோட இருக்கேக்க பேப்பர் போடப் போறனான் சிலநேரம்.நேற்றும் அவேன்ர வீட்ட நின்டனான் அப்ப மாமான்ர பிள்ளையளோட பேப்பர் போடப்போவம் என்று வெளிக்கிட்டன்.அப்ப பக்கத்துவீடு சத்தமே இல்லாமல் இருந்திச்சு.நாள் முழுக்க வெளியில தவம் கிடக்கிற கிழவனைக்காணேல்ல.எனக்குப் பயங்கர ஆச்சரியம்.என்ன மாமா கிழவனைக்காணேல்ல என்றன்.மாமா சொன்னார் உனக்கு விசயம் தெரியாதே?? கிழவன் போனவருசமே மண்டையப்போட்டிட்டுது.

முந்தி நாங்கள் மாமா வீட்ட இருக்கேக்க வீட்டுக்கு முன்னால வெளியில இருந்து கதைக்கேலாது பாட்டுக்கேக்க ஏலாது சைக்கிள் ஓடேலாது.ஐயோ அந்தக்கிழவன்ர லொள்ளென்டால் தாங்கேலாது. சும்மா எந்த நேரம் அந்த ஏரியாவில இருக்கிற எல்லாச் சின்னப்பிள்ளைகளோடயும் கொழுவல். புறுபுறுத்துக்கொண்டெயிருக்கும் .ஒருநாள் நாங்கள் வேணுமென்று யன்னல் கரையில றேடியோ வச்சு றக்கோட் பண்ணிட்டம் கிழவன் சத்தம்போடுறதை ஒருநாள் ப்ளாக்மெயில் வேற பண்ணிப்பார்த்தம் இப்பிடி இனிம எந்த நேரமும் எங்களோட வம்பு பண்ணினால் பொலிஸ்க்குக் குடுப்பம் என்று.

பிறகு நாங்களும் வேற இடத்துக்குப்போட்டம்.கிழவன் போன வருசம் `ஹாட்அற்றாக் வந்து செத்துப்போட்டுதாம்.சத்தியமா எனக்கு மாமா சொல்லேக்க ஒரு கொஞ்சம் கூடக் கவலை வரேல்ல.இனிமலாவது இந்த ஏரியாப்பிள்ளையள் நிம்மதியா இருக்குங்கள் என்று சின்னச் சந்தோசம்தான்.

Wednesday, July 25, 2007

வெயில் உதித்த நாள்

வெயிலின்ர எழுத்தில ஏதோ ஒரு வித்தியாசம் எனக்குத் தெரியுது..வார்த்தைப்பிரயோகங்கள் நேர்த்தியாகக் கட்டப்பட்ட மாலை போல ஒரு ஒரு ஒரு என்ன சொல் அது..இடையிடையில கவிதை மழை கொட்டுது போல...பிடிச்சிருக்கு. யாரு புலம்புறதுங்க...என்னைத் திட்டாதயுங்கோ நான் பாவமெல்லோ :-)) சொல்றன் சொல்றன்!!!!!

இன்று வெயில் ஐயோ இல்லை எங்கட மழை ஷ்ரேயா பிறந்த நாள்!!!




இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களக்கா :-)

Wednesday, July 18, 2007

நானும் வாறன் போட்டிக்கு....

பெருந்தலைகளைப் பகைச்சுக்க வேண்டாம் என்று என்னை மிரட்டி எனக்குள்ள நித்தா கொண்ட மிருகத்தை தட்டி எழுப்பிட்டார் ஒரு பெரும்புள்ளி அதால நானும் வாறன் புகைப்படப்போட்டிக்கு..இந்தாங்கோ படங்கள்.ஆமா யார் நடுவர்???



வெண்பனியின் வெண்மை அழகா? உன் புன்னகையின் வெண்மை அழகா?




இரட்டை நிலவு - ஒற்றைக் கனவு



அத்தி கானாப்பிரபா மாமா வின் பண்ணட்டும் என்னைப் படம் எடுக்காதயுங்கோ என்னைத் தூக்குங்கோ:-)

Monday, June 11, 2007

நிமிர்வு 2007 ம் தாசீசியஸ் மாஸ்டருடனான சந்திப்பும்

தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் நந்தியா மற்றுமொரு நண்பனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஏற்கனவே அ.மங்னை அவர்களின் நாடகப்பட்டறை நடந்துகொண்டிருந்தது.வேலை காரணமாக காலையில் நடந்த நாடகப்பட்டறைக்குப் போகமுடியவில்லை.அதே இடத்துக்கு தாசீசியஸ் மாஸ்டரைச் சந்திக்கச் சென்ற போது அங்கே மங்கையையும் பார்வதி மிஸ்சையும் கண்டு கதைத்தபோது சுமதி ரூபனைக் காணாதது நிம்மதியாக இருந்தது:-) கண்டிருந்தால் நாடகப்பட்டறைக்குப் போகாமல் விட்ட குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியிருக்கும்.

மாஸ்டர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.தன் கல்வி தொழில்முறைகளைப் பற்றி நிறையப்பேசினார்.ஆழமான தெளிவான தங்குதடையற்ற பேச்சு.மாஸ'டரைப் பற்றித் தெரியாதவர்கள் பிரபாண்ணாவின் " தாசீசியஸ் பேசுகிறார்...! " ஐ வாசியுங்கோ சரியா.எங்கள் மூவரைப்பற்றியும் கேட்டறிந்துகொண்டு தன் நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டார்.பின்னர் தமிழ்க்குடிலைப்பற்றிய பேச்செழுந்தது.நேரமின்மையால் தமிழ்க்குடிலில் நேரம் செலவழிக்க முடியவில்லை என்றும் தமிழ்க்குடிலை ஒரு 24 மணித்தியால வானொலியாகத் தொடங்கி நியுஸிலான்ட் அவுஸ்ரேலியா தொடக்கம் கனடா வரை தமிழர்கள் செறிந்து வாழும் பாகங்களிலிருந்தும் பலர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் செயற்திட்டத்தைப்பற்றி்ச் சொன்னார்.கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஆகியிருக்கும் தேத்தண்ணி குடிக்ப்போவமா என்றார்.இல்லை நாங்கள்தான் உங்களுக்குத் தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வந்திருக்கோணும் என்றோம் " ஓ அப்ப கொண்டு வந்தனீங்களா எங்க தாங்கோ தாங்கோ " என்றார் நகைச்சுவையோடு. நாங்கள் நிமிர்வு 2007க்குப் போகவேண்டியிருந்ததால் விடைபெற்றுக்கொண்டோம்.

நிமிர்வு 2007

செல்வி சுபாங்கியும் செல்வன் சிறீயும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வளங்கினார்கள். பொன்.சிவகுமார் அண்ணாவின் நினைவுநாளான மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு நடந்த நிமிர்வு 2007 தமிழ் இளையோரமைப்பைச் சேர்ந்த சர்மி கனடாக் கொடியை ஏற்றி வைக்க ஆரம்பமானது.மேஜர் நித்திலாக்காவின் தாயார் திருமதி.செல்வநாயகம் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து சிவகுமாரண்ணாவின் படத்திற்கு அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்தது அகவணக்கம். அடுத்து செல்வி நிவேதா இராமலிங்கம் " தாய் மண்ணே உனக்கு முதல் வணக்கம் " என்ற பாடலுக்கு வரவேற்பு நடனமாடினார்.தொடர்நது தமிழிளையோரமைப்பைச் சேர்ந்த ஜெனிற் மாணவர் எழுச்சி நாளைப்பற்றிய உரையில் ஆளுமினம் தமிழர்களின் கல்வியில் கத்தி வைத்ததில் தொடங்கி மாணவர்கள் அனைவரும் எமது பிரச்சனைகளை வெளியுலகுக்கு ஓங்கி உரைக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையுட்பட மாணவர் எழுச்சிநாள் பற்றிய பலவிடயங்களைக் கூறிச்சென்றார்.

அடுத்து இடம்பெற்ற நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தது நிவேதாவின் மாணவர்கள் வழங்கிய "ஆடிப்பாடுவோம் கவலைகள் மறந்தாச்சு புதுக்கவிதையும் பிறந்தாச்சு" என்ற பாடலுக்கான கோலாட்டம்.சிறுமிகள் நன்றாகவே பழக்கியெடுத்திருக்கிறார் நிவேதா.இரண்டு சிறுமிகள் இடையில் தடுமாறினாலும் சமாளித்துக்கொண்டு நல்லதொரு நடன நிகழ்வைத்தந்திருந்தார்கள்.அரங்கு நிறைந்து இருக்கைகள் இல்லாமல் நின்றுகொண்டிருந்தவர்கள் என அரங்கம் நிறைந்த கைதட்டலைப் பெற்றுக்கொண்டார்கள் சிறுமிகள். இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற்ற போதிலும் எல்லா நிகழ்வுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்னைக் கவர்ந் இன்னும் மூன்று நிகழ்வுகள் இளையோரமைப்பினர் வழங்கிய "நிஜம்" என்ற நாடகம். கலாநிதி குலமோகன் ஆசரியரின் மாணவர்கள் வழங்கி "அறுவடை " மற்றும் U OF T மாணவர்கள் வழங்கிய " சிதைப்புக்கள்" என்ற Monologue.

"நிஜம்" யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படும் இன்னல்களைக் கருவாகக்கொண்டது.சமூக நிகழ்வுகளில் அக்கறை கொண்ட திறமையான மாணவர்களின் வாழ்க்கை இராணுவத்தினரால் எப்படி சீரழிக்கப்படுகிறதென்பதை இந்த நாடகத்தின் மூலம் காட்டியிருந்தார்கள்.அப்பா இல்லாத குடும்பத்தை ரியூசன் குடுத்து அந்தப் பணத்தில் தானும் படித்துக்குடும்பத்தையும் காப்பாற்றும் மாணவன் சிவா தன் கண்முன்னே தன் நண்பன் வெள்ளை வானில் கடத்தப்படுவதைப் பார்த்துக்கொதித்துப் போய் அடுத்த முறை இராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும்போது அவர்களை எதிர்க்கிறான்.இன்னொரு நண்பன் இராணுவத்தினரைப் பார்த்துக் கூழை கும்பிடு போடுகிறான்.அதற்கு சிவா "எங்கட உரிமையை நாங்கள் கேக்க நீ ஏன்டா பூஞ்சிப் பூஞ்சி அவங்களிட்டப் போறாய்" என்று கேப்பான் அதற்கு நண்பனோ "டேய் நாங்கள் இப்பிடியே இருந்தா எப்படா graduate பண்றது " என்று ஆதங்கப்படுவான். அடுத்த காட்சியில் சிவாக்குப்பிடித்த மீன் குழம்பு சமைத்து வைத்துக்கொண்டு காவலிருக்கும் அம்மாவும் படித்துக்கொண்டிருக்கும் தங்கையும்.சிவா கல்லூரியால் வந்த கோலத்தைப் பார்த்துத்தாய் சண்டை போடுவாள் "நீ ஏன் அவங்கட வம்புக்குப் போறாய்? எனக்கு இருக்கிறது நீ ஒரு பிள்ளை " அதற்கு சிவாவோ " அம்மா இஞ்ச வாண எல்லாரும் எனக்கொரு பிள்ளை என்று அழுதா அப்ப ஆர்தாண இவங்களைத் தட்டிக்கேட்கிறது : நீ வீட்டைப் பார்க்கிறாய் நான் நாட்டை நினைக்கிறான்" என்பான்.சிவா சாப்பிட அமரும்போது இராணுவத்தினர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாய் தங்கையின் கண்முன்னே சிவாவைக்கொல்ல தாயாக நடித்திருந்த சுமி ஒரு கத்து கத்தினா ஐயொ எனக்குக் கண்ணால தண்ணி வந்திட்டு அப்பிடியொரு நடிப்பு. பல்கழைக்கழக மாணவர்களுடைய பெயர் விரிவுரையாளர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் வளாகச்சுவரில் ஒட்டப்பட்டது பாடசாலை மாணவி இராணுவத்தினரால் கடத்தப்பட்டது என அனைத்து நிகழ்வுகளையும் பிரதிபலித்த இந்த " நிஜம் " சிறப்பான நெறியாள்கையுடன் அரங்கேறப்பட்டிருந்தது. நாடகத்தின் முடிவில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட கடத்தப்பட்வர்களின் பெயர் தாங்கிய அட்டைகளை ஏந்திய படி அனைவரும் நிற்க அவர்கள் கொல்லப்பட்ட கடத்தப்பட்ட விபரங்கள் வாசிக்கப்பட்டது.இந்த நாடகத்தின் சிறப்பு என்னவெனில் நாடகம் முழுதும் ஆங்கிலத்தில் Narrator ஒருவர் திரைக்குப்பின்னால் நின்று வாசித்ததுதான்.நிமிர்வுக்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் சொல்ல வந்த செய்தி நிச்சயமாகச் சென்றடைந்திருக்கும். இந்த நாடகத்தை இன்னும் பல சர்வதேச மேடைகளில் ஏற்றவேண்டும்."கொண்டாட்டம்" போன்ற பல்கலாச்சார மக்கள் கூடும் நிகழ்வுகளில் எல்லாம் இப்படியான நாடகங்களுக்கு இடம்கொடுத்தால் எம் பிரச்சனைகளை இலகுவாக மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.

"அறுவடை "

நகைச்சுவையாகப் பலசேதிகளைச் சொல்லிற்று.

இரண்டு வயோதிபர்களின் உரையாடலோடு தொடங்கியது.அவர்கள் 'Donut' ஐ சீனிவடை என்று கதைத்ததை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வருது.அறுவடை என்று எழுதியதை இங்கு தமிழ் படிக்கும் ஒரு சிறுவனை வாசிக்கச்சொல்வார்கள் அவன் அருவடை அறுவாடை என்று திக்குவான் அப்பொழுது அங்கு வரும் ஒரு அக்கா முத்தமிழைப் பற்றி அழகாகச்சொல்வார் அப்ப அங்கு வரும் இன்னொரு சிறுவனும் சேர்ந்துகொண்டு சும்மா பிலம் காட்டதயுங்கோ எங்களுக்கும் செந்தமிழ் தெரியும் இப்ப பாருங்கோ " நீ முத்தமொன்று குடுத்தால் முத்தமிழ் வெக்கப்பட்டுச் சிரித்தால் செந்தமிழ் பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்" என்று டான்ஸ் ஆடுவாங்கள் 2 பேரும். அந்த அக்கா சொன்ன வரிகளில் ஒன்று "எங்கள் வயலில் இப்பொழுது விதைக்பட்டிருப்பது நெல்மணிகளல்ல எம்முறவுகள்".அறுவடையின் இடையில் இரண்டு நடனமும் இடம்பெற்து" ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" மற்றும் " ஆண்டாண்டு காலமதாய் நாமாண்டு வந்த பூமி ".

அடுத்து U OF T மாணவர்கள் வழங்கிய "சிதைப்புக்கள்". கல்லறையிலிருந்து எழுந்து வரும் நால்வர் தங்களுடைய கதையைச் சொல்லுவதா அமைந்திருந்தது இந்த Monologue. ஒரு மீனவர் தன் அன்பான மனைவியும் குழந்தைகளும் தானில்லாமல் என்ன அல்லல் படுகிறார்களோ எனத்தொடங்கி "எங்கள் கடலில் மீன் பிடிக்க எங்களுக்கு உரிமையில்லையாம் கொண்டிட்டாங்கள் என்னைக் கொண்டிட்டாங்கள்" என்று அழுதழுது தன் கதையைக் கூறினார்.உணர்ச்சியோடு கதைத்த அவர் திடீரென்று பேப்பரைப் பார்த்து வாசித்தது அவருடைய வேகத்தைக் குறைத்துவிட்டது.
அடுத்து 15 வயதுப் பள்ளி மாணவியொருத்தி தன் கற்பு கயவர்களால் சூறையாடப்பட்டதென்பதை அதிக வார்த்தைகளின்றித் தன் நடிப்பாலும் "வலிக்கிறது வலிக்கிறது" என்று நிஜமான வலியோடும் கதறினார்.மற்றுமொரு மாணவன் தன் கல்விகற்கும் உரிமை பறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவனுடைய கதை.அடுத்து ஒரு பெண்போராளியின் கதை(?).

அதற்குப் பிறகும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட "நிமிர்வு 2007 " மலரும் இன்னும் கைக்கு வரவில்லை கிடைத்ததும் அதுபற்றிச் சொல்கிறேன்.[படங்கள் விரைவில்....]

வாசு சின்னராசா மாஸ்டரின் மாணவிகள் "வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா இல்லைப்போராடுமா" என்ற பாடலுக்கு வழங்கிய நடனத்தாலோ என்னவோ இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்துவி்ட்டது.உங்களுக்காக.

Sunday, June 10, 2007

எழுவோம்! நிமிர்வோம்!

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளையோரின் கையில் என்பதை நன்குணர்ந்த நம் சகோதரர்கள் இராணுவச்சாவடிகளைத் தாண்டிச்சென்று குண்டுச்சத்தங்களுக்கிடையில் கூட நம்பிக்கையுடன் கல்வி கற்றுத் தேர்ச்சியடைகிறார்கள்.பள்ளிக்கூடங்கள் அகதி முகாகமாகவும் இராணுவ முகங்களாக மாறியபோதும் பாடசாலைக்கட்டிடங்கள் படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்கள் குண்டு வைத்துப் பிச்சு எறியப்பட்டாலும் கூட தமது அயராத முயற்சியாலும் ஆர்வத்தாலும் கல்வி தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியமானதென்பதை உணர்ந்து நம் சகோதரர்கள் தேர்வுக்குத் தம்மைத் தகுந்த முறையில் தயார்படுத்துவார்கள். ஆனலும் தேர்வு நேரங்களில் தலைதூக்கும் போராட்டச்சிக்கல்களால் தேர்வெழுத முடியாமல் நொந்து போகிறார்கள் சில சகோதரர்கள்.இவ்வாறெல்லாம் தம் தம்பி தங்கைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்படக்கூடாதென்று நமக்காகப் போராடினார்கள் நம் மூத்த சகோதரர்கள்.அவ்வாறு போராடி நமக்காக உயிர்த்தியாகம் செய்த முதல் மாணவரான பொன்னுத்துரை சிவகுமாரன் சயனைட் அருந்தி உயிர் நீத்த நாளைத்தான் நாம் மாணவர் எழுச்சி நாளாக இன்று நினைவுகூர்கின்றோம்.

"கல்வியும் எங்கள் மூலதனம் அதில் கத்தி வைக்கிறது ஆளுமினம்....புத்தகத்தாள்கள் எதிரில் விரிந்தன செத்தவர் முகமே அருகில் தெரிந்தன போருக்குப் படிப்பா படித்திடப்போரா கேள்விகள் " இந்தப் பாடல் வரிகள் 1994ல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வெளியிடப்பட்ட "விடியலைத்தேடும் பறவைகள்" என்ற இசைத்தட்டில் இடம்பெற்றிருந்தது.இப்பாடலில் குறிப்பிட்டபடி தரப்படுத்தல் மூலம் தங்கள் கல்வியில் ஆளுமினம் கத்தி வைத்ததைப் பொறுக்காது பொங்கியெழுந்தவர்களால் 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.யாழ்.இந்துககல்லூரியில் வணிகத்துறையில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த சிவகுமாரண்ணாவும் 1971ம் ஆண்டு இந்த மாணவர் பேரைவையில் இணைந்துகொண்டார்.தரப்படுத்தல் போன்ற சிங்கள அரசின் அடக்கு முறைகள் மீதான மாணவரின் எதிர்ப்பைக் காட்டும்முகமாக உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் உள்ள திறந்தவெளியரங்கில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சியின் போது அப்போதைய துணைக்கலாச்சார அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறியின் மோட்டார் வண்டியை வெடிவைத்துத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் சிவகுமாரண்ணா.ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.அதுமட்டுமல்லாது அப்போதைய மேயர் அல்பிரட் துரையப்பாவின் காரை வெடித்துச் சிதற வைத்ததும் சிவகுமாரண்ணாவும் அவருடைய சகாக்களுமே.அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் எதிர்ப்பைக்காட்டவே இத்தயை ஆயுதப்போராட்டங்களில் ஈடுபடவேண்டிய தேவை அன்றைய மாணவர் அமைப்புக்கு இருந்திருக்கின்றது.போராட்ட முறையானது கொள்கைகளை நிலைநிறுத்த இலட்சியங்களை அடையப் பயன்படுத்தப்படும் வழியே தவிர போராட்ட முறையே கொள்கையாகாது என்பதை சிவகுமாரனண்ணாவே கூறியுள்ளார்.



சிவகுமாரனண்ணாவோடு அவருடைய கடைசிக்கணங்கள் வரை கூடவிருந்தவரும் இன்றைய எழுத்தாளருமான குரு.அரவிந்தன் அவர்கள் சிவகுமாரனண்ணாவைப்பற்றிச் சொல்லும் சேதிகள் பலவுள்ளன.1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் சிவகுமாரண்ணாவின் பங்களிப்பும் முக்கியமானது.இம்மாநாட்டில் தொண்டராகவிருந்த சிவகுமாரண்ணாவும் அவருடைய தோழர்களும் மாநாட்டின் இறுதிநாளில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நேரடியாகப்பார்த்தவர்கள்.அம்மக்கள் பரிதாபமாகக் கொல்லப்படுவதற்கு காரணகர்த்தாகவிருந்த அன்றைய உதவிப் பொலிஸ் அதிபர் சந்திரசேகராவிற்கு பாடம் கற்பிக்க சிவகுமாரனண்ணாவும் அவருடைய தோழர்கள் சிலரும் திட்டமிட்டார்கள் ஆனால் அந்தத்திட்டத்தில் அந்தப்பொலிஸ் அதிகாரி தப்பிவிட்டதால் சிவகுமாரண்ணாவும் அவர் சகாக்களும் தனிப்படையமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பொலிஸாரால் தேடப்பட்டனர். பொலிஸிடம் இருந்து தப்பிக்க சிவகுமாரன் அண்ணா மற்றும் அவருடைய சகாக்களான மகேந்திரன், யுவராசா, டேவிட் (கி.பி.அரவிந்தன்) ஆகிய நால்வரும் கோப்பாய் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் நீர்வேலியில் வைத்துப் பொதுமக்கள் இவர்களைக் கொள்ளைக்காரர் என நினைத்துத் துரத்த ஒருவாறு அவர்களிடம் தாங்கள் யாரென்பதைப் புரியவைத்துத் தொடர்ந்து முன்னேறிச்செல்லும்போது பொலிஸ் சுற்றிவளைப்புக்கு ஆளாகிவிடுகின்றனர்.நால்வரும் நான்கு திசையில் சிதறி ஓடியவேளையில் டேவிட்டைத்தவிர மற்றைய மூவரும் பொலிஸின் கையில் சிக்கிவிட சிவக்குமாரண் அண்ணா சயனைட் அருந்திவிடுகிறார்.மற்றவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட சிவக்குமாரனண்ணா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்.சிகிச்சை பலனளிக்காமல் சிவகுமாரண்ணா மருத்துவமனையிலேயே உயிர்துறந்தார்.

தமிழ் மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதம் ஏந்திய விடுதலைப்போரே உகந்த வழியெனக்கண்டு அரசாங்கம் மீதான எதிர்ப்பைப் பல இடங்களில் துணிவோடு காட்டிக் கிட்டத்தட்ட மூன்றுவருடங்கள் சிறையில் கழித்த சிவகுமரானண்ணா 1974ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி சயனைட் அருந்தி மகத்தான தன்னுயிரைத் தமிழ் மக்களுக்காக தியாகம் செய்தார்.அவர் வழி வந்த பல்லாயிரக்கணக்கான அக்காக்களினதும் அண்ணாக்களினதும் கனவு நினைவேற தொலைநோக்குப்பார்வையோடு இன்றுவரை போராடும் எம் சகோதரர்களுக்கு நாமும் தோள்கொடுக்க வேண்டும்.

தமிழீழத் தேசியத்தலைவர் கூட "'மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார். எனவே உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் மாணவர்களாகிய நாம் ஒன்றுகூடி உலகமக்களுக்கு எம்மீதான அரசின் அடக்குமுறையை எடுத்தியம்புவோம்.தொழில்நுட்பரீதியாக அறிவியல்ரீதியாக இன்னும் என்னென்ன வழிகளிலெல்லாம் எம்மால் தாயக விடிவுக்கு உதவ முடியுமோ அவ்வுதவிகள் எல்லாவற்றையும செய்வோமென்று இந்த மாணவர் எழுச்சி நாளில் மாணவர்கள் நாம் உறுதியெடுத்துக்கொள்வோம்.ஒன்று சேர்வோம்.எழுவோம்.நிமிர்வோம்.

Friday, June 08, 2007

எனக்குக் கேட்டிச்சு!

இரவு நேரப் பயணம் ஒன்றின் போது வீடுபோய்ச் சேர இன்னும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருக்கிறதே என தூங்க முயற்றி செய்து கொண்டிருந்த போது என்னை ஈர்த்த உரையாடலிது.முன்னாலிருந்தவர்கள் புதுசாக்கட்டிக்கிட்ட ஜோடி என்று நினைக்கிறேன்.நான் பின்னாலிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லையோ அல்லது என் காதில் இருந்த ஹெட்போனைப் பார்த்துவிட்டு எனக்குக் கேக்காதென்று நினைத்துக் கதைத்தார்களோ யாமிறியோம் பராபரமே.

பெண் : தள்ளி இருடா எனக்கு விசரக் கிளப்பாத!

ஆண்: தொடங்காத இப்ப.இப்ப நான் என்னத்த செஞ்சிட்டன் என்று மூஞ்சை இந்தளவுக்கு நீண்டிருக்கு.

பெ : நான் ஆசையா வாங்கின அந்த கிளாஸ் வாஸை கவனமா வச்சிருக்கத்தெரியாம அதை ரெயின்ல ஏற முதலே உடைச்சுப்போட்டு இப்ப ஒன்றுமே நடக்காத மாதிரிக் கேள்வி வேற.

ஆ: இப்ப என்ன அந்தக் கிளாஸ் போலவே நாளைக்கே நானொன்று வேண்டித்தந்தா சரியா.

பெ :

ஆ: என்ன சத்தத்தையே காணம்.

பெ:

:ஓகே என்னோட கதைக்கவேண்டாம்.நானிந்தப் பேப்பரோட கதைக்கிறன்.
ஹேய் சுபோ இங்க பார் இன்றைக்கு யாரோ ஒரு தமிழாள் தன்ர மகள் மகளி்ன்ர boy friend மற்றது இன்னும் சில பெடியளுக்கு மேல ஜீப் ஏத்தினதென்று காலம நியூஸ்ல சொன்னதெல்லா அதப்பற்றி இதில இருக்கு.ம் ம் எல்லாரும் என்ன மாதிரி நல்லவனா இருப்பினமா.அத்தைன்ர நல்ல மனசுக்கு என்னைப்போல ஒரு தங்கமான மருமகன் வந்து வாச்சிருக்கிறன்.எனக்குத்தான் குடுப்பின இல்ல அத்தை மாதிரி இல்லாம இப்பிடி ஒருத்தி எனக்கு பொண்டாட்டியா வந்து வச்சிருக்கு. oh no அந்தப்பெடியன்ர படம் போட்டிருக்கு.பெடியன வடிவாப்பார் உங்கட சொந்தக்காரப் பெடியன் நிமால் மாதிரிக்கிடக்கு!

பெ: வட் ? காட்டுங்கோ ஒருக்கா.அவன்தான்.ஐயோ பாவம் சுகுணான்ரி.அம்மாக்குத் தெரியுமோ தெரியாது.அம்மாக்கொருக்கா போனடியுங்கோ.

பெ: ஹலோ அம்மா நியூஸ் கேட்டனீங்கிளே.ஜீப்பால ஏத்தினது நிமாலுக்கம்மா.பேப்பரில படம் கிடக்கு.பாவமம்மா அவை.சுகுணான்ரி வேற இப்பத்தான் ஓரளவுக்குச் சுகமாகிக்கொண்டு வாற இதைப் பார்த்தா திரும்ப ஹோமாவுக்கே போடுவா.நிமாலுக்கு மண்டைக்க ஓன்றுமில்லையே.ஏற்கனவே அவன் அந்த gang பெடியங்களக் காட்டிக்குடுத்ததென்று அவங்கள் அவனுக்குக் குறி வச்சுப் போட்ட fire bomb ஆல அம்மாவும் தங்கச்சியும் எரிகாயங்களால ஹொஸ்பிற்றல்ல இருக்கினம் இந்த நேரத்தில இவனேன் girl friendஓட பார்க்குப் போனவன்.

(கதை கேக்க நான் பாட்டை pause பண்ணிட்டுக் கதை கேட்டுக்கொண்டிருந்தன் ஆனாலும் அம்மா கதைக்கிறது எனக்கு கேக்கல)

பெ: ஓமண சண் பேப்பரில கவர் ஸ்ரோரியே இதான்.அந்த girl இரண்டு நாளா வீட்டயே போகேல்லயாம்.தாயும் தேப்பனும் தமக்கையும் தேடித்திரிஞ்சவையாம் இவன்ர ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கிற பார்க்ல இரண்டுபேரும் வேற சில பிரண்ட்ஸ்ம் கதைச்சுக்கொண்டிருந்தவையாம்.கண்ட உடன கோவத்தில அப்பிடியே கொண்டுபோய் ஜீப்பை ஏத்திப்போட்டாராம்.படத்தில நிமால் போட்டிருந்த உடுப்பெல்லாம் கிளிஞ்சுபோய் அழுதுகொண்டிருக்கிறான் .பார்க்கவே விசராக்கிடக்கு.நான் பேப்பர் கொண்டுவாறன் பாரண நீயே.

பெ: தேப்பனைப் பொலிஸ் பிடிக்கேக்க டான்ஸ் ஆடினவராம் சிரிச்சவராம் என்று பொலிஸ் மென்ரல் அசெஸ்மென்ற் கேட்டிருக்கினமாம்.
ஏனம்மா அவைக்கு மட்டும் இப்பிடியெல்லாம் நடக்குது.எனக்குத் தெரிஞ்சு நிமால் நல்ல பெடியன் தானே.இப்ப பாருங்கொ இந்த girl friend பிரச்சனையாலதான் fire bomb போட்டதென்டு கதைக்கப்போகுதுகள் சனங்கள்.சும்மாவே சிங்கள gang ஒன்றும் இல்லாம் தமிழ் gang தான் என்று சொல்லிக்கொண்டு திரியிறவைக்கெல்லாம் இது அவல் குடுத்த மாதிரி. ம் சரி கொஞ்ச நேரத்தில வீட்ட வாறம்.bye.

ஆ: நிமால் பாவம்.அந்த girl ன்ர தேப்பன் இனி வெளில வாறது கஸ்டம் தான்.
பெ: கோவத்தில இல்லாட்டி மனவுளைச்சல் அதுஇதென்று சொல்லி வெளில வந்தால்?
ஆ: நான் நினைக்கேல்ல. triple attempted murder!

பிறகு அவைன்ர ஸ்டாப் வந்திட்டு இறங்கிப்போட்டினம்.

Tuesday, May 01, 2007

இந்தக்காதல் இருக்கே...

இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு வரும்? எப்ப வரும்? ஏன் வரும்? எத்தpனை முறை வரும்? அப்ப அது எப்பிடி தோற்றுப்போகும்? ஏன் எப்பிடித் தோற்கும்? இதெல்லாம் யாருக்காவது தெரியுமா?இல்லாட்டா நீங்களும் என்னைப்போலத்தான் யோசிக்கிறீங்கிளோ?

சத்தியமா எனக்குக் காதல் என்னென்று தெரியாது. கூட விளையாடின பக்கத்து வீட்டுப்பெடியன்ல ஒரு தனிப்பாசம் இருக்குமே. நமக்குள்ள என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் மற்ற நண்பர்கள் மத்தியில் அவனை விட்டுக்கொடுக்காம அவன் உண்மையாவே ஏதும் தப்புச் செய்திருந்தால்கூட அவனுக்காக வாதாடுவமே அது காதலா? அல்லது 10 வயசில எங்களோடு போட்டிக்கு படிச்சவன் ஒருத்தன் மேல ஒரு தனிக்கவனம் இருக்குமே.

என்னடா இவன் நாம எந்தப் போட்டிக்குப் போனாலும் வாறான்.ஒன்றில் அவன் முதலாவதா வருவான் இல்லாட்டி நாமதான் முதலாவது வருவம்.இருவரில் எவர் முதலாவதா வந்தாலும் வெளியில முறைச்சாலும் உள்ளுக்குள்ள சரி பறவாயில்லை அவன்தானே முதலாவதா வந்திருக்கிறான் என்று ஒரு சின்ன சந்தோசம் வந்து மனசின் மூலையில ஒட்டுமே ..அதான் காதலா?

இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு ரியூசனில் படிக்கிற பெடியங்களில ஒருத்தன் சரியா நாம எந்த மேசையில இருப்பம் என்று தெரிஞ்சு அதற்கு நேரா வந்திருந்துகொண்டு மாஸ்டர் கேள்வி கேக்கிற நேரமெல்லாம் நாம சரியாப் பதில் சொல்றமா இல்லாட்டா உதவி செய்யணுமா என்று ஒழுங்காப் பதில் சொல்லி முடிக்கும் வரைக்கும் ஒரு விதமான ரென்சன்ல இருப்பானே அந்த நேரம் பார்த்து நாம அவனைத் திரும்பிப் பார்த்தா ஒரு நிம்மதிப் புன்னகை ஒளிரும் அவன் முகத்தில..அதான் காதலா?

ரியூசன்ல நடக்கிற வினாடி வினா போன்ற போட்டிகளில் என்னதான் நம்மளோட மல்லுக்கு நின்று கஸ்டப்பட்டுப் போராடி கடைசில பெடியங்கள் தோத்துப் போனா இன்றைக்கு மாட்டினீங்கடா என்று மனசுக்குள்ள நினைச்சுக்கொண்டு அவங்களைத் திரும்பி ஒரு எகத்தாளப் பார்வை பார்க்கும்போது "சரிதான் போடி நீயும் உன்ர தெத்துப்பல்லும்..லுக்கு விட்டதும் காணும் போடி" என்று ஆற்றாமைல திட்டிட்டுப் போனாலும் போற வழியில நம்ம சைக்கிள் ரயர் பஞ்சராகி சைக்கிளை உருட்டிக்கொண்டு போறதைப் பார்த்திட்டு ரியூசன்ல நடந்த போர்மேகம் கலைந்து போனாலும் கொஞ்சம் முறைப்போடயே வந்து தன்ர சைக்கிளைத் தந்திட்டு நம்ம சைக்கிளை வாங்கிக் கொண்டுபோய் ஒட்டிக்கொண்டு வந்து தாறானே...அப்ப தாங்ஸ் என்றும் சொல்லாம ஒரு அசட்டுச் சிரிப்பு வருமே.. அதான் காதலா?

பெண்கள் பருவமடைந்ததும் ரியூசன்ல பெடியங்களோட சண்டை பிடிக்கிறது கொஞ்சம் குறைஞ்சிடும்.தெற்குப்பக்கமாக ரியூசன் முடிஞ்சு போற பெட்டையள் எல்லாம் ஒருநாள் வடக்குப்பக்கமாக போனால் பெடியங்கள் தங்களுக்குள் ரகசியம் பேசுவாங்கள் 'டேய் அந்தக் கொம்பறிமூக்கன் இன்றைக்கு வரேல்லடா அப்ப அதான் போல " என்றிட்டு ஒரு சிரிப்புச் சிரிப்பாங்கள் அப்ப பெட்டையளுக்கு விளங்கிடும் இவங்கள் கண்டுபிடிச்சிட்டாங்கள் போல என்று.பிறகு அந்தப்பொண்ணு ரியூசனுக்குத் திரும்ப வரத்தொடங்கினதும் பெடியங்கள் கொஞ்ச நாளைக்கு மரியாதை குடுப்பாங்கள் என்னத்துக்கெடுத்தாலும் வாய்காட்டாமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவாங்கள்.அப்ப நமக்கும் அவங்களில ஒரு மரியாதை வருமே அதான் காதலா?



(டிஸைன் தாயகப்பறவைகள்)

நாங்கள் படிக்கிறது பெண்கள் பாடசாலையில் அவங்கள் படிக்கிறது ஆண்கள் பாடசாலையில் ஆனாலும் ஆமிச் சென்ரியைக் கடக்கிற நேரம் பார்த்துக் கொஞ்சப் பெடியங்கள் பொடிகார்ட் போல வருவாங்களே பிறகு கடைக்குப்போறது போல வந்து நாங்கள் வீட்டுக்குக்கிட்ட போனதும் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போவாங்களே.
அப்ப மனசில ஒரு பாதுகாப்புணர்வு வருமே அதான் காதலா?

கூடப்படித்தவர்களுடைய வீட்டிலோ அல்லது ஏதாவது தெரிந்தவர்களின் மரண வீட்டில் எதிர்பாராதவிதமாக கூடப்படிக்கிற ஒரு பெடியன் கண்கலங்கி நிற்பதைப் பார்த்ததும் ஐயோ பெடியங்கள் அழமாட்டாங்கள் என்று நினைச்சமே இவன் என்ன இப்பிடி அழுறான் என்று மனசு அவனோடு போய் ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொல்லணும் என்று அங்கலாய்க்குமே அதான் காதலா?

மீண்டும் ரியூசனில் சந்திக்கும்போதும் இவன் அன்றைக்கு அழுதவன்டி நான் பார்த்தேன் என்று எங்க மற்றப் பெட்டையளுக்குச் சொல்லி நக்கலடிப்பாளோ என்ற எண்ணம் தனியா ஒருபக்கத்தில ஓடிக்கொண்டிருந்தாலும் "அன்றைக்கு அந்த விபத்தில செத்தவர் என்ர அண்ணான்ர பிரண்ட் அவரும் எனக்கு ஒரு அண்ணா மாதிரித்தான் அவர் எனக்கு ஒரு றோல்மோடல் அவருக்கு இப்பிடி ஆனதை என்னால தாங்கிக்கவே முடியல்ல" என்று தண்ணிகுடிக்கப் போன நேரத்திலயோ அல்லது சோக்(Chalk) எடுக்கப் போன இடத்திலயோ அவசரமா சொல்லிட்டு ஓடிப்போவானே அப்ப வாறதுதான் காதலா?

ஒரு வாணி விழாவுக்கோ அல்லது ஆண்டுவிழாவுக்கோ நடைபெறும் நாடகப் பயிற்சியில் தெரியாமல் முதன்முதலாக குடும்பத்தினர் தவிர்ந்த ஒரு ஆடவனின் கை பட்டுக்கொள்ளும்போது இயல்பாக வரும் ஒரு சிலிர்ப்பு."என்னைத் தீண்டி விட்டாய் திரி தூண்டி விட்டாய்" என்று சிம்பு மாதிரி கையைச் சுத்திக்கொண்டு திரியாவிட்டாலும் சித்தார்த் மாதிரி கையைப் போட்டோகொப்பி எடுத்து வைத்துக்கொள்ளாவிட்டாலும் அந்த சிலிர்பு ஒரு நாளாவதிருக்கும். அப்ப அதான் காதலா?

வெளிநாட்டுக்கோ அல்லது வேறு ஊருக்கோ பிரிந்து செல்ல நேரும்போது இதுவரை ரியூசனில் ஒருநாள் கூட வாய்திறந்து கதைக்காம இருந்த பெடியன் கூட ஆட்டோகிறாப்ல (Autograph) "நாங்கள் இதுவரை பேசிக்கொண்டதில்லை இருந்தாலும் பல தடவைகள் உன் நக்கல்களையும் திறமைகளையும் ரசித்திருக்கிறேன் எப்பவும் இப்படி கலகல என்றிருக்க வேண்டும்" என்று இவன் இப்பிடி எழுதுவானா என்று நம்மைக் கொஞ்சம் ஆச்சரியப்பட வைப்பானே அப்ப கடவுளே இவர்கள் எல்லாரையும் மிஸ் பண்ணப்போறமே பேசாம வாழ்நாள் முழக்க இவர்களில் ஒருவனோடயே இருக்க முடியாதா என்ற எண்ணம் வருமே அதான் காதலா?

பல்லாயிரக் கணக்கான மைல்களைக் கடந்து வந்தாலும் எப்பவாவது கூடப்படிக்கிற ஒரு பெடியன் எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும்போது ரியூசனில் படித்த யாரோ ஒருவனின் முகம் நினைவில் வந்து எவ்வளவு காலம் கூடப்படித்தோம் என்னதான் அடிபட்டாலும் அவன் இவனைப்போல இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டதில்லையே என்று நினைப்பமே அதான் காதலா?

பதின்ம வயது நிறைவுபெறும் காலத்தில் ஏதோ உரிமையுள்ளவன் போல "அடியே" என்று கூப்பிட்டுக் கதைப்பவனிடமும் சரி வெளிப்பேச்சுக்காக அல்லாது உண்மையாகவே மனசார உரையாடல்களினிடையே "அம்மா" போட்டுக் கதைப்பவனிடமும் சரி தனிக்கவனம் வரும்.கதையிலயே மயங்கி ஐயோ இவன் கதைக்கிறத உயிருள்ளவரை கேட்டுக்கொண்டேயிருக்கணும் போலத் தோணுமே அதான் காதலா? அதேபோல அம்மவைப் பற்றி வெளிப்படையாகவும் அம்மா தனக்கு முக்கியம் என்பது போலப் பேசுபவர்களிடமும் மரியாதை அதிகரிக்கும். இப்படி அம்மாவை நேசிப்பவன் தன் மனைவியையும் நேசிப்பான் என்று எங்கயோ கேட்ட ஞாபகம் வரும் அதால இவனே நமக்குத் துணையா வந்தா நல்லா இருக்குமே என்று நினைக்கிறமே அதான் காதலா?

இப்படி நான் சொன்ன வற்றில் எதைக் காதல் என்றுறது? உங்களுக்கேதும் விளங்குதா? இதெல்லாம் ஆத்மார்தமான உணர்வுகள்.அப்பப்ப இதை நாங்கள் எல்லாரும் அனுபவிக்கிறோம்.சிலவற்றை பப்பி லவ் என்கிறோம் இன்னும் சிலதை வெறும் கவர்ச்சி என்கிறோம். சிலர் உண்மைக்காதல் என்கிறோம். இன்னும் சிலர் Matured love என்கிறோம். இதில எது சரி எது பிழை என்றது யாருக்குமே சரியாத் தெரியாதென்றுதான் நினைக்கிறன்.

காதல் என்றால் என்ன என்று முன்னோர்கள் யாரும் வரைவிலக்கணம் எழுதி வச்சிட்டுப் போயிருந்தால் வசதியாயிருந்திருக்கும். இது அப்பிடி யாரும் செய்யாததலா நாங்கள் என்ன நினைக்கிறமோ அதான் காதல் என்றாயிடுச்சு அதனாலதான் காதல் தோல்வி என்றால் என்ன என்றே தெரியாம இருக்கிறம்.காதல் என்றால் என்ன என்று முதல் தெரிந்துகொண்டு வாறன் நான் வந்து அடுத்த முறை காதல் தோல்வியென்றால் என்ன என்று சொல்றன்.

தொடரும் .......
தாயகப்பறவைகள் சமுதாயக் கண்ணோட்டத்துக்காக எழுதியது.

Wednesday, April 11, 2007

நந்தியாவின் வாடாமல்லிகைத்தோட்டம்

வணக்கம்

யாழ் களத்தில் அறிமுகமான சகோதரி ஒருவர் வலையுலகத்திற்கு வர விரும்பினார்..அழைத்து வந்திருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தியது போல நந்தியாவையும் ஊக்கப்படுத்துவீர்கள் தானே:-))

நந்தியாவின் வாடாமல்லிகைத்தோட்டத்துக்குச் செல்ல : www.nanthiya12.blogspot.com

Saturday, March 17, 2007

என்னை முதன் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்...

அண்ணைமார் எல்லாரும் பொம்பிளை பார்க்கிற முறை பற்றி எழுதிச்சினம் அதான் நானும் இன்டைக்கு எங்கட வீட்ட நடந்த மாப்பிளை பார்க்கிற நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்றன் கேளுங்கோ.

அன்ரியாக்கள் மற்றும் அத்தை மாமா எல்லாரும் வீட்ட வாறம் என்று போன் பண்ணிச்சினம்.அண்ணா நிப்பான்தானே என்று கேட்டா அன்ரி அப்ப எங்களுக்கு விளங்கிட்டுது இவை சும்மா வரேல்ல அண்ணாவைப் பார்க்கத்தான் வரினம் என்று.

அண்ணாவைக் கலாய்க்கணுமே...தங்கச்சி போய் அம்மாட்ட கேட்டா அம்மா படத்தில வாற மாதிரி நிறைய ஆக்கள் பூ பழம் எல்லாம் கொண்டு வருவினமோ என்று.அம்மாவும் சிரிச்சுக்கொண்டு

சீ அப்பிடியெல்லாம் இல்லை.அவை சும்மா வரினம் அண்ணாவைப் பார்க்க வரேல்ல.

பொய்தானே அ;ம்மா சும்மா வரினம் என்றா ஏன் நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இவ்வளவு நாளும் வராதாக்கள் இப்ப அன்ரின்ர தங்கச்சிக்கும் அண்ணாக்கும் திருமணம் செய்யுறதைப்பற்றிக் கதைச்ச பிறகு வரினம் ஸோ அண்ணாவைப்பார்க்கத்தான் வரினம்.

அண்ணா போய் வேட்டி கட்டிக்கொண்டு வந்து நில்லு போ என்று அவனை ஒரு பாடு படுத்திப்போட்டம்.

4 மணிக்கு வந்திச்சினம் எல்லாரும் சும்மா வரேல்ல மோதகம் கொழுக்கட்டை எல்லாம் கொண்டு வந்திச்சினம். நானும் தங்கச்சியும் சிரிக்கத்தொடங்கிட்டம்.

என்ன அன்ரி பழம் பூ எல்லாம் எங்க. அவாவும் நக்கலுக்குப் பின்னால வருதெண்டு சொன்னா.

பெரியாக்கள் எல்லாரும் ஹோல்ல இருந்து சமா வைக்கத் தொடங்கிட்டினம்.நாங்கள் கொஞ்ச நேரம் இருந்து பார்த்தம் சரி வரேல்ல மேல போய் அழகிய அசுரா படம்; பார்த்தம்.நல்ல படம்தான் எனக்குப் பிடிச்சுது.ஆனால் ஹரோவ விட பிரன்ட் ஒராள் நல்லா இருந்தது போல தோணிச்சு சொன்னா பக்கத்தில இருந்த பிசாசுகள் எனக்கு ரேஸ்ரே இல்லையாம் என்டுதுகள் சரி அத விடுவம். படம் பார்த்துக்கொண்டிருக்க ஹோல்ல இருந்து ஒரே சிரிப்புச்சத்தம்...என்னடா எங்களை விட்டிட்டு அப்பிடி ஜோக் என்டிட்டு கீழ போன அங்கிள் ஒராள் அவற்ற மனுசியைப் பார்த்துப் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறார்.
அதுவும் என்ன பாட்டு “என்னை முதன் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்..உன் கண்கள் முதன் முதலாகப் பட்ட போது என்ன உணர்ந்தாய் “ (அப்பிடித்தான் ஏதோ..வரி சரியாய் ஞாபகம் இல்லை.அவருக்கு 55 வயசாகுது ஆனால் ரொமான்ஸ்ப் பற்றி சொல்லி வேலையில்ல.அன்ரியும் லேசுப்பட்டவா இல்லை.அவா அவை இரண்டு பேரின்ரயும் லவ் ஸ்டோரி சொல்லத் தொடங்கினா.

அவா O/L படிக்கேக்க அங்கிள் A/L படிச்சவராம்.அங்கிள் கொஸ்டல்ல இருந்தவராம்.அன்ரின்ர அம்மா அப்பாவை கண்டில கடையாம் ஸோ அவா பெரியம்மா வீட்ட இருந்து படிச்சவவாம்.இரண்டு பேரும் வல்லிபுரக்கோயில்லதான் மீற் பண்ணினவையாம் முதல்ல பிறகு ஒரே லவ் தானாம்.ஸ்ருடியோல போய் தோள்ல கை போட்டு படம் எடுத்தவையாம்.அந்த ஸ்ருடியோக்காராள் எடுத்த படத்தில ஒன்டை அன்ரின்ர பெரியப்பாட்டயும் குடுத்திட்டாராம்.பிறகென் அன்ரின்ர அப்பா அம்மா ஊருக்கு வந்தாம் அங்கிளைப் பார்த்துக் கதைச்சு அவரைப்பிடிச்சுப்போய் 17 வயதிலேயே கட்டி வைச்சிட்டினமாம்.அங்கிள்ட வோலட்ல அன்ரியும் அவரும் எடுத்த படம் இன்னும் இருக்கு.அன்ரி கிப்பி வெட்டியிருக்கிறா படத்தில சூப்பரா இருக்கிறா.

இப்பிடியே கதைச்சு கதைச்சு சாப்பிட்டம்.யாருக்காவது என்ன சாப்பாடெண்டு தெரியணுமா?? புட்டு இறால் பொரியல் இறைச்சிக்கறி கத்தரிக்காய்ப்பிரட்டல்...வேற என்ன?அவ்வளவும் என்றுதான் நினைக்கிறன்.
சாப்பிட்டு முடிய shraides (spelling ??)விளையாடுவம் என்று ஒரு கஸின் தொடங்க சரியென்று இரண்டு குறூப் ஆ பிரிஞ்சு விளையாடினம்.தங்கச்சிக்கு வந்த படம் சமுத்திரம்.அவா அலை மாதிரி செய்து செய்து காட்டினா நாங்கள் எல்லாரும் கடல் மீன் என்று சொல்லிக்கொண்டிருந்தம்.ஒருதருக்கும் கடலைச் சமுத்திரம் என்றும் சொல்லாம் என்று ஞாபகம் வரேல்ல.எனக்கு வந்த படம் பூச்சூடவா.நானும் கையில அலபத்மம் முத்திரை பிடிச்சுக்காட்டிட்டு தலையில கொண்டே வைக்கிற மாதிரிக்காட்டினமன் .பூ என்று சொன்னவை ஆனால் பிறகு கொண்டை கொண்டை என்று அதிலயே நின்டிட்டினம் ஒருதரும் சொல்லேல கடைசியா நான் பூச்சூடவா என்று சொல்ல தலையில வைக்கிற மாதிரிக்காட்டிட்டு கையால வா வா என்று சைகை செய்திருக்கலாமெல்லோ என்று சொல்லிச்சினம்.

அடுத்ததா அத்தைன்ர முறை.அவாக்கு வந்தது பாலும் பழமும்.அவா என்ன செய்தா தெரியுமோ...மேசையில கிடந்த அப்பிளையும் தூக்கி அக்கான்ர மகன்ர கையில கிடந்த பால்போத்திலையும் பறிச்சு ஆட்டி ஆட்டிக் காட்டினா.சிரிப்போ சிரிப்பு.. எல்லாரும் உடன பாலும் பழமும் என்று சொல்லியாச்சு.அவாவும் சிரிச்சுக்கொண்டு உங்கட றூல்சின் படி வாயால கதைக்கக்கூடா ஆனால் பொருட்கள் எடுத்துக்காட்டக்கூடாதெண்டு சொல்லேலதானே என்றா..வேற வழி.அன்ரிக்கு வந்தது விசில் அவா ஈஸியா வந்து விசிலடிச்சுக்காட்டினா.அப்பாக்கு வந்தது ஒரு கைதியின் டைரி.அதுவும் கண்டுபிடிச்சிட்டம் ஈஸியா.அண்ணாக்கு வந்தது மனசெல்லாம்.அதுவும் சொல்லிட்டம்.அத்தான் செய்ததைப் பார்த்துத்தான் எல்லாருக்கும் ஒரே சிரிப்பு.அவர் படத்தின்ர பெயரைப்பார்த்திட்டு ஒரு கஸினை இழுத்துக் கீழ விழுத்திட்டு காலாலயும் கையாலயும் அடிக்கிறமாதிரி செய்தார்.அக்காட மகன் அழத்தொடங்கிட்டான் மாமாக்கு உண்மையா அடி விழுதெண்டு நினைச்சு.நாங்களும் அடிதடி , போக்கிரி என்று சொன்னம் கடைசில அது பொல்லாதவன் படமாம்.

பிறகு கொஞ்ச நேரம் பாட்டுக்குப் பாட்டு விளையாடினம்.அங்கிளும் அன்ரியும்தான் ஒரே லவ்ஸ் பண்ணிக்கொண்டிருந்திச்சினம் பாட்டுக்கு எதிர் பாட்டுப் பாடிக்கொண்டு.கஸின் ஒராள் தான் ஏதோ செய்து காட்டப்போறன் என்று எழும்பினா.எழும்பி சும்மா பாட்டு படமென்டு ரைம் வேஸ்ற் பண்ணாம நல்லதா என்னவும் செய்யணும் என்று சொல்ல அங்கிள் உடன எழும்பி “பணத்தைத் திருடு பொருளைத்திருடு ஆனால் என் டயலொக் ஐ மட்டும் திருடாதா “ என்று சொல்ல பின்ன கஸினும் “நான் யாழி இல்லை காளி என்னட்ட வம்பு வேண்டாம் “ என்று சொல்ல அடுத்த அரை மணிநேரம் அப்பிடியே போச்சு.பிறகு கொஞ்ச நேரம் பாட்டுப் பார்த்தம்.அப்ப தனுஸ்pன்ர “விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாள் “ பாட்டுப் போக தனுஸ் உந்தப்பாட்டில கொஞ்சம் வடிவா இருக்கிறார் ஐஸ்வர்யாவின் தேர்வாக்கும் உடைகள் கெயர்ஸ்டைல் என்று அலட்டினம கொஞ்சநேரம்.இப்பிடியே நேரம் போச்சு.கடைசில இரவு 11.30 ஆச்சு.அன்ரியாக்களும் அத்தையவையும் வீட்ட போக என்று வெளிக்கிட ஊரில இருந்தொரு போன்..இறுதிப்போருக்காக குடும்பத்தில ஒருவரைப்போராட்டத்தில் இணையச்சொன்னதால அன்ரியொராள் தன்ர மகளைக்கொண்டு போய்ச் சேர்த்து விட்டிட்டு இப்பத்தான் வந்து நிக்கிறாவாம் என்று மற்ற அன்ரி போன் பண்ணினா.

Saturday, March 10, 2007

பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட...

இப்பத்தான் பெட்டையின் வலைப்பதிவில் அமௌனன் எழுதிய " வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்…"படிக்க வேண்டியதாயிற்று..ஏன்டா வாசிச்சம் என்றாயிற்று ஆனால் என்ன மதி அக்கா சொல்றமாதிரி கோவத்தையும் ஆத்திரத்தையும் வச்சு என்னத்த செய்யிறது. இதைப்போன்றதொரு இன்னொரு அவலம் தான் நான் இப்ப சொல்லப்போறதும்.இதுகளை எல்லாம் மற்றாக்களுக்குச் சொல்றதால பெரிசா ஒன்றும் நடக்கப்போறேல்லத்தான் இருந்தாலும் மனசுக்குள்ள இருக்கிறதை யாரிட்டாயவது சொன்னால் ஏதோ ஒரு சுமை குறைஞ்ச மாதிரித்தானே.

மிருனாக்கு இப்பத்தான் 13 வயது ஆனால் அதுக்குள்ள அவளுடைய வாழ்க்கையைச் சீரழிக்க சில ஆமிக்காரர்களும் ஒரு தமிழ்த்துரொகியும் கங்கணம் கட்டிக்கொண்டு திரியுறாங்கள். வெளிநாட்டில இருக்கிற பிள்ளையள் தான் வயதுக்கு மீறிய வளர்ச்சியில் 12 வயதிலயே இருபது வயது மாதிரித் தோற்றமளிக்கிறார்கள் என்றால் ஊரிலுள்ள பிள்ளைகளிலும் சிலருக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சியிருக்கும்.மிருனாவும் அப்படித்தான் துறுதுறு என்று எப்பவும் வாயடிச்சுக்கொண்டு திரிவாள் அந்தத்துடுக்குத்தனம் தான் ஒரு துரொகியை ஈர்த்திருக்கிறது.

அந்தத்துரொகி சும்மா லேசுப்பட்டவனல்ல.ஏற்கனவே எங்கள் குடும்பத்திலுள்ள ஒருவரைக் கேவலம் பத்தாயிரம் ரூபாவுக்காகக் காட்டிக்கொடுத்து எமனானவன். ஆமிக்காரருடைய சப்போட் இருக்கிற ஒரே காரணத்தால மிருனா பாடசாலை செல்லும் நேரம் ரியூசனுக்குச் செல்லும் நேரம் என அவளைப் பின் தொடர்ந்தான்.ஆக்கினை தாங்காமல் மிருனா தந்தையிடம் சொல்லிவிட்டது அந்தத் துரோகிக்கு வசதியாகப் போய்விட்டது.ஆமிக்காரர் கேட்டுக்கேள்வியின்றி எங்களுடைய வளவுக்குள் இருக்கிற கிணத்தடியில் வந்து குளிக்கத்தொடங்கினாங்கள் கூடவே அந்தத் துரோகியும்.எப்படியோ யாரோ சின்னப்பிள்ளைகளிடம் கேட்டு மிருனாவின் பிறந்தநாளை அறிந்துகொண்டு கேக் ம் வாங்கிக்கொண்டு தைரியமாக வீடுவரைக்கும் வந்து பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான்.

ஊர்ப்பெரயவர்கள் சிலரின் ஆலோசனைப்படி அந்தத்துரோகியின் பெற்றோரிடம் முறையிட்டும் எந்தப்பலனுமில்லை.தூரத்துறவினர் ஒருவரையும் அந்தத்துரொகி காட்டிக்கொடுத்ததுதான் மிச்சம்.

மிருனாவைக் கண்ணும் கருத்துமாகக் காப்பதே பெற்றோருக்கும் உற்றோருக்கும் தலையாய கடமையாகப் போக அவர்களுடைய அன்றாட வாழ்க்கையே ஆட்டம் காணத்தொடங்கியதால் இனிமேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்பதால் தற்போது மிருனாவும் குடும்பத்தினரும் ஊரைவிட்டுப் போய்விட்டார்கள்.ஓரளவு பணவசதியுள்ளவர்களுக்குத் தம்மை பாதுகாக்கும் வல்லமை கொஞ்சம் அதிகமாகவேயுண்டு மற்றவர்களுக்கு??????

இதுதான் எங்களுக்குச் சொல்லப்பட்ட உண்மை இதில் எதைக் குறைத்துச் சொன்னார்களோ நானறியேன். தெரிந்தது இந்தப்பிரச்சனை தெரியாமல் எத்தனையோ???? இன்று பொடிச்சியின் பதிவைப் படித்ததும் தான் தெரிந்துகொண்டேன் பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட இந்த வெறியர்களின் பிடியில் விதி விலக்கல்ல என்று.